29 Jan 2008

துபாயில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க உதவும் இணையத்தளம்

துபாயில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்குமிட வசதி குறைபாடு, சம்பளம் தராமை உள்ளிட்ட தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கீழ்க்கண்ட இணையத்தளம் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

www.labourcomplaints.ae

புகார் தெரிவிக்க தொலைபேசி எண் : 800 9119

மேலும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

20 ஆண்டுகளில் எவ்வளவு மாற்றங்கள்

20 ஆண்டுகளில் எவ்வளவு மாற்றங்கள்

* புரோகிராம் என்பது ஒரு டெலிவிஷன் ஷோ. இன்று கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு கட்டளைத் தொகுப்பு

* அப்ளிகேஷன் என்பது வேலை தேடுவதற்கான விண்ணப்பம். இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.

* விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.

* கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட்.

* கீ போர்ட் என்பது அன்று பியானோ. இன்று நம் விரல்களுடன் பாட்டுப் பாடும் ஒரு சாதனம்.

* மெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம்.

* சி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப்பட்ட பிறகு வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.

* பொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம்.

* அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள். இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம்.

* ஹார்ட் டிரைவ் என்றால் முன்பு வெகு தூரம் களைப்பு தரும் பிரயாணம. இன்று அனைவரும் பேனா பென்சில் இல்லாமலே எழுதும் ஒரு கம்ப்யூட்டர் பலகை.

* லாக் ஆன் என்றால் அன்று எரியும் நெருப்பிற்கு இடும் விறகு. இன்று தங்கள் பணி தொடங்கிட அனைவரும் கம்ப்யூட்டரில் செய்திடும் முதல் செயலை இப்படித்தான் சொல்கிறோம்.

* எலி வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட். இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டர் குழந்தைக்கான படுக்கை.

* கத்தரிக்கோல் வைத்துத் தான் அன்று கட் செய்தோம். இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம்.

* பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட். இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம்.

* எட்டுக்கால் பூச்சியின் மாளிகை தான் அன்று வெப். இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப்.

* காய்ச்சல் வந்தால் காரணம் வைரஸ். இன்று அடுத்தவனைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ்.

VANJOOR

20 Jan 2008

நாம் யார் ?

வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் !

வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம்கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்தநடை பிணங்கள் !

சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் !

நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் !

தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள் !

கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள் !

ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள் !

நலம் நலமறிய ஆவல் என்றால் பணம் பணமறிய ஆவல் என கேட்கும் ஏ . டி . எம் . மெஷின்கள் !

பகட்டான வாழ்க்கை வாழ பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள் !

ஏ . சி . காற்றில் இருந்துக் கொண்டே மனைவியின் மூச்சுக்காற்றை முற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலே வாரிசுகளை வாரியணைத்து கொஞ்சமுடியாத கல் நெஞ்சக்காரர்கள் !

தனிமையிலே உறங்கும் முன் தன்னையறியாமலே தாரை தாரையாக வழிந்தோடும் கண்ணீர் துளிகள் !

அபஷி என்ற அரபி வார்த்தைக்கு அனுபவத்தின் மூலம் அர்த்தமானவர்கள் !உழைப்பு என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்கள்!

முடியும் வரைஉழைத்து விட்டுமுடிந்தவுடன் ஊர் செல்லும் நோயாளிகள் !

கொளுத்தும் வெயிலிலும் குத்தும் குளிரிலும்பறக்கும் தூசிகளுக்கும் இடையில் பழகிப்போன ஜந்துகள் !

பெற்ற தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும் கட்டிய மனைவிக்கும் பெற்றெடுத்த குழந்தைக்கும் உற்ற குடும்பத்திற்கும் இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !
from ALAUDEEN

16 Jan 2008

காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் ?

காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்.

* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்.

* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.

* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்.

* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்.

* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.

* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.

* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

* பல மணி நேர தொலைபேசி உரையாடல்.
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.

* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

இன்னும் ஏராளம் ஏராளம்...

thanks : webdunia

13 Jan 2008

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
இலவசப் பொறியியல் கல்வியினை தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரி வழங்குகிறது.
ஜுன் 2008 ஆம் ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரியும், அகில இந்திய இஸ்லாமியக் கல்வி நிறுவன குழுமமும் இணைந்து பிளஸ் டூ படிக்கும் ஏழை மாணவர்களின் உயர் கல்வி படிப்பினை கருத்தில் கொண்டு 10 மாணவர்களுக்கு இலவச சேர்க்கை வழங்குகிறது எனபதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களின் உயர்கல்விக்காக ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களிலும் நேரடித் தகுதித் தேர்வு நடத்தியும், மாணவர்களுக்கு அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த இலவச சேர்க்கையை வழங்கி வருகிறோம்.
இவ்வாண்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் தகுதித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அதற்குண்டான படிவத்தினை அந்தந்த மாவட்டப் பள்ளிகளிலும் பள்ளிவாசல்களிலும் நாங்கள் நியமித்துள்ள முக்கிய நபர்களிடமும் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் நேரடியாகவும் கொடுக்கலாம். அல்லது எங்கள் கல்லூரி முகவரிக்கும் அனுப்பலாம்.
மேலும் விபரங்ளுக்கும் விதிமுறைகளுக்கும் உடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

தானிஷ் அஹ்மது பொறியியல் கல்லூரி
நெ 166 முடிச்சூர் ரோடு
( பதிவு அலுவலகம் எதிரில் )
மேற்கு தாம்பரம்
சென்னை 600 045
தொலைபேசி : 9382377788/044 32918452 / 9380586462


நன்றி : சமரசம் மாதமிருமுறை ஜனவரி 2008

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவி தொகை

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த 2,876 மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.
சென்னை, ஜன.13-
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த 2,876 மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை
சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், சிறுபான்மை வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் (2007-08) இருந்து செயல்படுத்தப்படும்.
இதன்படி, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கியர், பவுத்தர் ஆகிய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 2,876 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதில் முஸ்லீம்களில் 1,372 பேருக்கும், கிறிஸ்தவர்களில் 1,496 பேருக்கும், சீக்கியர்களில் 4 பேருக்கும், புத்த மதத்தில் 4 பேருக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும். 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.) வரை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

11-ம் வகுப்பு முதல் பிஎச்.டி. வரை
11 மற்றும் 12-ம் வகுப்பு படிப்போருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வரையும், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு படித்தால் ரூ.3 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும். இது தவிர பராமரிப்பு உதவித்தொகையாக 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.140-ம், பட்டப் படிப்பு படிப்போருக்கு ரூ.185-ம் எம்.பில்., மற்றும் பி.எச்டி. படித்தால் ரூ.330-ம் தனியே பெறலாம். விடுதியில் தங்கி படித்தால் இந்த உதவித்தொகை சற்று கூடுதலாக கிடைக்கும்.
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் 2 பேர் வரை உதவித்தொகை பெறலாம். இதற்கான விண்ணப்ப படிவ மாதிரி மறறும் கூடுதல் விவரங்கள்
http://www.minority affairs.gov. in/
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
31-ந் தேதி கடைசி நாள்
அந்த விண்ணப்பத்தை கம்ப்ïட்டரில் டவுண்லோடு செய்து விண்ணப்பமாக பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்வி நிறுவன முதல்வரிடம் தேவையான ஆவணங்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை கல்வி நிறுவன பொறுப்பாளர்கள் சரிபார்த்து சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபானëமையினர் நல அதிகாரிக்கு பிப்ரவரி மாதம் 10-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 2007-08-ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சிறு குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள எளிய நடைமுறை - பத்துக் கட்டளைகள்

1) தயவுசெய்து சிறுகுழந்தைகளுக்கு ஏ, பி,சி,டி..என எழுத்துக்களை முதலில் சொல்லிக்கொடுக்காதீர்கள்.
2) அதேபோல இளம்சிறார்களை நோட்டு, பேனா, பென்சில், புத்தகம் முதலியவற்றின் பக்கமே அண்டவிடாதீர்கள்.
3) எழுத்துக்களை கற்றுத் தருவதை தடைசெய்யவேண்டும்.
4) நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அம்மா, அப்பா, அண்டை வீட்டாரிடம் முதலில் தமிழ் பேசத்தானே கற்றுக்கொண்டோம். எழுதப்படிக்க பிறகுதானே கற்றுக்கொண்டோம்.
5) சிறுவர்களுக்கு அம்மா என்றால் மம்மி யில் ஆரம்பித்து - அவர்களிடம் சின்னச்சின்ன வார்த்தைகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையாகப் பேசமட்டும் கற்றுக்கொடுக்கவும்.
6) சிறார்கள் எப்போதும் இது என்ன - இந்தப் பொருளை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - என்று நச்சரித்தார்கள் - என்றால் அது குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தே தீரவேண்டும். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து உங்களுக்குத் தெரியாததை அவர்கள் விடாப்பிடியாகக் கேட்டார்கள் என்றாலும் அதற்கான ஆங்கிலப் பதத்தை அர்த்தத்தை நீங்கள் அகராதியில் - இணையத்தில் திரட்டி அவர்களுக்குப் புரியும்படி எளிமையாகச் சொல்லிக்கொடுங்கள்.
7) இளம்குழந்தைகள் அதுஎன்ன - அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கும் அழகே தனிதான். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது நமது கடமை.
8) நாம் எப்படி எழுத்துக்களை அறிவதற்கு முன்னரே தமிழில் பேசக் கற்றுக்கொண்டோமோ - அதே மாதிரி நமது குழந்தைகளை ஆங்கில எழுத்துக்களை சொல்லித் தருவதற்கு முன்னால் ஆங்கிலத்தைப் பேசக் கற்றுத்தந்தே ஆகவேண்டும்.
9) அவர்கள் சில நாட்களுக்குப் பிறகு - சிறிய சிறிய வாக்கியங்களாகப் பேச ஆரம்பிப்பார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இதுவரைக்கும் கூட நாம் எழுத்துக்களை வாசிக்கக் கற்றுக்கொடுக்கக் கூடாது.
10) ஏராளமான வார்த்தைகளையும், புதுப்புது வாக்கியங்களையும் பேச ஆரம்பித்தபிறகு மட்டுமே ஆங்கிலத்தை எழுதப்படிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். நாமும் முதலில் தமிழில் பேசிவிட்டு அதுவும் நன்றாக அரட்டை அடிக்கும் அளவுக்குத் தமிழ் தெரிந்த பிறகுதானே எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டோம்.
ஆனால் இந்த சமுதாயத்தில் ஆங்கிலம் மட்டும் எழுத்திலிருந்து ஆரம்பித்து கடைசி வரையில் பேசத்தெரியாமல் எத்துணை மக்கள் மனப்புழுக்கத்துடன் வாழ்கிறார்கள்.

தங்கமும் தாளும்

புராதன மன்னர்கள் காலங்களில் பொற்காசுகள் (தங்க காசுகள்) மற்றும் வெள்ளி காசுகள் புழங்கி வந்தன என்பார்கள். இதுமாதிரியான பூமியின் அபூர்வ உலோகங்களில் இருந்து காசுகள் செய்ததால் அக்காசுகள் தானே தனக்கென ஒரு மதிப்பை தாங்கி உருக்காலைகளை விட்டு வெளிவந்தன. இன்றும் தங்கம் மற்றும் வெள்ளிகளின் மதிப்பு நீடித்திருக்கின்றது. கடவுள் மனிதனுக்கென அளித்த பணம் இது தானோ என்னவோ?. என்றைக்கு மனிதன் அச்சகத்தில் பணத்தை காகிதத்தில் இஷ்டத்திற்கும் அச்சடிக்க தொடங்கினானோ அன்றைக்கு வந்தது வினை. இன்று பொட்டி நிறைய பணத்துக்கு கூட ஒன்றும் வாங்க முடிவதில்லை.எங்கும் பணவீக்கம் அதாவது Inflation. பொருளாதார வீழ்வுகளிலிருந்து எழ அமெரிக்க ஐரோப்பிய சென்ட்ரல் பாங்குகள் பில்லியன் கணக்கில் டாலர்களையும் யூரோக்களையும் அச்சடிக்கின்றார்கள். ரொம்ப எளிதாய் European Central Bank pumps $500 bn into banking system-னு பேப்பர்களில் ஒரு வரி. அவ்ளோதான் செய்தி. விளைவுகள்? யாருக்கு தெரியும். நம்மூர் "இரண்டு ரூபாய்" தாளை விட "ஒரு ரூபாய்" காசுக்கு மதிப்பு அதிகம் தெரியுமோ? அதாவது இரண்டு ரூபாய் தாளின் மதிப்பு இரண்டு ரூபாய்தான். ஆனால் ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு ஏழு ரூபாயாம். எப்படி? அந்த ஒரு ரூபாய் காசு உலோகத்தை உருக்கி சவரபிளேடு செய்து விற்றால் அது மூலம் ஏழு ரூபாய் கைக்கு வரும். ஆனால் பேப்பர் பணம் வெறும் தாள் தான். இதுதான் உலகளாவிய அனைத்து காகித கரன்சிகளின் நிலையும் கூட. டாலர் மதிப்பு இறங்குவதும் தங்கம் மதிப்பு ஏறுவதும் காகித கரன்சிகளில் மக்கள் நம்பிக்கை இழப்பதையும் தங்கத்தின் மீது மக்கள் அபார நம்பிக்கை வைத்திருப்பதையும் காட்டுவதாக கூட இருக்கலாம். அல்லது ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு டன் கணக்கில் தங்கம் வாங்கி செயற்கையாக தட்டுப்பாட்டை வருவித்து அதன் விலையை வேண்டுமென்றே உயர்த்தி பின் டமாலென அத்தனையையும் வித்து லாபம் சம்பாதிக்க துடிக்கும் சில பெரும்புள்ளிகளின் சித்துவேலையாகவும் இருக்கலாம்.
thanks pkp

9 Jan 2008

கணித்தமிழுக்கு ஒரு கலக்கல் மென்பொருள்

தமிழ்ச்செயலிகள் என்ற அளவில் பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகள் தன்னளவில் நிறைவுள்ளதாகவும் இருக்கின்றன. ஆனால் எந்தச் செயலியும் இதுவரை செய்யாத சாதனையைகளைச் செய்து கொண்டு ஒரு புதிய மென்பொருள் வந்திருக்கிறது.
விண்டோஸ் இயங்குதளத்தில் எந்த மென்பொருளை பயன்படுத்தினாலும் யூனிகோடில் தமிழ் போன்ற மொழிகளுக்கான வெளிப்பாட்டுக்கு பிராந்திய மொழிகளை (Regional Language Support) எனேபிள் செய்ய வேண்டும். விண்டோஸ் சிடி மூலம் சில செட்டிங்குகள் செய்ய வேண்டி இருக்கிறது... இது தவிர ஆபீஸ் செயலியிலும் தமிழ் தெரிய சில பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதற்கும் சில மாற்றங்களை நாமாக செய்ய வேண்டி இருந்தது
இதற்கான தேவை இன்றி தானாகவே இந்திய மொழிகளை எனேபிள் செய்து தமிழை எழுதவும் வாசிக்கவும் வகை செய்கிறது இந்த மென்பொருள்... எழுதுகருவி!
நியூ ஹொரைசான் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள NHM Writer என்ற எழுதுகருவி தான் இந்த புதிய மென்பொருள்.
இதை நிறுவியதும் தமிழ்ரெடி! (தமிழ்ரெடி பிராஜக்டில் நண்பர்கள் இதையும் இணைத்துக் கொள்ளலாம்.)
பிற மென்பொருள்களைப் போல அல்லாமல் எகலப்பை போன்று எழுதுகருவியாகவே அனைத்துச் செயலிகளிலும் தமிழை எழுத வகை செய்கிறது....
யூனிகோடு மட்டுமல்லாமல் தமிழில் மேலும் பல எழுத்துருக்களையும் இந்த கருவி மூலம் எழுத முடியும். யூனிகோடு தவிர மேலும் முக்கியமான எட்டு எழுத்துருக்களில் எழுத இதில் வகை செய்யப் பட்டிருக்கிறது... கூடுதல் தேவைக்காக வேறு எந்த எழுத்துரு பயன்படுத்தவும் நாமாகவே XML வடிவத்தில் கோப்பை உருவாக்கி இணைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்99, அஞ்சல்(பொனடிக்), தமிழ் தட்டச்சு, பாமினி ஆகிய தட்டச்சு முறைகளில் யூனிகோடு தவிர மேலும் எட்டு எழுத்துருக்களை (Bamini, Diacritic, Shreelipi, Softview, Tab, Tam, TSCII, Vanavil and Unicode) தட்டச்சு செய்ய முடியும். இந்த வகையில் மொத்தம் 36 விதமாக (4 type layouts x 9 font encoding) இதில் தட்டச்சு செய்ய முடிகிறது.
Key Preview என்னும் வசதி மூலம் உயிர்மெய் எழுத்துக்களை எழுதுவதற்கு அடுத்து எந்த விசையை அழுத்த வேண்டும் என்பது சொல்லித் தருகிறது. பலருக்கும் இந்த வசதி மிகவும் அவசியமானது. விசைப்பலகை ஆன்ஸ்கிரீன் திரைவடிவமும் எழுத்துக்களை உணர்ந்து கொள்ள வசதியாக அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த மென்பொருளை நிறுவியதும் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்யும் படி அமைக்கப் பட்டிருக்கிறது... alt+1 தமிழ்99, alt+2 பொனடிக், alt+3 தட்டச்சு, alt+4 பாமினி.
பிற என்கோடிங்களை எளிதாக shortcut key அமைத்துக் கொள்ளலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, 2003 போன்ற பதிப்புகளில் செயல்படக் கூடியது.
சிறப்பாக வடிவமைக்கப் பட்ட ஆன்லைன் உதவிக்குறிப்பு இங்கே...
விரைவில் இதை தமிழிலும் தருவார்கள் என நம்புகிறேன்.
இத்தனை வசதிகளையும் வெறும் 850 kb அளவுக்குள்ளான சிறிய மென்பொருள் தருவது வியப்பான விஷயம்தான்.
இந்த மென்பொருள் இங்கே இலவசமாக பதிவிறக்க கிடைக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வேறு சில மென்பொருட்களுடன் இது சிடியாக கிடைக்கும் என்று தெரிகிறது.
நண்பர்கள் பத்ரி, நாகராஜன் என் வாழ்த்துக்களும் நன்றியும்.
http://www.nhm.in/software/
http://valai.blogspirit.com/archive/2007/12/31/writer.html

6 Jan 2008

பாலைவனப் ப‌ரிதாப‌ங்க‌ள் ?‍

சில‌ தினங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த‌
இளைஞரை சந்திக்க நேர்ந்தது. அவர் துபாயிலிருந்து திரும்பி
இருந்தார், (அரசின் கருணை மூலம்)-amnesty அம்னெஸ்டி மூலம்.
த‌ம்பியின் க‌தை கேட்டு ம‌ன‌தே க‌ன‌த்த‌து. என்ன‌ செய்வ‌து ஒரு ப‌க்க‌ம்
சாப்ட்வேர்(software) மூல‌ம் ந‌ம் இளைஞ‌ர்க‌ள் ப‌ண‌த்தில் மித‌ப்ப‌தும்
ஞாப‌கம் வ‌ந்த‌து. த‌ம்பி ப‌த்தாவ‌து வ‌ரை ப‌டித்துள்ளார்...வெளிநாட்டு மோக‌த்தினால் ம‌ட்டும் இல்லாம‌ல் த‌ன் குடும்ப‌ நிலையை மாற்ற‌வும் நினைத்து ஒரு பெரும் தொகையை ஏஜென்டு‍க்கு கொடுத்துவிட்டு விமான‌ம்
ஏறியுள்ளார். இற‌ங்கிய‌ பின்பு தான் தெரிந்த‌து, அது ஒட்ட‌க‌ கூடார‌ம் என்று. துபாய் ந‌க‌ரிலிருந்து வெகு தொலைவில் ஆள் அர‌வ‌ம் இன்றி இருந்த‌தாம்.
வேலை புல் தோட்ட‌த்தில் ,புல் அறுத்து ஒட்ட‌க‌த்துக்கு இடுவ‌து.
த‌ன் ஊரில், வீட்டில் உள்ள‌ மாட்டுக்கு கூட‌ ஒரு வேளை புல்
போடாத‌வ‌ன். புது வாழ்க்கை புல்லே ஆன‌து கொடுமையாய் இருந்த‌து.
ஏஜென்ட் ஏமாற்றி இருக்கிறான். பொறுத்து கொண்டு காசுக்காக‌ ப‌ணி
செய்த‌போது அர‌பி உரிமையாள‌ர் ச‌ம்ப‌ள‌மே கொடுக்காத‌ போது தான்
புரிந்த‌தாம், அர‌பி நேர்மையான‌ ஆள் அல்ல‌ என்று. மூன்று அல்ல‌து நான்கு மாதம் ச‌ம்ப‌ள‌மே இல்லையாம். பின்பு ஒரு மாத‌ம் ச‌ம்ப‌ள‌ம் கிடைத்த‌தாம். இப்ப‌டி ஒரு வ‌ருட‌ம் த‌ண்ட‌னையை க‌ழித்து, ஒரு நாள் சொல்லிக் கொள்ளாம‌ல் வெளியேறி துபாய் ந‌க‌ருக்கு சென்றிருக்கிறார்.
அங்கே வேறு ஒரு த‌மிழ் ந‌ண்ப‌ரின் உத‌வியுட‌ன் ஒரு கார் ஒர்க்ஷாப்‍‍‍-பில்
சேர்ந்திருக்கிறார். இது முறை த‌வ‌றிய (illegal) பணி தான் என்ன‌ செய்வ‌து... குடும்ப‌த்தை காப்பாற்ற‌ வேண்டும், முக்கிய‌மாக‌ வாங்கிய‌ க‌ட‌னுக்கு வட்டி க‌ட்டியாக‌ வேண்டும். வெளியே த‌லையே காட்டாம‌ல் இரு வ‌ருட‌ங்க‌ள் வேலை செய்திருக்கிறார், கிடைக்கும் ப‌ண‌த்தை தெரிந்த‌வ‌ர்க‌ள் மூல‌மாக‌ வீட்டுக்கும் அனுப்பி இருக்கிறார். இத‌னிடையே அரசு, விசிட் விசாவில் வ‌ந்து திரும்பாத‌வ‌ர்க‌ளுக்கும், வேறு வேலைக்கு த‌ப்பி ஓடிய‌வ‌ர்க‌ளுக்கும் க‌ருணை அடிப்ப‌டையில் த‌ங்க‌ள் நாடு திரும்ப‌லாம் என‌ அறிவித்த‌து. அந்த‌ந்த‌ நாட்டு தூத‌ர‌க‌ங்க‌ள் மூல‌மாக‌ திருப்பி அனுப்ப‌ ஏற்பாடு செய்த‌து. விமான‌ டிக்கெட் எடுக்க‌ வ‌ழியில்லாத‌வ‌ர்க‌ளுக்கு இந்திய‌ சேவை அமைப்புக‌ள் உத‌வி செய்த‌ன‌.
த‌ம்பி இதை அறிந்து இந்திய‌ தூத‌ர‌க‌த்தில் அடைக்க‌ல‌ம் ஆகியிருக்கிறார்.
அங்கு இருந்த‌ அதிகாரிக‌ள் இவ‌ர் க‌தையை கேட்டு உத‌வி செய்வ‌தாய் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கின்ற‌ன‌ர். புல் தோட்ட‌த்து முத‌லாளி அர‌பியிட‌ம் பாஸ்போர்ட் மாட்டிக்கொண்ட‌தால், சிர‌ம‌ப்ப‌ட்டு அர‌சின் ஆத‌ர‌வினால் த‌மிழ்நாடு வ‌ந்து சேர்ந்துள்ளார். கடைசியாக, இனி என்ன‌ செய்ய‌ப்போகிறீர்க‌ள் என‌க் கேட்டேன்
''த‌டைக்கால‌ம்(Ban period) முடிந்த‌வுட‌ன் ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து மீண்டும்
துபாய் செல்வேன்.''


ப‌திலைக் கேட்டு திடுக்கிடத் தான் முடிந்த‌து.
எழுதியவர்: முகு

3 Jan 2008

சிரிப்பு ஒரு மாமருந்து

சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுங்கள்.... நீங்கள் ஒருவரே அழுதுக்கொண்டிருப்பீர்கள்... ஸ்டீவன்சன்
சிரிப்பு ஆக்கபூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது. மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது. அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.
சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்.[சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தால்.... மன்னிக்கவும்.]சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும், நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர்.
நமது எண்ணங்களுக்கும் மன அலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ஆம் ஆண்டின் இவ் ஆராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது.
நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது. இதற்கு "CGRP" என்று பெயர். இதுதான் நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பயை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப 'CGRP' அதிகமாக உற்பத்தியாக உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.நாம் மனம் விட்டுச்சிரிக்கும் போது 'CGRP' அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை. உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்விட்டுச் சிரிப்பதே என்று நியூயார்க் மனவிலப்பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார். நாம் சிரிக்கும் போது நம் மூக்குனுள் உள்ள சளியில் 'இம்யூனோகுளோபுலின் - ஏ ' [IMMUNOGLOBULIN-A] என்ற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரித்து பாக்டீயாக்கல், வைரஸ் புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கிறதுதாம். இதனால் மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம். என்கிறார் இந்தப் பேராசிரியர்.
மேலை நாடுகளில் டாக்டர்கள் நேயாளிகளுக்கு சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு பரிந்திரை செய்கிறார்கள். 'நோர்மன் கசின்ஸ்' என்னும் அமொ஢க்க நாவலாசியரியர் 1983-ஆம் ஆண்டு தான் எப்படி " இதய நோயிலிருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார். நான் மாரடைப்பு வந்ததுடன் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவித்தேன். எளிய உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டேன். விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன். அதற்காக நகைச்சுவைப் படங்கள் டி வி யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சரியம்? நாளடைவில் என் இதயம் பலப்பட்டு நோய் இருந்த இடம் சுவடே தெரியாமல் மறைந்து போனது "நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் இயல்பயைச் 'சிரிப்பு' முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.
சிரிப்பு பற்றி ஆராயும் மருத்துவ அறிஞர்களை 'GELOTO LOGIST என்கிறார்கள். இவர்கள் பலவித ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் இவைகள்.சிரிப்பு நம்முடைய இரத்ததில் அதிகப்படியான ஆக்.fன் இருப்பதற்கான தசைகள் வலுவடைகின்றன; ' இரத்த அழுத்தம்' அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகின்றன. 'என்சீபேலின்ஸ்' என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மன இறுக்கம் தளர்கிறது. சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் - நம் மூளையின் வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது. சிரிப்பு- அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது. உலக வாழ் உயிரனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு நன்மைகள் என்று சிரித்து பாருங்கள். எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.
"சிரிக்க தெரிந்த சமுதாய விலங்கு மனிதன்" என நம்மை மற்ற இனங்களிலிருந்து வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு. சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு.மனிதனுக்கு பல சமயங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனதெளிவு , மனமகிழ்ச்சி என பலவிதமாக பயன்பட்டு திகழ்கிறது இந்த சிரிப்பு. நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.
"பெர்னாட்" ஒரு சமயம் " உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு பின்னாலிலேயே செயல்படுகிறது " என்றார். நகைச்சுவையும்,சிரிப்பும் அறிவை அளவிட்டு காட்டுவதாக பெரும்பாலும் அமைகிறது. நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு பூர்வமானது என்பதை மெய்ப்பிக்க, நமக்கு அக்பர், பீர்ப்பால் கதைகள், தென்னாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக இருக்கிறது.
அமரர் 'கல்கியின் படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான். அதே போல் N.S. கிருஷ்ணன் ஒரு முறை வெளியூர் சென்ற சமயம் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. வேறு காருக்காக காத்திருந்த போது , அந்த வழியாக வந்த விவசாயிகள் கார் விபத்தைக் குறித்து கேட்டபொழுது, "காருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் காரை மரத்தில் சாத்தி வைச்சியிருக்கிறோம்..." என்றாராம். இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் வஞ்சகமில்லா நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ்நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் என்று கூறலாம். நம்மில் சிலர்- பெரிய பதவியிலுள்ளவர்கள் " சிரித்துப் பேசக் கூடாது " என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள். இந்தப் போக்கு மாறவேண்டும். நகைச்சுவைய உணர்வால் மட்டுமே - பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில் தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும் எந்த விதமான இடர்பாடுகளையும் எளிதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது.
சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும். மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க கூடிய சக்திதான். சிரிப்பு ' கவர்ந்திழுக்கக் ' கூடியது முகம். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள். அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!! இளமையான புன்னகை எனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது.கண்ணுக்குள் தரியமால் உள்ளுக்குள் ஒளிந்து இருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை. தத்துவ டாக்டர்கள், இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி என்கிறார்கள்
உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள், சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.? இன்றைய உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள். நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளையதலைமுறையினர் நட்பை இழக்கிறீர்கள். உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள். இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக்க அவசியமாகிறது. நல்ல நகைச்சுவைகளை நினைந்து நாம் தனியாக சிரித்தாலும் நம்மை பற்றி மற்றவர்கள் "ஆசாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு" என எண்ணக்கூடும். ஆகவே,அதனையும் கருத்தில் - கவனத்தில் கொண்டு சிரிக்கவும், மனம் விட்டு சிரிக்கவும். நலம் சிறக்கும்."சிரித்து வாழ வேண்டும் - பிறர் சிரிக்க வாழ்திடாதே"
சிங்கை கிருஷ்ணன்

