12 Jun 2010

இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்கும் கைக்குத்தல் அரிசி

இதய நோய்கள்,உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தை கைக்குத்தல் அரிசி
எனப்படும் பாலீஷ் செய்யப்படாத அரிசி உணவுகள் தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வு
தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் பிலெடல்பியாவில் உள்ளது டெம்பிள் பல்கலைக்கழகம்.அதன் மருத்துவ பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, பாலீஷ் செய்யப்படாத அரிசியால் உடல்நலனுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டது.

ஆன்டியோடென்சின் என்ற புரோட்டீன்தான் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.
அதன் காரணமாக இதய நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது. பாலீஷ் செய்யப்படாத அரிசியின்
மேல் உள்ள மெல்லிய சிகப்புத் தோல் அதைக் கட்டுப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்தது.

அரிசியின் மேலே படிந்திருக்கும் மெல்லிய தோல் சுபாலெரோன் எனப்படுகிறது.இது உமி
எனப்படும் மேல் பகுதிக்கும் வெள்ளை நிற அரிசிக்கும் இடையே உள்ளது.அதில் விரைவான
ஜீரண சக்திக்குத் தேவையான நாரிழை,உடல் நலனுக்கு முக்கியமான ஆலிகோசாச்ரைட் என்ற
பொருள் உள்ளது.

அந்த தோல் பகுதிதான் அரிசி உணவில் சத்தை அதிகரிக்கிறது. அரிசியை பாலீஷ்
செய்வதால் இந்த மெல்லிய தோல் நீக்கப்படுகிறது.அதில் செறிந்துள்ள சுபாலெரோன்
இல்லாமல் போய் விடுவதால் அரிசி உணவின் முக்கிய சத்துக்கள் கிடைக்காமல்
போகின்றன.

எனவே, நெல்லில் இருந்து அரிசியைப் பிரிக்கும்போது பாதி பாலீஷ் போடுவது நல்லது. அது உடலுக்கு நன்மை தரும்.

இதுபற்றி ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த எகுசி கூறுகையில்,

‘‘அரிசியின் மேல் உள்ள ஆன்டியோடென்சினை தனியாகப் பிரித்தெடுத்தோம்.அதனுடன் எத்தனால்,மெத்தனால்,எதில் அசேடட் ஆகிய ரசாயனங்களைச் சேர்த்து அதன் விளைவுகளை ஆராய்ந்தோம்.அது இதயப் பகுதியின் செல்களை மென்மையாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குவதை கண்டுபிடித்தோம். எனவே,பாலீஷ் செய்யப்படாத அல்லது பாதி பாலீஷ் செய்த அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்க முடியும்’’ன்றார்.


*மாரடைப்புக்கு மருந்தாகும் **“**ஸ்டெம்**” **செல்கள்** ***

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்து
ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன.இந்த செல்கள் அதற்கென உள்ள வங்கிகளில் 0 டிகிரிக்கும் குறைவான தட்ப வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட நபருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படும்போது,இந்த “ஸ்டெம்” செல்கள் மூலம் குணப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையின் தற்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களையும் “ஸ்டெம்” செல்கள்
குணப்படுத் துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.லண்டனில் உள்ள பிரிஷ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது பற்றிய ஆய்வை மேற் கொண்டனர்.

“ஸ்டெம்” செல்களை இதய நோயாளியின் உடலில் செலுத்திய ஒரு நாளில் அவை ரத்தக்குழாயில் உள்ள கோளாறுகளை சரி செய்து குணப்படுத்துவதுதெரிய வந்துள்ளது.

மேலும் இருதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இது பெருமளவில் உதவிகரமாக
இருந்தது.இந்த ஆய்வின் மூலம் உலகில் உள்ள லட்சக்கணக்கான இருதய நோயாளிகள் குணமடைந்து நீண்ட நாள் வாழ்வார்கள்

5 May 2010

மாணவர்களின் மனத்தில் கூடாத பழக்கங்கள்: மேன்மைக்கு 8 வழிகள்

மாணவர்களின் மனத்தில் கூடாத பழக்கங்கள் மறைவாக உள்ளன.
அவற்றி லிருந்து விடுவித்துக் கொள்ள சில டிப்ஸ்:

*
ஒரு மனிதனுக்குத் தேவை நல்ல ஒழுக்கம்தான். இதை முதலில் உங்கள் வாழ்வில் கடைப்பிடியுங்கள். மேன்மையடைவீர்கள்.

*
ஒரு மனிதன் எப்போது சிறந்த மனிதனாகிறான் என்றால் அவனை அவனே புரிந்து கொள்ளும்போது.

*
சோம்பேறித்தனமான எண்ணங்களை வேரோடு கிள்ளியெறி யுங்கள். இல்லையெனில் எந்தக் காரியத்தையும் முழு வீச்சில் செய்ய முடியாது. சோம்பேறிகள் காலத்தை மதிப்பதில்லை. `காலம்' சோம்பேறிகளை மதிப் பதில்லை.

*
அதிர்ஷ்டத்தை நம்பாதே! அது உங்களை சோம்பேறியாக்கிவிடும்.

*
எந்த வேலையும் இழிவல்ல. வேலையை மகிழ்ச்சியுடன் செய் யுங்கள். முன்னேற்றம் நிச்சயம்.

*
சந்தேகமும், பயமும் அறவே நீக்கப்படவேண்டும். அவை எதையும் சாதிப்ப தில்லை.

*
உங்கள் வாழ்க்கையை மாற்ற எப்போதும் இனிமை யாகவே பதில் சொல்லுங்கள். கோபத்துக்கு அடிமையாகாதீர்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள். அது விவேகமாக இருக்காது. சிந்தித்துச் செயல்படுங்கள்.


*
நினைவில் கொள்ளுங்கள் சோம் பேறிகளின் ஆசைகள் என்றும் நிறை வேறுவதில்லை. `இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

-
பி.நிஷாந்த், இ.சி.இ., முதலாமாண்டு பனிமலர் பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை

20 Apr 2010

அதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்

வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை.
ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது சைமாண்டெக், மெக் அபி, நார்டன் ஆகியவையே.
ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.



1. பிட் டிபன்டர் (BitDefender)
பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது. இந்த இலவச புரோகிராமினை
என்ற தளத்தில் பெறலாம்.

Image



2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir):
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும். இதனைப் பெற
என்ற தளத்திற்குச் செல்லவும்.

Image


3. கிளாம் ஏவி (Clam AV):
இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பெற
என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Image



4.அவாஸ்ட் (Avast):
மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை. ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை. இதன் தள முகவரி:

Image



5. ஆர் கே ஹண்டர் (rk hunter) :
இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு
என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.


Image




6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt):

இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது. மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு
www.freedrweb.com/cureit/?lng=en
என்ற இணைய தளத்தினை அணுகவும்.


Image




7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security):

NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது. டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது. மேலும் தகவல்களுக்கு
என்ற தளம் செல்லவும்.


Image




8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus):

இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன. இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது. கூடுதல் தகவல்களுக்கு
என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


Image




9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials)

பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும். பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இøணையாது. இது ஒரு விதிவிலக்காகும். இதனைப் பெறவும், தகவல்களை அறியவும்
www.microsoft.com/security_essentials/
என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளம் செல்லவும்.


Image




10. ஸோன் அலார்ம் (Zone Alarm):

மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது. அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது. மேலும் தகவல்களுக்கு
என்ற தளம் செல்லவும்.


Image



17 Apr 2010

தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்த உதவும் பயனுள்ள தளம்

தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்த உதவும் பயனுள்ள தளம்

கணினி அதிகம் படித்தவர்களுக்கு தட்டச்சு செய்வதில் நேரம்அதிகம் எடுத்துக்கொள்கின்றனர் என்ற ஆராய்ச்சி முடிவு தான்இந்த பதிவுக்கு காரணமாகிறது.

ஆம் கணினியில் மென்பொருள்துறையில் மட்டும் நாம் வல்லவர்களாக இருந்தால் போதாது தட்டச்சு செய்வதிலும் வேகம் வேண்டும் அல்லவா இதற்க்காகத்தான் இந்த பதிவு.

கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகமாக இருந்தால் பலவேலைகளை விரைவாக முடிக்கமுடியும் என்ற செய்தி நமக்குதெரிந்தாலும் தட்டச்சு முறையாக படிக்கவில்லை என்ற வருத்தம்ஒருபுறம் இருக்கட்டும்.

இல்லை தட்டச்சு படிக்க நேரம் உங்களுக்கு அமையவில்லையா இப்படி நாம் தட்டச்சு படிக்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அனைத்துக்கும் தீர்வாகஇந்த இணையதளம் வந்துள்ளது.

இந்த இணையதளத்திற்குச் சென்றுகிடைக்கும் நேரத்தைப் பயன்ப்டுத்தி நாம் தட்டச்சு கற்கலாம் எந்தகணக்கும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை உடனடியாக நாம் நம்முடைய தட்டச்சு வேகத்தை இந்த இணையதளம் மூலம்அதிகப்படுத்தலாம்.

இணையதள முகவரி : http://www.klava.org/

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் இந்த தட்டச்சு இணையதளத்தைப்பயன்படுத்தி நம் தட்டச்சு வேகத்தையும் எழுத்துப்பிழையையும் எளிதாகதிருத்தலாம்.

கண்டிப்பாக இந்த இணையதளம் அனைவருக்கும் பயனுள்ளதாகஇருக்கும்.

10 Apr 2010

உங்களுக்கு துபாய் டிரைவிங் லைசென்ஸ் வேனுமா

உங்களுக்கு துபாய் டிரைவிங் லைசென்ஸ் வேனுமா ?




8 Apr 2010

கற்பை சூரையாடும் முன் விழித்துக்கொள்ளுங்கள்!

மனித இனம் இத்தனை யுகங்களாக திருமணம் என்ற அமைப்பில்தான் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடைபிடித்து வரும் ஒழுக்கம் மாறி மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் மிருகங்கள் வைத்துக் கொள்வதை போல திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வதை சரி என்று உயர்ந்த கலாச்சாரத்துக்கு பெயர் போன இந்தியாவின் உச்ச நீதி மன்றமே தீர்ப்பு சொல்லி இருப்பது துரதிர்ஷ்ட வசமானது.

இனி நாய்கள் போன்ற பிராணிகள் தங்களைப் போலவே மனிதர்களும் திருமணம் என்ற ஒன்று இல்லாமல் சேருவதை பார்த்து சந்தோசம் அடையும்.இவ்வாறு திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வதை தடை செய்யும் சட்டம் நம் நாட்டில் இல்லை என்பது வேதனைக்குரியது. திருமணமின்றி உறவு கொள்ளும் செயல் சட்டப் படி சரியானதாக இருக்கலாம். நாகரீக சமுதாயத்தில் இழிவான செயல்.

சமூக அமப்பில் ஒழுக்கங்கெட்ட செயல். சட்டப்படி தண்டிக்கப் படுவோம் என்ற பயம் இல்லாததால் இளம் பெண்களும் ஆண்களும் திருமணத்துக்கு முன்பே உற்வு கொள்ளும் பழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

இதனால் சமூக ஒழுக்கம் கெடும். விபச்சாரம் பெருகி விடும்.எதிர்காலத்தில் திருமணம் என்ற ஒன்று இல்லாமல் போய் விடும். இதனால் பெண்களின் சமூக பாதுகாப்பு கேள்விகுறி ஆகி விடும். தங்கள் சொந்த சகோதரிகள் அல்லது மகள் திருமணம் இல்லாமலேயே உறவு கொள்ளுவதை இதை தவறு இல்லை என்று சொல்பவர்களின் மனம் ஏற்றுக் கொள்ளுமா?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இருப்பதால் குஷ்புவை முன் வரிசை இருக்கையில் அமர வைத்ததை போலவே ஒரு சாதாரண பெண்ணையும் அமர வைத்துக் கொள்வார்களா?

27 Mar 2010

தொலைந்த எஸ் எம் எஸ் - மீட்பது எப்படி


சில சமயம் நமக்கு வந்த குறுந்தகவலை(SMS) நாம் தெரியாமல் அழித்துவிடுவோம். அதை மறுபடியும் மீட்பது எப்படி என்பது பற்றிய பதிவு இது.

இது சிம்பியன் இயங்குதளம்(Symbian OS) பயன்படுத்தும் போன்களில் மட்டுமே சாத்தியம்.

முதலில் நமக்கு தேவை எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore)



இவற்றை இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore) நிறுவிய(Install) பின் C நீங்கள் அல்லது D டிரைவுக்கு(Drive) செல்ல வேண்டும்.

நீங்கள் எஸ் எம் எஸ்களை போன் மெமரியில்(Memory) சேமிப்பவராக இருந்தால் C டிரைவ், இல்லையெனில் D டிரைவ்.

டிரைவ்வில் நுழைந்த பின் சிஸ்டம்(System) போல்டருக்குள் சென்று பார்த்தால் மெயில்(mail) என்ற போல்டர் இருக்கும்.

அதனுள் 0010001_s,00100011_ s என்று பல கோப்புகள் இருக்கும்.

இவை எல்லாம் நீங்கள் அழித்த குறுந்தகவல்கள்(SMSes).

இவற்றை டெக்ஸ்ட் வியுவர்(Text Viewer) உதவியுடன் பார்க்கலாம்.

டிஸ்கி:என்னதான் இதுக்கு நமக்கு உதவியாக இருந்தாலும் சிலர் இதனை தவறாக பயன்படுத்தலாம்.அதனால் உங்கள் அலைபேசிகளை நீங்கள் விற்கும் பொழுது பார்மட்(Format) செய்து விடுங்கள்.


20 Mar 2010

கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான்.

அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?

கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்

2. ஒத்துழைப்பு

3. மனித நேயம்

4. பொழுதுபோக்கு

5. ரசனை

6. ஆரோக்கியம்

7. மனப்பக்குவம்

8. சேமிப்பு

9. கூட்டு முயற்சி

10. குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக் கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.

2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.

3. எப்போதும் சிரித்த முகம்.

4. நேரம் பாராது உபசரித்தல்.

5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

8. அதிகாரம் பணணக் கூடாது.

9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.

10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

11. கணவனை சந்தேகப்படக் கூடாது.

12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.

13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.

21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.

26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.

33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும்.

'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.

பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்.

பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.

2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.

3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.

4. விரும்பியதைப் பெற இயலாமை.

5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.

7. உலலாசப் பயணம் போக இயாலாமை.

8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

9. விருந்தினர் குறைவு.

10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.

12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.

13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.

14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

உங்கள் பங்கு என்ன?

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.

1. அன்பாகப் பேசுவது

2. பிறர் மீது அக்கறை காட்டுவது.

3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.

4. குறை கூறாமல் இருப்பது.

5. சொன்னதைச் செய்து கொடுப்பது.

6. இன்முகத்துடன் இருப்பது.

7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.

8. பிறரை நம்புவது.

9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.

10. பணிவு

11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.

12. பிறர் வேலைகளில் உதவுவது.

13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.

14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.

15. சுறுசுறுப்பு

16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.

17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.

18. நகைச்சுவையாகப் பேசுவது.

19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.

20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.

21. நேரம் தவறாமை.

22. தற்பெருமை பேசாமல் இருப்பது.

23. தெளிவாகப் பேசுவது.

24. நேர்மையாய் இருப்பது.

25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

எதற்கும் யார் பொறுப்பு?

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா?

பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை?

நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள ...

பத்து கட்டளைகள்

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

"வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம். "

10 Mar 2010

2020ல் இந்தியா வல்லரசு !"


இந்த அம்மனிகள பார்த்தா அதுக்கு முன்னாடியே ஆகிடும் போல.... பாருங்க நீங்களும், இந்த அம்மனிகள எவ்வளவு ஸ்டைலா அனுபவிக்கிறாங்க வாழ்கைய.....


இந்த புள்ள என்னத்தங்க பார்த்துட்டு இருக்கு...

பாருங்க அவரு எவ்வளவு சாதரணமா நிக்கிறாரு, இந்த புள்ளைய பாருங்க எவ்வளவு ஸ்டைலா நிக்குதுன்னு...

ரஜினிகூட இந்த மாதிரி விட்டு பார்த்தது இல்லைங்க


இந்த ஸ்டில்ல அஜித் பார்த்திருந்தா பில்லா படத்துல இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருப்பாரு..


பார்ப்பதற்கு குத்து விளக்கு மாதிரி இருக்குது..!

ஹாலிவுட் நடிகை மாதிரி ...........


இது எல்லாத்தையும் மிஞ்சிருச்சு...




4 Mar 2010

ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்

ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்

ஆவி இருப்பதாக நம்பினால் அது மனிதனுக்குள் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை வளரும் ஆவி புகுந்த மனிதனை குணப்படுத்த ஒரு சக்தி வேண்டும் அதற்காக ஏர்வாடி தர்ஹா உங்கள் நினைவுக்கு வரும்!

ஏர்வாடி தர்காஹ்வில் உள்ள சமாதிக்கு சக்தி இருப்பதாக நம்ப வேண்டிவரும்! தர்காஹ் நம்பிக்கை வளர்ந்தால் கத்தம் ஃபாத்திஹா, சந்தனகூடு மற்றும் சமாதி கும்பிடு போட வேண்டிய நிலை வளரும்!
இறுதியாக அல்லாஹ்வுக்கு இணையாக அவ்லியாக்களை வணங்கி வழிதவறி ஷிர்க்கில் வீழ்ந்து விடுவீர்கள்!

இயற்கை மரணமும் – மூட நம்பிக்கையும்

உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஆவி கொள்கையில் ஒருமித்த கருத்தை முன்மொழிகின்றன அதாவது ஒருவன் வாழக்கூடிய வயதை முழுமையாக வாழந்து இயற்கையாக மரணித்துவிட்டால் அவனுடைய சரீரம் ஆத்மாவை வெளியேற்றுகிறதாம்.

இவ்வாறு வெளியே வரும் ஆத்மாவை நேரடியாக சுவர்க்கலோகம் சென்றுவிடுமாம்! அன்றுமுதல் அவன் சுவர்க்க லோக பதவியை அடைந்துவிடுகிறானாம்! நிம்மதியாக வாழ்கிறானாம் மீண்டும் மறுபிறவி எடுத்து வருவானாம்!

தற்கொலையும் – மூட நம்பிக்கையும்

ஒருவன் விபத்தின் மூலமாகவோ அல்லது விஷம் அருந்தியோ, தூக்கு மாட்டியோ அல்லது இன்ன பிற வழிகளின் மூலமாகவோ தற்கொலை செய்து மரணமடைந்துவிட்டால் அவனது சரீரம் ஆத்மாவை வெளியேற்றிவிடுகிறதாம்.

ஆனால் அந்த ஆத்மா மரணம் விதியாக்கப்படுவதற்கு முன் வெளியேறிவிடுவதால் சுவர்ககலோகத்திற்குள் பிரவேசிக்காதாம்! அவன் வாழக்கூடிய வாழக்கையின் எஞ்சிய காலம் முழுவதும் இந்த உலகிலேயே சரிரம் இல்லாமல் வாழ வேண்டுமாம் இதற்கு பெயர்தான் ஆவியாம்!

ஆவி எப்படி இருக்கும்? – இதோ சில குருட்டு நம்பிக்கைகள்

ஆவியின் உடல் முழுவதும் வெண்மை நிற போர்வை போர்த்தியது போன்று இருக்குமாம்!

ஆவிக்கு இரண்டு கண்கள் இருக்குமாம்!

நீண்ட மூக்கும், நாயைப் போன்ற நாக்கும் இருக்குமாம்!

தலையில் கருமை நிற மயிர் முளைத் திருக்குமாம்!

இந்த மயிர் பின்னங்கால்கள் வரை நீண்டு இருக்குமாம்!

கைவிரல்கள் அனைத்திலும் நகங்கள் குறைந்தது 4 இஞ்சுக்கு வளர்ந்திருக்குமாம்!

ஆவிக்கு கால் பாதங்கள் இருக்காதாம்

ஆவி காற்றில் மிதந்தபடி அங்கும் இங்கும் அலையுமாம்.

ஆவிக்கு கடுமையான பசி ஏற்படுமாம் அப்படிப்பட்ட நேரத்தில் தனக்குப் பிடித்தமானவருடைய உடலுக்குள்ளும் நுழைந்துவிடுமாம் பசி தீர பிரியாணி, முட்டை, சாராயம் மற்றும் கோழிக்கறியை விரும்பி சாப்பிடுமாம்

மந்திரவாதிக்கு மட்டும்தான் ஆவி கட்டுப்படுமாம்!

ஆவி எப்போதும் அரச மரம் அல்லது வேப்ப மரத்தில்தான் அதிகம் தங்குமாம்!

ஆவி யாருக்கு பிடிக்கிறது!

சமுதாயத்தில் வசதியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் பேய், பிசாசு பிடிப்பதில்லை மாறாக ஏழைகளுக்குத்தான் இந்த பேய் பிசாசு எல்லாம்! அதிலும் ஏழைகளில் வாழ்க்கையை எதிர்த்துப் போராட மன வலிமையற்றவர்களுக்குத்தான் பெரும்பாலும் பேய் பிசாசு பிடிக்கிறது!

இதற்கான காரணம் என்ன?

அப்பாவி மக்களின் அறியாமையும் வேதனையும் குடும்ப வருமானம் குறைந்து வியாபார இழப்புகள் அதிகமாக இருக்கும் போது வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அதை எண்ணி வருந்துபவருக்கு பைத்தியம் பிடிக்கலாம்!

இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க கூட குடும்பத்தாருக்கு வசதிகள் இருக்காது மேலும் இப்படிப்பட்ட மன நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கு அலட்சியம் பார்க்கிறார்கள் எனவேதான் வசதியற்றவர்கள் மன நோய் என்பதை அறிந்தும் சமுதாயத்தின் முன் கேவலப்படக்கூடாதே என்று பேய் பிசாசு என்று கூறி அனுதாபத்தை தேடுகிறார்கள்.

சுயநலவாதிகளின் ஆவி நாடகங்கள்

வாங்கிய கடனை திருப்பி செலுத்த வசதியிருக்கும் ஆனால் கடனை திருப்ப மனம் இருக்காது, இப்படிப்பட்ட நாடகதாரிகள் கடன்தாரரிடம் அடிக்கடி சாக்கு போக்குகளை கூறுவார்கள் இறுதியில் கடன்காரன் நெருக்கடி கொடுத்தால் உடனே ஆவியாட்டம் போடுவார்கள் கடன்காரனும் மிரண்டுவிடுவான்! கடன்தாரர் பரிதாபப்பட்டு சற்று அடங்கி விடுவார்!

திருமணம் ஆகாத நிலையில் வாழும் ஒருசிலர் திருமணத்திற்காக நாடகம் ஆடுவார்கள்! குறிப்பாக காதலர்கள் ஆடும் ஆவி ஆட்டத்திற்கு அளவில்லை! தனக்கு மணமகன் பிடிக்கவில்லை என்று கூற ஆவியாட்டம் போட்டு பெற்றோரை ஏமாற்றலாம்!

வேலைக்கு செல்ல உடல் வலிமை இருந்தும் குனிந்து வேலை செய்ய விரும்பாத ஒருசிலர் ஜாலியாக ஊர் சுற்ற நாடகம் ஆடுவார்கள்!

பேய் பிசாசு மூலம் வசூல் வேட்டைகள்

ஒருசில தெருக்களில் கோவில் இருக்காது உடனே அங்கு அம்மன் வந்துவிட்டதாக நாடகமாடி மக்களிடம் கோவில் கட்ட நாடகமாடுவார்கள்! பஜனை, ஆராதணை மற்றும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு

ஒரு சில பகுதிகளில் தர்கா இருக்காது உடனே ஏர்வாடி இப்ராஹீம் ஷா அவ்லியா கனவில் வந்துவிட்டார் என்று ஆவியாட்டம் போட்டு இங்கே ஒரு தர்காஹ் கட்டி சந்தன ஊர்வளம் எடுக்க ஆணையிடுவார்கள்!

