7 Aug 2008

மாணவ மாணவிகளுக்கு சலுகை விலை லேப்டாப்

மாணவ மாணவிகளுக்கு சலுகை விலை லேப்டாப்

தமிழகத்தில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு லட்சம் லேப் டாப் கம்ப்யூட்டர்களை 40 சதவீதம் குறைந்த விலையில் வாங்கி விற்க எல்காட் நிறுவனம் முன் வந்தது.

இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ரூ.29,429 மற்றும் ரூ.31,717 ஆகிய இரண்டு விலைகளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக கடந்த மாதம் எல்லா கலெக்டர் அலுவலகங்கள், சென்னையில் உள்ள எல்காட் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் கண்காட்சி நடத்தப்பட்டது.

மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் ராணுவத்தினரும் கம்ப்யூட்டர் பெறலாம் என்று எல்காட் நிறுவனம் அறிவித்தது.

இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் பெறுபவர்கள் ஆன்லைனில் www.elcot.in என்ற இனயதளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இதற்காக ஜூலை 31ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து லேப்டாப் கம்ப்யூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தேதி ஆக.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments: