31 Oct 2007

01.11.2007 முதல் அறிமுகம்: இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பி.எஸ்.என்.எல். செல்போனில் பேச பாதி கட்டணம்

சென்னை, அக். 31-
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சலுகைகள் வழங்க தவறியதில்லை. இந்த ஆண்டு தீபாவளி பண் டிகையை யொட்டி ஒரு அதிரடி சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
செல்போன் சந்தாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அளிக்கிறது. செல்போனில் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பேச பாதிக் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு சந்தாதாரர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடையலாம். `அனந்த்' திட் டத்தில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. ஒரு வருடம் இன்கம்மிங் கால் வசதி கொண்ட `சுமோ' திட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த சலுகை வழங்குவது குறித்து பரிசீலிக் கப்படுகிறது.
இந்த இரு திட்டங்களில் உள்ள சந்தாதாரர்கள் தவிர ஏனைய பி.எஸ்.என்.எல். சந்தா ரர்களுக்கு பாதி கட்டணம் திட்டம் பொருந்தும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.
`நைட் காலிங்' என்று அழைக்க கூடிய இந்த சலுகை நாளை 1-ந் தேதி (நவம்பர்) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இரவு 11 மணிக்கு மேல் செல் போனில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பேசினால் பாதிக்கட்டணம் மட்டுமே கணக்கிடப்படும்.

30 Oct 2007

நோக்கியா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்


உலகின் நம்பர் ஒன் செல்போன் தயாரிப்பாளர் நோக்கியா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.இன்றைக்கும் செல்போன் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் நோக்கியாவே.உலகின் 36 சதவீத செல்போன்கள் அவர்களுடையது.இவர்களின் முதல் செல்போன் மாடல் Mobira Senator.1982-ல் வெளியானது.(மேலே படம்)

நோக்கியாவின் 1 பில்லியனான செல்போன் மாடல் Nokia 1100.இது நைஜீரியாவில் விற்க்கப்பட்டதாம். இதுவரை ஏறக்குறைய 400 மாடல்கள் வெளியிட்டுள்ளனர். முதல் ஹிட் 1994-ல் வெளியான 2100 மாடல்.20 மில்லியன்கள் விற்றன. உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன Nokia 3310 / 3330 மாடல் 126 மில்லியன்கள் விற்று சாதனை படைத்தன.இந்த 126 மில்லியன் போன்களையும் வரிசைப்படுத்தி அடுக்கினால் 13,500 கிலோமீட்டர் நீளம் போகுமாம்.2004-ல் நோக்கியாவால் 207.7 மில்லியன் போன்கள் தயாரிக்கப்பட்டது. அதாவது 6.5 நொடிகளுக்கு ஒரு போன். நோக்கியா போனில் SMS வந்தால் ஒலிக்கும் விஷேச ஒலி உண்மையில் SMS என்ற வார்த்தையின் மோர்ஸ்கோடாம்.(Morse code) .கேமரா கொண்ட போன்களின் ஆதிக்கம் இப்போது அதிகமாதலால் உலகளவில் இப்போதைக்கு அதிக டிஜிட்டல் கேமரா தயாரிப்பாளரும் இவர்களே. அதிக அளவில் திருடு போகும் செல்போன்களும் நோக்கியா செல்போன்களே."நோக்கியா ரிங்டோன்" என அறியப்படும் அந்த புகழ் பெற்ற ரிங்டோன் 19ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஸ்பானிய கிடார் இசைகலைஞரின் (Francisco Tárrega.) இசையை அடிப்படையாக கொண்டது.உலகின் முதல் GSM காலை பண்ணியவர் முன்னாள் பின்லாந்து பிரதமர் Harri Holkeri. இந்த அழைப்பு 1991-ல் ஹெல்சிங்கியில் ஒரு நோக்கியா போனை பயன்படுத்தி உண்டாக்கப்பட்டது.நோக்கியா கம்பனி போன்கள் தவிர பிற Digital Televisions, ADSL Modems, Wireless LAN interfaces, Telephone switches, GPS devices, Terrestrial trunked radios, இன்னும் Security Solutions தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. தலைமையகம் Nokianvirta ஆற்றின் கரையோரம் Keilaniemi, Espoo, Finland-ல் உள்ளது.சென்னை ஸ்ரீபெரும்புதூரிலுள்ள நோக்கியா தொழிலகம் நோக்கியாவின் 15 ஆவது உற்பத்திசாலை ஆகும்.

சில பெயர்களும் அதின் விளக்கங்களும்

ICICI-ன் விரிவாக்கம் ரொம்ப பேருக்கு தெரிவதில்லை.
What about YAHOO?
கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும்.
சில சுவாரஸ்யமானவை.
Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.
Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle.
ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler).
STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV.
ICICI-ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India.
Oracle-என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்.
COMPUTER- ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research.
VIRUS- ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege.
Wipro- ன் விரிவாக்கம் Western India Products.
googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல் பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது.
MICROcomputer SOFTware தான் MicroSoft.முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் - நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.
IBM-ன் விரிவாக்கம் International Business Machines.
Pepsi-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937. ஆனால்Coca-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.
HSBC-ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce.
HDFC-ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited.
MRF-ன் விரிவாக்கம் Madras Rubber Factory.
TVS-ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited.
Java என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்.
Linux செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது.
Cisco அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது.
KPMG என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு.அதாவது K stands for Klynveld ,P is for Peat, M stands for Marwick,G is for Goerdeler.
Nokia-தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது.
இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo Shibaura Denki உருவான்து.அது தான் இன்றைய Toshiba.
நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது HP.
Dell அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது.

கூகுளில் தமிழ் மொழிமாற்றி வந்துள்ளது.

கூகுளில் தமிழ் மொழிமாற்றி வந்துள்ளது.கீழ்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்.
http://www.google. com/transliterat e/indic/Tamil
நாம் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை இ.கலப்பை போலதமிழில் தருகிறது.ஒரு தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் அடித்து முடிந்ததும் ஸ்பேஸ் பாரை அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது. இந்த வசதியை உபயோகிக்க ஆன்லைனில் இருப்பது அவசியம். மேலும் இது பற்றிய விவரங்கள் அறிய அந்த transliterate பக்கத்தின் கீழேயுள்ள "More" என்ற சுட்டியைச் சொடுக்குங்கள்.
http://www.google.com/transliterate/indic/Tamil

28 Oct 2007

தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவருக்கு உதவித் தொகை

தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவருக்கு உதவித் தொகை சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, அக்.24: தொழில் மற்றும் தொழில்நுட்ப படிப்பில் பட்டப்படிப்பு,பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்விஉதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து,சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.ஜெயா விடுத்துள்ள அறிக்கை:தொழில் மற்றும் தொழில் நுட்ப படிப்பில் பட்டப்படிப்பு படிக்கும்மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு உதவி தொகை வழங்கி வருகிறது.இந்த திட்டத்தின் கீழ், 366 முஸ்லிம்கள், 399 கிறிஸ்தவர்கள், 1 சீக்கியர், 1 புத்தமதத்தினர் ஆகியோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.பெற்றோர் அல்லது பாதுகாவலர் எல்லா வழிகளிலும் ஆண்டுக்கு ரூ.2.50லட்சத்துக்கு மிகாமல் வருவாய் ஈட்ட வேண்டும். தொழில் படிப்புக்காகநுழைவுத் தேர்வில் தேர்ச்சி அல்லது பிளஸ் 2 படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வி உதவித் தொகை வழங்குவதில் 30 சதவீதம்மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி, திருச்சி என்.ஐ.டி, காஞ்சிபுரம் ஐ.ஐ.ஐ.டி, ஆகிய கல்விநிறுவனங்களில் தொழில் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு செலுத்தியகல்விக் கட்டணத் தொகை முழுமையாக திரும்ப வழங்கப்படும். மேலும்,விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு ஒன்றுக்குபராமரிப்பு படியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட 3 கல்வி நிறுவனங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு கல்விஉதவித் தொகை விண்ணப்பங்கள் முதலில் வழங்கப்படும். பின்னர், மற்ற தொழில்கல்வி நிறுவனங்களில் இருந்து வரப்பெறும் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள்பரிசீலிக்கப்படும். மற்ற தொழில் கல்வி நிறுவனங்களில் படிக்கும்சிறுபான்மையின மாணவ, மாணவிகள் சிறுபான்மையினர் விடுதியில் தங்கிபடித்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற மாணவ,மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். சிறுபான்மை மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வருவாய் சான்றைநீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் வழங்க வேண்டும். பெற்றோர் வேலையில்இருந்தால் அந்த நிறுவனத்தில் இருந்து வருவாய் சான்று வாங்கித்தரவேண்டும். உதவித் தொகை பெற தகுதி உள்ள மாணவர்கள் குறிப்பிட்ட சான்றுகளுடன், தங்கள் கல்வி நிறுவனம் மூலம் சிறுபான்மை நல ஆணையம் மற்றும்மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807, அண்ணா சாலை, 5வது தளம், சென்னை 2 என்ற முகவரிக்கு நாளைக்குள்(25ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை www.minorityaffairs .gov.in/newsite என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு ஆட்சியர் ஜெயாதெரிவித்துள்ளார்.

23 Oct 2007

ஏஜெண்டுகள் மூலம் ஆளெடுக்க யு.ஏ.இ. தடை

துபாய்:
23.10.2007

வேலைவாய்ப்பு ஏஜென்டுகள் மூலம் வளைகுடா நாடுகளில் வேலைக்கு ஆள் எடுக்க தடை விதிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான புதிய கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுக்கவுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் அலி பின் அப்துல்லா அல் காபிகூறியுள்ளார்.இதுகுறித்து காபி கூறுகையில், பல்வேறு நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் ஏஜென்டுகளால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள், மோசடி செய்யப்படுகிறார்கள், துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.இதைத்த தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானதாக, ஏஜென்டுகள் மூலம் வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஏஜென்டுகளின் பொய்யான வாக்குறுதிகள், உறுதிகளை நம்பி ஏமாறும் தொழிலாளர்கள் நிலை மொத்தமாக மாறும்.அனைத்து வளைகுடா நாடுகளின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் இதுகுறித்து விரிவாகப் பேசி விரைவில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றார் காபி.

22 Oct 2007

ஊழியர்களின் சம்பளம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்

ஊழியர்களின் சம்பளம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்ஐக்கியஅரபு எமிரேட்ஸ் நடவடிக்கை

துபாய், அக்.22-
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, வருகிற ஜனவரி மாதம் முதல் ஊழியர்களின் சம்பளங்களை வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. அதோடு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது.
சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களை கம்பெனிகள் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படி வைத்துக்கொணடால் அந்த கம்பெனிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மற்றும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களை கண்டுபிடித்து வெளியேற்றுவதற்காக அதிகாரிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க இருக்கிறோம். வருகிற 2-ந்தேதி முதல் சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களின் வேட்டை அதிக அளவில் நடத்தப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

21 Oct 2007

புத்தகத்தில் ரகசிய அறை அமைத்து செல்போன் கொண்டு வந்த மாணவி


நாகர்கோவில், அக்.19-
புத்தகத்துக்குள் ரகசிய அறை அமைத்து செல்போனை பள்ளிக்கு கொண்டு வந்த மாணவி எஸ்.எம்.எஸ். அனுப்பியபோது பிடிபட்டார்.
சுற்றறிக்கை
நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் ஒன்றான செல்போன்கள் பள்ளிக்கூட மாணவர்களின் படிப்பிற்கு பெரும் இடைïறாக இருக்கின்றன.
இதனால், தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் ஜெகநாதன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் இது குறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளிக் கூடத்துக்கு மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வராமலிருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும், மீறி கொண்டு வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என்பதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
நேற்று நாகர்கோவிலில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வந்திருக்கிறார்களா? என்று ஆசிரியர்கள் தீவிரசோதனை நடத்தினார்கள். அப்போது சில மாணவர்கள் அரசு உத்தரவை மீறி செல்போன் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் அழைத்து பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது என எச்சரித்து அனுப்பினார்கள்.
மாணவியின் திருவிளையாடல்
ஒரு பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எல்லா மாணவிகளும் ஆசிரியர் பாடம் நடத்துவதையே கவனித்துக் கொண்டிருக்க ஒரேயொரு மாணவி மட்டும் தலையைக் குனிந்தவாறு என்னவோ செய்து கொண்டு இருந்தார். வெகு நேரமாக அந்த மாணவி அதே நிலையில் இருந்ததால் ஆசிரியர் சந்தேகமடைந்து அந்த மாணவியின் அருகில் சென்றார். ஆசிரியர் அருகில் வந்தபோதும் கூட அது தெரியாமல், மாணவி தொடர்ந்து தலையைக் குனிந்தபடியே இருந்தார். அந்த மாணவி தனது மடியில் ஒரு புத்தகத்தை வைத்தபடி படிப்பதுபோல பாவனை செய்து கொண்டிருந்தார். இதனால் அருகில் வந்த ஆசிரியரும் முதலில் அந்த மாணவியின் மீது சந்தேகம் கொள்ளவில்லை. அந்த மாணவியை ஆசிரியர் தொடர்ந்து கண்காணித்தார். அப்போதுதான், அவர் அந்தப் புத்தகத்திற்குள், செல்போனை வைத்தும் கொள்ளும் அளவிற்கு பக்கங்களை கச்சிதமாக வெட்டியெடுத்து அதற்குள் ரகசிய அறை ஒன்றை அமைத்திருப்பதையும், அதற்குள் ஒரு செல்போனை மறைத்து வைத்து அதில் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இதைத் பார்த்ததும் அந்த ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அரசின் உத்தரவிற்கு இப்படியும் கூட ஒருவர் டிமிக்கி கொடுப்பாரா? என வேதனையடைந்தார்.
அந்த மாணவியை கையும் களவுமாக பிடித்த ஆசிரியர், அவரை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார். அப்போது மாணவி `இனிமேல் செல்போனை பள்ளிக்கு கொண்டு வரமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்' என்று அழுதபடியே கேட்டுக் கொண்டார். தலைமை ஆசிரியரும், மாணவி முதல் முறையாக தவறு செய்திருக்கிறார் என்பதால் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் அந்தப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

18 Oct 2007

தத்துவம்

Busலநீ ஏறினாலும் Bus உன் மேலஏறினாலும் Ticket வாங்க போறதுநீதான்.

