7 Aug 2007

ரூ.3 லட்சம் மதிப்பு ஜவுளி பண்டல்கள் கொள்ளை

பட்டுக்கோட்டையில் பார்சல் ஆபீசை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஜவுளி பண்டல்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில்கூறியதாவது:
பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை சாலையில் பார்சல் சர்வீஸ் நிறுவத்ம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த நிறுவனத்தின் ஏஜெண்ட் பாண்டியன் ஆபீசை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலையில் வந்து பார்த்த போது ஆபீசின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது சேலைகள் அடங்கிய 19 ஜவுளி பண்டல்கள் கொள்ளளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாண்டியன் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிந்து ஜவுளி பண்டல்களை திருடியவர்களை தேடி வருகிறார்

No comments: