15 Jan 2009

சென்னை கோயம்பேட்டில் (CMBT) பல்லிளிக்கும் நமது ஜனநாயகம்...

கடந்த ஒரு மாசமா இது பத்தி எழுதனும்னு நெனச்சுட்டுருந்தேன். அதுக்குள்ள சரி பண்ணிடுவாங்கன்னு ஒரு நப்பாசை!


ஆனா, அவ்வளவு சீக்கிரம் சரி பண்ணிடுவோமான்னு இன்னும் 'அது' அப்பிடியேதான் இருக்கு. சரி, ரொம்ப 'பொடி' யெல்லாம் வேணாம். விஷயம் இதுதான்.

'இது' பத்தி நிறைய பத்திரிகைகள்ல வந்திருக்கலாம். இருந்தாலும், 'இதனால்' தினமும் ஒரு வகையில் பாதிக்கப்படுபவன் என்கிற வகையில், என்னோட புலம்பல்!

ஆசியாவின் பிரம்மாண்ட பேருந்து நிலையத்தின் முகப்பில் இருக்கும் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்களின் 'விளம்பரங்கள்' அந்த சாலையைப் பயன்படுத்துவோரின் கண்களில் இருந்து தப்பித்தால், அவர்கள் கண்டிப்பாக கண் மருத்துவரிடம் சென்று தயவு செய்து கண்களை பரிசோதித்துக் கொள்ளவும்.

இது அம்மாவோட விளம்பரம்:



இது அய்யாவோட விளம்பரம்:

இந்த ரெண்டு விளம்பரங்களுக்கும் கொஞ்சம் எதிரே (ஒரு 50 - 100 அடிகள் இருக்கும்) ஒரு போக்குவரத்து சந்திப்பு இருக்கு. இது ஒரு முக்கியமான சந்திப்பு. கோயம்பேடு நிலையத்துக்கு வரும் பேருந்துகள் இது வழியாகத்தான் புயலெனப் பாயும்.

வட பழனியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த இடத்துக்கு வந்தவுடன், ஒரு குழப்ப நிலைக்கு ஆளாகிடுவாங்க! ஏன்னா, அவங்களுக்கு சிக்னல் குடுக்க கம்பம் இருக்கு ஆனா விளக்குதான் இல்ல! அந்தக் கம்பம் பரிதாபமா இப்பிடித்தான் நிக்குது

ஒவ்வொரு நாளும் உச்சகட்ட போக்குவரத்து நேரங்களில், இங்கு நடக்கும் போக்குவரத்துக் கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமில்லை. சிக்னல் இருக்கா இல்லையான்னு தெரியாம, பேருந்து வராத நேரத்துல, சடாருன்னு போறாங்க. திடீர்ன்னு பேருந்துகள் உள்ளே போகும், வெளியே வரும். அன்னைகளுக்கு வார்த்தை அபிஷேகம்தான்.

லட்சக்கணக்குல கொட்டி சுய விளம்பரம் செய்து கொள்ளும் அரசர்களுக்கும், அரசிகளுக்கும் அந்த செலவில் பத்தில் ஒரு பங்கு கூட ஆகாத மூன்று விளக்குகள் போட நேரமில்லை அல்லது அக்கறையில்லை.

ஆள்பவர்களுக்கு விளம்பரம் கொடுத்து காவடி தூக்கும் அதிகாரிகளுக்கும் இதப் பத்திக் கவலையுமில்லை. ஆக, நமது ஜனநாயகம் பல்லிளிக்கும் பல இடங்களில் இதுவும் ஒன்று.

-தஞ்சாவூரான்

No comments: