10 Aug 2008

1947

கண்ணடம் கலந்த தமிழ் வாடை வீசும் கிராமம், தமிழகத்தின் எல்லை கிருஷ்னகிரி மாவட்டத்தின் வடகோடி வாகைகுடி கிராமாம்,
இந்த கிராமத்தை கடந்தால் அடுத்து வருவது கருநாடகதான் (கர்நாடகம்).

மதிய வெப்பம் தனிந்து மாலை குளிர் வர ஆரம்பிக்கிறது. மூன்று கூட்டு அடுக்கு மாட்டு வண்டியில் 20 வதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் அறிவாலும் சூலமும் ஈட்டியும் ஏந்திக்கொண்டு வர ஆடு மேய்த்து கொண்டிருந்த முத்துவின் மகன் இதை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு தனது அப்பாவிடம் சொல்ல முத்துவும் ஊர்ப்பெரியவரான குழந்தை வேலு ஐயாவிடம் சென்று ஐயா மூன்று மாட்டு வண்டியில் ரொம்ப பேர் வராங்கையா கையில ஈட்டி அறிவால், சூலமெல்லாம் வைத்திருக்கின்றனர் சொன்னார்.

அதற்க்குள் மாட்டின் சலங்கை சத்தம் அருகில் கேட்க்க ஆரம்பித்தது. அதிலிருந்து ஆஜானுபவான ஒருவன் இறங்கினான். வடமொழியும் தமிழும் கலந்த கொச்சை மொழியில் பேச அதுபுரியாத குழந்தைவேலு அருகில் இருந்த சங்கரனிடம் தம்பி ஜோசப்பை கூட்டிவா இவன் என்ன சொல்கிறான் என்று புரிய வில்லை. என சொல்ல சிறிது நேரத்தில் ஜோசப் அங்கு வர அவரிடம் தம்பி இவன் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை கொஞ்சம் விளங்கவை உனக்குத்தான் வரமொழி தெரியுமே என சொல்ல அவனும் அவரிடம் வடமொழியில் பேசியவுடன் ஜோசப்பின் முகம் இருளத்துவங்கியது.

பதட்டத்துடன் குழந்தைவேலுவிடம் ஐயா நம்ம நாடு சுதந்திரம் இன்று இரவு ஆகப்போகிறதான், ஆனால் இந்துக்களுக்கு என்றும் முஸ்லீம்களுக்கு என்று ஆங்லேயர் பிரித்து விட்டனர். அதனால் இங்குள்ள முஸ்லீம்கள் எல்லாம் புதிதாக பிரியப்போகும் பாகிஸ்த்தான் என்னும் நாட்டிற்க்கு செல்லவேண்டும் அப்படி செல்ல மறுப்பவர்களை விரட்டியடிக்க வேண்டும் , அதற்க்குத்தான் இவர்கள் வடக்கே இருந்து வந்திருக்கிறார்கள் என சொல்ல குழந்தை வேலுவின் உள்ளம் வேதனையுற்றது.

அதற்க்குள் இருட்ட ஆரபிக்க ஜோசப்பிடம் சரிப்பா இவ்வளவு தூரம் வந்திருக்காங்க என்ன சாப்பிட்டாங்களோ என்னவோ அதனால் அனைவரையும் எனது வீட்டிற்க்கு வந்து சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்க சொல், காலையில் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்றார். ஜோசப்பும் இதை சொல்ல வந்த நபர்கள் அனைவரும் சரி யென்று சொல்ல, குழந்தை வேலுவிற்க்கு மனதிற்க்குள் பல கேள்விகள் இவர்களை இப்படியே விட்டால், இவர்கள் தமிழகத்திற்க்குள் ஊடுறுவி ரகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள், இவர்களை எதிர்க்க நம்மிடம் பலமுமில்லை என்ன செய்யாலாம் என்று யோசித்துக்கொண்டே தனது வீட்டிற்க்குள் நுழைந்தவர் தனது மனைவியிடம் தனம் ஒரு 30 பேருக்கு சாப்பாடு தயார் செய்ம்மா , என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று யோசனையில் மூழ்கினார்.

அவர் அந்த பகுதியில் உள்ள பல கல் குவாரிகளின் முதலாளி, மேலும் நாட்டு வைத்தியர் வேறு தனது அறையில் அமர்ந்து யோசித்துகொண்டிருக்கையில் காயமுற்றவர்களுக்காக தரப்படும் உடல் மரத்து போகச்செய்யும் மருந்து கண்ணில் பட அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

சரி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ஒரு முடிவிற்க்கு வந்தவராக அந்த மருந்து பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்தவர், அதற்க்குள் அவரது மனைவி சமையல் எல்லாம் ஆக்கி தயார் செய்து விட தோட்டத்திற்க்கு போய் வாழையிலை கொண்டு என்று அவர்களுக்கு சொல்ல அவரதுமனைவியும் சரி என்று சொல்லி விட்டு தோட்டத்திற்க்கு செல்ல அங்கு இருந்த மோர் பானையை திறந்தவர், அனைத்து மருந்தையும் அதில் கொட்டி கலந்துவிட்டு மீண்டும் மருந்து சீசாவை தனது அறைக்கு சென்று வைத்துவிட்டார். அனைவரும் சாப்பிட்டு விட்டனர்.

தனது கையேலேயே அனைவருக்கும் மருந்து கலந்த மோரை குடிக்க கொடுத்தார். தனது மனைவியிடம் இவர்கள் வராந்தாவிலேயே தூங்கட்டும் நீங்கள் எல்லோரும் வீட்டில் போஉ தூங்குங்கள் என்று சொல்லி விட்டு கல்குவாரியை நோக்கி நடையை கட்டினார்.

வெடிபோட நாகர்கோவிலிருந்து குடும்பத்துடம் அங்கு வந்து தங்கியிருந்த குப்பனின் குடிசையை நோக்கி சென்றவர். அவர் தூரத்தில் வருவதை பார்த்த குப்பன் ஓடிச்சென்று ஐயா என்னங்கையா இந்த இரவு நேரத்தில் நீங்க சொன்னா நான் வந்திருக்க மாட்டேனா என்றான். அதற்க்கு அவர் குப்பா எத்தனை குழிப்பா போட்டிருக்கிறாய் என்று வினவ ஐயா இன்னும் 4 மாதத்திற்க்கான 66 குழி போட்டு விட்டேன். இரண்டு நாளைக்கு ஒரு குழி வெடிவைத்தாலும் இன்னும் 6 மாதத்திற்க்கு குழி போட தேவையில்லை ஐயா என்றவனை அமைதியாக பார்த்து எல்லா குழிக்குமே இன்று வெடிவைக்க முடியுமா என்றார், அவரது பேச்சைகேட்டு அதிர்ந்து போன குப்பன் ஐயா என்ன சொல்ரீங்க அப்படி போட்டா மலையே கானாமல் போய்விடும் ஐயா அப்புரம் ஊருக்குள் கல்விழும் என்றான்.

அதற்க்கு அவர் குப்பா இன்று இரவு இந்தியா சுதந்திரம் ஆகப்போகிரது அதனால் இந்த சந்தோச செய்தி சேலம் வரைக்கும் கேட்பது போல் வெடி போடனும் என்றார். குழம்பி போயிருந்த குப்பனை பார்த்து உன்னால் முடியுமா முடியாதா எனக்கு இன்று 66 குழியிலும் வெடிவைத்தாக வேண்டும் என்றார். அவனும் என்னங்கையா இப்படி சொல்ரீங்க உங்க உப்பை தின்று வளர்ந்த உடம்பு உங்களின் கட்டளையை ஏற்க்க மறுத்தால் எங்க பரம்பரைக்கே சோறுகிடைக்காது. சரிங்கையா நீங்க சொல்வது போல் இன்று இரவே அனைத்து குழியிலும் வெடி வைத்து விடுகிறென் என்று சென்னவன். வெடிமருந்து மூட்டையையும் ஹரிகேன் விளக்கையும் எடுத்து கொண்டு வெடிவைக்க கிளம்பிவிட்டான்.

மீண்டும் ஊருக்கு வந்தவர் மணியை பார்த்தார் மணி ஒன்பதை கடந்து விட்டது. வடக்கிலிருந்து வந்த அனைவரும் உடல் மரத்து போய் அங்காங்கே படுத்து கிடக்க பக்கத்தில் உள்ள சுந்தரத்தேவரையும் கனிநாடாரையும் வீடிற்க்கு சென்று அழைத்தார். இருவரும் என்னங்கையா இந்த ராத்திரியில் என்று கேட்க்க வடக்க இருந்து ஒரு முப்பது பேர் விருந்துக்கு வந்தாங்கே குடித்துவிட்டு கண்மண் தெரியாம தூங்கிறாங்க பெண்டு பிள்ளைங்க இருக்கிற இடம் அதனால் இவங்களை கொஞ்சம் ஊர் கடைசியில் இருக்கும் மலைக்கு அடிவாரத்தில் தூங்க வைக்கலாம் காலையில் அங்கேயே கல்கிடங்கில் குளித்துவிட்டு பிறகு ஊருக்கு வரட்டும் குடிகார பசங்க என்றார். அவர்களும் சரி என்று சொல்லி விட்டு ஒருவர் ஒருவராக மயங்கிகிடந்த அனைவரையும் தூக்கி மலை அடிவாரத்தில் போட்டு விட சரிப்பா எல்லோரும் போய்த்தூங்குங்க

மன்னித்துக்கொள்ளுங்கள் உங்க தூக்கத்தை கெடுத்து விட்டேன் என்று சொல்ல அவர்களும் பரவாயில்லை ஐயா என சொல்லி விட்டு மீண்டும் வீடு பொய் தூங்க சென்றுவிட்டார்கள்.

இப்பொழுது மணி 10 ஐ தாண்டிவிட்டது. ஊரே அயர்ந்து தூங்கி கொண்டிருக்க குழந்தை வேலுமட்டும் ஊர்த்தெருவில் ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது துண்டை தண்ணீரில் நனைத்துக்கொண்டு முதலில் அன்சாரி வீட்டிற்க்கு சென்றார். அங்கு அன்சாரியும் அவரின் இரு பையன்களும் வீட்டு தின்னையில் நன்றாக உறக்கத்தில் இருந்தனர். சாமிகளா எங்களையும் இந்த மண்ணையும் விட்டு விட்டு சென்று எப்படி வாழ்வீர்கள்.

அப்படியே நீங்கள் சென்றாலும் நீங்க எங்கோ ஒரு தேசத்தில் கஸ்டப்படுவதை கண்டு எங்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும் , வேண்டாம் நீங்கள் எங்களை விட்டு எங்கும் செல்ல கூடாது. நான் செய்யும் காரியம் தவறாக பட்டாலும் எனக்கு இதை தவிர ஒன்றும் தொனவில்லை கண்ணுகளா என்று மனதிற்க்குள் சொல்லி விட்டு துண்டை அவர்களின் முகத்தை நோக்கி உதர நீர்த்துளிகள் கண்ணில் பட்டது.

அன்சார் பட்டென்று எழுந்த உடன் குழந்தைவேலு பாய் மழைத்தூறல் எடுக்குது ஆலங்கட்டி மழை வரும் போல் இருக்கிறது. அதனால் குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டில் போய்த்தூங்குக என்ற உடன் தூக்க கலக்கத்தில் இருந்த அன்சாரியும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்க்கு செல்ல இதே காரனத்தைசொல்லி தின்னையில் படுத்திருந்த அனைவரையும் வீட்டில் போய் படுக்கச்சொல்லிவிட்டு ஊரில் இருந்த அனைத்து வீட்டில் கதவுகளை வெளிப்புரமாக தாழ் போட்டார்.

நேரம் சரியாக 11:30 ஆகியிருந்தது. அந்த கும்மிருட்டிலும் லாந்தர் விளைக்கினை எடுத்துக்கொண்டு வேகவேக மாக குப்பனின் குடிசையை நோக்கி சென்றவர். என்னப்பா ஆயிடுச்சா என்றார், அவனும் ஆமாங்கையா எல்லா குழியிலும் மருந்து வைத்துவிட்டேன். 10 குழிக்கு ஒரு குழி எர்த் அதனால் 6 குழி மருந்து பலமா இருக்கும் ஐயா ஆனா இப்படி ஒரு வேலையை நான் இதுவரைக்கும் செய்ததே இல்லை, எனக்கும் மனதில் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு என்றான்.

அவரும் சரி உன் மனைவியையும் குழந்தையும் என்னுடன் அனுப்பிவிடு நீ கல்லு குகைக்கு போ சரியா 12 மணி க்கு நான் சங்கு ஊதுவேன் அந்த சத்தம் கேட்டதும் நீ வெடி வைக்க ஆரம்பி சரியா. என சொல்லி விட்டு அவனின் பதிலை எதிர்பாராமல் அவனது குழந்தைகளையும் மனைவியையும் அழைத்துகொண்டு வீட்டிற்க்கு வந்து விட்டார்.

வரும் வழியில் யாரும் வெளியில் படுத்திருக்கிறார்களா?என்று நோட்டமிட்டவாரே, வீடு வந்து சேர்ந்தவர், தனது மனைவியை எழுப்பி குப்பனின் மனைவிக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வை என சொல்லிவிட்டு கதவை தாழிட்டுவிட்டு மாடியறைக்கு வந்தவர் தூரத்தில் குப்பனின் ஹரிக்கேன் விளக்கு ஒளி புள்ளியாய் தெரிய, மலைக்கு இந்த பகுதியில் அந்த மனிதர்கள் படுத்திருப்பது கும்மிருட்டில் குப்பனுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்துக்கொண்டு காங்கேயத்தில் சுதந்திரம் பெற்றதற்க்கான அறிகுறியாய் வான வேடிக்கை சத்த்ம் லேசாய் கேட்க்க, தனது கைகளில் சங்கை எடுத்து மூச்சை உள்ளிழுத்து முழக்க மிட ஆரம்பித்தார்.

முதலில் மெல்ல எழுந்த சங்கின் ஒலி அந்த இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு வேகமாக முழங்க, சங்கின் சத்ததை கேட்ட குப்பன் கையிலிருந்த ஜெர்மன் தயாரிப்பு பட்டிக்ஸன் பேட்டியில் இருந்த சாவியை திருக முதலில் கிழக்கே முகமாக வைத்த வெடி வெடிக்க அடுத்து பூகம்பம் வந்தது போல் பூமி அதிர்ந்தது.

ஒட்டு மொத்த வெடியும் ஒரே நேரத்தில் வெடிக்க, ஊரில் உள்ள வீடுகளின் ஓடுகளின் மீது கற்கள் பறந்து வந்து தாக்க, அன்சாரியின் மனைவி பயந்து போய் என்னங்க என்ன ஆச்சுன்னு போய் பாருங்க என சொல்ல அதற்க்கு அன்சாரி பாயோ ஆலங்கட்டி மழை பெய்கிறது, அதான் இப்படி சத்தம் சத்தம் கெட்டாமல் படுடி என தூக்கத்தில் சொல்லிவிட்டு தூங்க, கிட்டத்தட்ட அறைமணிநேரம் கழிந்த உடன்குழந்தைவேலு கீழே வந்து கதவை திறந்து பார்க்கிறார்,

ஒரே புகை மண்டலம் அந்த புகையிலும் அனைத்து வீட்டு கதவையும் மீண்டு சென்று தாழைவிலக்கி விட்டு குப்பா என குரல் கொடுக்க கல் குகைக்குள் இருந்து வெளிவந்த குப்பன் ஐயா சுதந்திரம் வந்துவிட்டதாய்யா என கேட்க்க ஆமாம் குப்பா இப்பதான் உன்மையான சுதந்திரம் வந்தது சொல்லி விட்டு சரி வா வீட்டிற்க்கு மற்றதை காலையில் பார்க்கலாம் என சொல்லிவிட்டு, பாதையில் கிடந்த கற்கள் இடர மனதில் இருந்த ஒரு இடரல் விலகியதால் இந்த இடரலை பொருட்படுத்தாமல் வீட்டிற்க்கு வந்தவர். நிம்மதியாக தூங்க ஆரம்பித்தார்.

1947 ஆகஸ்ட் 15 காலை பொழுது சேவல் கூவியது. வாசல் தெளிக்க வெளியே வந்த தனம் அம்மாள் ஒரே ஆச்சர்யத்தில் மூழ்கினார் கிழக்கே தெருவெல்லாம் ஒரே கல்லும் மண்ணும் புரியாமல் விழித்தவர், மெல்ல பொழுது புலர்வதை கண்டு வடக்கே பார்வையை செலுத்தியவர் அரண்டு போனார், திருமணமாகி வந்த 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வடக்கே அந்த மலையைதான் முதலில் பார்ப்பவர், இன்று அந்த மலை இருந்த இடம் தெரியாமல் போனது. என்னங்க என்ன ஆச்சு ராவிலே மலையை காணோம் என சொல்ல, அவரும் பதட்டமின்றி மாடியேறிவடக்கே பார்வையை செலுத்தியவர். அவரின் எண்ணப்படி நடந்திருந்தது.

வடக்கையும் தெற்க்கையும் இனைக்கும் ஒரே பாதை அடைபட்டு கிடந்தது. அந்த குன்று சுத்தமாக இருந்த இடமின்றி போயிருந்தது. ஆனால் அந்த கல் கிடங்கும் நேற்று வந்தவர்கள் படுத்திருந்த இடமும் பல நூறு அடி மணல் குன்றின் கற்ப்பத்தில் சென்று விட்டது.

அன்று ஊரில் எல்லோருக்கும் ஒரே குழப்பம் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை, குப்பனையும் அவனது குடும்பத்தினருக்கும் நிறைய சன்மானம் கொடுத்து காலையிலேயே அவர்களது ஊருக்கு அனுப்பிவிட்டார் வேலு.

ஜோசப்பிடம் வந்தவர்கள் பாதிராத்திரியில் எழுந்து போட்டாங்க காவாலிபயலுக சொல்லிட்டாவது போகலாமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார் அன்சாரி எந்த ஒரு சலமின்றி தனது ஆட்டு மந்தைகளை புதிய இடம் தேடி மேய்க்க அழைத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

No comments: