தனியார் உப்பளத்தை கண்டித்து முத்துப்பேட்டையில் வரும் 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துகிறது.
முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகத்தில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக உப்பு உற்பத்தி செய்து விவசாயம், நிலத்தடிநீர், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தனியார் உப்பள கம்பெனியை தடை செய்ய கோரியும், இதுதொடர்பாக போராடும் விவசாயிகள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போடுவதை கண்டித்தும் முத்துப்பேட்டையில் வரும் 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் மேற்கொள்கின்றனர். எம்எல்ஏ உலநாதன் தொடங்கி வைக்கிறார்.
இதில் தமிழ்நாடு விவசாயி சங்க மாவட்ட தலைவர் பக்கிரிசாமி, முத்துப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கல்யாண சுந்தரம், வட்டார செயலாளர் முருகையன் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொள்கின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் முருகையன் கூறினார்.
7 Aug 2007
தனியார் உப்பளத்தை கண்டித்து முத்துப்பேட்டையில் வரும் 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துகிறது.
Posted by
Abdul Malik
at
2:37 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment