30 Jul 2009

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது !

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதைமறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் (JOHNS HOPKINS) சொல்கிறார்.

இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவைசில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritionaldeficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பைபோன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்கசெய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்புசக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதைதவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின்கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body'sown killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ளபாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்குதவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal,Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாகஇனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாகஇருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்குமாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்

-மிவா துபாய்

25 Jul 2009

இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி

U.A.E அபுதாபியில் வெளிநாடு இந்திய‌ர் ந‌ல‌ அமைச்ச‌க‌த்தின் சார்பில் தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌விடும் நோக்கில் இல‌வ‌ச தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.

வெளிநாட்டு இந்தியர் நலத்துறை அமைச்சகம் இந்த சேவையை வழங்குகிறது. வெளிநாடுக‌ளுக்கு குறிப்பாக‌ வ‌ளைகுடா நாடுக‌ளுக்குச் செல்லும் தொழிலாள‌ர்க‌ள் ஏஜெண்டுக‌ளின் க‌வ‌ர்ச்சியான‌ வாக்குறுதிக‌ளைக் கேட்டு ஏமாந்து விடுகின்ற‌ன‌ர்.

இத‌ன் கார‌ண‌மாக‌ ம‌னைவியின் ந‌கைக‌ள், சொத்து உள்ளிட்ட‌வ‌ற்றை விற்று பிழைப்பு தேடி வ‌ரும் இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து அறியாமையின் கார‌ண‌மாக‌ ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இத்த‌கைய‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்திம் வ‌கையில் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.

மேலும் இந்த‌ சேவையின் மூல‌ம் ஏமாற்றும் ஏஜ‌ண்டுக‌ள் குறித்தும் புகார் த‌ர‌லாம். த‌ற்பொழுது ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், குவைத்,ச‌வுதி அரேபியா உள்ளிட்ட‌ வ‌ளைகுடா நாடுக‌ளில் ப‌ணிபுரியும் தொழிலாள‌ர்க‌ள் 800 091 202 53 என்ற‌ இல‌வ‌ச‌ தொலைபேசி எண்ணில் வார‌த்தின் ஏழு நாட்க‌ளும், 24 ம‌ணி நேர‌மும் தொட‌ர்பு கொள்ள‌லாம்

17 Jul 2009

பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர்

மனித வாழ்விற்கு அடிப்படை தேவைகளாக இருப்பவை உணவு, நீர், உடை, இருப்பிடம் முதலியவை. உணவும், நீரும் அத்தியாவசிய தேவையாகும்.

சத்தான உணவும், தூய்மையான நீரும்தான் ஆரோக்கிய மனிதனை உருவாக்கும். வளரும் நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுகளில் குடிநீருக்காக நாட்டுக்குநாடு போரிட வேண்டிய நிலை உலகளவில் ஏற்படலாம் என அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக மக்கள் தொகையில் இரண்டாம் நிலையில் உள்ள நம் நாடு பெருமளவில் குடிநீர் தேவையை எதிர்கொண்டு வருகிறது. இந்த நீர் தேவையை நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் மூலம் பெற்று வந்தோம். மக்கள் தொகை அதிகரிப்பால் காடுகளையும், நீர்நிலைகளையும் அழித்து மக்கள் வாழ இருப்பிடங்களை ஏற்படுத்திவிட்டோம்.

மேலும் சில ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்றியும் காணாமல் போய்விட்டன. ஆறுகள் எல்லாம் காய்ந்துவிட்டன. புயல் மழைக் காலங்களில் நீரை சேமிக்க இயலாமல் கடலில் கலக்கின்றன. மேலும் ஆற்றுப் பகுதி அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்து கழிவு நீர் சாக்கடைகளாக மாறியுள்ளன.

இப்படி பல வகைகளில் நீர் மாசடைவதால் மக்களுக்கு தூய்மையான குடிநீர் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. இந்த சுகாதாரமற்ற நீரால் மக்களை பலவிதமான நோய்கள் தாக்குகின்றன. நீரால் ஏற்படும் நோய்களைத் தடுக்க நீரை நன்கு கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும் என்று சுகாதாரத்துறையும், மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்.

இன்றைய அவசர கால நிலையில் எப்போதும் காய்ச்சிய நீரைக் கொண்டு செல்வது என்பது இயலாத ஒன்று. இத்தகைய அசாத்திய நிலையில்தான் சில நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரான மினரல் வாட்டர்களை விற்பனைக்கு கொண்டுவந்தன.

இத்தகைய குடிநீர் பெரிய பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஆரம்பத்தில் விற்கப்பட்டு வந்தது. இது சாமான்ய மக்களுக்கு பயன்படாமல் இருந்துவந்தது. இதற்குக் காரணம் இவற்றின் விலைகளே. இதைப் பயன்படுத்தி சிறு பாக்கெட்டுகளில் 200 மி.லி தண்ணீரை அடைத்து விற்பனை செய்தனர்.

இந்த நீர் மக்களிடையே மிகவும் பிரபலமானதால் சில மோசடி பேர்வழிகள் சரியாக சுத்திகரிக்கப்படாத தூய்மையற்ற குடிநீரை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இந்த நீர் குடிக்க தகுந்ததா என்று சோதித்துப் பார்த்தால் சுகாதாரமற்ற குடிநீராக இருக்கிறது.

வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அதிகம்பேர் இந்த நீரையே வாங்கி அருந்துகின்றனர். இந்த குடிநீரால் டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், காமாலை நோய்கள் மற்றும் ஜலதோஷம், ஈரல் பாதிப்பு என பலவகையான நோய்களுக்கு இந்த நீர்தான் முக்கிய காரணமாக அமைகிறது.

எது தூய்மையான நீர் என்பதை சாதாரண மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அரசும் ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட நீரே தூய்மையான நீர் என அறிவித்து போலியான நிறுவனங்களை கண்டறிந்து மூடியது. இருந்தும் கள்ளச் சந்தையில் போலி தண்ணீர் பாக்கெட்டுகள் அதிகம் விற்பனையாகிறது.

குறிப்பாக மதுபானக் கடைகளில் விற்கப்படும் குடிநீர்கள் தரமற்றவையாக இருக்கின்றன. இப்படி பாக்கெட் நீரை அருந்துவதை தவிர்த்து, சிரமம் பாராமல் வீட்டிலிருந்து நீரை எடுத்துவருவது மிகவும் நல்லது.

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி குடிக்க வேண்டும். கொதிக்க வைக்காமல் சிலர் இலேசாக சூடானவுடன் நீரை அருந்துகின்றனர். இளஞ்சூட்டில் நீரில் உள்ள கிருமிகள் அழியாது. நன்கு கொதிக்க வைத்தால்தான் கிருமிகள் அழியும்.

நீரினை கொதிக்க வைக்கும்போது அதில் சிறிது சீரகத்தை கலந்து கொதிக்க வைத்து அருந்துவது மிகவும் நல்லது. பிளாஸ்டிக் குடங்களில் அதிக நாட்கள் நீரை சேமித்து வைப்பது நல்லதல்ல. முடிந்தவரை மண்பானைகளில் நீரை வைத்து பருகுவது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட நீர் நிரப்பிய கேன்களை நன்கு பரிசோதித்து வாங்குவது நல்லது. அந்த நீரில் ஏதும் மாசுக்கள் இருந்தால் தண்ணீர் நிறுவனத்திற்கு தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் சென்று புகார் செய்ய வேண்டும்.

இதற்கு எல்லாம் நேரம் இல்லையென்றும், நீதிமன்றத்தில் புகார் கூறினால் அடிக்கடி அழைப்பார்கள் என்றும் சிலர் ஒதுங்கிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒதுங்கிச் செல்வதால் அனைத்திலும் போலிகள் புகுந்து விளையாடுகின்றன.

இந்த நிலையை அன்றே உணர்ந்த சித்தர்கள் குடிக்கும் நீரை குப்பியில் அடைத்துகூவிக் கூவி விற்பான் - என்றார். அது உண்மையாகப் போய்விட்டது. நாம் உடலைப் பாதுகாக்க தூய்மையான நீரும் அவசியம் என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்பட்டு போலி குடிநீர் பாக்கெட்டுகளை தவிர்ப்போம்.

- நக்கீரன்

14 Jul 2009

சில நாட்டு மருந்து மருத்துவ பலன்கள்

வாய் நாற்றமா ? பல்வலியா? பல்லீறுகளில் இரத்தமா ?

செய்முறை :

கீழாநெல்லிக்கீரையை மென்று பல்விளக்கி வர தீராத வாய்நாற்றம், பல்வலி தீரும்.

குறிப்புகள் :

1, தினமும் ஏராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. உணவு உண்டபின் நன்றாக பல் துலக்க வேண்டும்.
3. இரவு அதிக நேரம் கண் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

செய்முறை : 2

அதிமதுரம் - 50 கிராம், நன்னாரி - 50 கிராம், சந்தனம் 20 கிராம், திரிபலைத்தோடு 10 கிராம், ஏலம் - 5 கிராம், இவற்றை நன்றாக தூள் செய்து ஒரு கரண்டி வீதம் எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்கவைத்து, காலையில் வெறும் வயிற்றிலும், இரவு சாப்பாட்டிற்கு பின்னரும் சாப்பிட்டு வந்தால் கீழ்கண்ட நோய்கள் தீரும்.

