31 Dec 2007

Happy New Year

Happy New Year 2008

2008-ல் கணினி பாதுகாப்பு விவகாரங்கள்

2007-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். வைரஸ் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து கணினிகளையும், நெட்வொர்க்குகளையும் பாதுகாக்க 2008-ல் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சைமன்டெக் உள்ளிட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.2008-ல் நிலவக்கூடிய பாதுகாப்பு போக்குகள் குறித்து சைமன்டெக் ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலில் இருப்பது "தேர்தல் பிரச்சாரங்கள்". அரசியல்வாதிகள் இணையதளத்தை பிரச்சார எந்திரமாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது என்பதால், அதனால் ஏற்படும் கணினி பாதுகாப்பு விவகாரமும் முக்கியம் என்று சைமன்டெக் கூறுகிறது. அதாவது இதன் மூலம் ஆன்லைன் நன்கொடைக்கான பிரச்சாரங்கள், தவறான தகவல்கள் பரவுவது, மோசடி ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது.
இரண்டாவதாக தொழில் முறையில் வைரஸ்களை பரப்புதல், மற்றும் கணினி தொடர்பான மோசடிகளில் இறங்கும் "பாட்" (BOT) கும்பலின் வளர்ச்சியை சைமன்டெக் குறிப்பிடுகிறது. வைரஸ் பரவிய ஒரு கணினியை மோசடிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மர்மமான வேலைகளில் இறங்க அவர்களுக்கு `பாட்' கும்பல் உதவலாம்.
உதாரணமாக `பாட்' கும்பல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கணினிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக விளம்பரம் செய்தார்களேயானால், இதனை பயன்படுத்திக் கொள்ள `பாட்' கும்பலுக்கு பணம் செலுத்தி மோசடிகளில் இறங்கலாம்.
மேலும் முக்கியமாக பயனாளர் அல்லது வாசகர் உருவாக்கும் இடுகைகளை (User Generated Content) வெளியிடும் ஒரு இணையதளம் மென்பொருள் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது என்று சைமன்டெக் எச்சரித்துள்ளது.
அதாவது குறிப்பிட்ட இணையதளம் உயர் தொழில்நுட்ப வைரஸ் ஸ்கேனிங் முறையை வைத்திருந்தாலும் அதனை ஏமாற்றி உள்ளே நுழைய முடியும் என்று அது கூறுகிறது. இந்த பட்டியலில் செல்பேசி மூலம் பயன்படுத்தும் பயன்பாடுகள், தொல்லை மற்றும் மோசடி மின்னஞ்சல்களின் பெருக்கம் ஆகியவை இறுதியாக இடம்பெற்றுள்ளன.ஆனால் செல்பேசி பாதுகாப்பு குறித்து சைமன்டெக் அதிக முன்னுரிமை அளிக்கவில்லை. ஏனெனில், செல்பேசிகள் தற்போது சிக்கல் நிறைந்த ஒரு தொழில்நுட்பமாக மாறி வருகிறது.
செல்பேசி வங்கி நடவடிக்கைகள் மற்றும் பிற நிதி தொடர்பான நடவடிக்கைகள் அதில் மேற்கொள்ளும்போது மட்டுமே ஹேக்கர்கள் அதில் மோசடி செய்யமுடியும்.அதேபோல் மோசடி மின்னஞ்சல் அல்லது தொல்லை மின்னஞ்சல்களை க்ளிக் செய்ய வைக்க புதிய உத்திகளை பயன்படுத்தலாம். உதாரணமாக எம்பி.3 அல்லது ஃபிளாஷ் கோப்புகள் சேர்க்கப்படலாம்.இணையதளத்தில் மேலும் மேலும் அதிக விஷயங்கள் சேர்க்கப்பட சேர்க்கப்பட பாதுகாப்பு விஷயங்கள் மேலும் சிக்கலாகவே போய் முடியும் என்று சைமன்டெக் எச்சரிக்கை செய்துள்ளது.

25 Dec 2007

IIT நுழைவுத் தேர்வு குறித்த விபரம்

IIT நுட்பக்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கு ஜனவரி 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் சென்னை, மும்பை, தில்லி, கவுஹாத்தி, கான்பூர், கரக்பூர், ரூர்கீ ஆகிய 7 இடங்களில் IIT நுட்பக்கல்வி நிறுவனங்கள் உள்ளன. Indian Institute of Technology என்று அழைக்கப்படும் இந்த கல்வி நிலையங்களில் கல்விபயில மாணவரிடையே கடும் போட்டி இருக்கும்.
இதற்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு(Joint Entrance Exam-JEE) இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான மாணவ- மாணவியர் எழுதுவர். IIT கல்வி நிறுவனங்களில் B.Tech, B.Arch படிப்புகளில் சேருவதற்கும், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் IT படிப்பு படிப்பதற்கும், தன்பாத்தில் அமைந்துள்ள இந்திய சுரங்கவியல் கல்லூரி(Indian School of Mines)யில் சுரங்கத் தொழில்நுட்பம் படிக்கவும் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
IITக்களில் 2008-2009-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கு வருகிற ஏப்ரல் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) JEE நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவர்களும், தற்போது பிளஸ்-2 படித்துக்கொண்டிருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சத் தகுதியாக 60 விழுக்காடு மதிப்பெண் தேவை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள், உடல் ஊனமுற்றோர் போன்றோருக்கு 55 சதவீத மதிப்பெண் போதுமானது. 2 தாள்களை கொண்ட இந்த நுழைவுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் 3 மணிநேரம் வீதம் தேர்வு நடைபெறும். நுழைவுத்தேர்வில் மாணவர்களின் ஆராயும் திறன், சிந்தனை ஆற்றல், புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் வகையில் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை உள்பட அனைத்து IIT கல்வி நிறுவனங்களில் கிடைக்கும். குறிப்பிட்ட அரசு வங்கிகளின் கிளைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.1000 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 மட்டுமே. கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கனரா வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் அண்ணா நகர் கிழக்கு, அபிபுல்லா ரோடு மற்றும் பாரிமுனை தம்புசெட்டி தெரு, கோவையில் ஒப்பனைக்காரர் தெரு, மதுரையில் மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு, (ரயில் நிலையம் எதிரில்), சேலத்தில் அழகாபுரம், திருநெல்வேலியில் புறநகர்ச்சாலை, திருச்சியில் நந்தி கோயில் தெரு, வேலூரில் நகர மண்டபச் சாலை ஆகிய இடங்களில் இருக்கும் கனரா வங்கியின் கிளைகளில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப படிவங்களைத் தபால் மூலம் பெற விரும்புவோர் உரிய கட்டணத்தை "Chairman, JEE'' என்ற பெயரில் ஏதேனும் அரசு வங்கியில் பெறப்பட்ட கேட்புக் காசோலையுடன் சுயமுகவரி எழுதிய பெரிய அஞ்சல் உறைகளை, "Chairman, JEE, IIT, Chennai 600 036'' என்ற முகவரிக்கு அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளக் கடைசி நாள் டிசம்பர் 21-ந் தேதி ஆகும். விண்ணப்பங்களை வங்கிக்கிளைகளில் ஜனவரி மாதம் 4-ந் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஜனவரி 4-ந் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்று JEE நுழைவுத்தேர்வுக் குழு அறிவித்து உள்ளது.

23 Dec 2007

அம்பலம் ஏறும் அந்தரங்கங்கள்

டிஜிட்டல் உலகில் எல்லாமே செம ஸ்பீடு. டிஜிட்டலைஸ்ட் ஆகிய நடிகையின் கவர்ச்சி படமாகட்டும் அல்லது ரகசிய கசமுசா வீடியோவாகட்டும் அல்லது டிஜிட்டலைஸ்ட் ஆகிய ஒரு மென்புத்தகமாகட்டும் நொடிப்பொழுதில் உலகெங்கும் விஷ காய்ச்சல் போல் இணையம் வழி பரவிவிடும். என்னத்தான் பாதுகாப்பு முறைகள் கடைபிடித்தாலும் கலிபோர்னிய காட்டு தீ போல் இவை பரவுகின்றன. உருவாக்குதல் தான் கடினம், காப்பி செய்ய சில நொடிப்பொழுதுகள் போதும். மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆயிரக்கணக்கானோரின் உழைப்பில் வெளியாகும் வீடியோ கேம்கள், விலைமிக்க மின் பொருள்களின் கதையும் அதுதான். ஏதோ ஒரு விபரீத ஆசையில் யாருக்கும் தெரியாமல் சிட்டி ஹாலின் மதிப்புமிக்க மேயர் ஆசனத்தில் தன் மனைவியை துளி கூட துணியின்றி அவரை அமரவைத்து படம் எடுத்து தன் வீட்டு கணிணியில் வைத்திருந்தார் ஒரு பிரிட்டன் நகர மேயர். தன் வீட்டு பசங்க வீட்டில் ஒரு பார்ட்டி வைக்க வெளியூர் சென்றிருந்தார் மேயர். அவர் பிள்ளைகளின் நண்பர்கள் மேயர் வீட்டு கணிணியில் விளையாட தவறுதலாய் சிக்கியது அந்த படம். எவ்வளவு நேரமாகும்? ஒரே கிளிக்கில் உலகெங்கும் பறந்தது அந்த ஜோடியின் அந்தரங்கம். இப்படி படமாயும், வீடியோவாயும் மாட்டி நோந்து போனோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதில் புதிது இப்போது ஒலிவடிவம். நண்பரிடம், நன்கு தெரிந்தவரிடம், காதலரிடம் தானே பேசுகிறேன் என்ற நினைப்பில் அந்தரங்கமாய் ஏதேதோ கிளுகிளுப்பாய் பேச அப்பேச்சுக்கள் முழுவதும் எதிர்முனை நபரால் பதிவு செய்யப்பட்டு MP3 ஒலி வடிவில் எடுக்கப்பட்டு இணையத்தில் உலவ விடப்பட்டால் எப்படி இருக்கும்?. டிஜிட்டல் உலகில் இது போன்றவை எளிதாய் சாத்தியம். வெளிவரும் செல்போன்கள் அனைத்துமே இது போன்ற வாய்ஸ் ரெக்கார்டிங் கொண்டிருப்பது ஒரு பயமுறுத்தும் செய்தி. "நேரில் காதுள் பேசு. போனில் அதுவும் பேசாதே" என புதுசாய் சொற்றொடர் உருவாக்கவேண்டியுள்ளது. அப்படியே எசகு பிசகாய் எதாவது ஆர்வக்கோளாரில் பேசினாலும் பேசும்போது கவனமாய் போனில் பேசவும். முக்கியமாய் "அது" போன்ற பேச்சுகளிடையே உங்கள் விலாசம், பெயர், மொபைல்நம்பர் போன்ற தகவல்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
Thanks PKP

இதுதான் உலகமா? இவ்வளவுதான் உலகமா?

இந்த படங்கள் உங்களுக்கு என்ன படிப்பினையை தருகின்றன.
அந்த படிப்பினையை உலகுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.







17 Dec 2007

EID MUBARAK

16 Dec 2007

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம் (MIWA )

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம் ( MIWA ) துபாய். UNITED ARAB EMIRATES

25ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பு கூட்டம்

நாள் : 19.12.2007 புதன்கிழமை (ஹஜ்பெருநாள் அன்று) மாலை 5.30 மணிக்கு ( இன்ஷாஅல்லா )

இடம் : EAT & DRINK RESTAURANT PARTY HALL, GARHOUD - DUBAI ( Near to Dubai International Airport )

தலைமை: T. E. ஷாஹூல் ஹமீது அவர்கள்.
முன்னிலை: M. அப்துல் காதர் அவர்கள்.
M. முகம்மது ஹிலால் அவர்கள்.

கிரா அத்: S. ஜஹபர் உசேன் அவர்கள்.
வரவேற்ப்புரை: P.M. ஜாஹிர் உசேன் அவர்கள்.

சிறப்புரை :

P.M. ஜாஹிர் உசேன் அவர்கள். ( என்னை கவர்ந்த மிவா )
S.L.M. சாஹிப் மரைக்காயர் அவர்கள். ( சங்கம் கடந்து வந்த பாதை )

சிறப்பு விருந்தினர்கள் :

Haji Dr. Rtn. L. கமால் பாட்சா அவர்கள்.
Prop. National Pharma - Tanjavur.

Haji A. ஜாபர் அலி அவர்கள்.
Assistant Vice President Dubai Islamic Bank

Haji M. இமாம்தின் அவர்கள்.
Prop. Royal Furniture Muthupettai

K.M. ஹாருன் ரசீது அவர்கள்.
Assistant Manager Commercial Bank of Dubai.

மேலும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நன்றியுரை: H. ஷேக் தாவூது .

நிகழ்ச்சி தொகுப்பு: Z. அஹமது குரைஷி .

சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் குடும்பத்துடன் தவறாது கலந்து கொண்டு நமது சங்கத்தின் நற்ச்சேவைகள் தொடர துஆ செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பெண்களுக்கு தனி இடவசதி உண்டு

துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வாகன வசதி ஏற்ப்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தேரா துபாய் அப்பா கடை.

சார்ஜா பனாமா ரெஸ்டாரண்ட்.

பஸ் புறப்படும் நேரம் மாலை 4.30 மணிக்கு

மேலும் விபரங்களுக்கு
S. ஜஹபர் உசேன 050 4614636
T. ஜாஹிர் 050 4945445
P.M. ஜாஹிர் உசேன் 050 5956737
Z. அஹமது குரைஷி 050 3557100


இங்ஙனம்.
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம் ( MIWA )
Post Box No. 5184 Dubai U.A.E.
E Mail : miwauae@yahoo.co.in
Web Site : http://www.miwa.20m.com/

3 Dec 2007

2007 ஆம் ஆண்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது.

2007 ஆம் ஆண்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது. உங்கள் மற்றும் உங்களின் உறவினர்களின் பெயர் அதில் இடம்பெற்றுள்ளதா என இப்பொழுதே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதில் உங்கள் மற்றும் உங்கள் உறவினர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் உடன் பதிவு செய்துக் கொள்ளுங்கள். டிசம்பர் மாதம் 8 தேதி 2007 க்குள் பதிவு செய்திருக்க வேண்டும். இது சம்பந்தமாக மேலும் விபரங்களை அறிந்துக் கொள்ள கீழ்கண்ட வலைதளத்திற்குச் சென்று உங்களின் வாக்காளர் பட்டியலை அறிந்துக்கொள்ளலாம். அப்படி ஏதேனும் உங்களின் தகவல் விடுபட்டிருந்தால் ஆன்லைனிலேயே உங்களின் தகவல்களைப் பதிவுசெய்துக் கொள்ளலாம்.

http://www.elections.tn.nic.in/

http://www.eroll.tn.nic.in/pdf/acwise_pdf.asp

25 Nov 2007

சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது

சென்னை, நவ.23- கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடி கிறது என்று ஆராய்ச்சியாளர் கள் கண்டு பிடித்துள்ளனர்.

முதல் ரக சர்க்கரைநோய் இளம் வயதிலும் வரலாம் முதிய வயதிலும் வரலாம். தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் கட்டாயமுள்ளது. இரண்டாம் ரக நோயாளி கள் மாத்திரை சாப்பிட்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும். இது இளம் வயதில் வராது. உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும்.
சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை. இப்படிப்பட்ட சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், வேப் பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறு கிறார்கள். இந்த நிலையில் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள் ளனர். பெங்களூரைச் சேர்ந்த பொது மக்கள் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வுக் குழு மருத்துவர்கள் கோவக்காயை பொடியாக்கி சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 200-க்கும் குறைவாக உள்ள 30 புதிய சர்க்கரை நோயாளிகளுக்கு தினமும் ஒரு கிராம் கொடுத்து வந்தனர். அந்த ஒரு கிராம் பொடி, கோவக்காய் பச்சையாக 15 கிராம் சாப்பிடுவதற்கு சமம். இவ்வாறு 3 மாதம் நோயாளிகள் சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக் காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.

21 Nov 2007

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கத்தின் ( MIWA ) 25ம் ஆண்டின் நிர்வாகப் பொறுப்பாளர்கள் தேர்வுகூட்டம்

வெள்ளி விழாவின் வெற்றிப்படிகளில்....!

UNITED ARAB EMIRATES
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கத்தின் ( MIWA )
25ம் ஆண்டின் நிர்வாகப் பொறுப்பாளர்கள் தேர்வுகூட்டம் வரும் 01.12.2007ம் தேதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தேரா துபாய் அல் இத்திஹாத் ரோடு பிலேம் பார்கில் ( தேரா டெனாடா அருகில் ) நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் U.A.E யில் உள்ள நமது முத்துப்பேட்டை வாசிகளும் தவறாது கலந்து கொண்டு நமது சங்கத்தின் நிர்வாகப் பொருப்பாளர்களை தேர்வு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்.

இங்ஙனம்
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம் ( MIWA )
Post Box No. 5184 Dubai U.A.E.
E Mail : miwauae@yahoo.co.in
Web Site : www.miwa.20m.com

19 Nov 2007

குழந்தைகளும் தொலைக்காட்சியும்...

பெற்றோர்களே! உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா ? … படியுங்கள்.

குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.

1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். ( தூங்குவதைத்தவிர ).
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன.
மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்கின்றன.

குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:

1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.
3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப் பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.
4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.

வன்முறையும் தொலைக்காட்சியும்

1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
2. சனி , ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.
4. 10,000 கற்பழிப்புகள் , அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன. அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.
5. பள்ளியில் சேருமுனனரே (Adults) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.
6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.
7. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.
8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.
9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.
10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு, இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.

தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:
1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது ? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன், எழுதும் நேரத்திற்கு முன், சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.
2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.
4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.
5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.
6. வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.
7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும். டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.
'குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் (குழந்தைகளின் ) மழலைச் சொல் கேளாதார் ' என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள் தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள் !

ஆபத்து! ஆபத்து!! மிகவும் ஆபத்து!!! உஷார் !

பெற்றோர்களே ! உங்கள் குழந்தைகளை அழித்து விடாதீர்கள் !
இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது. அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும். நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம். மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை. சிந்தனை ஆற்றல் குறைகிறது. செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள். ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும். அதோடு இக்குழந்தைகள் முரட்டுக் குழந்தையாகளாகவும் இருப்பார்கள். அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது. ( ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து)

பெற்றோர்களே! உஷார்!!

பெற்றோர்களே ! இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா ?
சதாவும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந் திருக்கிறார்கள். சன் டிவியின் ' சுட்டி ' போன்ற சேனல்கள்; வந்த பிறகு பிள்ளைகள் எங்கும் செல்வதில்லை. விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை. பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை. ஏன் வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை.

சிலைகளாக

பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான். உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக்காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளைவு? அவர்களின் உடல் ஆரோக்கியம் குன்றி வலுவிழந்து விடுகிறார்கள்.கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள். நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள்.
குழந்தைகளின் நிலைமை எங்கோ சென்று விட்டது பார்த்தீர்களா ?

குழந்தைகளின் எதிர்காலம் ?

இப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? என்று சற்றேனும் சிந்தித்தீர்களா? அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?
உடல் வலுவிழந்து, மூளைத்திறன் குன்றி, சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள். அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும் , அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அலட்சியம் காட்டாதீர்!

இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள் என்பது தான் பொருள்.
எனவே ! பேற்றோர்களே ! குழந்தைகளை கருத்தூன்றி கண்காணியுங்கள்.
தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள். கண்ட நேரங்களிலெல்லாம் டி .வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள். அவர்களை தொலை நோக்காகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும்.
இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்யவேண்டிய கடமை. இதுவே அவர்களுக்கு அழகு. குழந்தைகளை தூங்கவைப்பதற்கும், உணவூட்டுவதற்கும், நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இறைவன் சமுதாயத்தை காத்தருள்வானாக!

அன்புடன்,தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.

14 Nov 2007

ஒரு கருவின் கதறல்....

பூமியில் இருக்கின்ற அம்மாவுக்கு, சொர்க்கத்திலிருந்து உன் குழந்தை எழுதும் முதல் கடிதம் இது. இல்லை இல்லை உன்கரு எழுதுகின்ற கடிதம் இது. உருத்தெரியாமல் போய்விட்ட எட்டு மாத கரு பேசுகிறேன். பூமியில் வாழ வருவதற்கு முன் தெருவில் தீக்கிரையாக்கப்பட்ட கருவின் முனகல் சப்தம் இது. வேடிக்கையாக இருக்கிறது அம்மா.. கடிதங்கள் சுமக்கும் கருக்களுக்கு மத்தியில் ஒரு கருவே இங்கு கடிதம் எழுதுகிறது பாரேன்..? உன்னுடைய வடிவில் இறைவனை சந்திக்க நினைத்தேன். இப்பொழுது இறைவனின் முகத்தில் உன்னை கண்டு கொண்டிருக்கின்றேன். ம்..ஆமாம்மா.. நான் இப்போது இறைவனின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கின்றேன். அவன் என்னை உலகத்தில் எல்லோரைவிடவும் அதிகமாக விரும்புகின்றான். என்னம்மா நீ நக்கலாக சிரிப்பது போல தெரிகின்றது. "ம் என்னடா உலகத்தில் யார் யார் எப்படி எப்படி என்னை விரும்புவார்கள் என்று தெரிவதற்கு முன்னரே என்னை அழித்து விட்டார்களே..? எனக்கு எப்படி யார் அதிகமாய் விரும்புவார் என்று தெரியும் என்கிறாயே...? " யார் எப்படியோ தெரியாதம்மா ஆனால் நீ என்னை அதிகமாய் விரும்பியிருக்கிறாய் என்று உன் வயிற்றிலிருக்கும்போது நீ தந்த ஸ்பரிசத்திலிருந்து மெல்ல மெல்ல உணர்ந்தேன். நான் உன்னுடைய குழந்தையாக மாற நினைத்தேன். ஆனால் என்ன நடந்தது என்று இதுவரை உணர முடியவில்லை. ஏனம்மா என்னை கருவில் அழித்தார்கள்? உன் வயிற்றினுள் இருக்கும் அந்த அறையில் நான் மெய் மறந்து இருந்தேன் தெரியுமா..? அந்த பாதுகாப்பான இருட்டறை எவ்வளவு சுகமாய் இருந்தது? எந்த குழாய் வழியாகவோ வருகின்ற உணவுகள்.. யாரோ எனக்கும் சேர்த்து மூச்சு விடுவது போன்ற உணர்வுகள்.. நீ அங்குமிங்கும் நடக்கும்போது மேகங்களுக்கு மத்தியில் நான் உலா வருவது போன்ற கனவுகள்.. திடீரென்று ஆசிர்வதித்து விட்டு மறைந்து போகும் கைகள்.. எனக்கு முளைத்துள்ள குட்டி குட்டி விரல்கள்... எல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அம்மா.. அந்த இருட்டு உலகத்தில் எப்பொழுதும் யோசனையுடனும் தூக்கத்துடனும் என்னுடைய பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தன.. அவ்வப்போது நீ சமைக்கும்போது வருகின்ற குக்கர் விசிலின் சத்தம் கேட்டு நானும் பதிலுக்கு விசில் கொடுக்க நீ பரவசப்பட்டு ஒரு தட்டு தட்டுவாயே..? உன்னை நானும் என்னை நீயும் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் உனக்கும் எனக்கும் உள்ள அந்த நெருங்கிய உறவுக்கு என்ன பெயர் வைப்பது என்று இதுவரை என்னால் சொல்ல முடியவில்லையம்மா. எப்போதும் வயிற்றில் காதுவைத்து என் சத்தங்கள் கேட்டு மகிழ்ந்து என்னைவிடவும் ஒரு குழந்தையாக மாறி கத்துவாரோ என் தந்தை.. அந்தச் சத்தங்கள் எல்லாம் தொப்புள் கொடி வழியாக என்னைத் தொட்டுக்கொண்டிருந்தன.. எவ்வளவு சுகமாய் இருந்தது தெரியுமா..? பின்னர் உன்னைச்சுற்றிய உறவினர்களின் கேலி கிண்டல்கள் எல்லாம் கேட்டு கேட்டு அவர்களின் குரல் எனக்குள் பதிந்து போயிற்று.. வெளியே வந்ததும் முதல் வேலையாக உன்னை கேலி செய்தவர்களின் முகத்திலெல்லாம் ஒண்ணுக்கு அடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன் தெரியுமா..?

2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 வது நாள் நாம் தங்கியிருந்த குஜராத் மாநிலம் நரோடா பாடியாவில் திடீரென்று எனக்குள் பூகம்பம் வந்தது போன்ற உணர்வு... என்ன நடந்ததென்று தெரியவில்லை என்னைத் தூக்கிக்கொண்டு நீ ஓடுகிறாய் என்று நினைக்கின்றேன்.... பல வித்தியாசமான குரல்கள் எல்லாம் என்னைச் சுற்றிக் கேட்கின்றது.. "கௌஸர் பானு.. இங்க வந்திரு.. சீக்கிரம் வா..அந்த அயோக்கியங்க வராங்கம்மா..." என்று உன் பெயரைச் சொல்லி யாரோ பதறிப்போய் கத்துகிறார்கள். அதன்பிறகு உன்னைச்சுற்றி எத்தனையோ காலடித்தடங்கள் என் காதுகளுக்கு கேட்கிறது. ஏதோ சில கோஷங்கள் வேறு... உறவினர்கள் கேலி பேசும்பொழுது உன் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கும். அந்த அதிர்வினில் எனக்குள் வருகின்ற தொப்புள் கொடிகள் கூட மகிழ்ந்து இதமாய் விரியும்.. ஆனால் இன்று உன்னைச் சுற்றிய அந்தப் பேச்சுகளில் நீ மகிழ்வதாய் தெரியவில்லை. உன் இதயம் வழக்கத்தை விடவும் அதிகமாய் பயத்தில் துடிக்க தொப்புள் கொடிகளில் உஷ்ணக் காற்று அடிக்கிறதம்மா.. ..எனக்கும் அந்தக் குரல்கள் இதுவரை பழக்கப்படவில்லை.. "என்னம்மா ஆயிற்று ? ..யாரவர்கள்..? " திடீரென்று நீ கதறி அழ ஆரம்பிக்கின்றாய்.."வேண்டாம் ..வேண்டாம் விட்டுறுங்க .."என்று கெஞ்சுகிறாய்.. தந்தையின் குரல் வேறு பதட்டத்தோடும் உன்னைச் சுற்றி கதறியபடியும் கேட்கிறது.. ஒரு அரை மணி நேரமாவது நீடித்திருக்கும் அந்தக் குரல்களும் அப்பாவின் கதறல்களும், அதன் பிறகுதானம்மா அந்த உச்சக்கட்ட பயங்கரம் நடந்தது. ஒரு கூர்மையான சூலாயுதம் ஒன்று மெல்ல மெல்ல இருட்டறையைத் துளைத்துக் கொண்டு என்னை நோக்கி வருவதைக் கண்டேன்.. அந்த சூலாயுதம் துளைத்த ஓட்டை வழியாக பார்த்தால் சுற்றி எவரெவர்களோ ஆயுதங்களோடு நான் இருந்த இருட்டறையின் இருட்டை விடவும் மிகவும் இருட்டாய் உன்னைச் சுற்றிக் கொண்டு நிற்பதை.. நான் பயத்தில் அலற ஆரம்பித்து விட்டேன் அம்மா. ஆனால் என்னுடைய அலறல் உங்களுடைய காதுகளுக்கு கேட்டிருக்குமா என்று எனக்குத் தெரியாது.. ? பயங்கர சப்தத்துடன் விழுகின்ற அருவியின் அருகே ஒரு கட்டெறும்பின் கதறல் யாருக்கு கேட்கும்.? வெள்ள நீர் வீட்டுக்குள் நுழைந்து விட குடிநீரைப் பற்றி யாரும் கவலைப்படுவதுண்டோ..? நான் கதறுகிறேன்.. என்னுடைய கதறலையும் மிஞ்சி நீ கதறுகிறாய் அம்மா.. பாரேன் கதறலில் கூட நம் குரல்கள் ஒரே சீரில் ஒலிக்கின்றது.. வெகு தூரத்தில் இருந்து சில பெண்களின் குரல்கள் வேறு பரிதாபமாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட தவளையின் முனகலாய்;. என்னுடைய வலியைவிடவும் அந்தப்பெண்களின் அபாயக் கதறல்கள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது. யாரம்மா அந்தப் பரிதாபக் குரலுக்குச் சொந்தக்காரர்கள்.? அந்த அபாயச் சப்தங்களுக்கிடையே என்னுடைய வலியின் கதறல்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை.. அந்த சூலாயுதம் முதலில் நம்மை இணைத்த தொப்புள் கொடிகளை அறுத்தெறிந்து பின் என்னுடைய பிஞ்சு வயிற்றில் வந்து நிற்கிறது அம்மா.. நான் மறுபடியும் கதறுகின்றேன்.. நம் கதறல்களின் சப்தத்தோடு சுற்றியுள்ளவர்களின் கோஷ சப்தங்கள் ஓங்கி ஒலிக்கின்றது. சிரிப்புச் சப்தங்களும் கேட்கின்றது... அவர்கள் யாரம்மா..புதியாய் உலகத்தில் தோன்றிவிட்ட மிருக ஜாதிகளோ..? அந்த சூலாயுதம் என் சதைகளில் குத்தி உருவப்படும்பொழுது எனக்குண்டான வலியை கேட்கும் சக்தியும் உனக்கு இல்லை.. அந்த வலியில் கதறுகின்ற உனது வலியை உணரும் சக்தியும் எனக்கு இல்லாமல் போயிற்று.. "அம்மா அம்மா காப்பாற்றுங்கள் என்னை..ரொம்ப வலிக்கிறது அம்மா..தாங்க முடியவில்லை....
என்னை விட்டு விடச்சொல்லுங்களேன்..""இனிமேல் இந்த உலகத்தின் எவர் கருவுக்கும் அனுப்பிவிடாதே என்று இறைவனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.. அவர்களிடம் சொல்லி என்னைக் காப்பாற்றுங்கள் அம்மா " வலி பொறுக்க முடியாமல் நான் மீண்டும் மீண்டும் கத்துகிறேன்.. எனது வயிற்றின் வழியாக பாய்ந்த அந்த சூலாயுதம் எனது குட்டி கண்கள் , குட்டி மூக்கு, குட்டி உதடுகள் , பட்டு விரல்கள் எல்லாம் தாறுமாறாய் கிழித்துப் போகிறது.
பட்டுகளை அழித்துபுடவை! ஏனிந்தமொட்டுக்களை அழிக்கும் மடமை?
என்னுடைய கைகளை மட்டும் தனியே பிய்த்துப் போட்டது அந்த சூலாயுதம்.. என் கால் விரல்களின் சதைகள் அந்த சூலாயுதத்தின் முனைகளால் கவ்வப்பட்டு கண் பகுதியில் வந்து ஒட்டிக் கொண்டது. அத்தோடு அவர்களின் வெறி தணியவில்லை.. அந்த சூலாயுதத்தின் கூர்மையான பகுதியின் முனையில் குத்தி அம்மா உன் வயிற்றைக் கிழித்து என்னை வெளியில் தூக்குகிறார்கள். ஆ..அம்மாஆஆஆஆஆ.. அந்த வலியை சொன்னால் மொழிகள் கூட முனகும்...... எல்லோரும் தாயின் வழியாகத்தானே உலகத்தை பார்க்கிறார்கள். நான் மட்டும் சில பேய்களின் வழியாக உலகம் பார்க்கின்றேன். எனக்கு மட்டும் ஏனம்மா விதிவிலக்கு? சூலாயுதத்தின் முனையிலிருந்து நான் கண்ணைத்திறந்து பார்க்கின்றேன்.... பதறிப்போய்விட்டேனம்மா...இதயம் இறந்த சிலர்..நினைவு மறக்கும் வரையிலும் ஒருவனை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்! டயரும் உயிரும் சமத்துவமாய் எரிக்கப்படுகின்றது.. குடும்பம் குடும்பமாய் உயிர்கள் கொளுத்தப்பட்டு மனிதநேயம் மட்டும் கடலில் கரைக்கப்படுகின்றது. ஆங்காங்கேவயது வித்தியாசமில்லாமல் ..பெண்கள் மீது பலாத்காரங்கள்! அட தூரத்தில் பாருங்களேன்... தேசமாதாவையும் ஒருவன் துரத்திக்கொண்டு ஓடுகின்றான் கையில் சூலாயுதத்தோடு !அய்யோ.. கருவான எனக்கே கண் கலங்குகிறதே..? என்னம்மா இது.. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் யுத்தம் நடக்கிறதா என்ன..? அதிர்ச்சியாக இருக்கிறது இந்தியாவில் கூட மனிதர்களைத் தின்னும் கூட்டங்களா..?இதற்கிடையில் சூலாயுதத்தின் முனையில் என்னைத் தூக்கியவர்கள் யாருடைய பெயரையோ திரும்ப திரும்ப சொல்லி வெற்றி முழக்கமிட்டு எக்காளத்துடன் சிரிக்கிறார்கள். நீ சொல்லவேயில்லையம்மா.. மனிதர்கள் இவ்வளவு பயங்கரமானவர்களா..? அந்த வலியிலேயே நான் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கின்றேன். கண்ணை மூடுவதற்கு முன் உன் முகம் பார்க்க முற்பட்டேன் ஆனால் முடியவில்லையம்மா.. என்னை நெருப்பில் வீசி அழித்துவிட்டார்கள்.. அய்யோ என்னவெல்லாம் நான் கற்பனை செய்து வைத்திருந்தேன் தெரியுமா..?
*கருவுக்குள் என்னை பாதுகாப்பாய் அடைகாத்த உன் மடியிலே விளையாடி மகிழவேண்டும்
*உன் கண்ணீரைக் என் கைகளால் துடைக்க வேண்டும்
*எப்போதும் உன்னை மகிழ்ச்சி படுத்தி வைக்க வேண்டும்
*குறும்புகள் ஏதும் செய்யாமல் உன் சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் இப்படி ஏகப்பட்ட திட்டங்கள் வைத்திருந்தேன்..
நான் உன்னுடைய குழந்தையாக மாற நினைத்தேன். ஆனால் என்ன நடந்தது என்று இதுவரை உணர முடியவில்லை.

ஏனம்மா என்னை கருவில் அழித்தார்கள் ? ? ? ?

இந்திய பொருளாதார வளர்ச்சியும், வளைகுடா இந்தியர்களும்

இந்தியாவின் பொருளாதாரம் உச்சகட்டத்தை எட்டி விட்டது. பங்குச்சந்தைக் குறியீட்டு எண் 20,000 தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. உலகையே ஆட்டிப் படைத்த டாலர் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 ஆக மாறி விட்டது. உலகின் மிகப் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி மாறி விட்டார். இந்தியர்கள் பெருமிதம் அடைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் வளர்ச்சியா, வீக்கமா என்று என்னுள் மாறுபட்ட கருத்துகள் எழுகின்றன. இது வளர்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். நமது கட்டுரையின் நோக்கம் இதை ஆராய்வது அல்ல. வளைகுடாவில் இருக்கும் லடசக்கணக்கான இந்தியர்களுக்கும், இந்த பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வதே ஆகும். பொதுவாக வளைகுடா பிரதேசங்களில் இருக்கும் இந்தியர்கள் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களே. அதிலும் தமிழர்கள் 350, 450 திர்ஹமிற்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர். . சுருக்கமாகச் சொன்னால் 80 சதவீதம் பேர் 8000 ரூபாய்க்குள் வேலை செய்பவர்களே. காலை முதல் இரவு வரை கடுமையாக உழைத்து இந்த பணத்தைச் சம்பாதிக்கின்றனர். கடந்த ஓராண்டாக டாலரின் வீழ்ச்சிக்குப் பிறகு இவர்களின் நிலை திண்டாட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
2002 ல் 750 திர்ஹம் இருந்தால் 10,000 ரூபாய் அனுப்பி விடலாம். (2002 மே 1000 ரூபாய் = 74.30) ஆனால் இப்போது 970 திர்ஹம் தேவைப்படுகிறது. 2007 மே கிட்டத்தட்ட 15 முதல் 20 சதம் வரை இழப்பு ஏற்படுகிறது. ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி என்னதான் உயர்ந்தாலும் விலைவாசி குறைவதாய் இல்லை. அதற்கு அரசும் ஏதும் நடவடிக்கை எடுப்பது இல்லை. பாலின் விலையும், அரிசி, பருப்பின் விலையும் ஏறிக் கொண்டே தான் இருக்கிறதே ஒழிய குறைவதே இல்லை. 5000 அனுப்பியவர்கள் இப்போது 4000 மட்டுமே அனுப்ப முடிகிறது. 5000 த்தில் துபாய் செல்ல வாங்கிய கடன், அதற்கு வட்டி, வட்டி போட்ட குட்டி என அனைத்தையும் அடைத்து குடும்பத்தையும் காப்பாற்றக் கஷ்டப்பட்டவர்கள் இப்போது 4.000 எனும் போது மேலும் முழி பிதுங்கி நிற்கின்றனர். வளைகுடாவில் சம்பள உயர்வு என்பது பெரும்பாலான நிறுவனங்களில் கானல் நீர்தான். துபாயில் குறிப்பிட்ட அந்த இரு பெரிய கிளினிங் கம்பெனிகளில் ஆண்டாண்டு காலமாக 350, 450 திர்ஹம் தான் சம்பளம். சம்பள உயர்வே கிடையாது. ஆனால் இந்தியாவில் எவையெல்ல்லாம் அத்தியாவசியத் தேவையோ அவையெல்லாம் விலை உயர்கின்றன. ஆடம்பரத் தேவை உள்ளவைகளின் விலை குறைகின்றன். இதனுடைய வெளிப்பாடு தான் சமீபகாலங்களில் துபாயில் நடக்கும் போராட்டங்கள் போன வாரம் 4000 பேர் கைது செய்யப் பட்டு நாடுகடத்தப்பட இருந்தனர். ஆனாலும் அதில் 100 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன்.
2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் - அபுதாபி சாலையில் மறியல் செய்யப்பட்ட போது தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த அரசும் இப்போது தொழிலாளர்களுக்கு எதிராகத் திரும்பி உள்ளது. வளைகுடா நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு நாடுகள். எது நடந்தாலும் நாட்டாமை புஷ் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்பவர்கள். டாலர் வீழ்ச்சியடைந்து வரும் போது அவர்களுடைய நாணய மதிப்பை அதிகரிப்பதில்லை. உண்மையில் அவர்களுக்கு அதற்கு உரிமையில்லை.
1. டாலருக்கு நிகரான தமது நாணய மதிப்பை வளைகுடா நாடுகள் உலகச் சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு மாற்றப் போவதில்லை.
2. வளைகுடா நாட்டில் உள்ள கம்பெனி முதலாளிகள் ( இந்தியர்கள் வேலை செய்யும் பல நிறுவன நிர்வாகிகள் இந்திய பண முதலைகள் என்பது வேதனை) தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தப் போவதும் இல்லை.
3. இந்தியர்கள் வளைகுடாவை விட்டு 'போதும்பா சாமி' என்று திரும்பப் போவதும் இல்லை.
4. வழக்கம் போல இந்தியாவில் விலைவாசி குறையப் போவதுமில்லை.
5. இந்திய வெளியுறவுத் துறையோ, தூதரங்களோ தொழிலாளர்கள் நன்மைக்காக எந்தத் துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை. அப்படியானால் இதற்கெல்லாம் தீர்வு ?.
எல்லாம் நம் தலையெழுத்து என்று கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக் கொண்டே வேலை பார்த்துக் காலத்தை ஓட்ட வேண்டியது தான்.
Mansoor Khan

13 Nov 2007

நல்ல ஐடியா!

பேரூந்துகளில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் Footboard தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்க முடியவில்லை. "ஏய் பொறம்போக்கு மேலே வா" என்று அன்பாகச் சொன்னாலும் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதிலிருக்கும் த்ரில் வேறெதிலும் இல்லை. தமிழக அரசும் என்னென்னவோ செய்து பார்த்து கடைசியில் சோதனை அடிப்படையில் படத்திலுள்ளவாறு பேரூந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது.

( அப்படியே அந்தக் கைப்பிடியையும் எடுத்துவிடால் நல்லது )

11 Nov 2007

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்

முஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை!பணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை!!
இதோ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B. Tech .,B.D.S.,M.B. B.S.,M.S. ,M.D.,M.E. ,M.S.W.,M. Tech.,M.C. A மற்றும் Professional/ Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும். IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும். இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :
1. +2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.
2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இரக்க வேண்டும். Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.
3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.
4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.
5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றுமு் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? http://www.minorityaffairs%20.gov.in/ என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். 14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002

மேலும் விபரங்களுக்கு : ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)தொலைபேசி 044-28514846 அல்லது044-28515450 என்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும். சமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007
வீழ்ந்து கிடக்கும் சமுதாயம் எழுந்து நிற்க கைகொடுப்போம்!!

8 Nov 2007

அன்புக்குரியவர்களே!

அன்புக்குரியவர்களே!
1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களைச் சிறுக சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இளம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவி கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?
10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?
16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா?
18) புகைப்பிடிப்பது நாகரிகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரிகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்களா? உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெறுங்கள்.

Colachel N.Meeran

1 Nov 2007

20 நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் உயிரை பறிக்கும் செல்போன்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவல் இரவில் செல்போனுக்கும் ஓய்வு கொடுத்துவிடுங்கள்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன். அழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும்.குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் ஸ்பிரிங் போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்... டிரிங்... என்று மணியடிக்கும். அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு ரிங்டோன் தான்!இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல் போன்களை தாராளமாக வைத்திருக்கிறார்கள். ஒரு புறம் வேடிக்கை யாகவும் இருக்கிறது. காதில் ஹெட்போனை வைத்துக் கொண்டு நடுரோட்டில் தனக்குத்தானே பேசிக் கொண்டு போவதை செத்துப் போன நமது தாத்தா - பாட்டி பார்க்க நேர்ந்தால் பாவம், யாரு பெத்த புள்ளையோ இப்படி பைத்தியம்புடிச்சு அலையுது என்பார்கள். கற்பனைக்கும் எட்டாத இந்த செல்போனை யார் கண்டுபிடித்தது சிகாகோவைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர் என்பவர்தான் இந்த நவீன செல்போனை கண்டுபிடித்தது. 1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி உலகின் முதல் செல்போனை கண்டு பிடித்து முதன் முதலாக பேசியதும் இவர்தான். பிரபல மோட்டோரல்லா கம்பெனிதான் முதல் செல்போனை உலகிற்கு காட்டியது. இந்த நிறுவனத்தை சேர்ந்த மார்ட்டின் கூப்பர் முன்னதாக வயர்லெஸ், ஆன்டனா சம்பந்தமான கடை வைத்திருந்தவர் என்பது விசேஷம். எனினும் இந்த செல்போனுக்கு அடிப் படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது அமெரிக் காவின் நிï ஜெர்சியை அடுத்து முர்ரேஹில் பகுதியில் உள்ள பெல் லேபாரட்டரிதான். இவர்கள்தாம் வயர்கள் இல்லாத வாக்கி - டாக்கி ரேடியோவை 1947-ல் கண்டுபிடித்து ராணுவ உபயோகத்திற்காக தந்தார்கள். இது அதிக எடைகொண்டதாக இருந்தது. இதனை 1960 வாக்கில் ஓரளவுக்கு நவீனமாக்கினார்கள். இதைத்தொடர்ந்துதான் 1973-ல் மார்ட்டின் கூப்பர் நவீன உயர்ரக செல்போனை கண்டுபிடித்தது. 1990-ல் உலகம் முழுவதும் செல்போன்கள் முற்றிலும் நவீன யுகத்திற்கு போய்விட்டன. செல்போனை கண்டு பிடித்ததற்காக கடந்த 2003-ல் வார்தான் இன்போசிஸ் பிசினஸ் டிரான்ஸ்பர்மேசன் விருது கிடைத்திருக்கிறது மார்ட்டின் கூப்பருக்கு!முதல் செல்போனை மோட்டோரல்லா கண்டு பிடித்தாலும் இன்று உலகம் முழுவதும் செல்போன் வியாபாரத்தில் சக்கைப் போடு போடுவது நோக்கியா நிறுவனம் தான்! உலகில் 36 சதவீதம் பேர் இதைத்தான் வைத்திருக்கிறார்கள். இது தவிர எல்.ஜி. மிட், சுபிசி, பேனாசோனிக், சோனி எரிக்சன், சன்யோ, சாம்சங், சைமன்ஸ், தோஷிபா, பிலிப்ஸ் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன. இன்றைக்கு உலகம் முழுக்க சுமார் 350 கோடி பேர் செல்போன் வைத்திருக் கிறார்கள். இவர்களில் அதிகம் பேர் செல்போன்கள் வைத்து நம்பர் 1 இடத்தில் இருப்பவர்கள் சீனாக்காரர்கள். இங்கு 50 கோடி பேரிடம் செல் இருக்கிறது. இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த 2007 ஜுன் மாத கணக்குப்படி பதினெட்டே முக்கால் கோடி பேரிடம் செல்போன் இருக்கிறது. இந்தியாவில் மாதத்திற்கு 73 லட்சம் செல்போன்கள் விற்கின்றன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் 50 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. உலகின் பல நாடுகளில் ஜனத்தொகையை விடவும் செல்போன்களின் எண் ணிக்கை அதிகமாக உள்ளது. வருகிற 2015-ம் ஆண்டு உலகின் 90 சதவீதம் பேரிடம் செல்போன் இருக்குமாம்.
அதிர்ச்சி இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. ஒருவேளை இந்த செல்போனே உலகை அழிக்க காத்திருக்கும் சுனாமி எமனாக இருக்கலாம். எந்த ஒரு அபாயகரமான சூழ்நிலையையும் அது வரும் முன்பே கண்டுபிடித்து உலகுக்கு எச்சரிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் கடமையாகும். அந்த வகையில் செல்போன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வேகமாக வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக மையம் நடத்திய ஆராய்ச்சியில் செல்போனின் அதீத பயன்பாட்டால் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடித்தது, எனினும் அறிக்கைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இது ஒரு தற்காலிக முடிவு என்று விட்டுவிட்டார்கள். செல்போன் என்பது சமீபத்தில் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பதால் இதுபற்றிய உண்மைகளை அறிய கால அவகாசம் தேவைப்படும் என்று உலக விஞ்ஞானிகள் அறிவித்த பட்சத்தில் உலக சுகாதார மையமும் முன்னர் அமெரிக்கா கண்டுபிடித்த விஷயத்தில் மூக்கை நுழைத்து ஆம் என்று கூறியிருக்கிறது.கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து செல்போனை உபயோகித்து வந்த 3 ஆயிரம் பேரை பரிசோதித்து பார்த்தபோது அவர்களில் 40 சதவீதம் பேருக்கு மூளையில் கேன்சர்கட்டிகள் உருவாகி உள்ளது. இவை 2 விதமான புதிய கேன்சர் நோயாக உள்ளன. பொதுவாக செல்போனில் இருந்து வெளிவரும் ரேடியேசன் என்ற கதிர் வீச்சு மிகக் குறைந்த அளவுதான் என்றாலும் அது மனித உடலின் திசுக்களை ஓரளவு பாதிக்கத்தான் செய்கிறது. செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பவர் களுக்குத்தான் இத்தகைய ஆபத்துபகாதையும் உட்காதையும் மூளையுடன் இணைக்கின்ற ஆக்ïஸ்டிக் நிïரோம்ஸ் என்கிற நரம்பு பாதிப்பும் இவர்களுக்கு ஏற்படுகிறதாம். அதிக அளவு செல்போன் உபயோகிப்பவர்களுக்கு மூளைச் செயல்பாடுகள், தூக்கம், விழிப்புணர்வு ஆகியவற்றில் மாற்றம் ஏற்ப டுவதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் உடல் திசுக்கள் முழு வளர்ச்சி அடையாத நிலையில் குழந்தைகளும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் கதிர்வீச்சுகள் இவர்களின் திசுக்களை மிக எளிதாகவே பாதித்துவிடும் என்ற நிலையில் இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நீண்ட காலம் செல்போனை பயன்படுத்தியவர்கள் ஆகிறார்கள். எனவே அதிக ஆபத்து இவர்களைச் சூழ்ந்தி ருக்கிறது என்கிறார்கள்.இதுபற்றி அயிஸ் செல்சின், லாவரிசாலிஸ் என இரு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தவண்ணம் இருக்கிறார்கள். இதுதவிர உளவியல் ரீதியான ஆராய்ச்சி முடிவு களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களில் 60 சதவீதம் பேருக்கு கோப குணமும், தலை வலியும், பெருகுவதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவேளை செல்போனால் கேன்சர் நோய் உறுதி செய்யப்பட்டால் 2015-ல் உலகில் 90 சதவீதமான மக்களின் கதி என்னவாகும்ப- இப்பவே கண்ணைக்கட்டுதே எச்சரிக்கை டிப்ஸ்செல்போன் என்பது அடிப்படை தகவல் பரிமாற்றத்திற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதனை நம்மவர் கள் நீண்ட நேர அரட்டைக் கச்சேரிக்காக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பேசுவது காதலியாக இருந் தாலும் கூட ஒருவரிடம் 20 நிமிடங்களுக்கு அதிகமாக பேசாதீர்கள்.நட்புகளை வளர்த்துக் கொண்டு அதிகம் பேரிடம் இடைவெளியின்றி பேசா தீர்கள். போதிய ஓய்விற்கு பிறகே அடுத்தவரிடம் பேச வேண்டும்.ஒரே சமயத்தில் பல போன் களில் பேசாதீர்கள். வள, வள பேச்சுக்களை தவிருங்கள். இரவில் செல்போனுக்கும் ஓய்வு கொடுத்துவிடுங்கள்.

சுகபோகத்தில் திளைக்கும் புருனே சுல்தான்...

உலகின் மிகப்பெரிய செல்வந்தர் யார் என்று கேட்டால் இப்போது கூட புரூனே சுல்தான் என்றுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூறுவார்கள். அவர் எவ்வாறு தன் பணத்தை செலவழிப்பார் என்று இது வரை யாருக்கும் தெரியாது. ஆனால் சமீபத்தில் அவர் மீது நடந்து வரும் ஒரு நீதிமன்ற வழக்கின் தொடர்ச்சியாக அந்த நீதிமன்றம் அவரது செலவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆடம்பரங்கள் தற்போதைய உலக பணக்காரர்களும் யோசிக்க முடியாதது என்றால் மிகையாகாது.உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள திரைப்படத் துறையைச் சார்ந்த நடிகைகளை வரவழைத்து அவர்களைப் "பாராட்டி" மனம் குளிர நனைத்து அனுப்புவது சுல்தானின் பொழுதுபோக்கு திருவிளையாடுகளில் ஒன்று. இந்த பட்டியலில் பிரபல பாப் பாடகிகள் மற்றும் முன்னணி மாடல் அழகிகளும் அடங்குவார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பணக்காரரின் செலவு என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஒரு 5- 6 மாளிகைகள், 2- 3 தோட்டங்கள், ஒரு அதி ஆடம்பர கார் ஓரிரு கப்பல் அல்லது விமானம் இவ்வளவே...ஆனால் புருனே சுல்தான் ஹாஜி ஹஸன் அல் போல்கியா இதனையெல்லாம் விஞ்சிவிட்டார். செலவு செய்வதில் பணக்காரர்களையே பொறாமை பட வைத்துவிட்டார் என்றால் மிகையாகாது.61 வயதாகும் புருனே சுல்தான் தனது பேட்மின்டன் பயிற்சியாளருக்கு 1.26 மில்லியன் பவுண்டுகளை சம்பளமாக கொடுத்துள்ளார். தனது அ‌க்குபங்க்சர் மற்றும் உடல் மசாஜிற்கு 1.25 மில்லியன் பவுண்டுகள்.அரிய பறவைகளை விலைக்கு வாங்குவதை பொழுதுபோக்காக கொண்ட சுல்தான் அதனை பாதுகாத்து பராமரித்து வரும் காவலர்களுக்கு மட்டும் 50,000 பவுண்டுகள் செலவு செய்துள்ளார்.அவருடைய பொது உறவுகளை கவனித்து வரும் குழுவிற்கு சுமார் 30 மில்லியன் பவுண்டுக‌ள், வீட்டு நிர்வாகத்தை கவனித்து வரும் பணியாளர்கள் இருவருக்கு 7 மில்லியன் பவுண்டுகள்.இந்த விவரங்கள் வெளிவந்த காரணம் அவருக்கும் அவரது ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அவரது சகோதரர் இளவரசர் ஜெஃப்ரிக்கும் இடையே நடந்து வரும் உலகப் பிரசித்திபெற்ற குடும்ப வழக்கு என்றால் மிகையாகாது. வழக்கை விசாரித்து வரும் லண்டன் நீதிமன்றம் வெளியிட்டுள்ள 50 பக்க அறிக்கையில் 19.5 பில்லியன் பவுண்டுகள் செலவழித்ததற்கான ரசீதுகள் உள்ளனவாம்.நாட்டின் கஜானாவிலிருந்து கடைசி 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 பில்லியன் பவுண்டுகள் சுல்தானின் ஆடம்பர செலவுகளுக்காக அவரது சொந்த கணக்கில் சென்றுள்ள அதிர்ச்சி தகவலையும் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.இவரிடம் உள்ள சொகுசு கார்களின் எண்ணிக்கை மட்டும் 5000. 115 மில்லியன் பவுண்டுகள் செலவில் ஒரு தனி போயிங் விமானமும் உள்ளதாம்.1788 ஆடம்பர அறைகள் கொண்ட மிகப்பெரிய மாளிகை தவிர, இவரது குடும்பத்தினர்கள் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் பாரீஸ் நகரங்களில் பல மாளிகளைகளை வைத்திருக்கின்றனராம்.புருனேயை 40 ஆண்டுகள் ஆட்சி செய்த இவருக்கும், இவரது சகோதரருக்குமான குடும்ப சொத்து வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர்களுக்கான தொகை மட்டும் 200 மில்லியன் பவுண்டுகளாம்.1984ஆம் ஆண்டு புருனே விடுதலை அடைவதற்கு முன் பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்தது. இன்னமும் லண்டனில் உள்ள பிரவி கவுன்சில்தான் அதற்கு உச்ச நீதிமன்றம்
.புருனே சுல்தானின் சொத்து ம‌ற்று‌ம் செலவு விவரம்:
1. 1788 அறையுடன் மாளிகை, 6- நட்சத்திர விடுதி, ஒரு கேளிக்கை பூங்கா, 5000 கார்கள் மற்றும் விமானங்களை நிறுத்த மிகப்பெரிய ஆடம்பரக் கொட்டகை.
2. உடம்பைத் தேய்த்து விடும் மசாஜ் அழகிகள் மற்றும் அக்குபங்க்ச்சர் மருத்துவர்களுகாகாக 1.25 மில்லியன் பவுண்டுகள்.
3. வீட்டு பரமரிப்பு பணியாளர்களுக்கு 13.9 மில்லியன் பவுண்டுகள்.
4. 1.26 மில்லியன் பவுண்டுகள் பேட்மின்டன் பயிற்சிக்கு.
5. பி.ஆர் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் 5.86 மில்லியன் பவுண்டுகள்.
6. தனது அரிய பறவைகளை பராமரித்து பாதுகாக்கும் காவலருக்கு 48,859 பவுண்டுகள்.
கார்கள் வகையும் எண்ணிக்கையும்...
மெர்சிடஸ்- 531-ஃபெர்ராரி- 367 பென்ட்லீ- 362 பி.எம்.டபிள்யூ- 185 ஜாகுவார்- 177 போர்ஷெ- 160 ரோல்ஸ் ராய்ஸ்- 130 லம்போர்கினி- 20.
மற்றவை: 747 - 400 ரக ஜம்போ ஜெட்டுகள் உட்பட போயிங் விமானங்கள் 2; ஒரு ஏர்பஸ், 6 சிறு விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள்.

"வெப் தூனியா"

31 Oct 2007

01.11.2007 முதல் அறிமுகம்: இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பி.எஸ்.என்.எல். செல்போனில் பேச பாதி கட்டணம்

சென்னை, அக். 31-
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சலுகைகள் வழங்க தவறியதில்லை. இந்த ஆண்டு தீபாவளி பண் டிகையை யொட்டி ஒரு அதிரடி சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
செல்போன் சந்தாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அளிக்கிறது. செல்போனில் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பேச பாதிக் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு சந்தாதாரர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடையலாம். `அனந்த்' திட் டத்தில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. ஒரு வருடம் இன்கம்மிங் கால் வசதி கொண்ட `சுமோ' திட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த சலுகை வழங்குவது குறித்து பரிசீலிக் கப்படுகிறது.
இந்த இரு திட்டங்களில் உள்ள சந்தாதாரர்கள் தவிர ஏனைய பி.எஸ்.என்.எல். சந்தா ரர்களுக்கு பாதி கட்டணம் திட்டம் பொருந்தும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.
`நைட் காலிங்' என்று அழைக்க கூடிய இந்த சலுகை நாளை 1-ந் தேதி (நவம்பர்) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இரவு 11 மணிக்கு மேல் செல் போனில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பேசினால் பாதிக்கட்டணம் மட்டுமே கணக்கிடப்படும்.

30 Oct 2007

நோக்கியா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்


உலகின் நம்பர் ஒன் செல்போன் தயாரிப்பாளர் நோக்கியா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.இன்றைக்கும் செல்போன் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் நோக்கியாவே.உலகின் 36 சதவீத செல்போன்கள் அவர்களுடையது.இவர்களின் முதல் செல்போன் மாடல் Mobira Senator.1982-ல் வெளியானது.(மேலே படம்)

நோக்கியாவின் 1 பில்லியனான செல்போன் மாடல் Nokia 1100.இது நைஜீரியாவில் விற்க்கப்பட்டதாம். இதுவரை ஏறக்குறைய 400 மாடல்கள் வெளியிட்டுள்ளனர். முதல் ஹிட் 1994-ல் வெளியான 2100 மாடல்.20 மில்லியன்கள் விற்றன. உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன Nokia 3310 / 3330 மாடல் 126 மில்லியன்கள் விற்று சாதனை படைத்தன.இந்த 126 மில்லியன் போன்களையும் வரிசைப்படுத்தி அடுக்கினால் 13,500 கிலோமீட்டர் நீளம் போகுமாம்.2004-ல் நோக்கியாவால் 207.7 மில்லியன் போன்கள் தயாரிக்கப்பட்டது. அதாவது 6.5 நொடிகளுக்கு ஒரு போன். நோக்கியா போனில் SMS வந்தால் ஒலிக்கும் விஷேச ஒலி உண்மையில் SMS என்ற வார்த்தையின் மோர்ஸ்கோடாம்.(Morse code) .கேமரா கொண்ட போன்களின் ஆதிக்கம் இப்போது அதிகமாதலால் உலகளவில் இப்போதைக்கு அதிக டிஜிட்டல் கேமரா தயாரிப்பாளரும் இவர்களே. அதிக அளவில் திருடு போகும் செல்போன்களும் நோக்கியா செல்போன்களே."நோக்கியா ரிங்டோன்" என அறியப்படும் அந்த புகழ் பெற்ற ரிங்டோன் 19ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஸ்பானிய கிடார் இசைகலைஞரின் (Francisco Tárrega.) இசையை அடிப்படையாக கொண்டது.உலகின் முதல் GSM காலை பண்ணியவர் முன்னாள் பின்லாந்து பிரதமர் Harri Holkeri. இந்த அழைப்பு 1991-ல் ஹெல்சிங்கியில் ஒரு நோக்கியா போனை பயன்படுத்தி உண்டாக்கப்பட்டது.நோக்கியா கம்பனி போன்கள் தவிர பிற Digital Televisions, ADSL Modems, Wireless LAN interfaces, Telephone switches, GPS devices, Terrestrial trunked radios, இன்னும் Security Solutions தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. தலைமையகம் Nokianvirta ஆற்றின் கரையோரம் Keilaniemi, Espoo, Finland-ல் உள்ளது.சென்னை ஸ்ரீபெரும்புதூரிலுள்ள நோக்கியா தொழிலகம் நோக்கியாவின் 15 ஆவது உற்பத்திசாலை ஆகும்.

சில பெயர்களும் அதின் விளக்கங்களும்

ICICI-ன் விரிவாக்கம் ரொம்ப பேருக்கு தெரிவதில்லை.
What about YAHOO?
கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும்.
சில சுவாரஸ்யமானவை.
Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.
Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle.
ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler).
STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV.
ICICI-ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India.
Oracle-என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்.
COMPUTER- ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research.
VIRUS- ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege.
Wipro- ன் விரிவாக்கம் Western India Products.
googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல் பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது.
MICROcomputer SOFTware தான் MicroSoft.முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் - நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.
IBM-ன் விரிவாக்கம் International Business Machines.
Pepsi-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937. ஆனால்Coca-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.
HSBC-ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce.
HDFC-ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited.
MRF-ன் விரிவாக்கம் Madras Rubber Factory.
TVS-ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited.
Java என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்.
Linux செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது.
Cisco அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது.
KPMG என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு.அதாவது K stands for Klynveld ,P is for Peat, M stands for Marwick,G is for Goerdeler.
Nokia-தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது.
இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo Shibaura Denki உருவான்து.அது தான் இன்றைய Toshiba.
நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது HP.
Dell அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது.

கூகுளில் தமிழ் மொழிமாற்றி வந்துள்ளது.

கூகுளில் தமிழ் மொழிமாற்றி வந்துள்ளது.கீழ்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்.
http://www.google. com/transliterat e/indic/Tamil
நாம் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை இ.கலப்பை போலதமிழில் தருகிறது.ஒரு தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் அடித்து முடிந்ததும் ஸ்பேஸ் பாரை அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது. இந்த வசதியை உபயோகிக்க ஆன்லைனில் இருப்பது அவசியம். மேலும் இது பற்றிய விவரங்கள் அறிய அந்த transliterate பக்கத்தின் கீழேயுள்ள "More" என்ற சுட்டியைச் சொடுக்குங்கள்.
http://www.google.com/transliterate/indic/Tamil

28 Oct 2007

தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவருக்கு உதவித் தொகை

தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவருக்கு உதவித் தொகை சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, அக்.24: தொழில் மற்றும் தொழில்நுட்ப படிப்பில் பட்டப்படிப்பு,பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்விஉதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து,சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.ஜெயா விடுத்துள்ள அறிக்கை:தொழில் மற்றும் தொழில் நுட்ப படிப்பில் பட்டப்படிப்பு படிக்கும்மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு உதவி தொகை வழங்கி வருகிறது.இந்த திட்டத்தின் கீழ், 366 முஸ்லிம்கள், 399 கிறிஸ்தவர்கள், 1 சீக்கியர், 1 புத்தமதத்தினர் ஆகியோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.பெற்றோர் அல்லது பாதுகாவலர் எல்லா வழிகளிலும் ஆண்டுக்கு ரூ.2.50லட்சத்துக்கு மிகாமல் வருவாய் ஈட்ட வேண்டும். தொழில் படிப்புக்காகநுழைவுத் தேர்வில் தேர்ச்சி அல்லது பிளஸ் 2 படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வி உதவித் தொகை வழங்குவதில் 30 சதவீதம்மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி, திருச்சி என்.ஐ.டி, காஞ்சிபுரம் ஐ.ஐ.ஐ.டி, ஆகிய கல்விநிறுவனங்களில் தொழில் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு செலுத்தியகல்விக் கட்டணத் தொகை முழுமையாக திரும்ப வழங்கப்படும். மேலும்,விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு ஒன்றுக்குபராமரிப்பு படியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட 3 கல்வி நிறுவனங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு கல்விஉதவித் தொகை விண்ணப்பங்கள் முதலில் வழங்கப்படும். பின்னர், மற்ற தொழில்கல்வி நிறுவனங்களில் இருந்து வரப்பெறும் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள்பரிசீலிக்கப்படும். மற்ற தொழில் கல்வி நிறுவனங்களில் படிக்கும்சிறுபான்மையின மாணவ, மாணவிகள் சிறுபான்மையினர் விடுதியில் தங்கிபடித்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற மாணவ,மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். சிறுபான்மை மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வருவாய் சான்றைநீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் வழங்க வேண்டும். பெற்றோர் வேலையில்இருந்தால் அந்த நிறுவனத்தில் இருந்து வருவாய் சான்று வாங்கித்தரவேண்டும். உதவித் தொகை பெற தகுதி உள்ள மாணவர்கள் குறிப்பிட்ட சான்றுகளுடன், தங்கள் கல்வி நிறுவனம் மூலம் சிறுபான்மை நல ஆணையம் மற்றும்மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807, அண்ணா சாலை, 5வது தளம், சென்னை 2 என்ற முகவரிக்கு நாளைக்குள்(25ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை www.minorityaffairs .gov.in/newsite என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு ஆட்சியர் ஜெயாதெரிவித்துள்ளார்.

23 Oct 2007

ஏஜெண்டுகள் மூலம் ஆளெடுக்க யு.ஏ.இ. தடை

துபாய்:
23.10.2007

வேலைவாய்ப்பு ஏஜென்டுகள் மூலம் வளைகுடா நாடுகளில் வேலைக்கு ஆள் எடுக்க தடை விதிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான புதிய கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுக்கவுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் அலி பின் அப்துல்லா அல் காபிகூறியுள்ளார்.இதுகுறித்து காபி கூறுகையில், பல்வேறு நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் ஏஜென்டுகளால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள், மோசடி செய்யப்படுகிறார்கள், துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.இதைத்த தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானதாக, ஏஜென்டுகள் மூலம் வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஏஜென்டுகளின் பொய்யான வாக்குறுதிகள், உறுதிகளை நம்பி ஏமாறும் தொழிலாளர்கள் நிலை மொத்தமாக மாறும்.அனைத்து வளைகுடா நாடுகளின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் இதுகுறித்து விரிவாகப் பேசி விரைவில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றார் காபி.

22 Oct 2007

ஊழியர்களின் சம்பளம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்

ஊழியர்களின் சம்பளம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்ஐக்கியஅரபு எமிரேட்ஸ் நடவடிக்கை

துபாய், அக்.22-
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, வருகிற ஜனவரி மாதம் முதல் ஊழியர்களின் சம்பளங்களை வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. அதோடு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது.
சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களை கம்பெனிகள் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படி வைத்துக்கொணடால் அந்த கம்பெனிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மற்றும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களை கண்டுபிடித்து வெளியேற்றுவதற்காக அதிகாரிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க இருக்கிறோம். வருகிற 2-ந்தேதி முதல் சட்டத்துக்கு புறம்பான ஊழியர்களின் வேட்டை அதிக அளவில் நடத்தப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

21 Oct 2007

புத்தகத்தில் ரகசிய அறை அமைத்து செல்போன் கொண்டு வந்த மாணவி


நாகர்கோவில், அக்.19-
புத்தகத்துக்குள் ரகசிய அறை அமைத்து செல்போனை பள்ளிக்கு கொண்டு வந்த மாணவி எஸ்.எம்.எஸ். அனுப்பியபோது பிடிபட்டார்.
சுற்றறிக்கை
நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் ஒன்றான செல்போன்கள் பள்ளிக்கூட மாணவர்களின் படிப்பிற்கு பெரும் இடைïறாக இருக்கின்றன.
இதனால், தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் ஜெகநாதன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் இது குறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளிக் கூடத்துக்கு மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வராமலிருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும், மீறி கொண்டு வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என்பதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
நேற்று நாகர்கோவிலில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வந்திருக்கிறார்களா? என்று ஆசிரியர்கள் தீவிரசோதனை நடத்தினார்கள். அப்போது சில மாணவர்கள் அரசு உத்தரவை மீறி செல்போன் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் அழைத்து பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது என எச்சரித்து அனுப்பினார்கள்.
மாணவியின் திருவிளையாடல்
ஒரு பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எல்லா மாணவிகளும் ஆசிரியர் பாடம் நடத்துவதையே கவனித்துக் கொண்டிருக்க ஒரேயொரு மாணவி மட்டும் தலையைக் குனிந்தவாறு என்னவோ செய்து கொண்டு இருந்தார். வெகு நேரமாக அந்த மாணவி அதே நிலையில் இருந்ததால் ஆசிரியர் சந்தேகமடைந்து அந்த மாணவியின் அருகில் சென்றார். ஆசிரியர் அருகில் வந்தபோதும் கூட அது தெரியாமல், மாணவி தொடர்ந்து தலையைக் குனிந்தபடியே இருந்தார். அந்த மாணவி தனது மடியில் ஒரு புத்தகத்தை வைத்தபடி படிப்பதுபோல பாவனை செய்து கொண்டிருந்தார். இதனால் அருகில் வந்த ஆசிரியரும் முதலில் அந்த மாணவியின் மீது சந்தேகம் கொள்ளவில்லை. அந்த மாணவியை ஆசிரியர் தொடர்ந்து கண்காணித்தார். அப்போதுதான், அவர் அந்தப் புத்தகத்திற்குள், செல்போனை வைத்தும் கொள்ளும் அளவிற்கு பக்கங்களை கச்சிதமாக வெட்டியெடுத்து அதற்குள் ரகசிய அறை ஒன்றை அமைத்திருப்பதையும், அதற்குள் ஒரு செல்போனை மறைத்து வைத்து அதில் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இதைத் பார்த்ததும் அந்த ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அரசின் உத்தரவிற்கு இப்படியும் கூட ஒருவர் டிமிக்கி கொடுப்பாரா? என வேதனையடைந்தார்.
அந்த மாணவியை கையும் களவுமாக பிடித்த ஆசிரியர், அவரை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார். அப்போது மாணவி `இனிமேல் செல்போனை பள்ளிக்கு கொண்டு வரமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்' என்று அழுதபடியே கேட்டுக் கொண்டார். தலைமை ஆசிரியரும், மாணவி முதல் முறையாக தவறு செய்திருக்கிறார் என்பதால் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் அந்தப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

18 Oct 2007

தத்துவம்

Busலநீ ஏறினாலும் Bus உன் மேலஏறினாலும் Ticket வாங்க போறதுநீதான்.

Chair ஒடைஞ்சா உட்காரமுடியாது கட்டில் ஒடைஞ்சாபடுக்க முடியாது ஆனாமுட்டை ஒடைஞ்சா தான் Omlet போடமுடியும்.

காக்கா என்ன தான்கறுப்பா இருந்தாலும் அதுபோடுற முட்டை வெள்ளைமுட்டை என்ன தான் வெள்ளையாஇருந்தாலும் அதுக்குள்ளஇருக்குற காக்கா கறுப்புதான்

எழுதியது மகேஸ்

16 Oct 2007

நீங்க கல்ஃப்லெ வேலெ செய்யறீங்களா?

ஆண்: "டாக்டர் நான் ஒரு மாச லீவில் வந்திருக்கேன். எனக்கு ஒரு முழு செக்கப் செய்யணும்."
டாக்டர்: "நீங்க எதிர்லெ இருக்கற டாக்டர்கிட்டே போயிருக்கணும்.அந்த போர்டெ பாருங்க"
ஆண்: "இல்லெ டாக்டர், நான் உங்களெத்தான் பார்க்கவந்தேன்"
டாக்டர்: "பாருங்க சார், நான் வெட்ரினரி டாக்டர். விலங்குகளுக்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்கிறேன். மனுசங்களுக்கல்ல."
ஆண்: "எனக்கு அது நல்லா தெரியும் டாக்டர். அதனால் தான் நான் உங்களிடம் வந்திருக்கேன்"
டாக்டர்: "என்னங்க சார் புரியாத ஆளா இருக்கீங்க. நீங்கள் என்னை போல மனிதர். பேசுகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், நீங்கள் மிருகமல்ல. என்னால் முடியாது."
ஆண்: "எனக்கு தெரியும் டாக்டர், நான் மனிதன் தான். ஆனா மொதல்லெ நீங்க என்னுடைய பிரச்சினைகளை கொஞ்சம் தயவுசெய்து கேளுங்களேன்"
டாக்டர்: "சரி சரி சொல்லுங்க"
ஆண்: "நான் தூங்கும்போது நாயெ போல எச்சரிக்கையா தூங்கிகிட்டே என்னுடைய ஆபீஸ் வேலெ பத்தியே யோசிச்சிகிட்டிருப்பேன். ""காலையில் குதிரையெ போல எழுந்திருப்பேன்.""காக்கா குளியல் குளிப்பேன்""மான் போல ஆபீசுக்கு ஓடுவேன்""முழுநாளும் கழுதையெ போல வேலை செய்வேன்""இடைவிடாமெ பதினோரு மாசம் எருது போல வேலை வேலைன்னு சுத்திகிட்டே இருப்பேன்""எனக்கு மேலெ இருக்கறவங்களுக்கு முன்னாலெ வாலெ ஆட்டிகிட்டே இருப்பேன்""என்னிக்காவது நேரம் கிடெச்சா என் குழந்தைங்க கூட குரங்கு போல சேட்டை செஞ்சி விளையாடுவேன்""என் பொண்டாட்டிக்கு முன்னாலெ முயல் மாதிரி ஒடுங்குவேன்"
டாக்டர்: "நீங்க கல்ஃப்லெ வேலெ செய்யறீங்களா?"
ஆண்: "ஆமாம் டாக்டர்!. "எப்படி கண்டுபிடிச்சீங்க?"
டாக்டர்: "இவ்வளவு பெருசா சொல்றதுக்கு பதிலா மொதல்லெயே கல்ஃப்லெ வேலெ செய்யறேன்னு சொல்லியிருக்கலாமில்லெ." "வாங்க, நீங்க சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க!" "வேறெ யாரும் என்னெ விட நல்லா உங்களுக்கு சிகிச்சை தர முடியாது"
நன்றி: அனுசுயா ஆங்கிலத்திலிருந்து

ஒரு சோக காதல் கதை

( மெயிலில் வந்தது... )
ஒரு பையனுக்கு கேன்சர் இருந்தது. எல்லோருக்கும் தெரிந்ததுதானே கேன்சரை குணப்படுத்த முடியாது என்று. அவனுக்கு 18 வயது , எந்த நேரத்திலும் சாகலாம். அவன் வாழ்க்கை முழுதும் அவன் வீட்டிலேயே முடங்கி கிடந்து அம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டை விட்டு எங்கேயும் வெளியில் சென்றதில்லை.ஒரு நாள் அவன் வெளியில் சென்று சுத்திபார்க்க அவன் அம்மாவிடம் அனுமதி வாங்கினான். அவன் வீட்டை விட்டு வெளியில் இறங்கி நடக்கையில் பல கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான். அப்படி ஒரு கடையை கடந்து விட்டு பின் திரும்பி இன்னொரு முறை அந்த கடையை பார்த்தான். அது ஒரு கேசட் கடை. அதைவிட முக்கியமாக அந்த கடையில் அவன் வயதை ஒட்டிய ஒரு தேவதை மாதிரி ஒரு பெண் இருந்தாள்.அவன் மெதுவாக அந்த கடை உள்ளே சென்றான். அவன் 'என்ன வேண்டும்' என்று கேட்டுவிட்டு ஒரு புன்னகையை உதிர்த்தாள்.. அவன் வாழ்நாளில் இப்படியொரு அனுபவம் கிடைத்தில்லை. முதல் பார்வையிலே காதல் என்பதை உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு ஒருவித பயம்.. ஏதோ ஒரு கேசட்டை காட்டி இது வேண்டும் என்றான். அவளும் அதை எடுத்து இதை பார்சல் கட்டவா என்றாள். அவன் ஆமாம் என்பதாக தலையை ஆட்டினான். அவள் உள்ளே சென்று கேசட்டை அழகாக பார்சல் கட்டி வந்தாள்.நேராக அதை கொண்டு போய் அவன் அலமாரியில் வைத்து விடுகிறான். இது தினமும் நடக்கிறது. ஒருநாள் கூட அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு பயம். கேசட்டை பிரித்து பார்த்ததும் கிடையாது. இது அவன் அம்மாவுக்கு தெரிய வருகிறது. அவள் அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறாள்.அவன் அந்த கடைக்கு போய் ஒரு கேசட்டை வாங்கி அவள் பார்சல் கட்டும் சமயத்தில் ஒர் பேப்பரில் அவனது தொலைபேசி எண்ணை எழுதி வைத்துவிட்டு கேசட்டை வாங்கியவுடன் வீட்டிற்கு ஓடி வந்துவிடுகிறான்.அடுத்த நாள் அந்த வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அவன் அம்மா எடுக்கிறார்கள்.. அவன் பெயரை சொல்லி 'இருக்கிறானா' என்று கேட்கிறாள்.. அம்மாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. அவன் நேற்றே இறந்துவிட்டான் என்று கூறுகிறாள். ஒரு பெரிய நிசப்தம். அவள் அம்மாவின் அழுகை தவிர எதுவும் கேட்கவில்லை.அடுத்த நாள் அம்மா அவன் நியாபமாக அவன் அறைக்கு செல்கிறாள்.. அங்கே அவன் அலமாரியில் நிறைய பிரிக்கப்படாத பார்சல்கள் இருந்தன.. அதை பிரித்து பார்க்கிறாள். அதன் உள்ளே ஒரு கேசட்டும் ஒரு துண்டுபேப்பரும் இருந்தது. அதில் 'நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். ஏன் என்னிடம் பேசவே மாட்டேங்குறே ' என்று எழுதியுருந்தது.. மற்ற பார்சல்களிலும் ஒரு கேசட்டும் அதே துண்டு பேப்பரும் இருந்தது.நெஞ்சை தொடும் இந்த குட்டிகதையில் ஒரு பெரிய நீதியே இருக்கிறது.உங்கள் துணையிடன் எப்பாவாவது சண்டை போட்டால், சிறிது நேரம் உங்கள் ஈகோவை கழட்டி வைத்துவிட்டு சில சமாதான வார்த்தை கூறுங்கள்.. இல்லாவிடில் அந்த பிரிக்கப்படாத பார்சல் போல பல வாய்ப்புகள் பறிபோகும்...

மிகச் சிறந்த வலி நிவாரணியாகும் மிளகு!

லண்டன்: காரத்திற்கு மாற்றாக வும், சுவை சேர்க்கவும் நாம் அன்றாடம் மிளகை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தி வருகிறோம். சளி, இருமலைக் குணப்படுத்தவும் இது கைவைத்தியமாகப் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், இது மிகச்சிறந்த உடல்வலி நிவாரணி என்று அண்மை யில் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி யில் நடத்தப்பட்ட ஓரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
மிளகில் உள்ள கேப்சசின் என்ற வேதிப்பொருளிலிருந்து க்யூ எக்ஸ்-314 என்ற மருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. பிள்ளைப்பேறு காலத்திலும், மருத்துவத் தொழிலிலும் வலியைப் போக்குவதற்கு இது மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. இதுபற்றி ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆய்வாளர் ஊல்ப் கூறியதாவது: வலியுள்ளவர்களின் உடலில் உள்ள எந்த ஒரு நரம்புக்குக் கெடுதல் ஏற்பட்டாலும் அதை மிளகைக் கொண்டு தயாரிக்கப் பட்ட மருந்து முழுமையாகத் தீர்க்கிறது. பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகள் பல பக்க விளைவு களை ஏற்படுத்தும். ஆனால் இந்த மிளகு மருந்து வெகு விரைவிலேயே மக்களின் வலியைப் போக்குவது மட்டு மல்லாமல், நோயாளிக்கு முன்பு இருந்த நோய்களும் குணமடைகின்றது.

11 Oct 2007

அஸ்ஸலாமு அலைக்கும்....

நண்பர்கள் அனைவருக்கும்
நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்......


8 Oct 2007

கலக்கும் தமிழகம்!!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.பள்ளிப் பாடநூல்களை 1970 முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டு வருகிறது. அரசு மற்றும் மானியம் பெறும் பள்ளிகளுக்கு மாநில மொழி பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட நூல்களை வழங்குகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடநூல்களை தற்போது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும். அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கே www.textbooksonline.tn.nic.in சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இந்தியாவில் இருந்து இலவச சர்வதேசபோன்

voipstunt என்ற சாப்ட்வேர் உபயோகித்து இந்தியாவில் இருந்து internet broadband வழியாக இலவசமாக ஐரோப்பா,அமெரிகா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இலவசமாகப் பேசலாம். கடந்த 2 வாரங்களாக நாங்கள் உபயோகிக்கிறோம், ஒரு கட்டணமும் இல்லை. இனிமேல்
1. காதலர்கள் இலவசமாக கடலை போடலாம்.
2.தமிழ்நாட்டு மாமியார் அமெரிக்க மருமகளை தினமும் ஒரு வழி பண்ணலாம்.
3.இந்தியாவில் இருந்து போன் செய்து அமெரிக்கா/ஐரோப்பா வில்
வேலை செய்து வரும் மகனை/மகளை துயில் எழுப்பலாம்.
4.கணவனைப் பிரிந்து இருக்கும் இந்திய மனைவி கணவனை இனி தன் போன் பார்வையிலேயே வைத்து இருக்கலாம். இப்படி ஏகப்பட்ட "லாம்". இனி எல்லாம் ஒரே மஜா தான். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு ஓ! போடு.
Follow the following url www.voipstunt.com/en/index.html

4 Oct 2007

ஹஜ்-சவூதிக்கு சொந்த வாகனங்களில் வர தடை!

ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தின்போது வெளிநாட்டினர் தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.இதுதொடர்பாக சவூதி அரசுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டினர், ஹஜ் மற்றும் உம்ராவின்போது தங்களது சொந்த வாகனங்களுடன் சவூதிக்கு வர முடியாது.இதுகுறித்து ஹஜ் மற்றும் உம்ரா துறையின் இயக்குநர் ஹமாத் அல் முவால்லா கூறுகையில், ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணத்தின்போது, யாத்ரீகர்கள் தங்களது சொந்த வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. இதை ஹஜ், உம்ரா பயணத்திற்கு ஏற்பாடு செய்வோரும், டூரிஸ்ட் ஆபரேட்டர்களும் உறுதி செய்ய வேண்டும்.சொந்த வாகனங்களுடன் யாத்ரீகர்களை சவூதிக்கு அனுப்புவோர் மீது கடும் தண்டனை விதிக்கப்படும். யாத்ரீகர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.யாத்ரீகர்கள் டிரான்சிட் விசா அல்லது விசிட் விசா வைத்திருந்தால் மட்டுமே சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி சவூதிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.அதேசமயம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமை பெற்றவர்கள், சவூதிக்கு எந்த நேரத்திலும் சொந்த வாகனங்களில் செல்லலாம். அதற்குத் தடை இல்லை என்றார்.
நன்றி:thatstamil

வளைகுடா-லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளியேற்றப்படும் அபாயம்!

துபாய்: பஹ்ரைன் நாட்டு அரசு பரிந்துரைத்துள்ள புதிய திட்டத்தால், வளைகுடா நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் அந்நாடுகளை விட்டு வெளியேற்றப்படும் அபாயம் எழுந்துள்ளது.வளைகுடா நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டினர் 6 ஆண்டுகள் வரை மட்டுமே அங்கு தங்கியிருக்க முடியும் என்பதுதான் பஹ்ரைன் பரிந்துரைத்துள்ள புதிய திட்டம். இந்தத் திட்டத்தை டிசம்பர் மாதம் தோஹாவில் நடைபெறவுள்ள வளைகுடா நாடுகள் மாநாட்டில் முன்வைக்கவுள்ளது பஹ்ரைன்.உள்ளூர் கலாச்சாராம் தேய்ந்து வருவதைத் தடுக்கவும், உள்ளூர்வாசிகளுக்கு வேலை கிடைக்காமல் இருக்கும் நிலையை அகற்றவும் இந்தத் திட்டத்தை பஹ்ரைன் முன்வைத்துள்ளது.இந்தத் திட்டத்தை அனைத்து வளைகுடா நாடுகளும் ஏற்றுக் கொண்டால், பல்வேறு வளைகுடா நாடுகளில் குடும்பத்துடன் வசித்து வரும் 10.3 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலை இழந்து, தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.இந்தப் புதிய திட்டம் குறித்து பஹ்ரைன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவி கூறுகையில், வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வரும் வெளிநாட்டினர் பல்வேறு கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவர்களாக உள்ளனர். உள்ளூர் கலாச்சாரத்துடன் அவர்களால் ஒத்துப் போக முடியவில்லை. போகவும் முடியாது.சில அரபு பகுதிகளைப் பார்த்தால் இது அரபு நாடுதானா அல்லது ஆசிய நாட்டுக்கு வந்து விட்டோமா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அளவுக்கு உள்ளூர் கலாச்சாரம் அங்கு காணாமல் போய் விட்டது. இதை நாம் வேற்றுமையிலும் ஒற்றுமை என்று கூற முடியாது.உலகில் உள்ள எந்த நாடும் தனது நாட்டு கலாச்சாரத்தை அழிய அனுமதிக்க முடியாது. பஹ்ரைன் முன்வைத்துள்ள பரிந்துரையை வளைகுடா நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
ஜிசிசி எனப்படும் வளைகுடா நாடுகள் அமைப்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், குவைத் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்தான் அதிகம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்த நாடுகளில் வசிக்கும் 3.5 கோடி பேரில் 37 சதவீதம் பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது.எமிரேட்ஸ் மற்றும் கத்தார் நாட்டு மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். குவைத் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேரும், பஹ்ரைனில் 40 சதவீதம் பேரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்.சவூதி மற்றும் ஓமனில்தான் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சவூதியில், 33 சதவீதம் பேரும், ஓமனில் 25 சதவீதம் பேரும் வெளிநாட்டினர்.சவூதியில், வேலையில்லாத் திண்டாட்டம் 11 சதவீதமாக உள்ளது. பஹ்ரைனில் அது 4 சதவீதமாக உள்ளது. பஹ்ரைனில் 20 ஆயிரம் பேர் வேலையில்லாத குடிமக்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எமிரேட்ஸில், 32.6 சதவீதம் பேர் வேலையில்லாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 47.7 சதவீத பெண்களுக்கு வேலை இல்லையாம்.அனைத்து வளைகுடா நாடுகளும், வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலையிலிருந்து மாற முயன்று வருகின்றன.இதற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. உள்ளூர்வாசிளுக்கு கட்டாயம் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அதில் முக்கியமானது.இந்த நிலையில்தான் பஹ்ரைன் புதிய குண்டைப் போட்டுள்ளது. இதன் மூலம் வளைகுடா நாடுகளை தங்களது 2வது தாயகமாக மாற்றிக் கொண்டு செட்டிலாகியுள்ள பல லட்சம் பேர் வேலையை இழந்து, தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
நன்றி:thatstamil

2 Oct 2007

பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க.....

தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க எனப் பல வகையான பயன்பாடுகளில் நாம் பாஸ்வேர்டு களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
சில இணைய தளங்களில் நுழைய விரும்பினால், அங்கு "உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, பணம் எதுவும் கட்ட வேண்டாம், நீங்கள் உறுப்பினர் ஆகுங்கள்' என்ற அறிவிப்பு வரும். உறுப்பினராகி விடுவோம் நாம். அவற்றிற்கும் பாஸ்வேர்டுகள் தேவை. சில தளங்களில் நுழைந்து சாப்ட்வேர்களை, டிரைவர்களை டவுன்லோடு செய்ய நினைப்போம். முதலில் உறுப்பினராகுங்கள் என அறிவிப்பு வரும். பாஸ்வேர்டு கொடுத்து அங்கும் உறுப்பினர்களாக மாறி விடுவோம்.
நமது கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களை மற்றவர்கள் படித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த பைல்களுக்கும் பாஸ்வேர்டுகளைக் கொடுப்போம். இப்படி கம்ப்யூட்டர் வாழ்க்கையில் நிறைய இடங்களில் பாஸ்வேர்டுகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. கொடுப்பது வரை சரி. ஆனால் இவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டியுள்ளதே. அங்கே தான் சிக்கலே எழுகிறது. பலர் எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஏன் என்று கேட்டால், ஒரு பாஸ்வேர்டை நினைவில் வைப்பது எளிது என்கிறார்கள்.
உண்மைதான். ஆனால் அந்த பாஸ்வேர்டை உங்களுக்குத் தெரிந்தவர் கண்டுபிடித்து விட்டால் அவ்வளவுதான். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட்டை, இமெயில் அக்கவுண்ட்டுகளை அவர் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார். உங்களது எல்லா ரகசிய பைல்களையும் அவர் திறந்து விடுவார். பாதுகாப்பு கருதி, பலர் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பாஸ்வேர்டுகளை வைப்பார்கள். இதுதான் சிறந்த முறை. ஆனால் அவ்வளவு பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைப்பது கடினமான காரியம்.
அந்த பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பது முக்கியம். அவர்களுக்கு உதவிடும் பொருட்டு இந்த கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது. சில வழிகளை இங்கு காணலாம். எல்லாமே இலவசம்.
விண் ஜிப்: உங்களது லாகின் பெயர்களை பாஸ்வேர்டுகளை எல்லாம் ஒரு டெக்ஸ்ட் பைலில் டைப் செய்து அந்த டெக்ஸ்ட் பைலை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Win Zip (http://www.winzip.com/) சாப்ட்வேர் கொண்டு என்கிரிப்ட் செய்யலாம். 256 பிட் AES என்கிரிப்ஷனை விண்ஜிப்பில் பயன்படுத்த முடியும். இந்த டெக்ஸ்ட் பைலை பிளாப்பியிலோ அல்லது யுஎஸ்பி பென் டிரைவிலோ ((Pen drive) ) சேமியுங்கள். வெளியில் செல்லும் போதெல்லாம் பிளாப்பியை அல்லது யுஎஸ்பி பென் டிரைவை கையில் எடுத்துச் செல்லுங்கள்.
பைல் 2 பைல்: www.cryplomathic.com/file2file/ தளத்தில் நுழைந்து File2File என்ற இலவச என்கிரிப்ஷன் டூலைப் பயன்படுத்தி எல்லா பாஸ்வேர்ட் விவரங்கள் அடங்கிய டெக்ஸ்ட் பைலை என்கிரிப்ஷன் செய்யுங்கள். 128 பிட் AES என்கிரிப்ஷனை நீங்கள் பயன்படுத்த முடியும்.
விண்டோஸின் என்டிஎப்எஸ்: விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி ஆகியவற்றில் NTFS பைல் சிஸ்டம் உண்டு. ஹார்ட் டிஸ்க்கின் ஒரு பார்ட்டிஷனை என்டிஎப்எஸ்ஸாக மாற்றி அங்கு ஒரு என்கிரிப்டட் போல்டரை உருவாக்கி விடுங்கள். பாஸ்வேர்ட் விவரங்கள் கொண்ட டெக்ஸ்ட் பைலை அந்த போல்டரில் போட்டு விடுங்கள்.
வேர்ட் அல்லது எக்செல் பைல்: லாகின் பெயர்களையும், அவற்றிற்கான பாஸ்வேர்டுகளையும் ஒரு எக்செல் பைலில் அல்லது வேர்ட் பைலில் டைப் செய்யுங்கள். இனிமேல் இவற்றை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டாம். ஆனால் இந்த எக்செல் பைலை அல்லது வேர்ட் பைலை பாஸ்வேர்ட் கொடுத்து சேமியுங்கள். இந்த பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வையுங்கள். வேறு அக்கவுண்டிற்கான லாகின் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் தேவைப்பட்டால், பாஸ்வேர்ட் கொடுத்து இந்த எக்செல் அல்லது வேர்ட் பைலைத் திறந்து தெரிந்து கொள்ளுங்கள்.
விஸ்பர் 32 : http://www.ivory.org/ தளத்தில் இருந்து Whisper32 என்ற இலவச சாப்ட்வேரை டவுன்லோடு செய்யுங்கள். இதில் உங்களது எல்லா பாஸ்வேர்டுகளையும் போட்டு வையுங்கள். என்கிரிப்ஷன் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பாஸ்வேர்ட் சேப்: லாகின் பெயர்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை போட்டு வைக்க Password safe v1.7 என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம். ஆபீஸ் மற்றும் சொந்த அக்கவுண்டுகளின் விவரங்களை வெவ்வேறு டேட்டாபேஸில் போட முடியும் என்பது இதன் சிறப்பு. இதைப் பெற http://passwordsafe.sourceforge.net/ தளத்தில் நுழையுங்கள்.
பாஸ்வேர்ட் கார்டியன்: இலவச சிறிய புரோகிரமான Password Guardian சாப்ட்வேரைப் பெற www.cryplocentral.com/html/passgrd.html என்ற தளத்தில் நுழையுங்கள். இந்த சாப்ட்வேரை நிறுவாமலே பயன்படுத்த முடியும். பிளாப்பியிலே இந்த சாப்ட்வேரையும், பாஸ்வேர்ட் பைலையும் பதித்து விடலாம்.
ப்ரீ பாஸ்வேர்ட் கீப்பர் : Free Password Keeper என்ற இந்த சாப்ட்வேரை http://swiss.torry.net/apps/utilities/security/freepass.zip டவுன்லோடு செய்து, அதை அண்ஜிப் செய்து, exe பைலை இயக்குங்கள். பாஸ்வேர்ட் விவரங்களை அது என்கிரிப்ட் செய்து காக்கும் ஆற்றல் கொண்டது. இந்த விவரங்களைப் பார்வையிட பாஸ்வேர்ட் தேவைப்படும். இமெயில் முகவரிகள், வெப் தளங்களின் முகவரிகள் போன்வற்றையும் இது காக்கும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத பல இலவச பாஸ்வேர்ட் பாதுகாப்பு சாப்ட்வேர்கள் உள்ளன. எதையாவது ஒன்றைப் பயன்படுத்தி பாஸ்வேர்டுகளை ரகசியமாக பாதுகாத்து வையுங்கள். நன்றி:சத்தியமார்க்கம்

30 Sept 2007

சவூதி அரேபியா உள்ள ரியாத்தில் பெரும் தீ விபத்து


சவூதி அரேபியா உள்ள ரியாத் நகரின் வர்தக மையப்பகுதியான பத்தாஹ்வில் இன்று ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் குறிப்பாக கேரளா மார்க்கெட் பகுதியில் மாலை 5 30 மணியளவில் ஆரம்பித்த தீ விபத்து இந்த ஆக்கம் எழுதும் இரவு 12 50 வரை கடுமையான தீயின் கோரப்பிடியில் கேரளா மார்கெட் சிக்கி சிதைந்து கொண்டுள்ளன....
இந்தப் பகுதி அனைத்தும் ஜவுளிக்கடைகள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஹூஸைன்கனி

27 Sept 2007

எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ கட்டணம் ரத்து

பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மாநில கல்வித் திட்டத்தின் கீழ் 10,12ம் வகுப்புகள் பயிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இது பொருந்தும்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும், உதவி பெறாத பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை 10ம் வகுப்பு தேர்வுக் கட்டணமாக ரூ. 115ம், பிளஸ் டூ தேர்வுக் கட்டணமாக ரூ.175ம் வசூலிக்கப்பட்டு வந்தது.செய்முறை தேர்வுடன் கூடிய பாடங்கள் படிக்கும் பிளஸ் டூ மாணவர்களிடம் ரூ.205 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண ரத்து மூலம் சுமார் 6 லட்சம் எஸ்எஸ்எல்சி மாணவர்களும், 5.5 லட்சம் பிளஸ் டூ மாணவர்களும் பலனடையவுள்ளனர்.இந்த கட்டண ரத்தால் அரசுக்கு சுமார் ரூ.16 கோடி இழப்பு ஏற்படும். ஆனாலும் இந்தச் சலுகை மூலம் மேலும் பல மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியை நாடுவார்கள் என்பதால் இத் திட்டம் அமலாக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

துபாயில் கூடும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் வருடாந்திர சந்திப்பு நாளை (28ம் தேதி) துபாயில் நடைபெறவுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் விளங்கி வரும் துபாய் மாநகரில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 28 செப்டம்பர் 2007 ) மாலை நான்கு மணிக்கு துபாய் தேரா நாசர் சதுக்கம் அருகாமையிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சியில் வளைகுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் எம். ஜே. அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது,முதல்வர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது, துணை முதல்வரும், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் மாணவர்களைச் சந்தித்து உரையாட இருப்பதாக முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.அமீரக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ''துபாய் பிளாக்' எனும் விடுதிக் கட்டடம் ஏற்கனவே கல்லூரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக்குத் தேவையான நல்ல பல கருத்துக்களை தெரிவிக்கலாம். நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களை ஜாபர் சித்தீக் 050 5489609 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
நன்றி : thatstamil.com

26 Sept 2007

சூரியன் எஃப்-எம் இப்போது ஆன் லைனில்!!!

ஊரு விட்டு ஊரு வந்து (நாடு விட்டு நாடு வந்து), ஊரை தொலைச்சிட்டோம்னு வருத்தப்படும் மக்களே... இதோ நமக்காக இப்போ சூரியன் எஃப்.எம் (இன்னும் நிறைய இருக்கு) வின்ஆம்போட (Winamp) இணைந்து வருது...
பழைய Win Amp வெர்ஷனில் வருதானு எனக்கு தெரியல...
புது வெர்ஷன் 5.32ல வருது...
நீங்க செய்ய வேண்டியது இதுதான்...
Winamp download செய்ய கிழே இருக்கும் லிங்க்கை கிளிக்கவும்


காசு வெச்சிட்டு செலவு பண்றது எப்படினு தெரியாதவங்க காசு கொடுத்து டவுண்லோட் செய்து கொள்ளவும்... நம்மல மாதிரி ஓசில கிடைச்சா போதும்னு நினைக்கறவங்க அப்படியே Free வெர்ஷன் டவுன்லோட் செய்து கொள்ளவும்...
இன்ஸ்டால் செய்த பிறகு, படத்தில் உள்ளது போல்
இடது பக்கம் உள்ள மெனுவில் ஆன்லைன் சர்வீஸசில் shoutcast radioவை செலக்ட் செய்யவும். பிறகு Genre "T" தேர்ந்துடுத்து அதில் Tamilஐ கிளிக் செய்யவும்... உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்துடுத்து பாட்டு கேட்டு ரசிக்கலாம்...

25 Sept 2007

வருகிறது துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்

மிகப் பிரபலமான துபாய் விற்பனைத் திருவிழா அடுத்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் மிகப் பிரமாண்டமான துபாய் விற்பனைத் திருவிழா எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 24ந் தேதி முதல் பிப்ரவரி 24ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.மேற்கண்ட தகவலை ஷேக் அஹமது பின் சயீது அறிவித்தார். துபாய் விற்பனைத் திருவிழா 13 ஆவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழா 32 நாட்கள் நடைபெறும்.ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது பொழுது போக்கு அம்சங்களுடன் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தாய் அமைந்து வருவதில் துபாய் விற்பனைத் திருவிழா ஒரு தனியிடம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.2006-07 விற்பனைத் திருவிழாவின் போது 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர்.இத் திருவிழாவையட்டி குளோபல் கிராமம் ( Global Village ) ஏற்படுத்தப்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை உலக மக்கள் கண்டு களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது மற்றொரு சிறப்பம்சமாகும்.

20 Sept 2007

பாதுகாப்பற்ற வாகனப்பயணம்

நன்றி : தினமலர்

18 Sept 2007

கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 2)

விடிகாலைத் தொழுகை நேரத்திற்கு வெகு முன்பாகவே கண்விழித்து விடுகிறார்கள் இவர்கள்.
ஒரு நாளைக்கு 14 மணி நேரங்கள் என்ற கணக்கில் வாரத்திற்கு ஆறு நாட்கள், வெள்ளிக்கிழமையன்றும் ஓவர்டைம் கிடைக்கும் எனில் நோகும் உடலைக் கிடைக்கவிருக்கும் காசின் ஆசைகாட்டி ஒத்துழைக்க வைத்து கிளம்பிவிடுவதும், உச்சி வெயிலும் தணல் காற்றும் உள்ளும் புறமும் சுட்டெரிக்க தலைக்கு மேலும் காலுக்குக் கீழும் ஆபத்துக்கள் சூழ்ந்த புழுதி பறக்கும் சிறைச்சாலை போன்ற தொழிற்சாலைகள், கட்டிடப் பணியிடங்கள், உடலும் உள்ளமும் துவண்டு போய் காய்ந்த வியர்வையே போர்வையாக மாறியிருக்கும் மாலை நேரத்தில் துவண்டு நடக்காமல் ஓடிப்போய் அடித்துப் பிடித்து ஏறினால் தான் அழைத்து போக வரும் பேருந்தில் இடம் கிடைக்கும்.
நான்கு பேர் மட்டுமே தங்கப் போதுமான இடம் என்று சர்வதேசச் சட்டம் ஏட்டில் எழுதி வைத்துள்ள ஒரு அறையில் பதினான்கு பேருடன், ஒரு காலத்தில் சுத்த பத்தமாய் நாட்டில் சுகவாழ்வு வாழ்ந்ததை நினைவுகளில் நிறுத்தி, வீட்டு நினைவுகள் அதிர்ஷ்டவசமாக அழுத்தவில்லை என்றால் படுக்கையில் படுத்தவுடன் பத்து எண்ணுவதற்குள் கண்ணைச் சுழற்றும் கணங்களுடன், காலையில் அணிந்து செல்ல அதே அழுக்கு வியர்வைக் கரைசல் மணத்துடன் சுவற்றில் மாட்டியிருக்கும் யூனிஃபார்மும் அதற்குச் சற்றும் சளைக்காத விதத்தில் கல்லில் மாட்டிய ஈரத்துணியாய் ரணமான மனதுடன் தூங்கிப்போகின்றனர்.வளைகுடா நாடுகள் 1950களின் இறுதியில் கச்சா எண்ணெய் வளம் கண்டுபிடிப்பின் மூலம் ஏற்பட்ட பெரும் தொழிற்புரட்சியில் உண்டான மாற்றங்களின் விளைவாகப் பெரும் மனித வளம் இங்கே தேவைப்பட்டது. வளைகுடா நாடுகளில் 90% அளவிற்கு வெளி நாட்டுத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். வளைகுடாவின் பரந்து விரிந்த தொழிலாளர் பிரச்னைகளை நாடுவாரியாக எடுத்துச் சொன்னால் கட்டுரை நீண்டுவிடும் என்று அஞ்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு சாராரை மட்டும் கையில் எடுத்துள்ளோம்.
BMW சொகுசு கார்களில் உலாவரும், கோல்ஃப் விளையாடிவிட்டு ஒரு வாய் டீயை ஒரு மணிநேரம் எடுத்துக் குடிக்க ஏழு நட்சத்திர ஹோட்டல்களைத் தேடி அலையும், வளைகுடாவின் "சூடான" மாதங்களில் அடிக்கடி மேற்கத்திய நாடுகளில் "சன்"பாத் எடுக்கச் செல்லும் நபர்கள் இந்த ஆக்கத்தின் பட்டியலில் சேர்த்தியில்லை. பொறுப்பான உயர்பதவிகளில், தலைசிறந்த நிர்வாகத்தினை நடத்தி வரும் தமிழ் அன்பர்களும் இதிலிருந்து விலக்குப் பெறுகின்றனர்.
வறுமைக்கோடு என்பது வளைகுடாவில் வேலை செய்பவர்களுக்கும் உண்டு என்ற புதிய இலக்கணம் படைத்து, சொல்லவொண்ணா துன்பமும் துயரமும் அடைந்து கொண்டிருக்கும் இந்திய - குறிப்பாக - தமிழக முஸ்லிம்கள் நிலை பற்றி இங்குப் பார்ப்போம். காரணம், கழுத்து வலிக்கும் உயரத்தில் கண்ணாடிக் கட்டிடங்களும், மார்பிள் பளபளக்கும் 'மால்'களுக்கும் இங்கே பஞ்சமில்லை. ஆனால் வெளியுலகில் பிரதானப் படுத்தப்படும் தரமான, ஆடம்பரமான பார்வைகளின் பின்னணியில் நசிந்து போயிருக்கும் பல நிகழ்வுகள் நம் பார்வைக்கே வருவதில்லை. அவற்றுள் சிலவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

வியர்வைத்துளி 1 - முபாரக்!

தலைக்கு மேல் கொளுத்தும் 49 டிகிரி செண்டிகிரேட் வெயிலில் கைகளுக்கு அணிந்திருக்கும் உறைகளை மீறிய சூட்டில் கட்டிடத்தின் நூறாவது மாடியின் மேல் தளத்திற்காக கம்பிகள் மேல் அமர்ந்து கான்க்ரீட் கொட்டும் இந்திய முஸ்லிம்களைப் பார்த்தால் கண்ணீர் வராத உள்ளம் கல்லேயன்றி வேறில்லை.நான்கு வருடங்களுக்கு முன்னால் வளைகுடா மண்ணை மிதித்த முபாரக், ஊரில் வளைகுடாவைப் பற்றி கனவு காணும் டிப்பிக்கல் இளைஞர்களில் ஒருவராக தன் இரு வருடச் சம்பாத்தியத்தை முன்பணமாக மும்பை ஏஜண்டிற்கு தாரை வார்த்துவிட்டு வந்தவர். வளைகுடா தொழிலாளர் சட்டம் இது போன்ற ஏஜண்ட் இலஞ்சமாக வாங்கும் பணத்தை சட்ட விரோதமாக கருதினாலும் கூட கண்ணீரையும் வியர்வைத் துளியையும் உணவாக உட்கொண்டு செழிப்பாக இவ்வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. (வாசிக்க: Saudi Arabian Basic Labor Legal Information for Indians.) வளைகுடாவில் தான் சிந்திய முதல் வியர்வைத் துளியிலேயே அதன் பயங்கரமும் தலைக்கு மேல் குறிவைக்கப்பட்ட ஆபத்தும் முபாரக்கிற்கு புரிந்து விட்டது. அஸ்திவாரம் தோண்டும் முன்பே கட்டிடத்தின் வாடகைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிடுவதால் அவசர அவசரமாகக் கட்டப்படும் கட்டிடங்களுக்கிடையே தரக்கட்டுப்பாட்டினையும், தொழிலாளர்களின் பாதுகாப்பும் பற்றி பேச நிறைய முதலாளிகளுக்கு நேரமிருப்பதில்லை.விளைவு, போதுமான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்படாததால், தன் கண் முன்னே கான்க்ரீட் கலவைக்குள் சரிந்து புதைந்து போன தனது நண்பர்களை கண்ணீருடன் நினைவு கூர்கிறார் முபாரக். கம்பெனியில் கடந்த ஆறு மாதமாக சம்பளம் சரிவர வராத சூழலில் ஒவ்வொரு நாளும் இரவில் தத்தம் குடும்பத்தினைக் காப்பாற்றவும், நலிவுற்றிருக்கும் தன் சமுதாயத்தின் நிலை பற்றியும் பேசிப் பாதியிலேயே பிரிந்துவிட்ட தனது நண்பர்கள் நினைவு வர துக்கம் தொண்டையை அடைக்க பேச்சை நிறுத்திக் கொள்கிறார்.
12x7 சதுர அடி அளவிலுள்ள நான்குபேர் மட்டுமே தங்கக்கூடிய இவரது அறையில் பன்னிரண்டு பேருடன் தங்கியுள்ளார். மேல்மாடி டாய்லெட்டிலிருந்து கான்க்ரீட் கூரை வழியே சொட்டுச் சொட்டாய் கசியும் கழிவுநீருடன் தான் வாசம். ஒருவர் படுக்கையின் மீது அடுக்கடுக்காய் அமைந்துள்ள இன்னொருவர் படுக்கை. மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு ஒருபக்கம் என்றால், போல்ட் நட்டு சரியில்லாத இரும்புக் கட்டிலில் ஒருவர் திரும்பிப் படுத்தால் அவர் "அப்பார்ட்மெண்ட்"டில் உள்ள அனைவருக்கும் தூக்கம் கலையும். கம்பெனி கொடுக்கும் ஐநூறு திர்ஹத்தைக் கொண்டு இவரும் சாப்பிட்டு(?) உடுத்தி விட்டு எஞ்சியுள்ளதை வைத்து ஏழு பேர் கொண்ட தன் குடும்பத்தைக் காப்பாற்றும் வித்தையை இங்கே தான் பார்க்க முடியும். ஓட்டல்களில் சாப்பிட்டு ராஜ போக (!) வாழ்க்கை வாழ சம்பளம் இடம் கொடுக்காததால் கிடைத்த சந்தில் அடுப்பை வைத்து கிடைக்கும் நேர இடைவெளிகளில் சமைத்துக்கொள்ளவும் வேண்டிய சூழ்நிலை.
லேபர் டிபார்ட்மெண்ட் இதுபோன்ற கம்பெனிகள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் இவர் போன்றவர்கள் பிரச்னை தீர்ந்ததா என்றால் இல்லை. இரண்டு வருடத்துக்குள்ளாவது ஏஜண்ட் இடம் கொடுத்த கடனை வட்டியோடு அடைத்து விட்டு ஊர் திரும்பினால் கூட போதும் என்ற நிலையிலேயே பலர் தன்னுடன் இருப்பதாகக் கூறுகிறார்."பர்தாவுடன் மினி ஸ்கர்ட்டுகளையும், பள்ளிவாசல்களோடு சர்ச்சுகளையும் தாராளமயமாக்கல் என்ற பெயரில் கையாளும் வளைகுடா நாட்டு அரசாங்கங்களின் மனம் என் போன்றவர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தவில்லையே?" என்று வேதனையை வெளிப்படுத்துகிறார் இவர்.

அல்ஜஸீராவின் டாக்குமெண்டரி!

இந்த கண்ணீர்க்கதைகளை வெட்டிக்கதை பேசிக்கொண்டிராமல் கேமராவை இருட்டான லேபர் கேம்ப்களுக்கு எடுத்துச் சென்று படம் பிடித்து உலக அரங்கில் வெளிச்சமிடத் துணிச்சலுடன் களமிறங்கியிருப்பதற்கு அல்ஜஸீராவிற்கு நன்றிகூற வேண்டும்.

"இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீர் - வளைகுடா தொழிலாளர்களின் வேதனைகள்!" என்ற பெயரில் டாக்குமெண்டரி அல்ஜஸீரா படம் பிடித்து உலகிற்குக் காட்டியுள்ளது. அல்ஜஸீரா சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாதவர்கள் இங்கே உள்ள வீடியோவில் அதைக் காணலாம்.

முதல் பாகம்



இரண்டாம் பாகம்


வியர்வைத்துளி 2 - இப்ராஹிம்!
"மூன்று வருடங்கள் பதினோரு மாதங்கள்!" ஊர் போய் எத்தனை நாளாகிறது என்று 37 வயதான இப்ராஹிமைப் பார்த்து நாம் கேட்ட கேள்விக்கு பதிலாகக் கிடைத்தது இதுதான். பத்து வயது மகளுடனும் பன்னிரண்டு வயது மகனுடனும் இரு வாரங்களுக்கொருமுறை இண்டெர்நெட் போனில் உறவைப் புதுப்பிக்கும் இப்ராஹிம் "எங்களப் பாக்க எப்போ வர்றீங்க வாப்பா?" என்ற கேள்வியைப் பிள்ளைகள் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்காமல் வெளியேறியதில்லை."அல்லா காப்பாத்தணும்...இந்தியாவுக்கும் கல்ஃபுக்கும் இடையில ஏதாச்சிம் பெருசா தகராறு வந்து, எல்லா இந்தியர்களுக்கும் நாங்களே வேலை போட்டுத் தர்றோம். எல்லாத்தையும் திருப்பி அனுப்புன்னு இந்தியாவே கேக்கணும். எங்க நாட்டின் ஏர்போர்ட்டுகள் மூடப்படணும் அப்படியாச்சிம் எங்க குடும்பம் குட்டிகளோட சேர்ந்து நாங்க வாழ முடியுதான்னு பாக்கணும்!" என்றவரின் பேச்சில் தெறித்த இயலாமை முற்றிய வன்மம், எந்த அளவிற்கு அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்தது.

ஊரில் சம்பாதிப்பதை விட நான்கு மடங்கு இங்கே கிடைக்கிறது என்பவர்களை விட "இதே நாய்ப்பொழைப்பை கேவலம் பார்க்காம ஊர்ல இருந்துகிட்டு உழைச்சேன்னா இதை விட எட்டு மடங்கு சம்பா திக்க முடியும்" என்ற முணுமுணுப்புகள் கேட்பது இங்கே சகஜம். சரி! பின்னே அதைச் செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் மெளனம்தான் பதிலாகக் கிடைக்கிறது!
சிவந்த கண்களுடன் பேசியவரை பார்த்து துக்கம் தொண்டையில் பந்துபோல் சுழல, பாதித் தூக்கத்தில் இருந்த அவரிடம் பேச்சை முடித்துக்கொண்டேன். அடுத்த நாள் கருக்கலில் எழுந்து தெம்புடன் வேலை செய்ய வேண்டுமென்றால் ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கையில் விழுந்தால் தான் முடியும். பல பேருக்கு கனவுலக தாம்பத்யமும், பிள்ளைகளுடன் கற்பனைகளில் கொஞ்சிப்பேசவும் முடிவது அந்த சில மணித்துளிகளில் தான்.

பெரும்பாலானோரின் சம்பாத்தியங்கள் தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை நனவாக்குவதிலேயே செலவாகின்றன ஒழிய, தாங்கள் சம்பாதிக்கும் பருவத்திலேயே அதனை முறையாக முதலீடு செய்து அதன் மூலம் பொருளீட்ட எண்ணுவதில்லை.

ஆர்ப்பாட்டங்கள்/எதிர்க்கும் குரல்கள்எவ்வளவு தான் பிரச்னைகள் என்றாலும் ஆர்ப்பாட்டம் என்பதெல்லாம் அசாதாரணம் என்றிருக்கும் துபாயில் கூட கடந்த வருடம் மார்ச் மாதம் ஆயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்ததும், கண்ணில் பட்ட வாகனங்களை துவம்சம் செய்ததும் வளைகுடாத் தொழிலாளர்களின் பிரச்னைகளின் வீரியத்தை உலகுக்கு உணர்த்தியது எனலாம்.உலகத்தின் மிக உயரமான கட்டிடம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் புர்ஜ்-துபை கட்டிடத்தின் தினசரி பணிகள் தொழிலாளர்களின் புரட்சியில் சென்ற வருடம் ஸ்தம்பித்துப்போனது.

"இங்குள்ள தொழிலாளர்களுக்குப் பிரச்னைகளே இல்லை என்று நான் சொல்லவில்லை. அதைத் தீர்க்க முயன்று வருகிறோம்" என்று சொல்கிறார், துபையின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அலீ பின் அப்துல்லாஹ் அல் காஅபி."இவர்களை நாங்கள் கட்டாயப்படுத்திக் கூப்பிடவில்லை" என்கிறார் அலீ அல் காஅபி. "இவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதையே நான் பார்க்கிறேன்" என்கிறார்.ஆனால் மனித உரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் மத்திய கிழக்கு பிரிவின் இயக்குனரான சாரா லீ விட்ஸன் அலீயின் இக்கூற்றை அடியோடு மறுக்கிறார் - "தனது சுயநலத்திற்காக அடுத்தவர்களின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்வது என்றால் அது இதுதான்!" என்று சாடுகிறார். "மெர்ஸிடிஸ் கார்கள் மூலமாகவோ, விண்ணை முட்டும் கட்டிடங்களாலேயோ மட்டும் வளைகுடா நாடுகளை உலக அரங்கில் மிளிர வைத்துவிட முடியாது. அத்தகைய வெற்றியும் வளர்ச்சியும், வளைகுடாத் தொழிலாளர்களின் நலனை முன்னுறுத்திக் கொண்டு சென்றால் தான் கிட்டும்" என்கிறார்.

வியர்வைத்துளி 3 - சாதிக் பாஷா!
இங்கே சம்பாதிப்பதைப் போன்று என்னால் ஊரில் மீன் பிடித்தே காலம் தள்ள முடியும் என்று அலட்சியமாக் கூறும் சாதிக் பாஷா தமிழகக் கடற்கரை கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர். கடந்த நிமிடத்தில் அப்படிப் பேசியவர், பதினெட்டு வருடங்கள் கடந்தும் தன் எதிர்காலத்தைப் பற்றி தான் எவ்விதப் பிடிப்புமின்றி இருப்பதாகவும் எதிர்மறையாகப் பேசுகிறார். இத்தனை வருட காலங்களில் என்ன சம்பாதித்தீர்கள் என்றால் ஏற்கனவே இருந்த வாப்பாவின் நிலத்தில் தான் சிறிதாக ஒரு வீட்டை கட்டியதாகவும், ஒன்றே கால் லட்ச ரூபாயில் தனது தங்கைக்கு வரதட்சணை கொடுத்து "பெரிய" இடத்தில் கல்யாணம் கட்டிக் கொடுத்ததாகவும் நாற்பதை நெருங்கும்போது தானும் கல்யாணம் செய்து கொண்டு இரண்டே மாதத்தில் இங்கே வந்து விட்டதாகவும் வேதனையுடன் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கூறும் சகோதரனைப் பாத்து எம்மால் விம்மாமல் இருக்க முடியவில்லை.
பொருளியல் குறிப்புகள்:
இந்தியாவின் வெறும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் வளைகுடாவிலிருந்து வந்து சேரும் அந்நியச்செலாவணி ரூ. 126.40 மில்லியன் (ரூ. 12 ஆயிரம் கோடி) என்று அதிர வைக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு செய்திக்குறிப்பு. கிட்டத்தட்ட முப்பத்தியோரு இலட்சம் இந்தியர்கள் வேலை செய்யும் வளைகுடா நாடுகளில் ஒரு அறிக்கையில் 36% பேர் 500 திர்ஹம் (US$ 120) சேமிப்பதாகவும், 37%பேர் 500 முதல் 1000 திர்ஹம் வரை (US$ 120-140)சேமிப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அரப் நியூஸ் பத்திரிக்கையின் அறிக்கைப்படி கடந்த வருடத்திற்கும் இவ்வருடத்திற்கும் இடையே ஏற்பட்ட பணவீக்கத்தினாலும் அமெரிக்க டாலரின் கிடுகிடு வீழ்ச்சியாலும் 30% சம்பளம் குறைந்திருக்கிறது. (கடந்த வருடம் திர்ஹம் மதிப்பு 12.70 ஆக இருந்தது இன்றைய நிலவரத்தில் 11.00 ஐ விட குறைந்து போயுள்ளது. சவூதியில் இன்னும் மோசம், அது 10.70 ஐயும் விட மோசமாக குறைந்தவண்ணம் உள்ளது.)
ஒருபக்கம் பணவீக்கம் காரணமாக வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டிருக்கையில் மறுபக்கம் கிடுகிடுவென ஏறும் விலைவாசிகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. வீட்டு வாடகை எட்ட முடியாத உயரத்தில் பன்மடங்கு எகிறுவது ரியாத், ஜெத்தா, அபூதாபி மற்றும் ஷார்ஜாவில் என்றால் துபாய் மற்றும் கத்தரில் நினைத்துப் பார்க்கவே அஞ்சும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை சவூதியின் சில பகுதிகளைத் தவிர வளைகுடாவெங்கும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு தயாரிப்புக்குப் பெயர் போன வளைகுடாவில் 50% விலை உயர்ந்துள்ளது. மருத்துவம், இன்னபிற செலவுகள் பற்றி கேட்கவே வேண்டாம். விமான சேவைகளில் இருப்பவற்றிலேயே மிகமட்டரக சேவைகளுக்குப் பெயர் போன இந்திய வளைகுடா மார்க்கத்தில் ஏகபோக உரிமை கொண்டாடும் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் சந்தடி சாக்கில் ஏற்றிய கொள்ளை லாப விலை உயர்வினாலும் பாதிக்கப்படுவது அடிமட்டத் தொழிலாளர்களே!
Pravasi Bandhu Welfare Trust (PBWT) அமைப்பின் சேர்மன் கே.வி. ஷம்சுத்தீன், இதுபற்றிக் கூறுகையில் இந்தியர்கள் வளைகுடாவில் சம்பாதிப்பதால் பயனொன்றும் இல்லை என்பதை இப்போது நன்கு உணர்ந்திருக்கிறார்கள். கடந்த வருடங்களை விட இந்தியர்கள் வளைகுடாவில் சேமிப்பது 40% குறைந்துள்ளது என்பதான் உண்மை. இதில் சிக்கித் தவிப்பவர்களில் பெரும்பாலோனோர் குறைந்த மற்றும் நடுத்தர சம்பளக்காரர்களே" என்கிறார்.
தற்போது வேலை செய்து வரும் வளைகுடா தொழிலாளர்கள் 1. செயல்திறனற்றவர் (Unskilled), 2. ஓரளவு கை தேர்ந்தவர் (Semi-skilled) மற்றும் 3. தேர்ச்சி பெற்றவர்(Skilled) என்ற மூன்று நிலைகளில் கட்டுமான, தயாரிப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பணியாற்றுகின்றனர். 500 திர்ஹமுக்குக் கீழே உள்ள சம்பளங்களில் வேலை செய்யும் பெரும்பாலான இந்திய தொழிலாளர்கள் சராசரியாக 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை இவர்கள் வேலை செய்கின்றனர். டெக்னிஷியன்கள், கம்யூட்டர் ஆபரேட்டர்கள், கனரக வாகன ஓட்டுனர்கள், எலக்ட்ரீஷியன்கள், புரஃபஷனல் ரீதியில் பார்த்தால் டாக்டர்கள், இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், அக்கவுண்ட்டண்ட்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் ஒளிந்திருக்கும் உண்மை என்னவெனில் படிப்புத் தகுதி அதிகரிக்க அதிகரிக்க சம்பளம் அதிகரிக்கிறது. வசதி வாய்ப்புக்களும், வழங்கப்படும் வசதிகளும் அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் அவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமில்லை.
இந்தியாவில் ஒளிரும் வேலை வாய்ப்புக்கள்:
இந்தியாவில் மிளிரும் தொழில்நுட்பப் புரட்சியின் மூலம் இளம் தலைமுறையினருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் ஒரு நிறுவனத்தில் இளம் தலைமுறையினர் இப்போது குறைந்த சம்பளத்தில் நுழைவதில்லை. "கை நிறைய" காசு சம்பாதிக்கனும்னா கல்ஃப்க்கு போவனும்" என்கிற பழைய சித்தாந்தமெல்லாம் மாறியிருக்கிறது. ஆனால் வளைகுடாவில் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வந்தவர்களுக்கு மட்டும், அவர்கள் வருவதற்கு முன் தான் கண்ட இந்தியாவே இன்னும் கண்ணில் நின்று கொண்டிருப்பதை ஒரு வித துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
அதிலும் 2006-ஆம் வருடத்திற்குப் பிறகு வளைகுடாவில் வசந்தம் வீசும் என்று எல்லாம் எதிர்பார்த்து வேலை தேடி வருபவர்கள் கையில் வெண்ணையை வைத்து நெய்க்கு அலையும் "பாவப்பட்டவர்கள்" என்கிறது இன்னொரு அறிக்கை.
இப்போது இந்தியாவில் IT கம்ப்யூட்டர் இஞ்சினியர்களுக்கு அடுத்தபடியாக கடுமையான டிமாண்ட் ஏற்பட்டிருப்பது ஆச்சரியப் படத்தக்க வகையில் சிவில் இஞ்சினியர்களுத்தான். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் வளைகுடா நாடுகளுக்குத் தேவைப்படும் சிவில் இஞ்சினியர்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்த்து வர மறுத்து விடுகின்றனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகளும் தொழில் முனைவுகளும் அதிக சம்பளமும் தயாராக இருக்கிறது.
"உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தற்போது கிடைப்பதை விட அல்லது அதே அளவிற்கு சம்பளம் இந்தியாவிலேயே கிடைப்பதால் கஃல்ப்பிற்கு டாட்டா காட்டிவிட்டு இந்தியாவில் வந்து பணியைத் தொடர்கிறார்கள்" என்கிறார் கட்டிடக்கலை தொடர்பான பெங்களூரிலிருந்து இயங்கும் Civil Aid Technoclinic Pvt. Limited நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சுனில் சன்னாட்.
வளைகுடாவைப் புறக்கணிக்கும் இந்தியர்கள்
வளைகுடா நாட்டு நிறுவனங்கள் வேண்டி விரும்பிக் கேட்கும் உழைப்பிற்குப் பெயர் போன இந்திய தொழிலாளர்கள், இன்றைய தேதிக்குப் போதுமான அளவிற்கு வளைகுடா செல்லத் தயாரில்லை என்பதே யதார்த்த உண்மை. வளைகுடா நிறுவனங்கள் இந்திய விசா இல்லை என்று கையை விரித்த காலம் போய் விசாக்களை வைத்துக்கொண்டு, இந்திய மேன்-பவர் ஏஜண்ட்டுகளிடம் மல்லுக் கட்டுகின்றன.
Pravasi Bandhu Welfare Trust, ஷம்சுத்தீன் சமர்ப்பித்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்த மாத வருமானத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தன் குடும்பத்தினருக்கு மாத செலவுகளுக்கு உரிய பணம் அனுப்புவதற்காக தன்னுடைய அத்தியாவசியச் செலவையும் சேமிக்கும் கொடுமையைப் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
படிப்பு, வருமானம், குடும்பத்தை வளைகுடாவில் குடியமர்த்தும் பதவிநிலை, அவர்களை நம்பியிருப்போர், நாட்டிற்கு பணம் அனுப்பும் நிகழ்வுகள், சேமிக்கும் மற்றும் செலவு செய்யும் வழிமுறைகள், ஓய்வு பெறும் சூழல்கள், முப்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரையிலான வளைகுடா பணியாளர்கள் பத்தாயிரத்து நூறு பேர் பங்குபெற்ற இந்த சர்வேயில் 98 சதவீதம் பதிவான சர்வே விபரங்கள் கீழே:
சம்பாத்தியமும், சேமிப்பும்
5% - நிரந்தமாக ஓய்வு பெற்று நாட்டிற்குத் திரும்பிச்சென்றால் ஓரளவு நிம்மதியாக வாழும் அளவிற்கு பொருளாதாரம் உள்ளது.
2% - பணத்தை சேமித்துள்ளதாக கூறியுள்ளனர்
10% - குடும்பத்துடன் வளைகுடாவில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் சேமிப்பில்லை.
15% - நான்காயிரம் திர்ஹமுக்கு மேல் சம்பாதிப்போர். சேமிப்பில்லை.
26% - விபரங்களைக் கொடுக்க மறுத்துள்ளனர்

இந்தியாவிற்கு பணம் அனுப்புவோர் விபரம்
31% ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புகிறார்கள்
24% இரு மாதங்களுக்கு ஒருமுறை
11% மூன்று மாதங்களுக்கு
34% பணம் அனுப்பியதில்லை. காரணம் சேமிப்பில்லை
23% சம்பாதிப்பதில் ஓரளவு சேமிப்பு இருக்கிறது
"வளைகுடாவில் NRI-க்கள் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளும் தருணம் வந்துவிட்டது" என்கிறார் ஷம்சுத்தீன். மேலும், "சேமிப்பை முறையாகத் துவங்க தங்கள் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்" என்கிறார். "தங்கள் குடும்பத்தினருக்கு வளைகுடாவின் அல்லல்களை எடுத்துரைத்து செலவீனங்களை கட்டுப்படுத்தி சேமிப்பின் மகத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். தவிர, ஹலாலான வழிகளில் சிரமப்பட்டு சம்பாதித்த காசை புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே தக்கவைக்கவும், பெருக்கவும் முடியும்" என்கிறார்.
இவ்வாக்கத்தை நாம் எழுதத் துவங்கியதன் பின்னணி யாதெனில், படிப்பறிவில்லாத தமிழ் இஸ்லாமியச் சமுதாயம், தலைமுறை தலைமுறையாக ஆட்டுமந்தையைப் போன்று செயல்பட்டு வரும் பழைய சித்தாந்தங்களைச் சிறிது நேரம் ஒதுக்கிச் சிந்திக்க வேண்டும் என்பதுதான். பதினைந்து வருடங்கள் வளைகுடாவில் குப்பை கொட்டி பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்ட ஒரு தந்தையே எப்படியும் பாஸ்போர்ட் எடுத்து தன் மகனை வளைகுடாவிற்கு அனுப்பிவிடவே எத்தனிக்கிறார். இது, வளைகுடா தொழிலாளர்கள் படும் அல்லல்களின் பின்ணனியை முற்றிலும் அறியாததாலா? இல்லை குறுகிய காலத்தில் கைநிறைய சம்பாதித்துவிட வேண்டும் என்ற அரதப்பழசான சிந்தனை தரும் உந்துதலா?எது எப்படியோ, தமிழ் இஸ்லாமியச் சமுதாயம் இத்தகைய குறுகிய சிந்தனையிலிருந்து வெளியேறி தீர்க்கமான ஒரு புதுயுகத்தினை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதே நம்முடைய ஆதங்கமும் அவாவும். தெளிவான சிந்தனையிலிருந்து புறப்படும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே பொருளீட்ட வளைகுடா நாடி வரும் சமுதாயம், இப்போது சந்திக்கும் இழிநிலையில் இருந்து வெளியேறி புதியதொரு சரித்திரம் படைக்கும்.
கல்வியின் மகத்துவத்தையும் பொருளாதாரத்தின் தேவைகளையும் சேமிப்பின் அவசியத்தையும் இதன் மூலம் உணரும். இதனை நம்மிலிருந்து துவங்குவோம். இறைவன் நாடட்டும்.
நன்றி!
ஆக்கம்: அபூ ஸாலிஹா
நன்றி : சத்தியமார்க்கம்.காம்