இறுதியாக ஒரு புறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்டி அதற்குள் செங்கல் வைத்துவிட்டு அதை அவ்லியாவின் சமாதி என்று ஃபாத்திஹா ஓதுவதும் உண்டியல் வசூல் வேட்டையில் இறங்குவதும் உண்டு! (இது சேலம் பகுதியின் உண்மைச் சம்பவம்)

குறிப்பிட்ட நசாராக்களின் தேவாலயங்களில் ஆவிகளுக்கு சிறப்பு பிராத்தனையும் சாட்டை அடியும் கொடுக்கப் படுகிறது!

பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலத்தை அரசாங்கம் இடித்து சாலை அமைக்க முற்பட்டால் அதை தடுப்பதற்காக அவ்லியா ஆவி மற்றும் அம்மன் ஆவிகள் என்று ஏராளமான ஆட்டங்கள் தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறுகின்றன.

வரலாற்று ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?

ஹிட்லர் எத்தனையோ இலட்சம் பேரை கொன்று குவித்தான் ஒருவருடைய ஆவியும் அவனை பிடிக்க வில்லை ஏன்?

1945-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான் இதுநாள் வரை அவருடைய ஆவி யாருக்கும் பிடிக்கவில்லை ஏன்? தற்கொலை செய்துக்கொண்ட ஹிட்லருக்கு பசி எடுக்காதா?

2 வது உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பான் மீது பறந்து ஹிரோசிமா? நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசின. ஹிரோசிமா நகரில் 1 இலட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் பலியானார்கள். இந்த 2,14,000-ம் ஆவிகளில் குறைந்தபட்சம் 1 இலட்சம் பேருக்காவது பிடித்திருக்க வேண்டும் ஏன் பிடிக்கவில்லை?

ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி போன்றோர் கொல்லப்பட்டனர் அவர்களின் ஆவி யாருக்கும் பிடிக்கவில்லையே ஏன்?

திறமைவாய்ந்த ஆவிகள் ஏன் பிடிப்பதில்லை?

அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவி

சட்டம் படித்த வக்கீல் மற்றும் நீதிபதியின் ஆவி

விமான பைலட் ஆவி

மக்களுக்கு வக்கீலுடைய ஆவி பிடிப்பதில்லை அதே போன்று நீதிபதி மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவருடைய ஆவிகள் பிடிப்பதில்லை ஏன்?

சிந்தித்துப்பாருங்கள் இப்படிப்பட்ட நிபுனர்களின் ஆவி பிடித்ததாக நாடகமாடினால் மருத்துவ உடல் கூறுகள் பற்றி பேச வேண்டிவரும், சட்டத்தின் சரத்துக்கள் பற்றி பேச வேண்டிவரும், விமானம் ஓட்டும் டெக்னாலஜி பற்றி பேச வேண்டிவரும் எனவேதான் படிப்பறிவற்ற ஆவிகளை தேர்ந்தெடுத்து உடலில் ஆவி புகுந்துவிட்டது என்று தெளிவாக நாடகம் ஆடுகிறார்கள்!

இவர்களுக்கு ஏன் பேய், பிசாசு பிடிப்பதில்லை?

நாள்தோறும் சுடுகாட்டில் பிணங்களை எறிக்கும் வெட்டியானுக்கு என்றைக்காவது ஆவி பிடிக்கிறதா? இந்த மனிதன் அங்கே தானே வாழ்கிறான்!

கப்ருஸ்தான்களில் வீடுகட்டி வாழும் முஸ்லிம் ஏழைகளுக்கு என்றைக்காவது ஆவி பிடிக்கிறதா?

தமிழனுக்கு சிங்கள ஆவிதான் அதிகம் பிடிக்கிறது ஏன் ரஷ்ய ஆவி, ஜப்பான் ஆவி, கொரிய ஆவி பிடிப்பதில்லை!

தமிழனுக்கு மலையாள ஆவி பிடிக்கிறது உடனே அரபு வசனங்களை தெளிவாக ஓதுகிறானாம் ஏன் மராட்டிய ஆவி பிடிப்பதில்லை பகவத்கீதையை கஷ்டமான சமஸ்கிருத மொழியில் பேச வேண்டிவருமே என்ற பயமா?

1 முதல் 10 வயது பச்சிளங்குழந்தைகளுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை அதே சமயம் 60-70 வயதை தாண்டிய கிழடுகளுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை!

வர்த்தக ரீதியில் சிறந்தவர்களாக கருதப்படும் ரத்தன் டாடா, அம்பானி சகோதரர்கள், பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

அரசியல்வாதிகள், தலைசிறந்த ஆசிரியர்கள், கணித மேதைகள், விஞ்ஞானிகள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

கொலை நடந்த ஸ்பாட்டுக்கு இரவு பகலாக காவல் இருக்கும் காவலர்களுக்கு ஏன் அந்த ஆவி பிடிப்பதில்லை? தற்கொலை செய்துக்கொண்டவர்களை போஸ்ட் மார்டம் செய்யும் ஊழியர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

ஜனாஸாக்களை குழிப்பாட்டுபவர்களுக்கு ஏன் ஆவி பிடிப்பதில்லை?

ஃபிர்அவ்ன் மரணித்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் அவனுடைய சடலத்தை மியுசியத்தில் வைத்துள் ளார்களே அந்த சடலத்துக்குள் ஏன் எந்த ஆவியும் நுழையவில்லை? குறைந்தபட்சம் ஃபிர்அவ்னுடைய ஆவியாவது நுழையலாமே ஏன் முடியவில்லை?

ஆவியை பார்த்தேன் பயப்படுகிறேன்???

மனிதன் பயந்த சுபாவமுள்ளவன் எளிதில் பயப்படுவான். நம்மில் பலர் ஆவியை பார்த்ததாக கூறுவார்கள் பெரும்பாலும் இவ்வாறு கூறுபவர்கள் ஆவியை இருட்டில் பார்த்ததாகத்தான் சொல்வார்கள் காரணம் இருட்டில்தான் ஆவி அங்கும் இங்கும் அலையுமாம்!

இரவு நேரத்தில் ஆவி வந்து பயமுறுத்துமாம், அடித்துவிடுமாம் அப்படியானல் ஏர்வாடி தர்காஹ்வில் ஆயிரக்கணக்கான ஆவிகள் பகலில் அலைகிறதே அந்த ஆவிகளுக்கு உடலும் இலவசமாக கிடைத்துள்ளதே அப்போது அந்த ஆவிகள் உங்களை பயமுறுத்துகிறதா? அடிக்கிறதா? மிதிக்கிறதா? உண்மையில் ஆவி பயம் என்பது முட்டாள்தனம்!

ஆவி, காத்து கருப்பு அடிக்குமா?

இரவு நேரத்தில் மரங்கள் ஆக்ஸிஜனை வெளியேற்றி கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன அந்த நேரத்தில் நீங்கள் அங்கே சென்றால் அந்த விசக்காற்றின் தாக்கத்தால் மூர்ச்சையாகிவிடுவீர்கள், மயக்கம் வரும் இது அறிவியல் உண்மை ஆனால் இதை உணராத மக்கள் இரவு நேரத்தில் மரங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று மயங்கி விழுந்துவிட்டால் ஆவி அடித்துவிட்டது, காத்து கருப்பு ஒண்டிக்கொண்டது என்று கூறுகிறார்கள்.

இரவில் மரங்களினால் வெளிப்படும் கார்பன்டை ஆக்ஸைடின் தாக்கம் அதிகாக இருந்தால் அதை நாம் நுகர்ந்துக் கொண்டால் நம் மூளை தாக்குப்பிடிக்குமா? மூளை குழம்பிப் போகாதா? அந்த நேரத்தில் நம்மை அறியாமல் உளரல்கள் வருவது இயல்புதானே இதை ஏன் சிந்திப்பதில்லை! இரவு நேரத்தில் மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் அதே சமயம் மழைக்காலங்களில் பகலில் கூட மரங்களின் பக்கம் ஒதுங்காதீர்கள் தலையில் இடி கூட விழுந்துவிடலாம்!

ஆவி பயம் உருவாக்கப்படுகிறது!

பேய் சினிமா படம் பார்த்திருப்பீர்கள் எந்த படத்திலாவது சவுண்டு எஃபக்ட் இல்லாத பேய் சினிமா வருகிறதா? படத்தில் ஆவி வரும்பொதெல்லாதம் இதயத்துடிப்பை அதிகரிக்கும் திக் திக் சத்தம்தான் வரும், கதவு இழுப்பது போன்ற ஓசை சப்தம் வரும், சன்னல் படபட வென்று அடிப்பது போன்ற சத்தம் வரும் இதெல்லாம் மனிதனை மிரளவைக்கும் மீடியாக்களின் சதித்திட்டம்!

இதே ஆவி சினிமா படத்தை சப்தமே இல்லாமல் ஊமை படமாக பாருங்கள் எந்த பயமும் வராது காரணம் மனிதனை சினிமா ஊடகம் தனக்குள் மயக்குகிறது! குழந்தைகள் இந்த சினிமாக்களை பார்த்துவிட்டால் இரவு முழுவதும் நடுங்கும் எலி ஓடினால் கூட ஆவி என்று கூறும்! இது மீடியாக்களின் துரோகமில்லையா?

அமெரிக்கர்கள் நிஜமான ஆவியை கேமராவில் பிடித்ததாக கூறுவார்கள் இதோ கேமிராவில் ஆவி படம் எவ்வாறு வருகிறது? சுய பரிசோதனை செய்து பார்ப்போமா!

இருட்டில் ஒரு கேமிராவை எடுத்துக்கொள்ளுங்கள் ஃபிளாஷ் லைட் போட்டதும் கேமிராவை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டே படம் எடுங்கள் அப்போது இடையில் ஒரு டார்ச் லைட் வெளிச்சம் காட்டுங்கள் கேமிராவின் அசைவும், பிளாஷ் லைட் மற்றும் டார்ச் லைட் வெளிச்சமும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் பிறகு அந்த வெளிச்சம் பிளி்ம் ரோலில் பதிவாகிவிடும் போட்டோ பிரிண்ட்-ல் ஆவி போன்று தோற்றம் இருக்கும்! இது ஒரு சில அமெரிக்கர்களின் முட்டாள்தனம் என்று கூறலாமே!


திடீர் மரண புள்ளிவிபரங்களும் ஆவிகளும்

தமிழகத்தில் ஆண்டுதோறும் சாலை விபத்துக்கள் விபரம் பலியானவர்கள்
ஒரு ஆண்டில் சராசரியாக 51,000 விபத்துக்களால் உயிரிழப்பு 10,000
ஒரு நாளைக்கு சாலை விபத்துகள் (Average) 140
ஒரு நாளைக்கு விபத்துகளால உயிரிழப்பு (Average) 27

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் அதாவது 2009ல் சாலை விபத்துக்கள் விபரம்

பலியானவர்கள் ஒரு ஆண்டில் சராசரியாக 60,409
விபத்துக்களால் உயிரிழப்பு 12,784
ஒரு நாளைக்கு சாலை விபத்துகள் (Average) 165
ஒரு நாளைக்கு விபத்துகளால உயிரிழப்பு (Average) 35

சென்னையில் இந்த ஆண்டு மட்டும் சாலை விபத்துக்கள் விபரம் பலியானவர்கள்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஈகா தியேட்டர் முதல் அண்ணா ஆர்ச் விபத்துகளால உயிரிழப்பு 17 கிழக்கு கடற்கரை சாலையில், பாலவாக்கம் முதல் வெட்டுவாங்கேணி வரை நடந்த விபத்தில் 13 ஐ.டி., காரிடர் எனப்படும் ராஜிவ்காந்தி சாலையில் நடந்த விபத்தில் 11

சென்னையின் 23 சாலைகளில் மட்டும் 174 அதிக உயிரிழப்பு பதிவான காவல் நிலைய பகுதி சென்னையில் மெரீனா கடற்கரை சாலை அமைந்துள்ள அண்ணா சதுக்கம் மற்றும் திருமங்கலம் போலீஸ் எல்லையில் அதிக அளவில் விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

நன்றி http://www.sankamam.com

தற்கொலைகள் விபரம் மரணிப்பவர்கள்

2007 ஆண்டு இந்தியாவில் மட்டும் தற்கொலைகள் 1,22,637

2007 ஆண்டு இந்தியாவில் பெண்கள் தற்கொலை 43,342

மஹாராஷ்டிராவில் மட்டும் கடன் தொல்லையால் 15,184

ஆந்திராவில் மட்டும் கடன் குடும்ப பிரச்சினையால் 14,882

தற்கொலையில் இளைஞர்கள் பங்கு (3:1) 3க்கு – 1

தற்கொலையில் குடும்ப பெண்கள் பங்கு (5:1) 5க்கு – 1

ஒரு மணி நேரத்துக்கு தற்கொலை எண்ணிக்கை 14 பேர் (Average)
ஆதாரம் http://www.thinaboomi.com


முடிவுரை

ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஆயிரம் பேர் விபத்து மற்றும் தற்கொலைகளின் மூலமாக மரணிக்கிறார்கள் இவர்கள் ஆவியாக உருவெடுத்து வருவார்களானால் மாதம் 1000 பேருக்கு ஆவி பிடிக்க வேண்டும்! ஆனால் ஏன் ஒரு சிலருக்கு பிடிக்கிறது!

ஒரு ஆவி பல உடல்களில் புகலாம் எனில் இந்த 1000 ஆவிக்கள் பல இலட்சம் உடல்களை அபகரிக்கலாமே வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு சம்பவமாவது நடந்துள்ளதா? ஆவி என்பது இல்லை? ஆவி பிடிக்கிறது என்று கூறுபவர்கள் முதலில் நல்ல டாக்டரிடம் சென்று மனநல வைத்தியம் செய்துக் கொள்ள வேண்டும்!

ஆவி எனும் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு எச்சரிக்கையாக இருக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக அல்ஹம்துலில்லாஹ்

என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டுசெல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன்வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்க பலமாக ஓர் அதிகாரத்தைவழங்குவாயாக!" ((திருக் குர்ஆன் 17: 80)