31 Mar 2009

சுடச் சுட டீ குடிக்கறீங்களா? தொண்டைப் புற்றுநோய் வரும்,உஷார்!

ஆவி பறக்கும் சூடான டீயை குடிப்பவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமிருப்பதாக பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான தேநீர் அருந்துவதால் உணவுக் குழாய் மற்றும் வாய்க்கும்,உணவுக் குழாய்க்கும் இடையே உள்ள பகுதியில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு எட்டு மடங்கு அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

ஈரானிலுள்ள டெக்ரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழக முதன்மை ஆராய்ச்சியாளர் ரேஸா மலேக்ஸாதே இது குறித்து தெரிவிக்கையில், சூடான டீ பருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பதன் மூலம்,தொண்டைப் புற்றுநோயைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300-பேரின் தேநீர் பருகும் பழக்கத்தையும், புற்றுநோயால் பாதிக்கப்படாத 571-பேரின் தேநீர் பருகும் பழக்கத்தையும் ஆராய்ச்சி செய்து இந்த முடிவை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

கோப்பையில் தேநீர் ஊற்றப்பட்ட 4-நிமிஷத்திற்குள் அல்லது அதற்கும் அதிகமான நேரத்திற்குள் தேநீர் பருகுபவர்களைவிட, தேநீர் ஊற்றப்பட்ட 2-நிமிஷத்துக்குள்,அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் பருகி முடிப்பவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு 5-மடங்கு அதிகமாக உள்ளதாக அந்த ஆராய்ச்சி மேலும் கூறுகிறது.

இருப்பினும் தேநீர் குடிக்கும் அளவுக்கும், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

24 Mar 2009

நாடு NRI க்களுக்கு என்ன செய்தது?

நம்நாட்டு அன்னியச் செலாவணி இருப்பை கணிசமான அளவில் உயர்த்தியதில் NRI க்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது.

எந்த ஒரு நாட்டிற்கும் சர்வதேச வர்த்தகத்தில் அன்னியச் செலாவணிக் கையிருப்பு முக்கியப் பங்காற்றுகிறது. போக்ரான் அணுகுண்டு சோதனையால் கடுப்படைந்த அமெரிக்கா நம்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்த போதும் நமது பொருளாதாரம் சீர்குழையாமல் காத்ததும் NRI க்களே!

அரசியல்வாதிகளின் நாற்காலிச் சண்டைகள், கட்சித்தாவல், ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடமையே கண்ணென பணியாற்றி குருவி சேர்ப்பது போல் சிறுகச்சிறுக பணம் சேர்த்தாலும், NRI க்களின் சேமிப்புக்களுக்கு இருந்த மவுசு வங்கிகளிடம் வெகுவாகக் குறைந்து விட்டது.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் NRI க்கள் வங்கிகள் மூலம் அனுப்பும் பணத்தை வங்கிக்கணக்கிலிருந்து எடுப்பதற்கும் வரி விதித்து மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளானார். நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் NRI க்களில் ஓரிருவரை ஆண்டுக்கு ஒருமுறை டெல்லியில் விழா நடத்தி ஜனாதிபதி கையால் விருது வழங்குவதோடு சரி.

கோடிக்கணக்கான NRI க்களின் அவலங்களைக் கண்டு கொள்வதே இல்லை. வெளிநாட்டு இந்திய தூதரகங்களில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் மரியாதையே தனி.

துபாய் போன்ற பெருநகரங்களில் தூதரகச் சேவைகளுக்காக வெயிலில் காத்திருப்பவர்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கும். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நம்நாட்டுப் பணமதிப்பு உயரும்போதும் நிச்சயமாக NRI க்கள் சந்தோசப்படமாட்டார்கள். பணமதிப்பு உயர்ந்தாலும் விலைவாசியும் சேர்ந்து உயர்வதால் அனுப்பும் பணத்தின் மதிப்பு NRI க்களைப் பொருத்த மட்டில் யாருக்கோ செல்கிறது.

இந்தியப் பணம் ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டுமென்றால் 80 UAE திர்ஹம் கொடுத்தால் போதும்! ஆனால் தற்போது 95 திர்ஹம் வரை கொடுக்க வேண்டும். ஆயிரத்திற்கு ஐந்து திர்ஹம் என்றால் இருபதாயிரம் அனுப்பும் ஒருவர் மாதத்திற்கு நூறு திர்ஹம் (சுமார் ஆயிரத்து 1200 ரூபாய்) இழப்பு!மட்டுமின்றி, UAE ஐப் பொருத்தவரை ரூம் வாடகை, பேச்சிலருக்கான கெடுபிடிகள் ஆகியக் காரணங்களால் ஏற்கனவே சாமான்ய NRI க்கள் மனஉளைச்சலில் நொந்து போயுள்ளார்கள்.

இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25% விலை உயர்வு எதிர்பார்க்கப் படுகிறது.

வெளிநாட்டில்தான் கஷ்டப்படுகிறோம். ஓராண்டுக்கு அல்லது ஈராண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் விடுமுறையில் ஊர் சென்று வரலாம் என்று கிளம்பினால் ஏர்போர்ட்டிலிருந்து சுங்கத் துறையினரின் கெடுபிடி, உபரி லக்கேஜ் கட்டணம் முதல் டாக்சி டிரைவர்கள் வரை எல்லோரையும் சமாளித்து ஊர்வந்து சேர்ந்தால் குடும்பப் பிரச்சினைகளும் இருந்தால் அவற்றையும் சமாளித்து விடுமுறை முடித்து மீண்டும் பணிக்குத் திரும்புவதை நினைக்கும் போது NRI களின் நிலை ராணுவ வீரர்களின் நிலையை விடக் கொடுமையானது!