1. வாய் நாற்றம்
2. குடல் புண்
3. வயிற்றுப்புண்
4. வயிற்றுவலி
5. குமட்டல்
6. வாந்தி
7. பித்தம்
8. பசியின்மை, ருசியின்மை

இது சிறுநீரக கற்கள், கல்லீரல் கற்கள் தோன்றாமல் தடுக்கும். மிகச்சிறந்த மருந்து, தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

கொழுப்புணவா? இதோ உடனடி மருந்து

பொதுவாக கொழுப்புச்சத்து மிகுதியாவது உடலுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். எனினும் இரண்டு மூன்று திருமணங்கள் பிரியாணி. சிக்கன் - மட்டன் என வந்துவிட்டது... என்ன செய்வது வேறு வழியில்லை... மனமும் சும்மா இருக்கவில்லை. சாப்பிட்டு விட்டோம் என்றால் உடனே இந்த மருந்துணவை மறக்காமல் சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

செய்முறை : 1

இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 இதழ்
கறிவேப்பிலை - 5 இலை
நல்லமிளகு 3 எண்ணம்.

இவற்றை நன்றாக அரைத்து வெந்நீரில் கலக்கி குடித்துவிடவும்.

செய்முறை : 2

இஞ்சி, பூடு, காந்தாரிமிளகு (அ) நல்லமிளகு, உப்பு சேர்த்து துவையலாக செய்து விழுங்கி வெந்நீரில் குடித்துவிடவும்.

செய்முறை : 3

இஞ்சி, பூண்டு இரண்டையும் சிறு அளவு எடுத்து சீனி சேர்த்து வெந்நீரில் ஜுஸாக கலக்கி குடித்து விடவேண்டும்.இப்படி ஏதேனும் ஒன்றை செய்துகொண்டால் அந்த உணவின் கொழுப்புத்தன்மை நம் உடலை பாதிக்காமல் இருக்கும்.

நன்றி : keetru.com

10 Jul 2009

வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் !

செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன.

செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள். இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது.

அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள். அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.

சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது.

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலு முள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.

“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.

போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.

இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.
இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன.

உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.

சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.

நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?

1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.

3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.

4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.

5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.

8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.

10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.

11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !

12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.

13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.

14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.

எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டு மொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

7 Jul 2009

ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா ?

உடல் எடை என்பது இன்றைய நாகரீக, பரபரப்பான உலகில் பல இன்னல்களைத் தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

பொதுவாக நாம் உண்ணும் உணவில் அடங்கியுள்ள கொழுப்புச் சத்துகளும், தேவையற்ற சத்துகளும் உடலில் ஏற்படும் ஜீரண வேதி மாற்றத்தால் முழுவதுமாக எரியாமல் உடலின் ஓரிடத்தில் தங்குவதாலோ அல்லது தேவையற்ற பகுதிகளில் தசையோடு சேர்வதாலோ தொப்பை உள்ளிட்ட உடல் குண்டு தோற்றம் ஏற்படுகிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளையும், அசைவ உணவுகளையும் அதிக அளவில் உண்பதால் உடல் எடை பெருத்து, பார்ப்பதற்கு அசிங்கமான தோற்றத்தைத் தருகிறது. சரி, உடல் எடையைக் குறைத்து `ஸ்லிம்' ஆக இருப்பது எப்படி? என்பதற்கு சில யோசனைகளை இங்கே தந்துள்ளோம்.

அதற்காக இதைப்படித்து விட்டாலே உடல் எடை குறைந்து விடும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள்(!). படித்த கையோடு, உருப்படியான திட்டங்களை வகுத்து, அதற்கேற்ப உணவுப் பழக்க முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

விரைவில் நீங்களும் `ஒல்லிக்குச்சி உடம்பை' பெற்று விடுவீர்கள். 2030ஆம் ஆண்டு வாக்கில், உலக அளவிலான மக்கள் தொகையில் 58 விழுக்காட்டினர் குண்டான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள் என்று அமெரிக்காவில் வெளியான ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாம்.

அந்த 58 விழுக்காட்டினர் என்பது இந்த கட்டுரையால், ஒரு விழுக்காடு குறைந்தாலும் மகிழ்ச்சியே. உங்களை அதிக உடல் எடையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், குண்டாக இருப்பவர்கள், உடல் எடையை குறைப்பதற்கும் சில யோசனைகள் இதோ...

1. பொதுவாக எந்தவகை உணவாக இருந்தாலும், அது உங்களுக்கு மிகவும் பிடித்த உணவானாலும் சரி, வயிறு புடைக்க சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இதுவே பாதியளவு உடல் கோளாறுகளைத் தவிர்க்கக் கூடியது. வயிற்றில் பாதியளவு உணவு, கால் பாகம் தண்ணீர், கால் வயிறு காலியாக இருத்தல் வேண்டும்.