Chair ஒடைஞ்சா உட்காரமுடியாது கட்டில் ஒடைஞ்சாபடுக்க முடியாது ஆனாமுட்டை ஒடைஞ்சா தான் Omlet போடமுடியும்.

காக்கா என்ன தான்கறுப்பா இருந்தாலும் அதுபோடுற முட்டை வெள்ளைமுட்டை என்ன தான் வெள்ளையாஇருந்தாலும் அதுக்குள்ளஇருக்குற காக்கா கறுப்புதான்

எழுதியது மகேஸ்

16 Oct 2007

நீங்க கல்ஃப்லெ வேலெ செய்யறீங்களா?

ஆண்: "டாக்டர் நான் ஒரு மாச லீவில் வந்திருக்கேன். எனக்கு ஒரு முழு செக்கப் செய்யணும்."
டாக்டர்: "நீங்க எதிர்லெ இருக்கற டாக்டர்கிட்டே போயிருக்கணும்.அந்த போர்டெ பாருங்க"
ஆண்: "இல்லெ டாக்டர், நான் உங்களெத்தான் பார்க்கவந்தேன்"
டாக்டர்: "பாருங்க சார், நான் வெட்ரினரி டாக்டர். விலங்குகளுக்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்கிறேன். மனுசங்களுக்கல்ல."
ஆண்: "எனக்கு அது நல்லா தெரியும் டாக்டர். அதனால் தான் நான் உங்களிடம் வந்திருக்கேன்"
டாக்டர்: "என்னங்க சார் புரியாத ஆளா இருக்கீங்க. நீங்கள் என்னை போல மனிதர். பேசுகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், நீங்கள் மிருகமல்ல. என்னால் முடியாது."
ஆண்: "எனக்கு தெரியும் டாக்டர், நான் மனிதன் தான். ஆனா மொதல்லெ நீங்க என்னுடைய பிரச்சினைகளை கொஞ்சம் தயவுசெய்து கேளுங்களேன்"
டாக்டர்: "சரி சரி சொல்லுங்க"
ஆண்: "நான் தூங்கும்போது நாயெ போல எச்சரிக்கையா தூங்கிகிட்டே என்னுடைய ஆபீஸ் வேலெ பத்தியே யோசிச்சிகிட்டிருப்பேன். ""காலையில் குதிரையெ போல எழுந்திருப்பேன்.""காக்கா குளியல் குளிப்பேன்""மான் போல ஆபீசுக்கு ஓடுவேன்""முழுநாளும் கழுதையெ போல வேலை செய்வேன்""இடைவிடாமெ பதினோரு மாசம் எருது போல வேலை வேலைன்னு சுத்திகிட்டே இருப்பேன்""எனக்கு மேலெ இருக்கறவங்களுக்கு முன்னாலெ வாலெ ஆட்டிகிட்டே இருப்பேன்""என்னிக்காவது நேரம் கிடெச்சா என் குழந்தைங்க கூட குரங்கு போல சேட்டை செஞ்சி விளையாடுவேன்""என் பொண்டாட்டிக்கு முன்னாலெ முயல் மாதிரி ஒடுங்குவேன்"
டாக்டர்: "நீங்க கல்ஃப்லெ வேலெ செய்யறீங்களா?"
ஆண்: "ஆமாம் டாக்டர்!. "எப்படி கண்டுபிடிச்சீங்க?"
டாக்டர்: "இவ்வளவு பெருசா சொல்றதுக்கு பதிலா மொதல்லெயே கல்ஃப்லெ வேலெ செய்யறேன்னு சொல்லியிருக்கலாமில்லெ." "வாங்க, நீங்க சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க!" "வேறெ யாரும் என்னெ விட நல்லா உங்களுக்கு சிகிச்சை தர முடியாது"
நன்றி: அனுசுயா ஆங்கிலத்திலிருந்து

ஒரு சோக காதல் கதை

( மெயிலில் வந்தது... )
ஒரு பையனுக்கு கேன்சர் இருந்தது. எல்லோருக்கும் தெரிந்ததுதானே கேன்சரை குணப்படுத்த முடியாது என்று. அவனுக்கு 18 வயது , எந்த நேரத்திலும் சாகலாம். அவன் வாழ்க்கை முழுதும் அவன் வீட்டிலேயே முடங்கி கிடந்து அம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டை விட்டு எங்கேயும் வெளியில் சென்றதில்லை.ஒரு நாள் அவன் வெளியில் சென்று சுத்திபார்க்க அவன் அம்மாவிடம் அனுமதி வாங்கினான். அவன் வீட்டை விட்டு வெளியில் இறங்கி நடக்கையில் பல கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான். அப்படி ஒரு கடையை கடந்து விட்டு பின் திரும்பி இன்னொரு முறை அந்த கடையை பார்த்தான். அது ஒரு கேசட் கடை. அதைவிட முக்கியமாக அந்த கடையில் அவன் வயதை ஒட்டிய ஒரு தேவதை மாதிரி ஒரு பெண் இருந்தாள்.அவன் மெதுவாக அந்த கடை உள்ளே சென்றான். அவன் 'என்ன வேண்டும்' என்று கேட்டுவிட்டு ஒரு புன்னகையை உதிர்த்தாள்.. அவன் வாழ்நாளில் இப்படியொரு அனுபவம் கிடைத்தில்லை. முதல் பார்வையிலே காதல் என்பதை உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு ஒருவித பயம்.. ஏதோ ஒரு கேசட்டை காட்டி இது வேண்டும் என்றான். அவளும் அதை எடுத்து இதை பார்சல் கட்டவா என்றாள். அவன் ஆமாம் என்பதாக தலையை ஆட்டினான். அவள் உள்ளே சென்று கேசட்டை அழகாக பார்சல் கட்டி வந்தாள்.நேராக அதை கொண்டு போய் அவன் அலமாரியில் வைத்து விடுகிறான். இது தினமும் நடக்கிறது. ஒருநாள் கூட அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு பயம். கேசட்டை பிரித்து பார்த்ததும் கிடையாது. இது அவன் அம்மாவுக்கு தெரிய வருகிறது. அவள் அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறாள்.அவன் அந்த கடைக்கு போய் ஒரு கேசட்டை வாங்கி அவள் பார்சல் கட்டும் சமயத்தில் ஒர் பேப்பரில் அவனது தொலைபேசி எண்ணை எழுதி வைத்துவிட்டு கேசட்டை வாங்கியவுடன் வீட்டிற்கு ஓடி வந்துவிடுகிறான்.அடுத்த நாள் அந்த வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அவன் அம்மா எடுக்கிறார்கள்.. அவன் பெயரை சொல்லி 'இருக்கிறானா' என்று கேட்கிறாள்.. அம்மாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. அவன் நேற்றே இறந்துவிட்டான் என்று கூறுகிறாள். ஒரு பெரிய நிசப்தம். அவள் அம்மாவின் அழுகை தவிர எதுவும் கேட்கவில்லை.அடுத்த நாள் அம்மா அவன் நியாபமாக அவன் அறைக்கு செல்கிறாள்.. அங்கே அவன் அலமாரியில் நிறைய பிரிக்கப்படாத பார்சல்கள் இருந்தன.. அதை பிரித்து பார்க்கிறாள். அதன் உள்ளே ஒரு கேசட்டும் ஒரு துண்டுபேப்பரும் இருந்தது. அதில் 'நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். ஏன் என்னிடம் பேசவே மாட்டேங்குறே ' என்று எழுதியுருந்தது.. மற்ற பார்சல்களிலும் ஒரு கேசட்டும் அதே துண்டு பேப்பரும் இருந்தது.நெஞ்சை தொடும் இந்த குட்டிகதையில் ஒரு பெரிய நீதியே இருக்கிறது.உங்கள் துணையிடன் எப்பாவாவது சண்டை போட்டால், சிறிது நேரம் உங்கள் ஈகோவை கழட்டி வைத்துவிட்டு சில சமாதான வார்த்தை கூறுங்கள்.. இல்லாவிடில் அந்த பிரிக்கப்படாத பார்சல் போல பல வாய்ப்புகள் பறிபோகும்...

மிகச் சிறந்த வலி நிவாரணியாகும் மிளகு!

லண்டன்: காரத்திற்கு மாற்றாக வும், சுவை சேர்க்கவும் நாம் அன்றாடம் மிளகை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தி வருகிறோம். சளி, இருமலைக் குணப்படுத்தவும் இது கைவைத்தியமாகப் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், இது மிகச்சிறந்த உடல்வலி நிவாரணி என்று அண்மை யில் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி யில் நடத்தப்பட்ட ஓரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
மிளகில் உள்ள கேப்சசின் என்ற வேதிப்பொருளிலிருந்து க்யூ எக்ஸ்-314 என்ற மருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. பிள்ளைப்பேறு காலத்திலும், மருத்துவத் தொழிலிலும் வலியைப் போக்குவதற்கு இது மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. இதுபற்றி ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆய்வாளர் ஊல்ப் கூறியதாவது: வலியுள்ளவர்களின் உடலில் உள்ள எந்த ஒரு நரம்புக்குக் கெடுதல் ஏற்பட்டாலும் அதை மிளகைக் கொண்டு தயாரிக்கப் பட்ட மருந்து முழுமையாகத் தீர்க்கிறது. பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகள் பல பக்க விளைவு களை ஏற்படுத்தும். ஆனால் இந்த மிளகு மருந்து வெகு விரைவிலேயே மக்களின் வலியைப் போக்குவது மட்டு மல்லாமல், நோயாளிக்கு முன்பு இருந்த நோய்களும் குணமடைகின்றது.

11 Oct 2007

அஸ்ஸலாமு அலைக்கும்....

நண்பர்கள் அனைவருக்கும்
நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்......