தமிழ் மென்பொருள் அழகி

ஒலிபெயர்ப்பு, தட்டச்சு, அச்சு, மின்னஞ்சல், மின்னுரையாடல், வலையாக்கம் - தமிழில்ஆங்கிலத்தில் டைப் செய்து, தமிழில் பெறுங்கள் - அனைத்து செயலிகளிலும்.
உலகின் முதலாம் 'இரு திரை' தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள்
ஈடிணையில்லா ஆங்கிலம்-தமிழ் சொல் இணைப்பு. உ-ம்: 'ஸ்ரீ' என்று டைப் செய்ய, sri, sree, shri, Mr என்று எப்படி வேண்டுமானாலும் டைப் செய்யலாம்.

ஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை அப்படியே டைப் செய்யலாம். உ-ம்: 'dear', 'easy', 'meals', 'queen' etc. 'diyar', 'eesi' etc. என்று டைப் செய்யத் தேவையில்லை.
அழகியின் flexibility பற்றி பல உதாரணங்களுடன் விளக்கம் காண, இங்கே http://azhagi.com/easy.html சொடுக்கவும்.

தமிழில் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு - எல்லா செயலியிலும்
MS-Word, Excel, Powerpoint, Access, Pagemaker, Photoshop, Outlook Express, Hotmail, MSN Messenger போன்ற எல்லா செயலிகளிலும் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு செய்யலாம்.
அனைத்து இலவச திஸ்கி[Tscii], டாப்[Tab] மற்றும் யூனிகோட் எழுத்துருக்களை உபயோகிக்கலாம்.
உங்கள் தமிழ் ஆக்கங்களை திஸ்கியிலிருந்து தாப் (TAB) எழுத்துருக்கு மாற்றம் செய்யலாம்.
அடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரே ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.
நேரடியாக யூனிகோடில் ஒலிபெயர்ப்பு/தட்டச்சு (in WinXP/2K) யூனிகோட் ஆற்றலினால், விண் XP/2K உபயோகிப்பாளர், உங்கள் அஞ்சலை, ஃபான்ட் ஏதும் பதியாமலேயே பார்க்கலாம்.
தமிழில் Find/Replace - நேரடியாக Word, Excel etc. செயலிகளில் - சரளமாகச் செய்யலாம்.
தமிழில் 'வரிசைப்படுத்துதல்' - Excel, Access போன்ற செயலிகளில் - எளிதாய்ச் செய்யலாம்.
உங்கள் கோப்புகளின் பெயர்களையே தமிழில் வைத்துக் கொள்ளலாம் !!!
யூனிகோட் மாற்றி, 'Bulk Unicode Convertor' (multiple files converter) உட்பட.
இலவச தானியங்கி தமிழ் எழுத்துரு (both Tscii/Unicode compliant) - வலைதளங்கள் அமைக்க. மூன்று வகை கீ-போர்ட் லேஅவுட் - ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99 தமிழ்-ஆங்கிலம்-தமிழ் என்று கலப்பு ஒலிபெயர்ப்பு/தட்டச்சு. தமிழில் சொல் எண்ணிக்கை (Word count).
நீங்கள் ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம் : வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில் ஒலிபெயர்க்கலாம். மீண்டும் டைப் அடிக்க வேண்டியதில்லை.
மாற்று ஒலிபெயர்ப்பு - தமிழில் டைப் செய்து, ஆங்கிலத்தில் பெறலாம்.
தமிழ் எண்களை டைப் செய்யலாம்.
தமிழ் கற்க/கற்பிக்க, 'சிறுவர் கீ-பாட்' உண்டு.
மென்பொருளுடன் உள்ளடங்கிய முழுமையான, தெள்ளத் தெளிவான உதவிக்கோப்புகள்.

http://azhagi.com/free.html

http://www.ezilnila.com/software.htm

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்: 80 பேர் கும்பலிடம் சிக்கி சீரழிந்த 2 இளம் பெண்கள்


மும்பை, ஜன.3-
மும்பையில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு, நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியே வந்த 2 இளம் பெண்களை 80 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது.
தலைகுனிவு
கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பல்வேறு நகரங்களில் நடந்த கலாசார சீரழிவுகள் தற்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் ஒரு ஓட்டலில், இரவு விருந்தின்போது மது மயக்கத்தில் ஆடிய இளைஞர்கள், மேடை சரிந்து நீச்சல் குளத்தில் விழுந்தனர். அதில் ஒரு கம்பியூட்டர் என்ஜீனியர் பலியானார். ஒரு பெண் என்ஜீனியர் உயிருக்கு போராடி வருகிறார்.
இதுபோல கொச்சி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடிய வெளிநாட்டு பெண்களிடம் சிலர் சில்மிஷம் செய்துள்ளனர். இந்த நிலையில் மும்பையின் பிரபல ஜுஹூ கடற்கரையில் ஒரு அதிர்ச்சி கரமான நிகழ்ச்சி அரங்கேறி உள்ளது. நாட்டையே தலைகுனிவுக்கு உள்ளாக்கும் அந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-
ஆடைகளை கிழித்து
திங்கள்கிழமை நள்ளிரவு, மும்பை ஜுஹூ கடற்கரையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு, இரவு 1.45 மணிக்கு இரண்டு இளம் ஜோடிகள் வெளியே வந்தனர். அவர்களில் ஒரு பெண் கருப்பு நிற பாவாடை சட்டை அணிந்து இருந்தார். மற்றொரு பெண் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து இருந்தார். ஓட்டலில் இருந்து வெளியே வந்த அந்த ஜோடிகள், கடற்கரையை நோக்கி சென்றன. அங்கு இருந்த ஒரு கும்பல், ஆண் நண்பர்களை பிடித்து வைத்துக் கொண்டு இரண்டு இளம் பெண்களிடமும் சில்மிஷம் செய்ய ஆரம்பித்தது. அந்த பெண்கள் சத்தம் போட்டனர். உடனே அந்த கும்பலுக்கு ஆதரவாக மேலும் சிலர் வந்தனர். இதனால், கும்பலின் எண்ணிக்கை 80 பேராகி விட்டது.
15 நிமிடங்கள்
அந்த கும்பலை சேர்ந்தவர்கள், இரண்டு பெண்களையும் கட்டிப் பிடித்தபடி செக்ஸ் தொந்தரவு செய்தனர். அந்த பெண்களின் ஆடைகளையும் கிழித்தனர். அவர்களுடன் வந்த ஆண் நண்பர்கள் எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நின்றனர். இந்நிலையில், ஒரு பெண்ணை அருகில் உள்ள மரத்துக்கு கீழேயும், மற்றொரு பெண்ணை ஒரு காருக்கு அருகிலும் அந்த கும்பல் தள்ளியது. அதே வேகத்தில் 10-க்கும் மேற்பட்டோர் அந்த பெண்களின் மேல் விழுந்தனர்.
ஆடைகள் கிழிந்து, நகக் கீறல் காயங்களுடன் இருந்த இரண்டு பெண்களும் அபயக் குரல் எழுப்பினர். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த போராட்டத்தை, மும்பையின் பிரபல பத்திரிகையை சேர்ந்த இரண்டு புகைப்படக்காரர்கள் கவனித்தனர். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு, கும்பலை சேர்ந்தவர்களை ரகசியமாக படம் பிடித்தனர்.
வெளிச்சத்துக்கு வந்தது
இதற்கிடையே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வந்து, கும்பலை விரட்டி அடித்தனர். இரண்டு ஜோடிகளையும் மீட்டு அருகில் உள்ள ஜுஹூ போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். திங்கள்கிழமை நள்ளிரவில் நடந்த இந்த கூத்து, மும்பை பத்திரிகையில் நேற்று காலை படங்களுடன் பிரசுரமான பின்னரே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வளவு சம்பவம் நடந்த பின்னரும், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. எனவே, நேற்று காலை வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தற்போது பத்திரிகையில் செய்தி வெளியானதால், அதன் அடிப்படையில் நேற்று பிற்பகலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த படங்களை எடுத்த இரண்டு புகைப்படக்காரர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு, கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே, `பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தர வேண்டும்' என்று மும்பை மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் அர்ச்சனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.