2. கூடியவரை குறித்த நேரத்தில் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்தல் அவசியம். காலை உணவு 8.30 - 9.00 மணிக்குள். மதிய உணவு 1.30 - 2.30 மணி. மாலையில் 2 பிஸ்கட் உடன் தேநீர் ஒரு கப். இரவில் கூடுமானவரை 9 மணிக்கு முன் உணவு உண்டு, அரைமணி நேரமாவது விழித்திருக்க வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கச் செல்வதைத் தவிருங்கள். மேலும் இரவு நேரத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நலம்.

3. வயதிற்கேற்ற உணவுப் பழக்கமுறை: 25 வயது வரை ஆண்/பெண் இருபாலருக்குமே ஜீரண சக்தி சீராக இருக்கும் என்பதால், எந்தளவு கடினமான உணவுகளையும் செரிக்கக்கூடிய வகையில் உடல் உறுப்புகள் செயலாற்றும். 25 வயதைத் தாண்டி விட்டாலே, அசைவ உணவுகளை குறிப்பிட்ட ஒருநாளில், ஒரு வேளையோ அல்லது இரு வேளையோ என திட்டமிட்டு, ஓய்வு நேரத்தில் சாப்பிடுவது நலம். அசைவ உணவு சாப்பிடும்பட்சத்தில், அவை ஜீரணமாவதற்குத் தேவையான பொருட்களை போதிய அளவு சேர்த்துக் கொள்தல் நலம்.

4.முப்பது வயதைக் கடந்து விட்டவர்கள், அசைவ உணவு சாப்பிடும் பட்சத்தில் முறையான அணுகு முறையைக் கடைபிடித்தல் வேண்டும். வயது ஏற, ஏற ஜீரண உறுப்புகளின் செயல்பாடு ஓரளவுக்கு குறையத் தொடங்கும். 40 வயதைக் கடந்தவர்கள் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை இரவில் சாப்பிடுவதால், உடல் எடைபோடுவதைத் தவிர்க்கலாம்.

5. சரி, குண்டாக இருப்பவர்கள், சாப்பாட்டைக் குறைக்க வேண்டுமா? அப்படி திடீரென்று சாப்பிடும் அளவைக் குறைப்பவர்களுக்கு சக்தி இழப்பு (Energy loss) ஏற்பட்டு சோர்வு உருவாக வாய்ப்புள்ளது. எனவே உடலுக்குத் தேவையான சக்தியை கொடுக்கக்கூடிய, அதே நேரத்தில் உடல் எடையைக் கூட்டாத உணவு வகைகளாகச் சாப்பிடலாம். இதனால் சோர்வு ஏற்படுவதில் இருந்து எப்போதும் புத்துணர்ச்சியுடன் திகழ முடியும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பழங்களையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

6. காலையில் காபி, டீ பானங்களுக்குப் பதிலாக இளநீர், பதநீர், அருகம்புல் சாறு, நீராகாரம் போன்றவற்றை அருந்துங்கள். இளநீர் உடல் சூட்டைத் தணிப்பதுடன், அருந்திய சில நிமிடங்களிலேயே சிறுநீரக எரிச்சலைப் போக்கி, ஜீரணத்தை எளிதாக்குகிறது.

7. உடல் பருமன் உள்ளவர்கள் காலைநேரத்தில் இட்லி, இடியாப்பம், புட்டு, ஓட்ஸ் கஞ்சி போன்ற நீராவியில் வேகக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

8. மதிய உணவாக ஒருபிடி அரிசி சோற்றுடன், காய்கறிகள் குறிப்பாக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொறித்த அல்லது வதக்கிய காய்கறிகளை தவிர்த்தல் சிறந்தது. சிறிதளவு தயிரும் எடுத்துக் கொள்ளலாம்.

9. மாலையில் 2 அல்லது 3 பிஸ்கட் உடன் தேநீர் அருந்தலாம்.

10. இரவு உணவில் அவசியம் சப்பாத்தி, கோதுமையால் ஆன உணவு வகைகள் சாலச் சிறந்தது. கேழ்வரகுக் கஞ்சி, அடை போன்றவையும் கொழுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யாது.

உடல் பருமன் கொண்டவர்கள் இதேபோன்ற உணவுப்பழக்க முறைகளை குறைந்தது 2 மாதத்திற்குக் கடைபிடிப்பீர்களானால், அப்புறமென்ன, நீங்களும் `ஒல்லிக்குச்சி உடம்புக்காரர்கள்தான்...'

- மிவா

6 Jul 2009

மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்

சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.

வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம். உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.

ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.

உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது ? ஓய்வின்போது வலி குறைகிறதா ? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது ? என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.

மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:

நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.

ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது போல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும். அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம்..

இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

- மிவா