இப்படியாக உள்நாட்டு பணமதிப்பு உயர்வு, விலைவாசி உயர்வு, ஏர்போர்ட் கெடுபிடிகள் எனப் பல்வேறு சுமைகளோடு, குடும்பச் சுமையையும் சுமந்து கொண்டிருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு இந்தியர்களை நினைவுகூற சர்வதேச NRI க்கள் தினம் ஒன்றை அறிவித்து அவர்களுடன் குடும்பத்தினர் ஒருநாள் மட்டும் இலவசமாக தொலைதொடர்பு கொள்ள இந்தியப் பேரரசு உதவலாமே! நாட்டிற்கு NRI க்கள் செய்ததைச் சொல்லிவிட்டேன்! இப்பொழுது சொல்லுங்கள் நாடு NRI களுக்கு என்ன செய்ததென்று?

எழுதியவர்: அதிரைக்காரன்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...

வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள பெயர்கள் சேர்க்க தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp சென்று உங்கள் மாவட்டம் மற்றும் தொகுதி விபரங்களை அளித்து உங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியளை பார்வையிட்டு பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியளில் ‍சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்திலேயே http://www.elections.tn.nic.in/forms.htm படிவங்கள் அணைத்தும் உள்ளன இணையிறக்கம் செய்து ‍கொள்ளவும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.இதனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் வரையில் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்

22 Mar 2009

வெங்காயத்தின் பலன்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது.

இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.
இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.

சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

19 Mar 2009

ஆண்கள் கவனத்துக்கு ஏழு செய்திகள்

ஆண்கள் கவனத்துக்கு ஏழு செய்திகள்......

1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.

2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.

3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு ‘இதை யாரிடமும் சொல்லாதே’ என்னும் அடைமொழியுடன் சொல்.

4. ஒருவன் கடவுளிடன் இரண்டு வரங்கள் கேட்டான், உலகிலேயே மிகச் சிறந்த மதுவைக் கையிலேந்திய உலகிலேயே மிகச் சிறந்த பெண் என்னருகில் வேண்டும். கடவுள் வரமளித்தார். மதுவை கையில் வைத்துக் கொண்டிருந்தது கருணைக் கடல் அன்னை தெரசா. ( கேட்பதைத் தெளிவாகக் கேளுடா முண்டம் என்று கடவுள் உள்ளுக்குள் பேசியிருப்பார் உரக்க. )

5. அசத்தல் செய்தி சோகச் செய்தியாவது எப்போது ?அழகான காதலி, காதலனிடம் வந்து ‘உன் நண்பர்கள் அத்தனை பேரையும் விட நீ தானடா அற்புதமாய் முத்தமிடுகிறாய்’ என்று அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையிலேயே சொல்வது !

6. ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க.

7. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்கிறது ?

அடப்போப்பா… ஒரு தப்புக்கே .......

உங்களுக்கு குளிர்பானம் வேண்டுமா ?

உங்களுக்கு குளிர்பானம் வேண்டுமா ?


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழியில் உள்ள குருசாமி என்பவரது கடையில் விற்பனைக்கு வந்த குளிர் பானத்தில் மிதக்கும் பூச்சி.
தகவல்: தமிழ் முரசு

18 Mar 2009

இன்டர்நெட்டுக்கு அடிமை…? போதை மருந்தை விட ஆபத்து

எப்போதும் கம்ப்யூட்டர் கேம், இன்டர்நெட் என்று கம்ப்யூட்டரே கதியா?

சாப்பாட்டை மறந்து விட்டு கம்ப்யூட்டரில் மூழ்கி விடுகினரா எப்போதும்?

கம்ப்யூட்டரில் விளையாடி விட்டு அடிக்கடி கோபப்படுகின்றனரா?

இப்படியெல்லாம் உங்கள் குழந்தைகள் செய்தால், மனோதத்துவ டாக்டரை பார்க்க இது சரியான தருணம்;

இனியும் தாமதிக்கக்கூடாது! இது குறித்து, அமெரிக்க மனோதத்துவ ஆய்வு இதழில் நிபுணர்கள் கூறியிருப்பதாவது:

மது குடிப்பது, போதை மருந்து சாப்பிடுவதை விட, இன்டர்நெட், கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது மோசமானது; கம்ப்யூட்டரே கதி என்று இருப்போர் அதற்கு அடிமைப்பட்டு விடுகின்றனர்.

இப்படி இருப்பதால் அவர்களால் சரிவர சிந்திக்க முடிவதில்லை சரியான நேரத்துக்கு சாப்பிட முடிவதில்லை சரியான தூக்கம் இல்லை. அவர்கள் மனநிலையும் மாறுகிறது. கோபம் அதிகரிக்கிறது கம்ப்யூட்டர் கேம்கள் பெரும்பாலும் அசகாயசூரத்தனமானவை கோபம், ஆத்திரம், பராக்கிரமம் போன்றவற்றை காட்டும் கேரக்டர்களை கொண்ட டிஜிட்டல் விளையாட்டுகள்.

அவற்றை விளையாடும் குழந்தைகள், மனதில் அமைதியான சுபாவம் மாறி விடுகிறது. பெற்றோர் சொல்வதை கேட்கும் பண்பு மறைகிறது. அடிக்கடி கோபப்படுவது சகஜமாகிறது. அது தான் சரி என்று நினைக்கும் அளவுக்கு மாறிவிடுகின்றனர்.

சிறுவயதில் இருந்தே, கம்ப்யூட்டருக்கு அடிமையாகி விட்டவர்கள், பெரியவர்களாகும் போது, பெரும் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். கம்ப்யூட்டருக்கு அடிமையானவர்கள், திருமணம் செய்த பின் மனைவி யுடன் சரிவர குடும்பம் நடத்த முடியாமல், படுக்கை அறையிலும் “லேப் டாப்’ கம்ப்யூட்டரே கதியாக இருக்கின்றனர்.

கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில், எவ்வளவோ அறிவுப்பூர்வமான விஷயங்கள் உள்ளன அதே அளவுக்கு தீய விஷயங்களும் உள்ளன. ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்த ஒருவர் நாளடைவில் செக்ஸ் விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.

போகப்போக அவர்கள் உண்மையான நிலைக்கு வர முடியாமல் இன்டர்நெட்டில் செக்ஸ் படங்கள் பார்ப்பதில் அடிமையாகி விடுகிறார்.இது போன்று பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம், அவர்கள் சிறுவயதில் காட்டிய கம்ப்யூட்டர் வெறித்தனம் தான். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நுரையீரல்

நுரையீரல்

உணவே உண்ணாமல் நாம் சில நாட்கள் வாழ்ந்து விடலாம். நீர் அருந்தாமலே ஒரு சில மணி நேரம் நம்மால் இருந்து விட முடியும். ஆனால் காற்றைச் சுவாசிக்காமல் ஒரு நிமிடம் கூட எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாது.

காற்றின் மூலம் நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் பெறப்படுவதும், தேவையற்ற கார்பன்டை-ஆக்ஸைடு வெறுவேறுவதும் சுவாசித்தல் மூலம் தான். சக்தியைத் தோற்றுவிப்பதும் சுவாசித்தல் தான்.சுவாசித்தல் சிறப்பாக நடைபெற சுத்தமான சுவாசப் பாதையும், ஆரோக்கிய-மான நுரையீரலும் அவசியம் தேவை.

மனிதன் நுரையீரல் கூம்பு வடிவ-முடையது. பஞ்சு போன்று மிருதுவானது. நுரையீரல் புளூரா என்ற சவ்வினால் மூடப்பட்டுள்ளது. இதயமும், உணவுக் குழாயும் நுரையீரலுக்கு நடுவில் தான் அமைந்துள்ளன. நுரையீரலின் மொத்த கொள்ளளவு 4450-5000 மிலி. ஆகும். நாம் சுவாசிக்கும்போது 500 மிலி காற்று நம் மூக்கு துவாரத்தின் வழியாகச் செல்கிறது. ஆனால் 350 மிலி காற்றே நுரையீரலை அடையும் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் தான் வாயுப் பரிமாற்றம் நிகழ்கிறது.

காற்றுப் பைகளின் எண்ணிக்கை சுமார் 300 மில்லியன்கள் ஆகும். இவற்றின் விட்டம் 0.2 இஇ ஆகும்.நாசித் துவாரத்தின் வழியாக நம் சுவாசப் பாதைக்குள் நுழையும் காற்றை வெப்பப் படுத்தியோ அல்லது குளிர்வித்தோ நம் உடலின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாற்றுவது நாசிப்பள்ளம் எனப்படும்.மேலும் இங்குள்ள உரோமங்கள், கோழைச் சுரப்பிகள் ஆகியவை தூசிகளை நீக்குகிறது.

ஆக்சிஜன் மிகுந்த காற்று நுரையீரலுக்கு வருவது உட்சுவாசம் என்றும் கார்பன்-டை-ஆக்சைடு மிகுந்த காற்று நுரையீரலை விட்டு வெளியேறுவது வெளிச் சுவாசம் எனவும் அழைக்கப்படுகிறது. நுரையீரலு க்குச் செல்லும் காற்றில் 21 சதவீதமும் வெளிச் செல்லும் காற்றில் 16 சதவீதமும் இருக்கும் அதேபோல் உட்செல்லும் காற்றில் 0.04 சதவீதமும், வெளியேறும் காற்றில் 5.6 சதவீதமும் கார்பன்டை ஆக்ஸைடும் இருக்கும்.

சுவாசிக்கும் போத நாம் உட்கொண்ட உணவு ஆக்சிஜனேற்றம் அடைந்து சக்தி வெளிப்படும். மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 18 முறை சுவாசிக்கறின். குழந்தைகள் நிமிடத்திற்கு 26 முறை சுவாசிக்கின்றன.ஒரு செல் உயிரிகள் முதல் உருளைப் புழுக்கள் தொகுதி வரையிலான சிறு உயிரிகள் உடலின் மேற்பரப்பு அல்லது தோல் மூலம்சுவாசிக்கின்றன. சுவாசிக்க தனியாக ஒரு உறுப்பு கிடையாது.

மண்புழுக்கள் காற்றற்ற முறையில் சுவாசிக்கும் தேள், சிலந்தி ஆகியவை நுரையீரல் புத்தகத்தினாலும் (க்ஷடிடிம டுரபேள) நட்சத்திர மீன் குழல் கால்களாலும், கடல் வெள்ளரிகள் மரம் போனற் சுவாச உறுப்பாலும் மீன்கள் 4 அல்லது 5 சோடி செவுள்கள் மூலம் சுவாசிக்கின்றன.

நம் மூளையில் உள்ள முகுளமே சுவாசக் கட்டுப்பாட்டு மையமாகத் திகழ்கிறது. வேகஸ், மற்றும் பிரினிக் ஆகிய நரம்புகள் இதற்கு உதவுகின்றன.வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் நிமோனியா, காசநோய் நுரையீரல் அழற்சி நோய் மற்றும் மார்புச் சளி ஆகியன உண்டாகின்றன.

இவற்றில் சுரீரென்ற மார்பு வலி ஏற்பட்டு அது தோள்பட்டைக்கும் பரவுவதே நுரையீரல் அழற்சி நோயாகும். மார்புச் சளி என்பது மூச்சுக் கிளைக் குழல்களில் தோன்றும் வீக்கமாகும். புகை பிடிப்பதாலும் மாசுள்ள காற்று அதிகம் உள்ள இடங்களிலும் இருப்பவர்களுக்கு இந்நோய் அதிகம் வருகிறது.

நாம் ஒரு நிமிடத்தில் 0.3 லிட்டர், ஒரு நாளில் 15,000 லிட்டர் காற்றையும் சுவாசிக்கிறோம். சுவாசிக்கும் காற்று சுத்தமாக, புகை பிடிக்காமல், காற்றை மாசுபடுத்தாமல் நலமாக வாழ்வோம்.

17 Mar 2009

“டிவி’ பார்ப்பதை குறைத்தால் வீட்டில் குஷியோ குஷிதானாம்

டிவி’ பார்ப்பதை குறைத்தால் வீட்டில் குஷியோ குஷிதானாம்

டிவி பார்ப்பதை குறைத்தால், சந்தோஷமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். இதை பரிசோதனை மூலம் நிரூபித்துள்ளனர் தென்கொரியர்கள்.

தென்கொரியாவின் தெற்கு கடலோர பகுதியில் உள்ளது தாரங் தீவு. இங்கு 28 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களால் “டிவி’ பார்க்க முடியாமல் இருக்க முடிகிறதா, அப்படி பார்க்காமல் இருக்கும் போது, வீட்டில் நிகழும் மாற்றங்கள் என்ன என்பது பற்றி, உள்ளூர் நிறுவனம் ஆய்வை மேற்கொண்டது.

தீவில் உள்ள கிராமத் தலைவர் உட்பட அனைவரும் இதில் பங்கேற்றனர். ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. மூன்று வாரத்திற்கு மேலாக “டிவி’யை மூட்டை கட்டி வைத்து விட்டு, பலர் குடும்ப விஷயங்களிலும், மற்ற விஷயங்களிலும் அக்கறை காட்டினர்.

இந்த கால கட்டத்தில், தங்களின் “டிவி’ பார்க்கும் பழக்கத்தை மறக்க, பலர் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதன்பின், கிராமத்தினர் கூறுகையில், “டிவி’ பார்ப்பதை விட்டதன் மூலம் எங்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகி விட்டது.

புத்தகங்கள் படிப்பதிலும், கணவர் அல்லது மனைவியுடன் பேசுவதிலும், மத ரீதியான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும் அதிக நேரத்தைச் செலவிட்டோம்’ என்றனர். “என்னால் “டிவி’ பார்க்காமல் இருக்க முடியாது. வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் பார்க்க ஆரம்பித்து விடுவேன். ஆனால், தற்போது எனது மனைவியை கவனிக்க முடிகிறது. அவர் முன்பை விட இப்போது, ரொம்ப அழகாக தெரிகிறார்’ என, கிராமத் தலைவர் சோய் கூறினார்.

வெப்பநிலை,காற்றழுத்த மாற்றத்தால் ஒற்றைத் தலைவலி உண்டாகிறது

வெப்பநிலை,காற்றழுத்த மாற்றத்தால் ஒற்றைத் தலைவலி உண்டாகிறது

தலைவலியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள்".

தலைவலியால் அவதிப்படாத மனிதர்களே இருக்கமுடியாது என்பதால் தலைவலி தொடர்பான ஆராய்ச்சிகள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

தலைவலியில்,ஒற்றைத் தலைவலி எனப்படும்"மைகிரேன்"தலைவலியால் அவதிப்படுவோர் பலர். இத்தகைய வலி வந்தால் எதுவுமே செய்ய இயலாது. சிலருக்கு இரண்டு மூன்று நாள் வரை கூட இது நீடிக்கும். தலையில் நீர் கோர்ப்பதால் இந்த மைகிரேன் தலைவலி வருவதாக கூறப்பட்டாலும், தட்ப வெப்ப நிலை மற்றும் போதிய காற்று இல்லாததாலும் மைகிரேன் தலைவலி வரும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வெப்ப நிலை திடீரென உயர்வதால் தலைவலி உண்டாகும் என்றும் காற்றழுத்த வேறுபாடு காரணமாக தலைவலி ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் சேத் தலைமையிலான மருத்துவக் குழு கடுமையான தலைவலியால் அவதிப்படும் 7,054-பேரை ஆய்வு செய்தது. இவர்களில் பெரும்பாலோர் 7-ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறினர்.

இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, தட்ப வெப்ப நிலையில் முந்தைய தினத்தைக் காட்டிலும் 5-டிகிரி செல்சியஸ் உயரும்போது இவர்களுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் காற்றழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக 72-மணி நேரம் வரை லேசான தலைவலியுடன் இவர்கள் அவதிப்பட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய ஆராய்ச்சி முடிவு மிகவும் உபயோகமானது என்று லண்டனில் உள்ள நரம்பியல் துறை பேராசிரியர் பீட்டர் கோட்ஸ்பி தெரிவித்துள்ளார். இதன்மூலம் நோயாளிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும்.

மைகிரேன் தலைவலியை அதிகரிக்கும் காரணிகளில் சில வகை உணவு மற்றும் மதுப் பழக்கம் மட்டுமின்றி மன இறுக்கமும் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

14 Mar 2009

இன்டர்நெட்டில் பாஸ்போர்ட் ஏஜென்டுகளின் பட்டியல்

இன்டர்நெட்டில் ஏஜெண்டுகள் பட்டியல்

போலிநபர்களிடம் ஏமாறாதீர்கள் பாஸ்போர்ட் அதிகாரி எச்சரிக்கை

பாஸ்போர்ட் பெற்றுத்தருவதற்கான அங்கீகரிக்கப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்டுகளின் பட்டியல் இண்டர்நெட்டில் வெளியிடப்பட உள்ளது. எனவே போலி ஏஜென்டுகளை நம்பி ஏமாற வேண்டும் என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியது:

பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி பாஸ்போர்ட் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக புரோக்கர்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக போலி ஏஜென்டுகளை களையெடுக்கும் பணியாகும். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டில் மொத்தம் 34 அங்கீகரிக்கப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்டுகள் மட்டுமே உள்ளனர். ஆனால் அனைத்து பகுதிகளிலும் அமைந்துள்ள டிராவல்ஸ் ஏஜென்டுகள் அனைவருமே “அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள்“ என்ற வாசகங்கள் கொண்டுள்ளனர்.இதற்காகவே திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகளின் பட்டியலை எழுதிவைத்துள்ளோம்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்டுகளை முறைப்படுத்த திட்டமிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட் நிறுவன உரிமையாளர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருச்சி பாஸ்போர்ட் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 34 அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகளில் 3 பேரைத்தவிர மற்ற அனைவருமே திருச்சியில் அலுவலகத்தை வைத்துக்கொண்டு பினாமி பெயர்களில் செயல்பட்டு வந்த விபரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவன உரிமையாளர்களும்தங்க ளின் புகைப்படம், தொட ர்பு முகவரி, தொலைபேசி எண்கள், உள்ளிட்ட பல விபரங்களுடன் (100 ரூபாய்) பத்திரத்தில பதிவு செய்து தங்களின் நிறுவனம் சார்பில் பாஸ்போ ர்ட் அலுவலகத்துக்கு நேரில் வரும் நபர்கள் குறித்த விபரங்களும் (போட்டோவுடன்) குறிப்பிட்டு அதனை பதிவு செய்யவேண்டும் என முறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி முறையாக இயங்கிவரும் உண்மை யான ஏஜென்டுகள் பெரு ம்பாலான பேர் பதிவு செய்துவிட்டனர். ஏஜென்டுகளின் பதிவு செய்த விபரங்கள் அனைத்தும் இணைய தளத்தில் இடம்பெறச் செய்துள்ளோம். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யும் நபர்கள் மட்டுமே தங்களின் அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். மற்றவர்களின் அங்கீகாரம் ரத்து செய்வதுடன் அங்கீகாரம் பெற்ற ஏஜென்டுகள் பட்டியலிலிருந்து அவர்கள் நீக்கப்படுவர்.

போலி புரோக்கர்கள் போல் போலி ஏஜென்டுகளையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

11 Mar 2009

பாஸ்வேர்ட் அமைக்க சில குறுக்கு வழிகள்...

பாஸ்வேர்ட் அமைக்க சில குறுக்கு வழிகள்

கணினி பயன்படுத்துபவர்களுக்கு பாஸ்வேர்ட் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பாஸ்வேர்ட் பயன்படுத்தாமல் நாம் கம்பியூட்டரை முழுமையாக இயக்க முடியாது. உண்மையில் பாஸ்வேர்ட் என அழைக்கப்படும் பின் (PIN) என்பது ஒரு பூட்டைத் திறக்கும் சாவி போன்று செயல்படுவதாகும்.

கணினியில் உள்ள புரொக்கிராம்களை விண்டோஸ் போன்றவற்றை தனித்தனியாக பாஸ்வேர்ட் என்ற போர்வையால் பூட்டிக்கொள்ளலாம்.

பாஸ்வோட் எனப்படும் பின் பயன்படுத்தப்படும் சூழ்நிலைகளாவன:

1. கணினியை இயக்க ஆரம்பிக்கும் போது பாஸ்வேர்ட் பயன்படுத்தப்படுகிறது.

2. கம்பியூட்டரை நெட்வேர்க்கில் இணைக்கும் போது

3. சில மென்பொருட்களை ஆரம்பிக்கும் போதும் உருவாக்கும் போதும் தேவைப்படலாம்.

4. இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த (dialup/ wireless)

5. குறிப்பிட்ட சில இணையதளங்களை மேயும் போது பதிவு செய்து யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டுமே தகவல்களை பார்வையிடலாம்.

6. இணையதளங்களில் ஈ.மெயில் கணக்கு ஆரம்பிக்கும் போது சரி பயன்படுத்தும் போதும் சரி பாஸ்வேர்ட் மிகவும் அவசியம்.

7. மின்வணிகத்தில் ஈடுபடும் போதும், கிரடிட் கார்ட்டை செயற்படுத்தும் போது… (E-commerce)

8. முக்கியமான இரகசிய தகவல்களை திருட்டு போகாமல் பாதுகாத்து வைக்க..

9. சில கருவிகள் (Routers, network printers…) மற்றும் பைல்களை கையாளும் போது என பல தடவை நாம் பாஸ்வேர்ட் எனும் கருவியை மட்டுமல்லாது அதன் யூசர் நேம்மையும் பயன்படுத்த வேண்டும்.

சமீபத்தில் நடந்த ஆய்வின் போது தெரியவருவதாவது:

கம்பியூட்டர் பயன்படுத்துபவர் குறைந்தபட்சம் 10 பாஸ்வேர்ட்டுக்களை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 30 சதவீதமான பயன்பாட்டாளர்கள் 6 இலிருந்து 9 வரையான பாஸ்வேர்ட்டுகளை மட்டுமே நினைவில் வைத்துள்ளனர்களாம்.

மேலும் இந்த ஆய்வின் முடிவில் 88 சதவீத்தினர்கள் பாஸ்வேர்ட்டுகளை பயன்படுத்துவதில் தடுமாற்றமும் வெறுப்பும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பாஸ்வேர்ட் உருவாக்க சில எளிய வழிமுறைகள்

1. பாஸ்வேர்ட்களை எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ளக்கூடியதாகவும், பிறர் இலகுவில் ஊகித்து பாஸ்வேர்ட்டுகளை கண்டறிய முடியாதவாறும் இருக்கவேண்டும்.

2. பாஸ்வேர்டுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அமைக்கவேண்டும். அத்துடன் பாஸ்வேர்ட்டில் குறைந்தபட்சம் 6 எழுத்துக்களாவது இருக்கவேண்டும்.

3. பாஸ்வேர்ட்டில் பெரிய எழுத்துக்களையும் (Capital letters) சிறிய எழுத்துக்களையும் (small letters) இலக்கங்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களை (%, !, #, $, @, -) பயன்படுத்தலாம்.எல்லா வகையான எழுத்துக்களையும் கலந்து பாஸ்வேர்ட்டை பயன்படுத்துங்கள். அது மிகப்பெரிய பாதுகாப்பு வேலியாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

4. பாஸ்வேர்ட்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக் கொண்டேயிருங்கள். உதாரணமாக மாதமொரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையேனும் மாற்றினால் உங்களது தகவல்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

5. தனிநபரின் பெயரோ அல்லது ஊர் பெயரையோ பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தாதீர்கள். முக்கியமாக பிறந்த திகதியோ மொபைல் நம்பரையோ அல்லது காதலன் காதலியுடைய அல்லது அப்பா அம்மா உறவுப் பெயர்களையெல்லாம் கண்டிப்பாக பயன்படுத்தவே கூடாது.

முயற்சி செய்து தான் பாருங்களேன்.

10 Mar 2009

எஸ்எம்எஸ்சில் பாஸ்போர்ட் விவரம் அறியும் சேவை

எஸ்எம்எஸ்சில் பாஸ்போர்ட் விவரம் அறியும் சேவை
திருச்சி மண்டலத்தில் அறிமுகம் மண்டல அதிகாரி தகவல்
திருச்சி பாஸ்போர்ட் நிலவரம் குறித்த விவரங்களை இனி எஸ்.எம்.எஸ். மூலம் பெறும் முறை திருச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியது:
விண்ணப்பித்த பின் தாமதமாகும் பாஸ் போர்ட் பற்றிய விவரங்களைப் பெறுவதில் கடும் சிரமம் இருந்து வந்தது. நேரடியாக வந்து விவரங்களை பெறும் முறையில் சில மாறுதல்களைச் செய்து இண்டர்நெட் மூலம் தகவல் அறிய வழி வகை செய்யப்பட்டது. இதிலும் சில பிரச்னைகள் ஏற்பட்டதால் மாற்று வழி ஆராயப்பட்டது.
இதையடுத்து திருச்சியில் விண்ணப்பிப்போர், இங்குள்ள நிலவரத்தை உடனுக்குடன் அறியும் வகையில் அதில் மாற்றம் செய்து திருச்சிக்கென தனி இணையதள முகவரியுடன் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
என்ற முகவரியை தொடர்புகொண்டு விவரங்களை எளிதில் பெறலாம்.
இந்த முறையில் பலரும் தொடர்பு கொள்வது சற்று சிரமம் என்பதால் செல்போன் மற்றும் எஸ்.எம்.எஸ் வசதியுடைய அனைத்து வகை (வீட்டு போன் உள்பட) போன்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்கள் தங்களின் பாஸ்போர்ட் நிலவரம் குறித்து அறியும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக 5 இலக்கம் கொண்ட கட்டணத்துடன் கூடிய தனி தொடர்பு எண் விரைவில் அறிவிக்கப்படும். இதற்காக பிரத்யேகமாக 80 வகை பதில்களுடன் புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டுள்ளது.
இம்முறையில் மற்ற பாஸ்போர்ட் அலுவலகங்களில் பிஎஸ்என்எல் போன்களில் மட்டுமே தகவல் பெறமுடியும். திருச்சியிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த முறையை திருச்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்தாலும், எல்லா நிறுவனங்களின் போன்கள் மூலமும் தகவல்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பதிவு செய்யப்பட்ட குரல் வழியான தகவல்களைப் பெறும் முறை புதிய மாற்றங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முன்பு இந்த முறையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் அதில் 4 வகை பதில்கள் மட்டுமே கிடைக்கும். தற்போது இதிலும் 80 வகையான பதில்கள் பெறும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

8 Mar 2009

சிறுபான்மையினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

சிறுபான்மையினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

தமிழக அரசின் நிதி உதவியோடு இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

1. Hardware and networking,

2. C,C++,

3. DTP,

4. Tally with MS office.

படிப்பு; 10 ஆம் வகுப்பு முதல் மேற்படிப்பு வரை.

இட‌ம்: சென்னை, ம‌துரை, திருச்சி, கோய‌ம்புத்தூர், சேல‌ம், திருவ‌ண்ணாம‌லை, திருவ‌ள்ளூர், பெர‌ம்ப‌லூர், க‌ரூர், ஈரோடு, அரிய‌லூர், தேனி, த‌ஞ்சாவூர்,திருவாரூர், புதுக்கோட்டை, நாக‌ர்கோவில், விழுப்புர‌ம், நாம‌க்க‌ல், த‌ர்ம‌புரி, சிவ‌க‌ங்கை, இராமநாத‌புர‌ம், கீழ‌க்க‌ரை, ப‌ர‌ம‌க்குடி, தார‌புர‌ம், விருத்தாச‌ல‌ம், சித‌ம்ப‌ர‌ம், திண்டிவ‌ன‌ம், மார்த்தாண்ட‌ம், த‌க்க‌லை, திருச்செந்தூர், நாச‌ரேத், கோவில்ப‌ட்டி, ஆரணி, செய்யார், போளூர், செங்க‌ம், காஞ்சிபுர‌ம், செங்க‌ல்ப‌ட்டு, ம‌துராந்த‌க‌ம், ஆத்தூர், இராசிபுர‌ம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, குடிய‌த்த‌ம், பேர்ணாம்ப‌ட்டு, அர‌க்கோண‌ம், ப‌ள்ள‌ப்ப‌ட்டி, அர‌வாக்குறிச்சி, குளித்த‌லை, மானாம‌துரை, காரைக்குடி, திருப்பத்தூர், இளைய‌ங்குடி, தேவ‌க்கோட்டை, திருவெறும்பூர், திருச்செங்கோடு, நாம‌க்க‌ல், ஆண்டிப்ப‌ட்டி, கும்ப‌கோண‌ம், ப‌ட்டுக்கோட்டை, பூந்த‌ம‌ல்லி, கூத்தாந‌ல்லூர், ப‌ர்கூர், த‌ர்ம‌புரி, ஓசூர், பொள்ளாச்சி, திருப்பூர், மேல‌ப்பாளைய‌ம், விருதுந‌க‌ர், க‌டலூர், கிருஷ்ண‌கிரி, திண்டுக்க‌ல், நாக‌ப்ப‌ட்டின‌ம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஊட்டி, புளிய‌ங்குடி, க‌டைய‌ன‌ல்லூர், தென்காசி, ஆம்பூர், வாணிய‌ம்பாடி, திருப்ப‌த்தூர், ராணிப்பேட்டை, குன்னூர், மேட்டுப்பாளைய‌ம்

5. Multimedia & Animation.

படிப்பு: 10 ஆம் வகுப்பு முதல் மேற்படிப்பு வரை.

6. Dot Net(.net)

படிப்பு: ப‌ட்ட‌தாரிக‌ள்.

இட‌ம்: சென்னை, கோவை, ம‌துரை, திருச்சி.

த‌குதிக‌ள்: பெற்றோர் வ‌ருமான‌ம் ரூ1,00,000/மிகாம‌ல் இருக்க‌ வேண்டும்.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர்மற்றும் ஃபார்சியர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள்; சாதிச் சான்றிதழ் ந‌க‌ல், வருமானச் சான்றிதழ் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகல்.

பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்

1. CSC Computer Education- chennai Ph 04425393783, 65698566.

மேற்கண்ட 92 இடங்களிலும்.

2. IECT Ph 044-42066664, 42066685

சென்னை, ம‌துரை, திருச்சி, கோய‌ம்புத்தூர், சேல‌ம், திருவ‌ண்ணாமலை, கிருஷ்ண‌கிரி, வேலூர் மற்றும் புதுக்கோட்டை.

3. Hindustan Software Ltd 044-28511411, 12, 13.

மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, திருவ‌ண்ணாம‌லை செங்க‌ல்ப‌ட்டு, சேலம் மற்றும் திருச்சி.

4. Jayaram Infotech cell; 9842156228, 9894288350.

அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கோவை, விழுப்புரம், திருவ‌ண்ணாமலை மற்றும் ஆரணி.

5. Students SoftwareTraining Inst cell; 9884758845

தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், நாகப்பட்டினம் மற்றும் மதுரை.

ப‌யிற்சியில் சேர‌ விரும்பும் மாண‌வ‌/மாண‌விய‌ர்க‌ள் மேற்குறிப்பிட்ட‌ ஏதேனும் ஒரு நிறுவ‌ன‌த்திட‌ம் சேர்ந்து ப‌யிற்சி பெற‌லாம். இப்ப‌யிற்சியின் மூல‌ம் 8818 சிறுபான்மையின‌ மாண‌வ‌/மாண‌விகள் ப‌யன‌டைவார்க‌ள்.

3 Mar 2009

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம் அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?

கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!ٌ


மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்.... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...அழுவதும்... அணைப்பதும்...கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...இடைகிள்ளி... நகை சொல்லி...அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!ٌ கணவா... - எல்லாமே கனவா.......? கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?


12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்.... ... 2 வருடமொருமுறை கணவன் ... நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!


இது வரமா ..? சாபமா..? அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய் நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...


வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்ٌ விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?


விரைவுத் தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?

பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம் அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?


பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?ٌ


விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

டிஸ்கி: எனக்கு பல வருடங்கள் முன்பு மின் அஞ்சலில் வந்த கவிதை.

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…

எங்கும் மயான அமைதி… எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்…

ஆட்டம் போட்ட எல்லோரும் இப்போ ரொம்ப அடக்கி வாசிக்கிறார்கள்…

“அந்த கம்பேனி போனி ஆயிடுச்சாமே…?”

“இந்த கம்பெனி இனி தாங்காதாமே ?”

“1000 கார்கள் ஏர்போட்டில் கிடக்கிறதாமே…”

“போன வாரம் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லையாமே…”

அவன் கம்பெனி கவுந்துருச்சாமே. இவனுக்கு வேலை போய்விட்டது என்று

இப்படி வாய்க்கு வந்தபடி புரளி…

உண்மையில் துபாயில் இது நடக்கவில்லையா…?

இதுவெல்லாம் பொய்யா ..?

என்றால் இல்லை என்று ஒரேயடியாக மறுக்க இயலவில்லை…

வந்த புரளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் உண்டே தவிர இவை அனைத்தும் மிக கசப்பான உண்மை…

சென்ற வாரம் நண்பன் ஒருவன் தொலைபேசியில் அவன் மனைவியிடம் அவன் கம்பெனி நிலையை வருத்தத்துடன் கூறி எப்போது வேலையை விட்டு தூக்குவாங்களோ தெரியலை என்ற போது, அவன் மனைவியும் அவனுக்கு ஆறுதல் கூறும் விதமாக, "கவலைப்படாதீங்க, நான் , உங்களுக்காக நேந்துக்கிறேன் (நேர்த்திக்கடன்) "… எனக்கூற

இவனோ நக்கலாக, "நேந்துக்கிறதா இருந்தா, துபாய்க்கு நேந்துக்கோ(வேண்டிக்கோ), உலகத்திற்கு நேந்துக்கோ "என்று கலாய்த்த நிகழ்வு கூறி சிரித்து கொண்டிருந்தான்… இன்று அவனுக்கு வேலை இல்லை…

இன்னொருவன் தன் மனைவி தனக்கு PASSPORT வந்த சந்தோஷத்தை அவனிடம் கூற "உனக்கு PASSPORT வந்த நேரம் எனக்கு விசா கேன்சலாயிடும்" போல என்று நக்கலாக கூற,

அப்புறம் ஒரு வாரம் ரெண்டு பேருக்கும் இடையே “ ஆணியே புடுங்க வேண்டாம் என்கிற அளவிற்கு பிரச்சனை…

நான்கு மாதங்களுக்கு முன் நான்கைந்து வேலைகளை கையில் வைத்துக் கொண்டு எதை தேர்ந்தெடுக்களாம் என்று குழம்பியவர்கள் இன்று வேலையில்லாமல் வேதனைப்படும் அவல நிலை.

பீதியில் துபாய்…

உணவகங்களில் கூட்டமில்லை… கடைவீதிகளும், சாப்பிங் மால்களும் சற்றே வெறிச்சோடிய நிலை… கடை நிலை ஊழியருக்குக்கூட தேடிவந்து தந்த கடன் அட்டை, இன்று உயர் நிலையாருக்கும் எட்டாத நிலையில்…

லோன்கள் வீடுதேடிவந்தது போக, இன்று லோ, லோ என்று அழைந்தாலும் கிடைக்காத நிலை…

எதையும் திட்டமிட முடியா பீதியில் மக்கள்…

இன்னும் எத்தனை நாட்கள் இது தொடரும்… தொடர்ந்தால் இங்கிருந்தோர் நிலை என்ன…?

பதினைந்து வயதில் பதினெட்டு வயதென்று பாஸ்போர்ட் எடுத்து வந்து துபாயில் உழைக்க ஆரம்பித்து, அக்கா, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து, உற்றார் உறவினர் யாராயினும் தன் சொந்தமென பல உதவிகள் செய்து, அம்மா ஆசைக்கு ஒரு வீடுகட்டி, தன் குடும்பம் கௌரவமாக வாழ தன்னை அர்பணித்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மெழுகுதிரிகளின் நிலை என்ன?

கடன் உடன் வாங்கி ஊருக்கு பெட்டி கட்டி ஏர்போட்டில் சொந்தபந்தம் புடை சூழ வரவேற்கப்பட்டு, அபிதாபியா, சார்ஜாவா என்று வெள்ளையும் சுளையுமாக, வருகிற போகிறவனிடம் உதார் விட்டபடி ஊரில் வலம் வந்த நாட்கள் இனி வெறும் கனவாகி விடுமோ…?

வேலையிழந்து ஊர் சென்றால் நிலை என்ன…?

சொந்த மண்னை விட்டு பிரியும் போதெல்லாம் கண்ணில் நீர் கோர்த்து இதயம் ரணமாகுமே..

இப்போது சொந்த மண்ணே கதி என்று போக இதயம் ஏன் கனக்கிறது…?மண்ணளவிற்கு கூட மதிப்பில்லாமல் ஊரில் திரிந்த உதவாக்கரைகளை பொன்னளவிற்கு மதிக்க வைத்த புண்ணிய பூமி என்பதாலா…?

வேலையில்லாதவன் என்று வெந்த புண் வேல் பாய்ச்சிய சமுதாயத்தின் முன் இவன் விவரம் தெரிந்தவன் என்று விளங்க வைத்த விந்தை பூமி என்பதாலா..?

எதோ இணை பிரியாத பந்தம்… உறவு சொல்ல இயலாத ஊமையின் நிலை…போய் வருகிறேன் துபாய் போய் வருகிறேன்… என்று கை காட்டி விட்டு கிளம்ப முடியுமா…

கார் லோன், பெர்சனல் லோன், கடன் அட்டை , இப்படி துபாயில் சேர்த்த (!!??) சொத்திற்கு வழி என்ன…?

விழி பிதுங்கிய நிலையில் வேதனையுடன் நிற்போருக்கு வழிதான் என்ன?

1950 களில் “கற்காலத்தில் இருந்த துபாய், நொடிப்பொழுதில் “ULTRA MODERN” நாகரீகத்திற்கு நிறம்மாறி “BURJ DUBAI ”(புர்ஜ் என்றால் பெருமை)… உலகின் உயர்ந்த கட்டிடம்…!

“DUBAI MALL” உலகின் மிகப்பெரிய சாப்பிங் மால்…!

“BURJ AL ARAB” உலகின் முதல் 7 நட்சத்திர விடுதி…!

“ PALM ISLAND ” ( பனை மர வடிவத்தீவு) எட்டாவது உலக அதிசயம்…!

என்று உலக மக்களை ஆச்சரியக்குறியில், பார்க்க செய்த துபாய் இன்று…?

இங்குள்ளோரின் எதிர்காலமென்ன..?,

இவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் இங்கு..? என்ற கேள்விக்குறிக்கு தள்ளப்பட்டிருக்கிறது…

எது எப்படியோ வீட்டு வாடகை, நகைகடை கூட்டம், KFC, PIZZA மோகம், PIERRE CARDIN, TED LAPIDS 75% SALE , 10க்கு 10 பத்து அளவு உள்ள அறையில் பன்ணிரண்டு பேர், MONY EXCHANGE ல் கூட்டம், இவை எவற்றிலும் ஒரு மாற்றமும் இல்லை…

இருந்தாலும்… ????????