20 Aug 2007

கல்யாணம் பண்ணி வைக்க நினைத்த முதலாளி!

கல்யாணம் பண்ணி வைக்க நினைத்த முதலாளி!மகனைக் கடத்திச் சென்ற டிரைவர்!அதிர்ச்சியில் கார் ஓனர்கள்!
சென்னை, சூளைமேடு, மேற்கு நமச்சிவாயபுரத்தில் இருப்பவர் சாதிக் ரிஸ்வி। பழைய கட்டிடக் கான்டிராக்டரான இவருக்கு, ரசாத் என்ற ஆறு வயது மகன் இருக்கிறான்। முதல் வகுப்பு படித்து வந்த ரசாத்தை அவனுக்கு காரோட்டியாக இருந்தவரே கடத்தினார் என்பதைக் கண்டு, கார் வைத்திருக்கும் ஓனர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்। நடந்தது என்ன?
வழக்கம்போல் டியூஷனுக்குச் செல்லும் ரசாத்தை திடீரென்று காணவில்லை. பெற்ற தாய் கதறி அழுது போலீஸில் புகார் செய்தார். இதன்பிறகு இரவு பத்து மணிக்கு மேல் ஒரு மர்ம ஃபோன் வந்தது.
எதிர்முனையில் இருந்தவன், "உன் பிள்ளையைக் கடத்தி வைத்துள்ளேன். போலீஸிடம் சொல்லாதே. கொண்டு வந்து விட்டு விடுகிறேன்' என்று கூறியிருக்கிறான். ஆனாலும் குழந்தை வரவில்லை.
இந்நிலையில் பதினொன்றரை மணிக்கு இன்னொரு டெலிபோன் கால் வந்தது. அதில் பேசிய கடத்தல்காரன், "நாலு லட்சம் ரூபாய் கொண்டு வா. குழந்தையை விட்டு விடுகிறேன்' என்று கூறி, எங்கு பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இடத்தையும் சொல்லியுள்ளான்.
உடனே போலீஸில் புகார் கொடுத்ததை வைத்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன், அதிரடி ஆபரேஷனுக்கு உத்திரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பரபரப்பாகக் களத்தில் இறங்கினார்கள்.
தொழிலதிபர் ராஜ்குமாரைக் கடத்தியபோது தனிப்படைக்குத் தகவல் சொல்லாமல் லோக்கல் போலீஸôரே முயற்சி செய்து வெள்ளை ரவியை கோட்டைவிட்டனர். அது மாதிரி நடந்துவிடக் கூடாது என்பதால் போலீஸ் அதிகாரிகள் இந்த முறை மிகவும் உஷாராகச் செயல்பட்டார்கள்.
அதன்படி நுங்கம்பாக்கம் உதவிப்போலீஸ் கமிஷனர் முரளி, சூளைமேடு இன்ஸ்பெக்டர் அனைவரும் பக்குவமாக வலை விரித்திருந்தார்கள். அதில் சிக்கினான் கடத்தல்காரன். பல்லாவரம் வேல்ஸ் டெக்ஸ் கல்லூரி அருகே வைத்து இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. அங்குதான் சிறுவனைக் கடத்தியது சாதிக் வீட்டில் வேலை பார்த்த முருகன் என்பது தெரிய வந்தது. முதலாளி அவனது செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதன்பிறகு முருகன் சொன்ன அட்ரஸில் இருந்த சிறுவன் ரசாத்தை போலீஸ் பத்திரமாக மீட்டது. "பதினைந்து வருடம் என் உப்பைத் தின்னுவிட்டு இப்படித் துரோகம் செய்து விட்டாயே பாவி' என்று சாதிக் ரிஸ்வியின் குடும்பத்தினர் சாபம் விட்டதைப் பார்க்க முடிந்தது.
கடத்தலில் இறங்கிய முருகன், 15 வருடங்களாக சாதிக் வீட்டில் வளர்ந்து வந்தவன். டிரைவராக இருந்த அவன் மீது ஓனரும் அவ்வளவு பிரியம் வைத்திருந்தார். செப்டம்பர் 5ஆம் தேதி அவனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கு திருமண மண்டபம் எல்லாம் புக் செய்துவிட்டான்.
அந்தத் திருமண மண்டபத்திற்கு அட்வான்ஸாக 15 ஆயிரம் ரூபாயை முருகனின் ஓனர் சாதிக்தான் கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி திருமணம் முடிந்த பிறகு தனியாக வீடு எடுத்து வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டானாம் முருகன். "மேத்தா நகரில் வீடு லீஸýக்கு எடுத்துக் கொள்கிறேன்' என்று ஓனரிடம் சொல்ல, "லீசுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?' என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு "2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது' என்று முருகன் சொல்ல, "அதையும் நானே தருகிறேன்' என்றும் கூறியிருந்தாராம் சாதிக் ரிஸ்வி. அது மட்டுமின்றி, "திருமணச் செலவிற்காகவும் 50,000 ரூபாய் வரை தருகிறேன்' என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம். இப்படியெல்லாம் உதவிகளைச் செய்ய முன்வந்த சாதிக்கின் மகனையே டிரைவர் முருகன் கடத்திச் சென்றதைப் பார்த்து அந்தக் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.
இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவனை புகார் கொடுத்த ஆறு மணி நேரத்தில் மீட்ட போலீஸôரைப் பாராட்டி ரிவார்டுகளும் வழங்கினார். இதற்கு அடுத்த நாள் சனிக்கிழமையன்று ஐஸ் ஹவுஸ் "ஐ கேம்ப்' ஒன்றில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன்.
இந் நிகழ்ச்சியிலிருந்து நிறைய படிப்பினைகள் உள்ளன. தெளிவு பெறுமா சமுதாயம்?

No comments: