19 Dec 2009

சிரித்து வாழ வேண்டும்

அன்புடையீர்,


சிரித்து வாழ வேண்டும் . இதயம் நிறை வணக்கங்களுடன்,


கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...


ஒரு பொண்ணு போட்டோவுல தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா


அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது


உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!


காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.


மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்


டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????


என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.


டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு



!!!வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..


சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..


''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க
''''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்


'ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!


உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.


இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா? இல்லை அவங்களே சொன்னங்க...

2 Dec 2009

மனதை அதிரவைத்த காதல் கதை !!!

ஒரு அழகான கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..

அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.

அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.

இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்காணாமலும் போய்விட்டனர்.

உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க்காதலை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.

அதைப்பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட
ஊர்மக்கள் அந்தக்காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச்சென்றிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்.

உடனே அந்தப்பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப்பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.

திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.

ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.

அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.

அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை. அடுத்த நாள் காலையில் அழைப்பு மணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.

அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.

உடனே இவள் பயத்தினால் அலறினாள். அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது.

இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கேன்.

25 Nov 2009

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

விபரங்களுக்கு Click here

http://www.google.com/support/websearch/bin/answer.py?hl=en&answer=35892

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்
பிறகு

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ......

20 Nov 2009

சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை

இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது. இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது. அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன.

நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன. சுவையும் அதிகம். போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது.

உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது. நாம் ஏன் உணவு உண்கிறோம்?

நமது நாளந்த வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே எமக்கு உணவு தேவைப்படுகிறது. நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும், நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை. அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும்.

ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது. தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல நோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிமிக்கிடாமல் கொல்லுகின்றன.

ஆரோக்கியமான உணவு முறை இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும். உணவின் அளவு ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான்.

இதனால்தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.

வெற்றுக் கலோரி வேண்டாம் இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஸாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.

எவை ஆரோக்கியமானவை? உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.

ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும். கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உண்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும். இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற் கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.

புதிய ஆய்வு ஆனால் இப்பபொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும்.

Brigham and Women's Hospital லில் உள்ள

Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும். மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.

எமது சூழலில் அதிகம் எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள். எமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.

வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.

சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.

-எம்.கே.முருகானந்தன்.

13 Nov 2009

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன.

அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.
சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது.

கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1. கால்கள்:

சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2. சிறுநீரகம்:

சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3. வயிறு, குடல்:

அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4. மூக்கு:

சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.
5. பல்,ஈறுகள்:

பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6. கண்கள்:

கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7. காது:

காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.
இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான் சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1. சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2. ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3. ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5. தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6. தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7. வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8. சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.
9. சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10. வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11. சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12. பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13. கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14. மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

11 Nov 2009

மாணவர்களை சீரழிக்கும் போதை கும்பல்

சென்னையில் அடையாறு, அண்ணாநகரில் படிக்கும் "பெரிய இடத்து' மாணவர்களிடம், ஒரு கும்பல் நண்பர்களாக பழகி, அவர்களுக்கு இலவசமாக போதை வஸ்துகளை சப்ளை செய்கிறது.

"சிலிப்பரி ஸ்லோப்' என்ற ரகசிய பெயரில் செயல்படும், அக்கும்பலின் பின்னணியில் நக்சலைட்களுக்கு தொடர்பிருப்பதாக, "பகீர்' தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில், "கஞ்சா, அபின், பிரவுன் சுகர், ஓபியம், குட்கா, கேட்டமைன்' என பல்வேறு வகையான போதை வஸ்துகளை விற்பனை செய்யும் கும்பல், திரைமறைவில் செயல்பட்டு வருகிறது.

இதில், கஞ்சா கும்பலின் நடமாட்டத்தை ரயில்வே சுரங்க பாலங்கள், கூவம் ஆற்று கரையோரங்களில் அதிகம் காணலாம். கீழ்ப்பாக்கம் டி.பி.சத்திரத்தில், இரண்டு கும்பல்கள் கஞ்சா வியாபாரத்தில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கிறது.

இக்கும்பலிடம் வேலை பார்க்கும் அடியாட்கள், தொழில் போட்டியில் பழிக்கு பழியாக எதிர் கும்பலை வெட்டி கொலை செய்வது சகஜமாகி விட்டது.ஆந்திராவிலிருந்து ரயிலில் கஞ்சாவை இறக்குமதி செய்யும் கும்பல், அவற்றை பிரித்து அடியாட்களிடம் கொடுத்தனுப்பும்.

அடியாட்களுக்கு குவாட்டர், பிரியாணியுடன் தினமும் 200 ரூபாய் சம்பளம் கொடுக்கின்றனர். இவர்கள், கஞ்சாவை சாக்லெட், ஐஸ்கிரீமில் கலந்து விற்பனை செய்கின்றனர். அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் அருகே இக்கும்பலின் நடமாட்டம் இருந்து வருகிறது.

கீழ்மட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களை இலக்காக வைத்து கஞ்சா கும்பல் செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்ததாக, பணக்கார இடத்து மாணவர்களை, "சிலிப்பரி ஸ்லோப்' என்ற ரகசிய பெயரில் செயல்படும் கும்பல் லாவகமாக வளைத்து வருகிறது.

அடையாறு, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள பணக்கார வீட்டு மாணவர்கள் படிக்கும் பள்ளிகளே கும்பலின், "டார்கெட்'டாக இருக்கிறது.
வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதிகள், ஆயுதங்களை வாங்கிக் குவிக்க அதிகளவில் பணம் தேவைப்படுகிறது. அதனால், பயங்கரவாதிகள் போதை வஸ்துகளை டன் கணக்கில் வாங்கி இருப்பு வைக்கின்றனர்.

காடு, மலைக் குன்றில் பதுங்கி வாழும் பயங்கரவாதிகளுக்கு, மக்களோடு நெருங்கிய தொடர்பு கிடையாது. ஆனால், வட மாநிலங்களில் உள்ள நக்சலைட்களுக்கு மக்களோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

இதை அறிந்த பயங்கரவாதிகள், போதை வஸ்துகளை நக்சலைட்கள் மூலமாக உள்ளூர் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள, "ஹைடெக்' போதை கும்பல், வடமாநில நக்சலைட்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

போதை வஸ்துக்களை, ஒரு கிராம் அளவிற்கு பணக்கார வீட்டு மாணவர்களுக்கு வழங்குகின்றனர். ஏதாவது ஒரு மாணவரிடம் நட்பு ரீதியில் பழகும் கும்பல், "நண்பர் ஒருவர் இலவசமாக கொடுத்தார். நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்' என கொடுக்கிறது.

பல மணி நேரம் உச்சகட்ட போதையில் ஆழ்த்துவதால், அதை பயன்படுத்தும் மாணவர், அவரது நண்பர்களுக்கும் போதை கும்பலின் நண்பரை அறிமுகப்படுத்துகிறார். இந்த, "நெட் வொர்க்கில்' அடையாறு ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகரில் உள்ள பணக்கார வாலிபர்கள் பலர் சிக்கியுள்ளனர். மாணவர்களை போதைக்கு அடிமையாக்கியதும், அதன்பின் இலவசமாக தருவதை நிறுத்தி விடுகின்றனர்.

போதை வஸ்து பழக்கத்தை விட முடியாத மாணவர்கள், அக்கும்பலை அணுகி போதை வஸ்துக்களை வாங்குகின்றனர். போதை வஸ்து அடிமையால், மாணவர்கள் தவறான பாதைகளில் செல்ல நேரிடுகிறது.

மாணவிகளுக்கு போதை வஸ்துகளை இலவசமாக கொடுத்து, பல மணி நேர ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்துகின்றனர். சுய நினைவில்லாமல் இருக்கும் மாணவிகளை, "புளூ பிலிம்' எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி காசு பார்க்கும் அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இப்பிரச்னை குறித்து, தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் கூறியதாவது: போதை கும்பலிடம் சிக்கி, வாழ்க்கையின் எல்லைக்கோடு வரை சென்றவர்கள், மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை பெற்று பொது வாழ்வுக்கு திரும்புகின்றனர்.

இவர்கள் பற்றிய விவரம் போலீசுக்கு தெரிந்தால் தான், போதை கும்பல் பற்றிய தகவலை சேகரிக்க முடியும். போதைக்கு அடிமையாகிறவர்கள், போலீசில் புகார் கொடுப்பதில்லை.போதை கும்பலின் "ஆணி வேர்' யார் என்பது, கடைசி வரை போலீசுக்கு தெரியாமல் போய் விடுகிறது.

தமிழகத்தில் போலீசார் கைது செய்வதெல்லாம், போதை கும்பலின், "ஏஜென்டு'கள் தான். முக்கிய நபர்கள் யாருமே போலீசில் சிக்குவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

போதை வஸ்துக்கள் விற்கும் நபர்களை பிடிப்பதோடு மட்டுமில்லாமல், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

- Dinamalar

10 Nov 2009

மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்

உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா.

அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன் ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.

ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.

2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.

3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.

பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும்.

திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும். சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.

இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி (வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லா மேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை. 2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லா மேரி தொடர்பு கொண்டால் எதிர் முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது.

அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என கூறிக்கொண்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார். மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார். கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.

ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார்.

இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும் கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார். நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள்.

பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர். ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீ சார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார்.

அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது. நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.

இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார். எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு.

ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது.

கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி. காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.

இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.

ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..

எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.

- Hussainghani

7 Nov 2009

புதிதாக சார்ஜா  திருச்சி இடையே விமான சேவை

ஏர் அரேபியா நிறுவன அதிகாரிகள் திருச்சி விமான நிலைய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அரபு நாடுகளை மையமாக வைத்து இயக்கப்படும் விமான நிறுவனம் ஏர் அரேபியா. இந்த விமான நிறுவனம் இந்தியாவில் டில்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கோவை, ஹைதரபாத் உட்பட பல்வேறு நகரங்களில் விமானங்களை இயக்கி வருகிறது.

புதிதாக சார்ஜா திருச்சி இடையே விமானங்களை இயக்க முடிவு செய்து இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்திடம் அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இம்மாத இறுதிக்குள் விமான சேவையை துவக்கவுள்ளனர்.

இந்நிலையில், ஏர் அரேபியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்திலுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக, விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், அதிகாரிகள் பயணிகளை கையாளும் விதம், அடிப்படை வசதிகள், ஓடுதளத்தின் தன்மை, விமான நிறுத்துமிடம் போன்றவை குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் ஆய்வு செய்துவிட்டு சார்ஜா புறப்பட்டு சென்றனர்.

22 Oct 2009

அன்புடன் எச்சரிக்கை....

19-10-09 அன்று மாலை சுமார் 6.00 மணியளவில் முத்துப்பேட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள் அதிரை- முத்துப்பேட்டை ரோட்டில் பல்சர் என்னும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இரு இளைஞர்களும் இறந்தார்கள்.

முத்துப்பேட்டை குண்டான் குளத்தெரு புரோஸ்கான் (28), ஆஸாத்நகர் மரைக்கான் (22). இரு சக்கர வாகனத்தில் சென்றால் இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

அன்பான நண்பர்களே.. நமது குடும்பத்தில் உள்ள சகோதரர்கள், பிள்ளைகள், நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தயவுசெய்து மெதுவாக செல்ல சொல்லி அன்புடன் எச்சரிக்கை செய்யுங்கள். ஏனென்றால் இன்றைய விபத்தில் ஒரு சகோதரரின் உடல் ஊறுப்புகள் தனித்தனியாக அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தது.

http://saharatamil.blogspot.com/2009/10/blog-post_20.html

உலகின் இளம் தலைமையாசிரியர்!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.

பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது.

இத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது.

இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16). குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை.

ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி. அவர் சொல்வது உண்மைதான்.

பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர்.

ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார்.

ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக.

அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக. அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி.

டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள்.

விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று. பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார்.

ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்! பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது.

பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள்.

ஆசிரியர்கள் பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான். ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள்.

பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம். மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14). இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார்.

சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது. பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார்.

இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி. சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்?

""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி. தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி. உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!

19 Oct 2009

பணம் சுரன்டும் செல்போன் கம்பேனிகள்

பணம் சுரண்டும் 'ப்ரீபெய்டு சிம்' ...உஷார்

மொபைல் போன் நிறுவனங்கள் பல, எப்படி எல்லாம் வருவாய் ஈட்ட முடியுமோ, அத்தனை வழிகளையும் கடைபிடிக்கின்றன. "வேல்யூ ஆடேட் சர்வீஸ்' எனக் கூறி, அதற்கும் கட்டணத்தை பிடுங்கி விடுகின்றன. இதிலும், "சபலிஸ்ட்'டுகளாக இருந்து விட்டால், மொபைல் போனில் நொடிக்கணக்கில் பணம் போவதே தெரியாது.

நாடு முழுவதும் பல மொபைல் நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மொபைல் நிறுவனங்கள், அழைப்புக்கான கட்டணங்களை குறைக்கவும் கட்டணம் வசூலிக்கின்றன.

சீரற்ற கட்டண முறையால் மக்கள் எந்த நெட்வொர்க்கை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். உண்மையான கட்டணத்திற்கும், சலுகை கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

பிறர் அழைக்கும்போது, அவர்களுக்கு "ரிங்' ஒலிக்கு பதிலாக, ஒரு பாட்டு கேட்கும். அதே போன்று, பிறர் அழைக்கும்போது, "ரிங்' டோனுக்கு பதிலாக, பாட்டு பாட வைத்துக் கொள்ளலாம்.

இப்படி தேவையான திரைப்பட பாடல்களை "ரிங்டோனாக' பயன்படுத்திக் கொள்ள தனிக் கட்டணம். வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள கட்டணம் இருந்தாலும், சில மொபைல் போன்களில் பல யுக்திகளை பயன்படுத்தி பணத்தை கறந்து விடுகின்றனர்.

குறிப்பாக, இது, "ப்ரீ பெய்ட்' சிம்கார்டுகளை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது."ப்ரீ பேய்ட்' வாடிக்கையாளர்களின் போனுக்கு, "சர்வீஸ் மெசேஜ்' என அனுப்புகின்றனர். இந்த தகவலை படிக்க, முறையான பொத்தனை அழுத்தாமல், எப்போதும் பயன்படுத்தும் பட்டனை அழுத்திவிட்டால்போதும்.

அவ்வளவு தான்... உடனடியாக பணம் "ஸ்வாக' ஆகிவிடும். 30, 40, 50 ரூபாய் எவ்வளவாக இருந்தாலும், 'நீங்கள் சிறப்பு சேவையை பெற்றுள்ளீர்கள், அதற்கான மாதாந்திர கட்டணம் இது' என தகவல் வரும்.

ஜோதிடம், தினப்பலன், விட், "ஏ ஜோக்' சினிமா பாடல், வெப் பிரவுசிங், என எவ்வளவோ "எக்ஸ்ட்ரா' விஷயங்களை மொபைல் போன்கள் அளிக்கின்றன. இவற்றிற்கு தனி கட்டணம் வசூலித்து விடுகின்றனர்.

பெண் "சபலிஸ்ட்' ஆகவோ, விளையாட்டில் ஆர்வம் உள்ளவராகவோ, இருந்து விட்டால், அவ்வளவு தான் காசு போவதே தெரியாது. உங்களுக்கு பெண் நண்பர்கள் வேண்டுமா?...இந்த எண்ணை தொடர்பு கொண்டு எங்களிடம் "சப்ஸ்கிரைப்' செய்யுங்கள்.

உங்கள் நகரிலேயே, உங்களுடன்பேச சிநேகிதிகள் கிடைப்பர்' என்ற "நட்பு' விஷயத்தையும் ஏற்படுத்தி கொடுக்கின்றன மொபைல் போன் நெட்வொர்க்குகள்.

உண்மையிலேயே, அப்படி எந்த நட்பும் கிடைப்பதில்லை. பெண்களின் நட்பிற்காக வேண்டி, அனுப்பப்படும் மெசேஜ் ஒவ்வொன்றிற்கும் இரண்டு ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். சாதாரண எஸ்.எம்.எஸ்.,சிற்கு 25 பைசாவாக இருந்தால், இந்த எஸ்.எம்.எஸ்., சிற்கு பல மடங்கு அதிக கட்டணம்.

இதேபோன்று, மறைக்கப்பட்ட எண் கொடுக்கப்பட்டு, பெண்ணுடன் பேச நினைத்தால், குறைந்தபட்சம் நிமிடத்திற்கு மூன்று ரூபாய் முதல் கட்டணம் துவங்கி, ஆறு ரூபாய் வரை இருக்கும்.

ஐந்து நிமிடம் பேசி முடிப்பதற்குள்,"ப்ரீ பெய்டு' சிம்மில் போடப்பட்ட பணம் கரைந்து விடும். பெண்ணோடு பேச ஆசைப்பட்டால், நிச்சயம் அது நட்பாக இருக்காது. எதிர்முனையில் ஏதோ கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட குரலாக வந்து விழும். இந்த குரல் பதிவு முடிவதற்கு முன் பணம் காணாமல் போய்விடும்.

இது, இப்படி இருக்க, இன்னும் சில நிறுவனங்கள், யாகூ, ரீடிப் போன்ற நிறுவனங்களின் மெசஞ்சர் சர்வீஸ் உடன் இணைக்கப்பட்ட "சாட்' வசதியும் உள்ளன. இந்த சாட் வசதியிலும், அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலுக்கும் 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

நவீன வசதியுடன், "வெப்' வசதியுள்ள மொபைல் போனாக இருந்தால், அதில், "சூடான போஸ்டர்' வேண்டுமா? "ஸ்க்ரீன் சேவர்' வேண்டுமா...எனக் கேட்டு நச்சரித்து எஸ்.எம்.எஸ்., வந்து சேரும்.