8 Oct 2007

கலக்கும் தமிழகம்!!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.பள்ளிப் பாடநூல்களை 1970 முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டு வருகிறது. அரசு மற்றும் மானியம் பெறும் பள்ளிகளுக்கு மாநில மொழி பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட நூல்களை வழங்குகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடநூல்களை தற்போது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும். அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கே www.textbooksonline.tn.nic.in சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இந்தியாவில் இருந்து இலவச சர்வதேசபோன்

voipstunt என்ற சாப்ட்வேர் உபயோகித்து இந்தியாவில் இருந்து internet broadband வழியாக இலவசமாக ஐரோப்பா,அமெரிகா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இலவசமாகப் பேசலாம். கடந்த 2 வாரங்களாக நாங்கள் உபயோகிக்கிறோம், ஒரு கட்டணமும் இல்லை. இனிமேல்
1. காதலர்கள் இலவசமாக கடலை போடலாம்.
2.தமிழ்நாட்டு மாமியார் அமெரிக்க மருமகளை தினமும் ஒரு வழி பண்ணலாம்.
3.இந்தியாவில் இருந்து போன் செய்து அமெரிக்கா/ஐரோப்பா வில்
வேலை செய்து வரும் மகனை/மகளை துயில் எழுப்பலாம்.
4.கணவனைப் பிரிந்து இருக்கும் இந்திய மனைவி கணவனை இனி தன் போன் பார்வையிலேயே வைத்து இருக்கலாம். இப்படி ஏகப்பட்ட "லாம்". இனி எல்லாம் ஒரே மஜா தான். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு ஓ! போடு.
Follow the following url www.voipstunt.com/en/index.html

4 Oct 2007

ஹஜ்-சவூதிக்கு சொந்த வாகனங்களில் வர தடை!

ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தின்போது வெளிநாட்டினர் தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.இதுதொடர்பாக சவூதி அரசுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டினர், ஹஜ் மற்றும் உம்ராவின்போது தங்களது சொந்த வாகனங்களுடன் சவூதிக்கு வர முடியாது.இதுகுறித்து ஹஜ் மற்றும் உம்ரா துறையின் இயக்குநர் ஹமாத் அல் முவால்லா கூறுகையில், ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணத்தின்போது, யாத்ரீகர்கள் தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. இதை ஹஜ், உம்ரா பயணத்திற்கு ஏற்பாடு செய்வோரும், டூரிஸ்ட் ஆபரேட்டர்களும் உறுதி செய்ய வேண்டும்.சொந்த வாகனங்களுடன் யாத்ரீகர்களை சவூதிக்கு அனுப்புவோர் மீது கடும் தண்டனை விதிக்கப்படும். யாத்ரீகர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.யாத்ரீகர்கள் டிரான்சிட் விசா அல்லது விசிட் விசா வைத்திருந்தால் மட்டுமே சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி சவூதிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.அதேசமயம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமை பெற்றவர்கள், சவூதிக்கு எந்த நேரத்திலும் சொந்த வாகனங்களில் செல்லலாம். அதற்குத் தடை இல்லை என்றார்.
நன்றி:thatstamil

வளைகுடா-லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளியேற்றப்படும் அபாயம்!

துபாய்: பஹ்ரைன் நாட்டு அரசு பரிந்துரைத்துள்ள புதிய திட்டத்தால், வளைகுடா நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் அந்நாடுகளை விட்டு வெளியேற்றப்படும் அபாயம் எழுந்துள்ளது.வளைகுடா நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டினர் 6 ஆண்டுகள் வரை மட்டுமே அங்கு தங்கியிருக்க முடியும் என்பதுதான் பஹ்ரைன் பரிந்துரைத்துள்ள புதிய திட்டம். இந்தத் திட்டத்தை டிசம்பர் மாதம் தோஹாவில் நடைபெறவுள்ள வளைகுடா நாடுகள் மாநாட்டில் முன்வைக்கவுள்ளது பஹ்ரைன்.உள்ளூர் கலாச்சாராம் தேய்ந்து வருவதைத் தடுக்கவும், உள்ளூர்வாசிகளுக்கு வேலை கிடைக்காமல் இருக்கும் நிலையை அகற்றவும் இந்தத் திட்டத்தை பஹ்ரைன் முன்வைத்துள்ளது.இந்தத் திட்டத்தை அனைத்து வளைகுடா நாடுகளும் ஏற்றுக் கொண்டால், பல்வேறு வளைகுடா நாடுகளில் குடும்பத்துடன் வசித்து வரும் 10.3 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலை இழந்து, தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.இந்தப் புதிய திட்டம் குறித்து பஹ்ரைன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவி கூறுகையில், வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வரும் வெளிநாட்டினர் பல்வேறு கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவர்களாக உள்ளனர். உள்ளூர் கலாச்சாரத்துடன் அவர்களால் ஒத்துப் போக முடியவில்லை. போகவும் முடியாது.சில அரபு பகுதிகளைப் பார்த்தால் இது அரபு நாடுதானா அல்லது ஆசிய நாட்டுக்கு வந்து விட்டோமா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அளவுக்கு உள்ளூர் கலாச்சாரம் அங்கு காணாமல் போய் விட்டது. இதை நாம் வேற்றுமையிலும் ஒற்றுமை என்று கூற முடியாது.உலகில் உள்ள எந்த நாடும் தனது நாட்டு கலாச்சாரத்தை அழிய அனுமதிக்க முடியாது. பஹ்ரைன் முன்வைத்துள்ள பரிந்துரையை வளைகுடா நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
ஜிசிசி எனப்படும் வளைகுடா நாடுகள் அமைப்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், குவைத் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்தான் அதிகம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்த நாடுகளில் வசிக்கும் 3.5 கோடி பேரில் 37 சதவீதம் பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது.எமிரேட்ஸ் மற்றும் கத்தார் நாட்டு மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். குவைத் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேரும், பஹ்ரைனில் 40 சதவீதம் பேரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்.சவூதி மற்றும் ஓமனில்தான் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சவூதியில், 33 சதவீதம் பேரும், ஓமனில் 25 சதவீதம் பேரும் வெளிநாட்டினர்.சவூதியில், வேலையில்லாத் திண்டாட்டம் 11 சதவீதமாக உள்ளது. பஹ்ரைனில் அது 4 சதவீதமாக உள்ளது. பஹ்ரைனில் 20 ஆயிரம் பேர் வேலையில்லாத குடிமக்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எமிரேட்ஸில், 32.6 சதவீதம் பேர் வேலையில்லாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 47.7 சதவீத பெண்களுக்கு வேலை இல்லையாம்.அனைத்து வளைகுடா நாடுகளும், வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலையிலிருந்து மாற முயன்று வருகின்றன.இதற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. உள்ளூர்வாசிளுக்கு கட்டாயம் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அதில் முக்கியமானது.இந்த நிலையில்தான் பஹ்ரைன் புதிய குண்டைப் போட்டுள்ளது. இதன் மூலம் வளைகுடா நாடுகளை தங்களது 2வது தாயகமாக மாற்றிக் கொண்டு செட்டிலாகியுள்ள பல லட்சம் பேர் வேலையை இழந்து, தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
நன்றி:thatstamil

2 Oct 2007

பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க.....

தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க எனப் பல வகையான பயன்பாடுகளில் நாம் பாஸ்வேர்டு களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
சில இணைய தளங்களில் நுழைய விரும்பினால், அங்கு "உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, பணம் எதுவும் கட்ட வேண்டாம், நீங்கள் உறுப்பினர் ஆகுங்கள்' என்ற அறிவிப்பு வரும். உறுப்பினராகி விடுவோம் நாம். அவற்றிற்கும் பாஸ்வேர்டுகள் தேவை. சில தளங்களில் நுழைந்து சாப்ட்வேர்களை, டிரைவர்களை டவுன்லோடு செய்ய நினைப்போம். முதலில் உறுப்பினராகுங்கள் என அறிவிப்பு வரும். பாஸ்வேர்டு கொடுத்து அங்கும் உறுப்பினர்களாக மாறி விடுவோம்.
நமது கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களை மற்றவர்கள் படித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த பைல்களுக்கும் பாஸ்வேர்டுகளைக் கொடுப்போம். இப்படி கம்ப்யூட்டர் வாழ்க்கையில் நிறைய இடங்களில் பாஸ்வேர்டுகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. கொடுப்பது வரை சரி. ஆனால் இவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டியுள்ளதே. அங்கே தான் சிக்கலே எழுகிறது. பலர் எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஏன் என்று கேட்டால், ஒரு பாஸ்வேர்டை நினைவில் வைப்பது எளிது என்கிறார்கள்.
உண்மைதான். ஆனால் அந்த பாஸ்வேர்டை உங்களுக்குத் தெரிந்தவர் கண்டுபிடித்து விட்டால் அவ்வளவுதான். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட்டை, இமெயில் அக்கவுண்ட்டுகளை அவர் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார். உங்களது எல்லா ரகசிய பைல்களையும் அவர் திறந்து விடுவார். பாதுகாப்பு கருதி, பலர் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பாஸ்வேர்டுகளை வைப்பார்கள். இதுதான் சிறந்த முறை. ஆனால் அவ்வளவு பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைப்பது கடினமான காரியம்.
அந்த பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பது முக்கியம். அவர்களுக்கு உதவிடும் பொருட்டு இந்த கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது. சில வழிகளை இங்கு காணலாம். எல்லாமே இலவசம்.
விண் ஜிப்: உங்களது லாகின் பெயர்களை பாஸ்வேர்டுகளை எல்லாம் ஒரு டெக்ஸ்ட் பைலில் டைப் செய்து அந்த டெக்ஸ்ட் பைலை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Win Zip (http://www.winzip.com/) சாப்ட்வேர் கொண்டு என்கிரிப்ட் செய்யலாம். 256 பிட் AES என்கிரிப்ஷனை விண்ஜிப்பில் பயன்படுத்த முடியும். இந்த டெக்ஸ்ட் பைலை பிளாப்பியிலோ அல்லது யுஎஸ்பி பென் டிரைவிலோ ((Pen drive) ) சேமியுங்கள். வெளியில் செல்லும் போதெல்லாம் பிளாப்பியை அல்லது யுஎஸ்பி பென் டிரைவை கையில் எடுத்துச் செல்லுங்கள்.
பைல் 2 பைல்: www.cryplomathic.com/file2file/ தளத்தில் நுழைந்து File2File என்ற இலவச என்கிரிப்ஷன் டூலைப் பயன்படுத்தி எல்லா பாஸ்வேர்ட் விவரங்கள் அடங்கிய டெக்ஸ்ட் பைலை என்கிரிப்ஷன் செய்யுங்கள். 128 பிட் AES என்கிரிப்ஷனை நீங்கள் பயன்படுத்த முடியும்.
விண்டோஸின் என்டிஎப்எஸ்: விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி ஆகியவற்றில் NTFS பைல் சிஸ்டம் உண்டு. ஹார்ட் டிஸ்க்கின் ஒரு பார்ட்டிஷனை என்டிஎப்எஸ்ஸாக மாற்றி அங்கு ஒரு என்கிரிப்டட் போல்டரை உருவாக்கி விடுங்கள். பாஸ்வேர்ட் விவரங்கள் கொண்ட டெக்ஸ்ட் பைலை அந்த போல்டரில் போட்டு விடுங்கள்.
வேர்ட் அல்லது எக்செல் பைல்: லாகின் பெயர்களையும், அவற்றிற்கான பாஸ்வேர்டுகளையும் ஒரு எக்செல் பைலில் அல்லது வேர்ட் பைலில் டைப் செய்யுங்கள். இனிமேல் இவற்றை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டாம். ஆனால் இந்த எக்செல் பைலை அல்லது வேர்ட் பைலை பாஸ்வேர்ட் கொடுத்து சேமியுங்கள். இந்த பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வையுங்கள். வேறு அக்கவுண்டிற்கான லாகின் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் தேவைப்பட்டால், பாஸ்வேர்ட் கொடுத்து இந்த எக்செல் அல்லது வேர்ட் பைலைத் திறந்து தெரிந்து கொள்ளுங்கள்.
விஸ்பர் 32 : http://www.ivory.org/ தளத்தில் இருந்து Whisper32 என்ற இலவச சாப்ட்வேரை டவுன்லோடு செய்யுங்கள். இதில் உங்களது எல்லா பாஸ்வேர்டுகளையும் போட்டு வையுங்கள். என்கிரிப்ஷன் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பாஸ்வேர்ட் சேப்: லாகின் பெயர்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை போட்டு வைக்க Password safe v1.7 என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம். ஆபீஸ் மற்றும் சொந்த அக்கவுண்டுகளின் விவரங்களை வெவ்வேறு டேட்டாபேஸில் போட முடியும் என்பது இதன் சிறப்பு. இதைப் பெற http://passwordsafe.sourceforge.net/ தளத்தில் நுழையுங்கள்.
பாஸ்வேர்ட் கார்டியன்: இலவச சிறிய புரோகிரமான Password Guardian சாப்ட்வேரைப் பெற www.cryplocentral.com/html/passgrd.html என்ற தளத்தில் நுழையுங்கள். இந்த சாப்ட்வேரை நிறுவாமலே பயன்படுத்த முடியும். பிளாப்பியிலே இந்த சாப்ட்வேரையும், பாஸ்வேர்ட் பைலையும் பதித்து விடலாம்.
ப்ரீ பாஸ்வேர்ட் கீப்பர் : Free Password Keeper என்ற இந்த சாப்ட்வேரை http://swiss.torry.net/apps/utilities/security/freepass.zip டவுன்லோடு செய்து, அதை அண்ஜிப் செய்து, exe பைலை இயக்குங்கள். பாஸ்வேர்ட் விவரங்களை அது என்கிரிப்ட் செய்து காக்கும் ஆற்றல் கொண்டது. இந்த விவரங்களைப் பார்வையிட பாஸ்வேர்ட் தேவைப்படும். இமெயில் முகவரிகள், வெப் தளங்களின் முகவரிகள் போன்வற்றையும் இது காக்கும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத பல இலவச பாஸ்வேர்ட் பாதுகாப்பு சாப்ட்வேர்கள் உள்ளன. எதையாவது ஒன்றைப் பயன்படுத்தி பாஸ்வேர்டுகளை ரகசியமாக பாதுகாத்து வையுங்கள். நன்றி:சத்தியமார்க்கம்