25 Nov 2009

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

விபரங்களுக்கு Click here

http://www.google.com/support/websearch/bin/answer.py?hl=en&answer=35892

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்
பிறகு

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ......

20 Nov 2009

சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை

இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது. இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது. அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன.

நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன. சுவையும் அதிகம். போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது.

உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது. நாம் ஏன் உணவு உண்கிறோம்?

நமது நாளந்த வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே எமக்கு உணவு தேவைப்படுகிறது. நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும், நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை. அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும்.

ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது. தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல நோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிமிக்கிடாமல் கொல்லுகின்றன.

ஆரோக்கியமான உணவு முறை இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும். உணவின் அளவு ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான்.

இதனால்தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.

வெற்றுக் கலோரி வேண்டாம் இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஸாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.

எவை ஆரோக்கியமானவை? உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.

ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும். கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உண்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும். இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற் கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.

புதிய ஆய்வு ஆனால் இப்பபொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும்.

Brigham and Women's Hospital லில் உள்ள

Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும். மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.

எமது சூழலில் அதிகம் எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள். எமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.

வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.

சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.

-எம்.கே.முருகானந்தன்.

13 Nov 2009

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன.

அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.
சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது.

கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.

1. கால்கள்:

சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

2. சிறுநீரகம்:

சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

3. வயிறு, குடல்:

அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

4. மூக்கு:

சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.
5. பல்,ஈறுகள்:

பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

6. கண்கள்:

கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

7. காது:

காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.
இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான் சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

தொற்றுக்களை தடுக்க:

1. சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

2. ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

3. ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

5. தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

6. தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

7. வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

8. சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.
9. சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

10. வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

11. சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

12. பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

13. கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

14. மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

11 Nov 2009

மாணவர்களை சீரழிக்கும் போதை கும்பல்

சென்னையில் அடையாறு, அண்ணாநகரில் படிக்கும் "பெரிய இடத்து' மாணவர்களிடம், ஒரு கும்பல் நண்பர்களாக பழகி, அவர்களுக்கு இலவசமாக போதை வஸ்துகளை சப்ளை செய்கிறது.

"சிலிப்பரி ஸ்லோப்' என்ற ரகசிய பெயரில் செயல்படும், அக்கும்பலின் பின்னணியில் நக்சலைட்களுக்கு தொடர்பிருப்பதாக, "பகீர்' தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில், "கஞ்சா, அபின், பிரவுன் சுகர், ஓபியம், குட்கா, கேட்டமைன்' என பல்வேறு வகையான போதை வஸ்துகளை விற்பனை செய்யும் கும்பல், திரைமறைவில் செயல்பட்டு வருகிறது.

இதில், கஞ்சா கும்பலின் நடமாட்டத்தை ரயில்வே சுரங்க பாலங்கள், கூவம் ஆற்று கரையோரங்களில் அதிகம் காணலாம். கீழ்ப்பாக்கம் டி.பி.சத்திரத்தில், இரண்டு கும்பல்கள் கஞ்சா வியாபாரத்தில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கிறது.

இக்கும்பலிடம் வேலை பார்க்கும் அடியாட்கள், தொழில் போட்டியில் பழிக்கு பழியாக எதிர் கும்பலை வெட்டி கொலை செய்வது சகஜமாகி விட்டது.ஆந்திராவிலிருந்து ரயிலில் கஞ்சாவை இறக்குமதி செய்யும் கும்பல், அவற்றை பிரித்து அடியாட்களிடம் கொடுத்தனுப்பும்.

அடியாட்களுக்கு குவாட்டர், பிரியாணியுடன் தினமும் 200 ரூபாய் சம்பளம் கொடுக்கின்றனர். இவர்கள், கஞ்சாவை சாக்லெட், ஐஸ்கிரீமில் கலந்து விற்பனை செய்கின்றனர். அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் அருகே இக்கும்பலின் நடமாட்டம் இருந்து வருகிறது.

கீழ்மட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களை இலக்காக வைத்து கஞ்சா கும்பல் செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்ததாக, பணக்கார இடத்து மாணவர்களை, "சிலிப்பரி ஸ்லோப்' என்ற ரகசிய பெயரில் செயல்படும் கும்பல் லாவகமாக வளைத்து வருகிறது.

அடையாறு, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள பணக்கார வீட்டு மாணவர்கள் படிக்கும் பள்ளிகளே கும்பலின், "டார்கெட்'டாக இருக்கிறது.
வெளிநாட்டில் உள்ள பயங்கரவாதிகள், ஆயுதங்களை வாங்கிக் குவிக்க அதிகளவில் பணம் தேவைப்படுகிறது. அதனால், பயங்கரவாதிகள் போதை வஸ்துகளை டன் கணக்கில் வாங்கி இருப்பு வைக்கின்றனர்.

காடு, மலைக் குன்றில் பதுங்கி வாழும் பயங்கரவாதிகளுக்கு, மக்களோடு நெருங்கிய தொடர்பு கிடையாது. ஆனால், வட மாநிலங்களில் உள்ள நக்சலைட்களுக்கு மக்களோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

இதை அறிந்த பயங்கரவாதிகள், போதை வஸ்துகளை நக்சலைட்கள் மூலமாக உள்ளூர் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள, "ஹைடெக்' போதை கும்பல், வடமாநில நக்சலைட்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

போதை வஸ்துக்களை, ஒரு கிராம் அளவிற்கு பணக்கார வீட்டு மாணவர்களுக்கு வழங்குகின்றனர். ஏதாவது ஒரு மாணவரிடம் நட்பு ரீதியில் பழகும் கும்பல், "நண்பர் ஒருவர் இலவசமாக கொடுத்தார். நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்' என கொடுக்கிறது.

பல மணி நேரம் உச்சகட்ட போதையில் ஆழ்த்துவதால், அதை பயன்படுத்தும் மாணவர், அவரது நண்பர்களுக்கும் போதை கும்பலின் நண்பரை அறிமுகப்படுத்துகிறார். இந்த, "நெட் வொர்க்கில்' அடையாறு ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகரில் உள்ள பணக்கார வாலிபர்கள் பலர் சிக்கியுள்ளனர். மாணவர்களை போதைக்கு அடிமையாக்கியதும், அதன்பின் இலவசமாக தருவதை நிறுத்தி விடுகின்றனர்.

போதை வஸ்து பழக்கத்தை விட முடியாத மாணவர்கள், அக்கும்பலை அணுகி போதை வஸ்துக்களை வாங்குகின்றனர். போதை வஸ்து அடிமையால், மாணவர்கள் தவறான பாதைகளில் செல்ல நேரிடுகிறது.

மாணவிகளுக்கு போதை வஸ்துகளை இலவசமாக கொடுத்து, பல மணி நேர ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்துகின்றனர். சுய நினைவில்லாமல் இருக்கும் மாணவிகளை, "புளூ பிலிம்' எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி காசு பார்க்கும் அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இப்பிரச்னை குறித்து, தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் கூறியதாவது: போதை கும்பலிடம் சிக்கி, வாழ்க்கையின் எல்லைக்கோடு வரை சென்றவர்கள், மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை பெற்று பொது வாழ்வுக்கு திரும்புகின்றனர்.

இவர்கள் பற்றிய விவரம் போலீசுக்கு தெரிந்தால் தான், போதை கும்பல் பற்றிய தகவலை சேகரிக்க முடியும். போதைக்கு அடிமையாகிறவர்கள், போலீசில் புகார் கொடுப்பதில்லை.போதை கும்பலின் "ஆணி வேர்' யார் என்பது, கடைசி வரை போலீசுக்கு தெரியாமல் போய் விடுகிறது.

தமிழகத்தில் போலீசார் கைது செய்வதெல்லாம், போதை கும்பலின், "ஏஜென்டு'கள் தான். முக்கிய நபர்கள் யாருமே போலீசில் சிக்குவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

போதை வஸ்துக்கள் விற்கும் நபர்களை பிடிப்பதோடு மட்டுமில்லாமல், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

- Dinamalar

10 Nov 2009

மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்

உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா.

அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன் ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.

ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.

2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.

3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.

பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும்.

திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும். சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.

இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி (வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லா மேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை. 2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லா மேரி தொடர்பு கொண்டால் எதிர் முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது.

அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என கூறிக்கொண்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார். மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார். கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.

ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார்.

இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும் கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார். நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள்.

பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர். ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீ சார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார்.

அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது. நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.

இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார். எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு.

ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது.

கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி. காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.

இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.

ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..

எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.

- Hussainghani

7 Nov 2009

புதிதாக சார்ஜா  திருச்சி இடையே விமான சேவை

ஏர் அரேபியா நிறுவன அதிகாரிகள் திருச்சி விமான நிலைய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அரபு நாடுகளை மையமாக வைத்து இயக்கப்படும் விமான நிறுவனம் ஏர் அரேபியா. இந்த விமான நிறுவனம் இந்தியாவில் டில்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கோவை, ஹைதரபாத் உட்பட பல்வேறு நகரங்களில் விமானங்களை இயக்கி வருகிறது.

புதிதாக சார்ஜா திருச்சி இடையே விமானங்களை இயக்க முடிவு செய்து இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்திடம் அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இம்மாத இறுதிக்குள் விமான சேவையை துவக்கவுள்ளனர்.

இந்நிலையில், ஏர் அரேபியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்திலுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக, விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், அதிகாரிகள் பயணிகளை கையாளும் விதம், அடிப்படை வசதிகள், ஓடுதளத்தின் தன்மை, விமான நிறுத்துமிடம் போன்றவை குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் ஆய்வு செய்துவிட்டு சார்ஜா புறப்பட்டு சென்றனர்.