இப்படி தொல்லை தரும் எஸ்.எம்.எஸ்.,எதையாவது தவறாக அழுத்தி விட்டால், ரீசார்ஜ் செய்த பணத்தில் கட்டணம் பழுத்து விடும். ஆபாசமாக படம் வந்து விழும். அப்பட்டமாக, இப்படியெல்லாம் பல மொபைல் போன் நிறுவனங்கள், தேவையற்ற சேவையை ஏற்படுத்தி, வர்த்தகத்தை மேற்கொள்கின்றன."

வேல்யூ ஆடேட் சர்வீஸ்' எனக் கூறி, கட்டணத்தை வசூலித்தும் விடுகின்றன. எனவே, மொபைல் போன் பயன்படுத்தும்போது, தேவையான விஷயங்களை மட்டும் தேடுங்கள். குப்பைகளை கிளறினால், பழுத்து விடும் பர்ஸ்...!"இந்த சர்வீஸ் மெசேஜ் வசதி வேண்டாம், நிறுத்துங்கள்' என,கூறினாலும் நிறுத்தப்படுவதில்லை.

தொல்லை தொடர்ந்து கொண்டேஇருக்கும்.இதே போன்று மொபைல் எஸ்.எம்.எஸ்.,களில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள், பொருட்களை விளம்பர படுத்த தொல்லை எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவதுண்டு. இவற்றையும் தடுக்க முடியாது.

இவையெல்லாம் தவிர, பண்டிகை காலங்களில் எஸ்.எம்.எஸ்., கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி விடுகின்றன. வாழ்த்து இல்லாமல், அவசரத்திற்காக அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,கூட இந்த நாளில் அதிகம் தான்.

தகவல் : தினமலர்

8 Oct 2009

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது.

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

-Dr.M.Sathick

24 Sept 2009

நீண்ட நாள் வாழ 15 வழிகள்!!

நாள் வாழ் நிறைய வழிகள் உள்ளன. நம் வாழ்வை நாமே கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்!


என்ன செய்தால் நீண்ட நாள் வாழலாம்.


சிலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளேம்!

1. நடுத்தர வயதுடைய நீங்கள் வாரம் 5 மணி நேரம் ஓடுகிறீர்களா? அப்படியானால் வயதானாலும் உங்களுக்கு உடல் வலிவுடன் இளமையும் சிந்தனைத் திறனும் இருக்கும். இதயக் கோளாறுகள், புற்றுநோய், நரம்பு வியாதிகள் வருவதும் குறைகிறது.

2. நார்ச்சத்துள்ள பழங்களை அதிகம் உண்ணுகிறீர்களா? உங்கள் கெட்ட கொழுப்பு குறையும், உடல் எடையையும் குறைக்கலாம். உடலில் இன்சுலின் சுரப்பும் நன்றாக இருக்கும்.

3. உங்களை நீங்கள் இளமையாக நினைத்துக் கொள்கிறீர்களா? உங்கள் எண்ணமே உங்களுக்கு சவால்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் மனதைக் கொடுக்கும். உடலும் நீங்கள் சொல்வதைக் கேட்கும்!

4. நவீன தொழில் நுட்பத்தில் ஆர்வமுடன் இருக்கிறீர்களா? பிளாக்கர், ட்விட்டர், ஃபேஸ்புக், ஸ்கைப் ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கு கொள்ளுங்கள். குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய செய்திகளை தெரிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருங்கள். இது உங்கள் மூளையைப் புத்துணர்ச்சியுடன் இருக்கச்செய்யும்.

5. உங்கள் உணவில் கவனம் செலுத்துகிறீர்களா? 1400-2000 கலோரிக்குள் தினமும் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உங்கள் இதயம் உங்களை விட 15 வயது இளையவர்களைப்போல் வலுவுடன் இயங்கும்.

6. மீன்களையும், கொட்டைகளையும் சாப்பிடுங்கள்! இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு என்ற நல்ல கொழுப்பு இருப்பதால் இவை உடலுக்கு நல்லது! இவை ரத்த நாளங்கள் பழுதாவதைத் தடுக்கின்றன!

7. முழுதானிய உணவை உண்ணுங்கள்! இவற்றில் விட்டமின் ஈ, நார்ச்சத்து அதிகம்! முழு கோதுமை ரொட்டி, பஸ்தா, போன்றவை புற்றுநோயைக்கூடத்தடுக்கும்!!

8. 100-200 முறை சிரித்தால் அது பத்து நிமிடம் ஜாகிங் செய்ததற்கு சமம் !! உண்மைங்க! அது உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைக்குறைத்து உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

9. ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்க வேண்டாம்! அதே போல் நான்கு மணி நேரத்துக்குக் குறைவாகவும் தூங்கக்கூடாது! இந்த வகைத் தூக்கம் உள்ளவர்களில் இறப்பு அதிகம்!

10. நீண்ட மண வாழ்க்கை ஆயுளைக் கூட்டும். ஆண் பெண் இரு பாலருக்குக் இது பொருந்தும்.

11. தாய் தந்தையருடன் நெருக்கமாக இருக்கும் பிள்ளைகளுக்கு கொடிய நோய்கள் - இரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் வருவது குறைவாம்!

12. உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு ஏதாவது விளையாடுங்கள்! செஸ், சீட்டு, கேரம் என்று பிடித்த விளையாட்டை விளையாடுபவர்கள் உடல் நலமுடன் இருக்கிறார்களாம்!

13. பச்சைத் தேயிலை டீ, கருப்பு டீ ஆகியவற்றில் இதயநோய் தடுக்கும். ஆகையால் தினம் ஒருமுறை சாப்பிடுங்கள்! குறிப்பாக மாரடைப்பு வந்தவர்கள் இதனை அருந்தினால் 28% அதிகம் உயிர் வாழ்கிறார்கள்!

14. ஆபீஸ் வேலையை வீட்டுக்குக் கொண்டு செல்லாதீர்கள். ஆபீஸ் வேலையை டென்சனை அங்கேயே விட்டுவிடுங்கள்! அதிக டென்ஷன் உங்களை சீக்கிரம் முதுமையடையச்செய்யும்!!

15. நாய், பூனை, மீன் என்று ஏதாவது வளருங்கள்! வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைகிறதாம்!

நிறைய நாம் படித்தவைதான். மீண்டும் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்வதால் அவற்றை நாம் பயன்படுத்தி நீண்ட நாள் வாழலாமே!!

22 Sept 2009

திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் .......

திருமணத்திற்கு முன் ...... திருமணத்தின் பின் .......

திருமணத்திற்கு முன்

அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது ?
அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..
அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..
அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?
அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…
அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?
அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….
அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?
அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…
அவள் : என்னை அடிப்பீர்களா?
அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!
அவள் : நான் உங்களை நம்பலாமா?
அவன் : ம்ம்ம்.
அவள் : அன்பே…!

திருமணத்தின் பின்….

அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்

19 Sept 2009

துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!

பாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் & பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே..! வலிக்கலியே...! என்று கத்துவார், அதுபோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு.

அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும். ஆனால் தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடம் பேசும் பொழுதோ அதே “வலிக்கவில்லை” கதைதான்.

ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும், வெளிநாட்டில் இருந்து பலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும்

ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.

என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக், எம்மார், அராப்டெக், போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.

கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.

வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.

சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.

இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது.

அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை, வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது.

பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம், ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.

தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.

கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் “உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லது வேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்” என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.

வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டு விட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டது என்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.

இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.

டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!

-குசும்பன்

17 Sept 2009

செல்போனா? கவனம் நம் குழந்தைகள்!

விஞ்ஞான வளர்ச்சியின் இக்கால அற்புத கண்டுபிடிப்பில் ஒன்று தான் செல்போன். எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் உள்ளது போன்று, இக்கருவியிலும் நன்மையும் தீமையும் உள்ளது. நல்ல முறையில் பயன்படுத்தினால், செல்போனும் நமக்கு நன்மையே!

ஆனால், வளர்ச்சியின் வேகத்துக்கு ஏற்ப, சந்தைகளில் அறிமுகமாகும் புதுப் புது ரக செல்போன்களால் வளரும் இளம் தலை முறையினரிடையே குற்றச் செயல்களும் தவறான பழக்க வழக்கங்களும் அதிகரித்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்த சம்பவம் நடந்தது.

மாணவர்களை போலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் மிஸ்டு கால் கொடுப்பதும் அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி அதன் பின்னர் மிரட்டத் துவங்குவதும் தெரியவந்தது.

நாடு முழுவதும் தற்போது இந்தச் செல்போன்களால் பெண் குழந்தைகளுக்குப் பல்வேறு ஆபத்துகள் சூழ்ந்துள்ளதை மறுப்பதற்கில்லை. மேற்கூறியது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று எண்ணற்ற குற்றச்செயல்கள் இன்று செல்போன்களின் துணை கொண்டு நடைபெறுகின்றன.

பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னா பின்னமாகின்றனர். இதனைப் பெரும்பாலும் பெற்றோர்களோ, குழந்தைகளின் பாதுகாவலர்களோ அறிவதில்லை என்பது தான் மிகப் பெரும் பரிதாபம்!

நம் குழந்தைகளை இது போன்ற ஆபத்துகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான வழி என்ன?

சமீபத்தில் ஒரு தினசரியில் இதற்கான தீர்வைக் குறித்து மனநல டாக்டர் பெரியார் லெனின் அவர்களிடம் கேட்டபோது அவர் கீழ்கண்டவாறு பதில் கூறியிருந்தார்:

"சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன.

இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் இருக்க பெண்கள் கண்டிப்பாக தெரியாத மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பொதுவாக பள்ளி மாணவிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான மாணவிகளை, பெற்றோர்கள் நன்கு கவனித்து கொள்ள வேண்டும்.

மாணவிகள் வீட்டில் அரவணைப்பு மற்றும் ஆறுதலுக்கு யாரும் இல்லை என கூறி எளிதில் இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கிவிடுவர். பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர்.

தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. தொடர்ந்து யாரேனும் மிரட்டினால் தைரியமாக போலீசாரிடமோ, மனநல டாக்டர்களையோ அணுகினால் வெளியே தெரியாமல் மிரட்டுபவர்களை எச்சரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக மிரட்டுபவர்கள் பயந்து கொண்டு பதில் தருபவர்களைத்தான் மீண்டும் மீண்டும் மிரட்டுவர்.

எனவே, பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வெளிநபர்களின் தவறான அணுகுமுறையை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்".

மனநல மருத்துவர் கூறிய ஆலோசனைகளில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள் உள்ளன.

1. பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது.

2. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர்.

3. தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

தேவையின்றி பெண் குழந்தைகளுக்கு மொபைல் போன்களை வாங்கித் தருவதைத் தவிர்ப்பதன் மூலம் செல்போன் மூலமாக வரும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் நம் பெண் குழந்தைகளைக் காத்துக் கொள்ள இயலும்.
குழந்தைகளின் குணம் என்பது, தம் பெற்றோர்களின் பழக்க, வழக்கங்களை ஒத்து வளர்வதாகும்.

பெற்றோர் சிறந்த ஒழுக்கங்களைக் கடைபிடிக்கும் பட்சத்தில் பெரும்பாலும் அவர்களின் குழந்தைகளும் நல்ல பழக்க, வழக்கம் உடையவர்களாகவே இருப்பர். அவசர, அவசியம் கருதி செல்போன் வைத்திருக்கும் குழந்தைகளிடம் அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அனாவசிய மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் களைத் தவிர்ப்பது குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்.

இவற்றின் மூலம் பெரும்பாலான ஆபத்துகளிலிருந்து தம் குழந்தைகளைப் பெற்றோர் பாதுகாத்துக் கொள்ள இயலும். குழந்தைகளை வளர்ப்பது என்பதும் அவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்பித்தல் என்பதும் இஸ்லாத்தில் மிக முக்கிய செயலாக ஊக்கிவிக்கப்பட்டவைகளாகும்.

உங்கள் பிள்ளைகளை சிறந்த முறையில் நடத்துங்கள். அவர்களது பழக்கவழக்கங்களை செம்மைப்படுத்துங்கள். ஏனெனில் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவர்களாகும். (இப்னு மாஜா)

எந்தவொரு பிள்ளைக்கும் அவரது பெற்றோர் அழகிய நல்லொழுக்கத்தைவிட எதனையும் சிறப்பாக கொடுத்து விட முடியாது. (புகாரி)

மேலே குறிப்பிட்ட இரு ஹதீஸ்களும் குழந்தை வளர்ப்பு பற்றி தெளிவாக கூறுகிறது.

1. வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, விடுதியில் போன் வசதி இல்லாமல் போனால்,

2. வெளியூருக்குச் செல்லும் ஆண் குழந்தைகளுக்கு அவசரத்துக்கு உதவ இதைப் போன்ற தருணங்களில் அவசியம் நிமித்தமாக மொபைல் போனை பிள்ளைகளுக்குத் தரலாம். அதுவும் வயது வந்த குழந்தைகளுக்கு மட்டுமே தர வேண்டும்.

எந்த ஒரு தருணத்திலும் நாம் தான் மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டோமே என்று தம்முடைய வேலைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டு விடலாகாது.

அவர்களின் மொபைலில் என்ன எஸ். எம். எஸ் வருகிறது?, பதிவாகியுள்ள தொலைபேசி எண்கள் யாருடையவை? போன்றவற்றை அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும். சம்பந்தம் இல்லாத பெயர்களில் அவர்களின் மொபைலில் அழைப்புகள் பதியப் பட்டிருந்தால், தயங்காமல் தம் பிள்ளைகளிடம் அது யார் என்று கேட்டு விடவேண்டும்.

செல்போனினால் வரும் பிரச்சனைகளை வெளிப்படையாக தயங்காமல் தம் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எடுத்து கூறி அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.

முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிகமாக நேரம் ஒதுக்கி, அவர்களின் விஷயங்களில் பெற்றொருக்கு இருக்கும் ஆர்வத்தையும் கவனத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறு செய்தால் அவர்கள் தனியாக இருக்கும் வாய்ப்பை தடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களைத் தீய எண்ணங்களின் பக்கம் செல்லாமலும் தடுக்க முடியும்.

சில பெற்றோர்கள் தம் வீடுகளில் குழந்தைகளுக்குத் தனியாக அறை ஒதுக்கி அவர்கள் படிப்பதற்கு வசதி செய்து கொடுக்கின்றனர். இதில் தவறில்லை. ஆனால், அவர்களுக்கு உரிய வசதிகளைச் செய்துக் கொடுத்து விட்டு, இனி எல்லாம் அவர்கள் கையில் என, மேற்கொண்டு அவர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்காமல் விட்டு விடுவது மிகப் பெரிய தவறாகும்.

இவ்வாறு அதிகப்படியான வசதிகளைத் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக செய்து கொடுக்கும் பெற்றோர்கள், அவர்களின் நடவடிக்கைகளைச் சீராக கண்காணித்து வர வேண்டியது கடமை என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.

சில வீடுகளில் தொலைகாட்சி சீரியல்கள் பெரியோர்களை மட்டுமன்றிக் குழந்தைகளையும் சீரழிக்கின்றது. இவர்கள் தாங்கள் கண் விழிப்பதோடு குழந்தைகளையும் கண் விழிக்க செய்கிறார்கள். இதில், சீரியல் முடிந்தவுடன் அதைப் பற்றி டிஸ்கசன் வேறு சில வீடுகளில் நடக்கிறது.

அவன் அப்படி செய்திருக்கலாம், இவள் ஏன் இப்படி செய்தா, அவன் அந்த வேலையில் சேர்ந்திருக்க கூடாது என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த சீரியல்களை பார்த்து தான் பெண் குழந்தைகள் அதிகம் பேர் கெட்டுப் போகிறார்கள்.

புது சினிமா வந்து விட்டால் அதை உடனே வாங்கி வீட்டில் ஆண், மற்றும் பெண் குழந்தைகளோடு பார்க்கிறார்கள். அதில் முகத்தைச் சுழிக்கக் கூடிய வசனம் வந்தாலும், அன்னிய ஆணும் பெண்ணும் கட்டிப் புரண்டு கூத்தடிக்கும் பாடல் காட்சிகள் வந்தாலும் அவற்றைக் குறித்து எவ்வித வெட்க உணர்வும்

இன்றி, தாய், தந்தை, குழந்தைகள் என குடும்ப சகிதமாக நாணம் கெட்டுப் போய் பார்த்து ரசிக்கின்றனர். "வெட்கம் ஈமானில் பாதியாகும்" என்று திருத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகள் அங்கு காற்றில் பறப்பதைக் குறித்து இவர்களுக்கு எவ்வித உணர்வும் இல்லை.

பெற்றோர்கள் இவ்விதம் செயல்பட்டால், குழந்தைகள் பெற்றோரின் வழியிலேயே வெட்க உணர்வின்றி வளர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இந்த சீரியல்களும், சினிமாக்களும் அதில் செய்யும் புது புது உத்திகளும் பிள்ளைகளின் மனதை எளிதில் கவர்ந்து கெடுத்து விடுகிறது. அதில் செல்போன்களை வைத்து என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று எல்லா தீய செயல்களையும் காண்பித்து விடுகின்றனர்.

இவற்றைக் காணும் குழந்தைகள், அதனைப் போன்றே செய்வதற்குத் தலைபடுகின்றனர். சினிமாவில் வரும் நடிகர்கள் போன்று தன்னுடைய உடைகளை மாற்றி கொள்வது, அவர்களைப் போன்று அலங்காரம் செய்து கொள்வது மற்றும் அவர்களைப் போன்று தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றி கொள்வது என்று இன்றைய ஆண், பெண் பிள்ளைகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இத்தகைய சீரழிவுகளிலிருந்து தம் பிள்ளைகளைக் காப்பதற்கு, முதலில் பெற்றோர் தம்மை மாற்றிக் கொள்ள தயாராவதே ஒரே வழி!மற்றொரு முக்கியமான விஷயம், பிள்ளைகளின் நண்பர்களை பற்றிப் பெற்றோர்கள் முழுமையாக அறிந்து வைத்திருப்பதாகும்.

ஆண் பிள்ளைகள் வெளியே சென்று இரவு நீண்ட நேரம் சுற்றி விட்டு வந்தால், அது எவ்வளவு தலைபோகும் விஷயமாக இருந்தாலும் அவர்களைக் கண்டிக்க வேண்டும். இரவு வெகு நேரம் வரை இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் விஷயங்களில் முன்னரே தங்களை அழைத்து விவரம் தெரிவிக்கும் பழக்கத்தை அவர்களைக் கண்டிப்பதன் மூலமாக வளர்த்து விடவேண்டும்.

சினிமா போன்ற வீண், ஆபாச சீரழிவு காரியங்களுக்கு வெளியே செல்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மார்க்க விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தொழுகை விஷயத்தில் கண்டிப்பு அவசியம். குழந்தைகளுக்கு உலக கல்வியை வளர்ப்பதில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு மார்க்க அறிவை வளர்ப்பதற்கும் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளைக் கண்டிக்கும் விஷயத்திலும் அவர்களுக்கு நல்ல விஷயங்களைப் போதிக்கும் விஷயத்திலும் பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்கின்றார்களோ அவற்றை அவர்கள் முதலில் தம்மிடம் சரியாக வளர்த்துக் கொள்வது மிக மிக முக்கியமானது.

தான் சரியாக இல்லாமல், தங்கள் குழந்தைகள் மட்டும் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று கண்டிக்கும் பெற்றோர்கள் மிகப் பெரிய தவறைச் செய்கின்றனர்.

தொழுகயை அந்த நேரத்தில் தொழுதல், செல்போன்களில் அதிக நேரம் செலவிடாதிருத்தல், கேமரா மற்றும் லேட்டஸ்ட் மாடல் போன்கள் (மெமரி கார்டு) உபயோகிப்பதை தடுத்தல், சினிமா மற்றும் சீரியல்கள் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தல், ஆகியவற்றைத் தாம் முதலில் கடைபிடிப்பதோடு அவற்றின் முக்கியத்துவம் குறித்து பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னாலே அவர்கள் அதனைப் புரிந்து செயல்படுத்த முன்வருவர்.

ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் கெட்ட பழக்கம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது என்றும் நல்லொழுக்கம் உடையவர்களாக வளர வேண்டும் என்றே நினைக்கின்றனர்.

அதற்கான முதல் படியாக அனைத்து நல்லொழுக்கங்களையும் தம்மிடமிருந்து செயல்படுத்திக் காண்பிப்பதோடு, அதற்காக செய்யும் முயற்சியில் செல்போன்களுக்கு முதலிடம் கொடுப்போம்.

வரவேற்கத்தகுந்த தேசிய அடையாள திட்டம்

நாட்டு மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்காக பொது பட்ஜெட்டில் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இது தாமதமாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் என்றாலும் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். மேற்கத்திய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்த அடையாள அட்டை நிலவில் உள்ளதால் இந்திய மக்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தியாவிலுள்ள 117 கோடி மக்களுக்கும் இந்த பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை ‘இந்திய சிறப்பு அடையாள அட்டை ஆணையம்’ எனும் ஆணையத்தை அரசு அமைத்ததோடு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை தலைவராக இருந்த நந்தன் நீல்கனியை தலைவராகவும் நியமித்துள்ளது. 12 முதல் 18 மாதங்களுக்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

117 கோடி மக்களுக்கும் இந்த அடையாள அட்டையை வழங்குவது சாத்தியமா என்று அரசு கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய தேர்தலுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் ரேசன் கார்டும் வழங்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் சாத்தியமாகும் போது ஒருங்கிணைந்த அடையாள அட்டை என்பதும் சாத்தியமே.

இந்த அடையாள அட்டை புழக்கத்தில் வந்துவிட்டால் அது நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய பயனை தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு இந்திய குடிமகன் தான் ஒரு இந்தியன் என்பதை நிரூபிக்க பாஸ்போர்ட் தேர்தல் அடையாள அட்டை ரேசன் கார்டு போன்றவற்றை தற்போது பயன்படுத்தி வருகின்றான்.

இதன்றி டிரைவிங் லைசென்ஸம் பயன்படுகின்றன. இதில் மேலே கூறிய பாஸ்போர்ட் தேர்தல் அடையாள அட்டை ரேசன் கார்டு போன்றவற்றை ஒருவர் எப்பொழுதும் தன் கையில் வைத்திருக்கமாட்டார். தேவைப்படும் பொழுது மட்டுமே எடுத்து செல்வார்.

டிரைவிங் லைசென்ஸ் ஒருவரிடம் எப்பொழுதும் இருக்கும் என்றாலும் அதை வாகனம் வைத்திருப்பவர் மட்டுமே வைத்திருப்பார். எனவே எப்பொழுதும் கைவசம் வைத்திருக்கக்கூடிய அடையாள அட்டை என்பது காலத்தின் கட்டாயம்.

இந்த அடையாள அட்டை என்பது இந்திய மக்கள் தொகையை துல்லியமாக தெரிவிப்பதோடு ஆண் பெண் குழந்தைகள் என தனித்தனியாக கணக்கெடுக்க முடியும். மிக முக்கியமாக அந்நிய நாட்டினர் ஊடுருவுவதை தடுக்கும். தமிழக மேற்கு வங்க அரசியல் வாதிகளை போன்றவர்களுக்கு இது வயிற்றில் புளியை கரைக்கும். ஏனெனில் இலங்கை தமிழர்களையும் வங்க தேசத்து மக்களையும் இந்தியாவில் குடியமர்த்தி அரசியல் லாபம் பெறுவது முடியாமல் போகும். எனவே அவர்களை போன்றவர்கள் இதை எதிர்க்கவும் வாய்ப்புண்டு.

இந்த திட்டம் பயனுள்ள ஒரு திட்டமாக இருந்தாலும் இது வெறும் அடையாள அட்டையாக மட்டும் இல்லாமல் அதை தயாரிக்கும் போதே பிற நாடுகளில் இருப்பதை போன்று ஒவ்வொருவரின் கைரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இந்தியாவின் எப்பகுதியில் ஒருவர் திருட்டு கொலை போன்ற குற்றங்கள் செய்தாலும் அவர்களின் கைரேகைகள் மூலமாக குற்றவாளி இவர் தான் என்று 10 நிமிடத்தில் சொல்லிவிட முடியும்.

குற்றம் புரிபவர்கள் தாம் எப்படியும் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோம் எனும் நிலை வரும்போது நாட்டில் குற்றங்கள் குறையும். குண்டுவெடிப்பு நேரங்களில் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலாத போது ஏதாவதொரு முஸ்லிமை பிடித்து இவன்தான் குற்றவாளி என்று கூறி ஃபைலை குளோஸ் பண்ணும் நிலை போலீஸாருக்கு ஏற்படாது.

வளைகுடா நாடுகளில் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு கைரேகையும் எடுக்கப்படுகின்றன. அந்த அடையாள அட்டையின் எண்ணை கம்பியூட்டரில் தேடினால் அவரது முகவரி தொலைபேசி எண் அவர் எங்கு பணி புரிந்தார் எந்த நாட்டை சார்ந்தவர் எந்த தேதியில் வந்தார் எத்தனை வருடமாயிற்று போன்ற ஆதி முதல் அந்தம் வரை உள்ள அவரது அனைத்து விபரங்களும் தெரிந்து விடும்.

இது போன்று நாம் தயாரிக்கும் அடையாள அட்டை இருக்குமானால் பயனுள்ளதாக இருக்கும். விபச்சாரத்தில் ஈடுபட்டு பிடிபடும் போது தாங்கள் கணவன் மனைவி என்று கூறி பெரும்பாலானவர்கள் தப்பித்து விடுகின்றனர். அடையாள அட்டை புழக்கத்துக்கு வந்து விட்டால் இது போன்ற தவறுகளும் தடுக்கப்படும். விபத்துக்கள் ஏற்படும் சமயங்களில் அடையாளம் தெரியாத ஒருவர் மரணமடைந்தார் அல்லது காயமடைந்தார் எனும் பத்திரிகை செய்திகள் குறையும்.

ஒருவர் தன் கைவசம் எப்பொழுதும் அதை வைத்திருப்பதால் அவரை அடையாளம் கண்டு அவரது உறவினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து பாதுகாக்க முடியும். அடையாள அட்டையில் ஒருவருக்கு வழங்கப்பட்ட எண்ணில் வருமானம் முதற்கொண்டு அனைத்து விபரங்களும் அடங்கிவிடுமாதலால் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் தவறானவர்களுக்கு செல்லாமல் உரியவர்களுக்கு மிக சுலபமாக போய் சேரும்.

மொத்தத்தில் இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. முதற்கட்ட பணியில் இது சிரமமாக தெரிந்தாலும் நாளடைவில் அது மிக மிக எளிதானதே. ஒரு குழந்தை பிறந்த உடன் பிறப்பு சான்றிதழ் வழங்கும்போதே அடையாள அட்டையையும் வழங்கிவிடலாம்.

இந்த ஒருங்கிணைந்த அடையாள அட்டையானது குற்றம் புரிபவர்களுக்கு கசப்பானது என்றாலும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இது மிகவும் இனிப்பான செய்தி என்றால் அது மிகையல்ல.

நன்றி: உணர்வு வார இதழ்

1 Aug 2009

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்ககூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்..

வெழுத்த தெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்துவிடுகிறார்கள்.

சென்னையில் இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில்விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.

ஓரக்கண்ணால் பார்த்து... தயங்கி தயங்கி பேசிசத்தமில்லாமல் கடிதம் கொடுத்து... காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்றுகேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு... 3 மாதம் கழித்து அந்த பையனுடன்ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை.

இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை. செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர்.

நேற்று இரவுடி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்துமூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்...

கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னையில் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வட சென்னை மற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது.

காணாமல் போன மாணவிகளை தேடிபார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்” பட காட்சிதான். அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்த மாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு... என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து வளர்த்து... வெயில் படாமல், மழை படாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சுமனது கனப்பதை காணமுடிகிறது.

புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்..

இது குறித்து வட சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,

செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது. டி..வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர்.

எம்.பி. பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது.

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம்நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு!

வட சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு வாரம் 5 புகார்களும், புளியந்தோப்புக்கு 4 புகார்களும், எம்.கே.பி.நகர் போலீசுக்கு 3 புகார்களும், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் முறையே 4 புகார்களும், வருகிறது. குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது.

திடீரென புது புதுஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவுசெய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள்.

படிப்பில் மட்டுமே கவனம்செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடிபோய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்குஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்.

30 Jul 2009

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது !

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதைமறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் (JOHNS HOPKINS) சொல்கிறார்.

இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவைசில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritionaldeficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பைபோன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்கசெய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்புசக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதைதவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின்கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body'sown killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ளபாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்குதவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal,Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாகஇனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாகஇருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்குமாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்

-மிவா துபாய்

25 Jul 2009

இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி

U.A.E அபுதாபியில் வெளிநாடு இந்திய‌ர் ந‌ல‌ அமைச்ச‌க‌த்தின் சார்பில் தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌விடும் நோக்கில் இல‌வ‌ச தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.

வெளிநாட்டு இந்தியர் நலத்துறை அமைச்சகம் இந்த சேவையை வழங்குகிறது. வெளிநாடுக‌ளுக்கு குறிப்பாக‌ வ‌ளைகுடா நாடுக‌ளுக்குச் செல்லும் தொழிலாள‌ர்க‌ள் ஏஜெண்டுக‌ளின் க‌வ‌ர்ச்சியான‌ வாக்குறுதிக‌ளைக் கேட்டு ஏமாந்து விடுகின்ற‌ன‌ர்.

இத‌ன் கார‌ண‌மாக‌ ம‌னைவியின் ந‌கைக‌ள், சொத்து உள்ளிட்ட‌வ‌ற்றை விற்று பிழைப்பு தேடி வ‌ரும் இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து அறியாமையின் கார‌ண‌மாக‌ ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இத்த‌கைய‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்திம் வ‌கையில் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.

மேலும் இந்த‌ சேவையின் மூல‌ம் ஏமாற்றும் ஏஜ‌ண்டுக‌ள் குறித்தும் புகார் த‌ர‌லாம். த‌ற்பொழுது ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், குவைத்,ச‌வுதி அரேபியா உள்ளிட்ட‌ வ‌ளைகுடா நாடுக‌ளில் ப‌ணிபுரியும் தொழிலாள‌ர்க‌ள் 800 091 202 53 என்ற‌ இல‌வ‌ச‌ தொலைபேசி எண்ணில் வார‌த்தின் ஏழு நாட்க‌ளும், 24 ம‌ணி நேர‌மும் தொட‌ர்பு கொள்ள‌லாம்

17 Jul 2009

பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர்

மனித வாழ்விற்கு அடிப்படை தேவைகளாக இருப்பவை உணவு, நீர், உடை, இருப்பிடம் முதலியவை. உணவும், நீரும் அத்தியாவசிய தேவையாகும்.

சத்தான உணவும், தூய்மையான நீரும்தான் ஆரோக்கிய மனிதனை உருவாக்கும். வளரும் நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுகளில் குடிநீருக்காக நாட்டுக்குநாடு போரிட வேண்டிய நிலை உலகளவில் ஏற்படலாம் என அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக மக்கள் தொகையில் இரண்டாம் நிலையில் உள்ள நம் நாடு பெருமளவில் குடிநீர் தேவையை எதிர்கொண்டு வருகிறது. இந்த நீர் தேவையை நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் மூலம் பெற்று வந்தோம். மக்கள் தொகை அதிகரிப்பால் காடுகளையும், நீர்நிலைகளையும் அழித்து மக்கள் வாழ இருப்பிடங்களை ஏற்படுத்திவிட்டோம்.

மேலும் சில ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்றியும் காணாமல் போய்விட்டன. ஆறுகள் எல்லாம் காய்ந்துவிட்டன. புயல் மழைக் காலங்களில் நீரை சேமிக்க இயலாமல் கடலில் கலக்கின்றன. மேலும் ஆற்றுப் பகுதி அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்து கழிவு நீர் சாக்கடைகளாக மாறியுள்ளன.

இப்படி பல வகைகளில் நீர் மாசடைவதால் மக்களுக்கு தூய்மையான குடிநீர் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. இந்த சுகாதாரமற்ற நீரால் மக்களை பலவிதமான நோய்கள் தாக்குகின்றன. நீரால் ஏற்படும் நோய்களைத் தடுக்க நீரை நன்கு கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும் என்று சுகாதாரத்துறையும், மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்.

இன்றைய அவசர கால நிலையில் எப்போதும் காய்ச்சிய நீரைக் கொண்டு செல்வது என்பது இயலாத ஒன்று. இத்தகைய அசாத்திய நிலையில்தான் சில நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரான மினரல் வாட்டர்களை விற்பனைக்கு கொண்டுவந்தன.

இத்தகைய குடிநீர் பெரிய பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஆரம்பத்தில் விற்கப்பட்டு வந்தது. இது சாமான்ய மக்களுக்கு பயன்படாமல் இருந்துவந்தது. இதற்குக் காரணம் இவற்றின் விலைகளே. இதைப் பயன்படுத்தி சிறு பாக்கெட்டுகளில் 200 மி.லி தண்ணீரை அடைத்து விற்பனை செய்தனர்.

இந்த நீர் மக்களிடையே மிகவும் பிரபலமானதால் சில மோசடி பேர்வழிகள் சரியாக சுத்திகரிக்கப்படாத தூய்மையற்ற குடிநீரை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இந்த நீர் குடிக்க தகுந்ததா என்று சோதித்துப் பார்த்தால் சுகாதாரமற்ற குடிநீராக இருக்கிறது.

வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அதிகம்பேர் இந்த நீரையே வாங்கி அருந்துகின்றனர். இந்த குடிநீரால் டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், காமாலை நோய்கள் மற்றும் ஜலதோஷம், ஈரல் பாதிப்பு என பலவகையான நோய்களுக்கு இந்த நீர்தான் முக்கிய காரணமாக அமைகிறது.

எது தூய்மையான நீர் என்பதை சாதாரண மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அரசும் ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட நீரே தூய்மையான நீர் என அறிவித்து போலியான நிறுவனங்களை கண்டறிந்து மூடியது. இருந்தும் கள்ளச் சந்தையில் போலி தண்ணீர் பாக்கெட்டுகள் அதிகம் விற்பனையாகிறது.

குறிப்பாக மதுபானக் கடைகளில் விற்கப்படும் குடிநீர்கள் தரமற்றவையாக இருக்கின்றன. இப்படி பாக்கெட் நீரை அருந்துவதை தவிர்த்து, சிரமம் பாராமல் வீட்டிலிருந்து நீரை எடுத்துவருவது மிகவும் நல்லது.

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி குடிக்க வேண்டும். கொதிக்க வைக்காமல் சிலர் இலேசாக சூடானவுடன் நீரை அருந்துகின்றனர். இளஞ்சூட்டில் நீரில் உள்ள கிருமிகள் அழியாது. நன்கு கொதிக்க வைத்தால்தான் கிருமிகள் அழியும்.

நீரினை கொதிக்க வைக்கும்போது அதில் சிறிது சீரகத்தை கலந்து கொதிக்க வைத்து அருந்துவது மிகவும் நல்லது. பிளாஸ்டிக் குடங்களில் அதிக நாட்கள் நீரை சேமித்து வைப்பது நல்லதல்ல. முடிந்தவரை மண்பானைகளில் நீரை வைத்து பருகுவது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட நீர் நிரப்பிய கேன்களை நன்கு பரிசோதித்து வாங்குவது நல்லது. அந்த நீரில் ஏதும் மாசுக்கள் இருந்தால் தண்ணீர் நிறுவனத்திற்கு தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் சென்று புகார் செய்ய வேண்டும்.

இதற்கு எல்லாம் நேரம் இல்லையென்றும், நீதிமன்றத்தில் புகார் கூறினால் அடிக்கடி அழைப்பார்கள் என்றும் சிலர் ஒதுங்கிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒதுங்கிச் செல்வதால் அனைத்திலும் போலிகள் புகுந்து விளையாடுகின்றன.

இந்த நிலையை அன்றே உணர்ந்த சித்தர்கள் குடிக்கும் நீரை குப்பியில் அடைத்துகூவிக் கூவி விற்பான் - என்றார். அது உண்மையாகப் போய்விட்டது. நாம் உடலைப் பாதுகாக்க தூய்மையான நீரும் அவசியம் என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்பட்டு போலி குடிநீர் பாக்கெட்டுகளை தவிர்ப்போம்.

- நக்கீரன்

14 Jul 2009

சில நாட்டு மருந்து மருத்துவ பலன்கள்

வாய் நாற்றமா ? பல்வலியா? பல்லீறுகளில் இரத்தமா ?

செய்முறை :

கீழாநெல்லிக்கீரையை மென்று பல்விளக்கி வர தீராத வாய்நாற்றம், பல்வலி தீரும்.

குறிப்புகள் :

1, தினமும் ஏராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. உணவு உண்டபின் நன்றாக பல் துலக்க வேண்டும்.
3. இரவு அதிக நேரம் கண் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

செய்முறை : 2

அதிமதுரம் - 50 கிராம், நன்னாரி - 50 கிராம், சந்தனம் 20 கிராம், திரிபலைத்தோடு 10 கிராம், ஏலம் - 5 கிராம், இவற்றை நன்றாக தூள் செய்து ஒரு கரண்டி வீதம் எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்கவைத்து, காலையில் வெறும் வயிற்றிலும், இரவு சாப்பாட்டிற்கு பின்னரும் சாப்பிட்டு வந்தால் கீழ்கண்ட நோய்கள் தீரும்.

1. வாய் நாற்றம்
2. குடல் புண்
3. வயிற்றுப்புண்
4. வயிற்றுவலி
5. குமட்டல்
6. வாந்தி
7. பித்தம்
8. பசியின்மை, ருசியின்மை

இது சிறுநீரக கற்கள், கல்லீரல் கற்கள் தோன்றாமல் தடுக்கும். மிகச்சிறந்த மருந்து, தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

கொழுப்புணவா? இதோ உடனடி மருந்து

பொதுவாக கொழுப்புச்சத்து மிகுதியாவது உடலுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். எனினும் இரண்டு மூன்று திருமணங்கள் பிரியாணி. சிக்கன் - மட்டன் என வந்துவிட்டது... என்ன செய்வது வேறு வழியில்லை... மனமும் சும்மா இருக்கவில்லை. சாப்பிட்டு விட்டோம் என்றால் உடனே இந்த மருந்துணவை மறக்காமல் சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

செய்முறை : 1

இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 இதழ்
கறிவேப்பிலை - 5 இலை
நல்லமிளகு 3 எண்ணம்.

இவற்றை நன்றாக அரைத்து வெந்நீரில் கலக்கி குடித்துவிடவும்.

செய்முறை : 2

இஞ்சி, பூடு, காந்தாரிமிளகு (அ) நல்லமிளகு, உப்பு சேர்த்து துவையலாக செய்து விழுங்கி வெந்நீரில் குடித்துவிடவும்.

செய்முறை : 3

இஞ்சி, பூண்டு இரண்டையும் சிறு அளவு எடுத்து சீனி சேர்த்து வெந்நீரில் ஜுஸாக கலக்கி குடித்து விடவேண்டும்.இப்படி ஏதேனும் ஒன்றை செய்துகொண்டால் அந்த உணவின் கொழுப்புத்தன்மை நம் உடலை பாதிக்காமல் இருக்கும்.

நன்றி : keetru.com

10 Jul 2009

வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் !

செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன.

செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள். இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது.

அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள். அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.

சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது.

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலு முள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.

“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.

போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.

இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.
இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன.

உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.

சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.

நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?

1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.

3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.

4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.

5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.

8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.

10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.

11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !

12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.

13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.

14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.

எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டு மொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

7 Jul 2009

ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா ?

உடல் எடை என்பது இன்றைய நாகரீக, பரபரப்பான உலகில் பல இன்னல்களைத் தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

பொதுவாக நாம் உண்ணும் உணவில் அடங்கியுள்ள கொழுப்புச் சத்துகளும், தேவையற்ற சத்துகளும் உடலில் ஏற்படும் ஜீரண வேதி மாற்றத்தால் முழுவதுமாக எரியாமல் உடலின் ஓரிடத்தில் தங்குவதாலோ அல்லது தேவையற்ற பகுதிகளில் தசையோடு சேர்வதாலோ தொப்பை உள்ளிட்ட உடல் குண்டு தோற்றம் ஏற்படுகிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளையும், அசைவ உணவுகளையும் அதிக அளவில் உண்பதால் உடல் எடை பெருத்து, பார்ப்பதற்கு அசிங்கமான தோற்றத்தைத் தருகிறது. சரி, உடல் எடையைக் குறைத்து `ஸ்லிம்' ஆக இருப்பது எப்படி? என்பதற்கு சில யோசனைகளை இங்கே தந்துள்ளோம்.

அதற்காக இதைப்படித்து விட்டாலே உடல் எடை குறைந்து விடும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள்(!). படித்த கையோடு, உருப்படியான திட்டங்களை வகுத்து, அதற்கேற்ப உணவுப் பழக்க முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

விரைவில் நீங்களும் `ஒல்லிக்குச்சி உடம்பை' பெற்று விடுவீர்கள். 2030ஆம் ஆண்டு வாக்கில், உலக அளவிலான மக்கள் தொகையில் 58 விழுக்காட்டினர் குண்டான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள் என்று அமெரிக்காவில் வெளியான ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாம்.

அந்த 58 விழுக்காட்டினர் என்பது இந்த கட்டுரையால், ஒரு விழுக்காடு குறைந்தாலும் மகிழ்ச்சியே. உங்களை அதிக உடல் எடையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், குண்டாக இருப்பவர்கள், உடல் எடையை குறைப்பதற்கும் சில யோசனைகள் இதோ...

1. பொதுவாக எந்தவகை உணவாக இருந்தாலும், அது உங்களுக்கு மிகவும் பிடித்த உணவானாலும் சரி, வயிறு புடைக்க சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இதுவே பாதியளவு உடல் கோளாறுகளைத் தவிர்க்கக் கூடியது. வயிற்றில் பாதியளவு உணவு, கால் பாகம் தண்ணீர், கால் வயிறு காலியாக இருத்தல் வேண்டும்.

2. கூடியவரை குறித்த நேரத்தில் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்தல் அவசியம். காலை உணவு 8.30 - 9.00 மணிக்குள். மதிய உணவு 1.30 - 2.30 மணி. மாலையில் 2 பிஸ்கட் உடன் தேநீர் ஒரு கப். இரவில் கூடுமானவரை 9 மணிக்கு முன் உணவு உண்டு, அரைமணி நேரமாவது விழித்திருக்க வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கச் செல்வதைத் தவிருங்கள். மேலும் இரவு நேரத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நலம்.

3. வயதிற்கேற்ற உணவுப் பழக்கமுறை: 25 வயது வரை ஆண்/பெண் இருபாலருக்குமே ஜீரண சக்தி சீராக இருக்கும் என்பதால், எந்தளவு கடினமான உணவுகளையும் செரிக்கக்கூடிய வகையில் உடல் உறுப்புகள் செயலாற்றும். 25 வயதைத் தாண்டி விட்டாலே, அசைவ உணவுகளை குறிப்பிட்ட ஒருநாளில், ஒரு வேளையோ அல்லது இரு வேளையோ என திட்டமிட்டு, ஓய்வு நேரத்தில் சாப்பிடுவது நலம். அசைவ உணவு சாப்பிடும்பட்சத்தில், அவை ஜீரணமாவதற்குத் தேவையான பொருட்களை போதிய அளவு சேர்த்துக் கொள்தல் நலம்.

4.முப்பது வயதைக் கடந்து விட்டவர்கள், அசைவ உணவு சாப்பிடும் பட்சத்தில் முறையான அணுகு முறையைக் கடைபிடித்தல் வேண்டும். வயது ஏற, ஏற ஜீரண உறுப்புகளின் செயல்பாடு ஓரளவுக்கு குறையத் தொடங்கும். 40 வயதைக் கடந்தவர்கள் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை இரவில் சாப்பிடுவதால், உடல் எடைபோடுவதைத் தவிர்க்கலாம்.

5. சரி, குண்டாக இருப்பவர்கள், சாப்பாட்டைக் குறைக்க வேண்டுமா? அப்படி திடீரென்று சாப்பிடும் அளவைக் குறைப்பவர்களுக்கு சக்தி இழப்பு (Energy loss) ஏற்பட்டு சோர்வு உருவாக வாய்ப்புள்ளது. எனவே உடலுக்குத் தேவையான சக்தியை கொடுக்கக்கூடிய, அதே நேரத்தில் உடல் எடையைக் கூட்டாத உணவு வகைகளாகச் சாப்பிடலாம். இதனால் சோர்வு ஏற்படுவதில் இருந்து எப்போதும் புத்துணர்ச்சியுடன் திகழ முடியும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பழங்களையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

6. காலையில் காபி, டீ பானங்களுக்குப் பதிலாக இளநீர், பதநீர், அருகம்புல் சாறு, நீராகாரம் போன்றவற்றை அருந்துங்கள். இளநீர் உடல் சூட்டைத் தணிப்பதுடன், அருந்திய சில நிமிடங்களிலேயே சிறுநீரக எரிச்சலைப் போக்கி, ஜீரணத்தை எளிதாக்குகிறது.

7. உடல் பருமன் உள்ளவர்கள் காலைநேரத்தில் இட்லி, இடியாப்பம், புட்டு, ஓட்ஸ் கஞ்சி போன்ற நீராவியில் வேகக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

8. மதிய உணவாக ஒருபிடி அரிசி சோற்றுடன், காய்கறிகள் குறிப்பாக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொறித்த அல்லது வதக்கிய காய்கறிகளை தவிர்த்தல் சிறந்தது. சிறிதளவு தயிரும் எடுத்துக் கொள்ளலாம்.

9. மாலையில் 2 அல்லது 3 பிஸ்கட் உடன் தேநீர் அருந்தலாம்.

10. இரவு உணவில் அவசியம் சப்பாத்தி, கோதுமையால் ஆன உணவு வகைகள் சாலச் சிறந்தது. கேழ்வரகுக் கஞ்சி, அடை போன்றவையும் கொழுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யாது.

உடல் பருமன் கொண்டவர்கள் இதேபோன்ற உணவுப்பழக்க முறைகளை குறைந்தது 2 மாதத்திற்குக் கடைபிடிப்பீர்களானால், அப்புறமென்ன, நீங்களும் `ஒல்லிக்குச்சி உடம்புக்காரர்கள்தான்...'

- மிவா

6 Jul 2009

மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்

சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.

வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம். உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.

ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.

உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது ? ஓய்வின்போது வலி குறைகிறதா ? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது ? என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.

மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:

நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.

ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது போல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும். அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம்..

இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

- மிவா

29 Jun 2009

நம் தலைமுடியை பாதுகாக்க....

தழையத் தழைய தலைமுடி உள்ள பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை “பாப்’ செய்யும் பழக்கம் வந்து பத்தாண்டு மேலாகி விட்டது.

இப்போது பேஷன், பிஞ்சுக்குழந்தைகளுக்கு கூட, “கலரிங்’ போடுவது தான். பள்ளி, கல்லூரி மாணவிகளை கேட்கவே வேண்டாம் “கலரிங்’ முதல், கண்டிஷனர் வரை, சந்தையில் எதெல்லாம் புதிது புதிதாக வருகிறதோ, அவற்றை எல்லாம் வாங்கி பயன் படுத்துவது பேஷனாகி விட்டது.

இதையெல்லாம் தடுக்க வேண்டிய பெற்றோர்களும், உறவினர், நண்பர்களும் கூட அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.

ஒருவரின் தலையில் சராசரியாக அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப் வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு, கலரிங் செய்வது போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.

மிதமான நீரில் தான் குளிக்க வேண்டும் அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி என்பது, “எலாஸ்டிக்’ தன் மையுள்ளது மிகவும் மிருதுவானது. லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அதனால் வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாளவேண்டும்.

ஷாம்புவில் உஷார்:

விலை மலிவானது, புதிதாக வந்தது என்று சில காரணங்களால் அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அது தான் தலை முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் ஷாம்புவை பயன்படுத்தும் போது, உச்சந்தலையில் ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்யவேண்டும்.

நரைமுடி வருவதேன்?:

நரை முடி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்குநரை முடி வளர ஆரம்பிக்கும். நரை முடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது. எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.

கருகரு முடிக்கு காரணம்:

தலைமுடி கருகரு வெனவளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது. அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது. நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கண்ட ஆராய்ச்சிகள் இது வரை பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி “கலரிங்’ செய்வதுதான்.

“ஹேர் டய்’ அலர்ஜி:

தரமான “ஹேர் டய்’ வாங்கி பயன்படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்துவிட்டனர். இதனால், தலைமுடிக்கு தான் பாதிப்பு என்பதை அவர்கள் உணரவேண்டும். கண்ட கண்ட “ஹேர் டய்’யில், “பாரா பெனிலின் டயாமின்’ என்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

ஹென்னா பயன்படுத்தினால் :

மருதாணி தான்“ஹென்னா’ என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் சிவப்பு சாயம் இருக்கிறது. அது தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை பேஸ்ட்டாக பயன்படுத்துவதுண்டு. முன்பெல்லாம் வீட்டிலேயே தயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கப்படுகிறது. பாக்கெட் “ஹென்னா’வில் கலப்படம் காணப்படுகிறது.

இயற்கையான மருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி, தான் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால் கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் “ஹென்னா’ பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.

அடிக்கடி தலை வாரினால்:

அடிக்கடி தலைவாரிக் கொண்டிருக்க வேண்டாம் அப்படி செய்தால், தலைமுடி உதிருவது அதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை தலை வாருவது பரவாயில்லை. ஆனால், அடிக்கடி தலை வாருவது, அழுத்தம் தந்து வாருவது போன்றவை தலைமுடி உதிருவது அதிகரிக்கும்.

மொட்டை போட்டால்:

மொட்டைபோட்டால் உடனே முடி அதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில்பரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால், நுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடிவளரும் நரை போகும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை.

"பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து பாதுகாக்கும்

பால் சேர்க்காத "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் லாகிலா பல்கலைக்கழகம், லிப்டன் தேயிலை நிறுவன ஆதரவுடன் பிளாக் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு சுமார் 33 வயதிலிருக்கும் ஆரோக்கியமான 19 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 5 முறை பால் சேர்க்காத நறுமணப்பொருள்கள் சேர்க்கப்பட்ட தேநீர் கொடுக்கப்பட்டது.

ஒருவாரம் இதேபோல் கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் நாளடைவில் நறுமணப் பொருள்கள் அடங்கிய உணவு, பானங்களை ஒதுக்கிவிட்டு பால் சேர்க்காத தேநீரையே விரும்பி அருந்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

பால் சேர்க்காத தேநீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களின் மீள் தன்மையை அதிகரிக்கின்றன. தினமும் ஒருவேளை பால் சேர்க்காத தேநீர் அருந்தினால் இதயநாளங்கள் வலுப்படும் எனப் பேராசிரியர் கிலாடியோ ஃபெரி தெரிவித்தார்.

உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்களால் அருந்துவது தேநீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

21 Jun 2009

தவிர்க்க கூடாத பத்து உணவுகள் வகைகள்

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்
நாம் தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது.
நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
1. வெள்ளைப் பூண்டு:
பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
2. வெங்காயம்:
வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
3.காரட்:
நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
4. ஆரஞ்சு:
வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
5. பருப்பு வகைகள்:
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
6.கோதுமை ரொட்டி:
நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
7. இறால் மீன் மற்றும் நண்டு:
அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
8. தேநீர்:
தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
9. பாலாடைக்கட்டி:
சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
10. முட்டைக்கோஸ்:
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருத்துவச் செலவு குறைந்துவிடும்.
- கே.எஸ்.சுப்ரமணி

11 Jun 2009

கெண்டகி வறுகோழி - ஒரு அதிர்ச்சி தகவல்!!

கெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது.

மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது. தற்போது நம் ஊரிலும் அதிகம் கடை விரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார்.

புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்க முடியாத முடிவுகள் வந்துள்ளன!

என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை.
அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள்.
ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை. இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு, இறகுகள், கால்கள் கொஞ்சம்தான் இருக்கும்.

கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.

அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!!

அந்தவகைக்கோழிகளின் சில படங்கள் கீழே







இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும்.
மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள்.
அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதை ”கோழி” என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!!
நல்லா யோசிங்க.. கெண்டகி வறுவல் உண்ணும் முன்..
- abidheva