4 Aug 2008

புற்று நோய்க்கு இலவச சிகிச்சை

இப்போதெல்லாம் புற்றுநோய் பணக்காரர்களின் வியாதி அல்ல என்பது தெளிவாகி விட்டது. ஏழைகளும் பல்வேறு விதமான புற்று நோயால் அவதிப்படுகிறார்கள்.

சிகிச்சை, மருத்துவமனை செலவு என தவிக்கும் அவர்களுக்கு சென்னையில் இருக்கும் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் ஆதரவுக்கரம் நீட்டுகிறது.

இதன் தலைவர் வி. கிருஷ்ணமூர்த்தி. இந்த ட்ரஸ்ட், டாக்டர் சாந்தா வின் புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த ட்ரஸ்ட் ஏழை புற்று நோயாளிகளை முழுமையாகப் பாதுகாக்கிறதா?

ஆம். முழுமையாக. ஏழை புற்றுநோயாளிகள் எந்த ஊரில் இருந்து வந்தாலும் சரி, சிகிச்சை முடியும் வரை இங்கு முழுக்க முழுக்க இலவசமாகத் தங்கி இருக்க முடியும்.

காபி, சிற்றுண்டி, மதிய - இரவு உணவு, மாலை நேர பால் என்று நோயாளிகளுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

ஏழைகளைக் காக்க இறைவன் எங்காவது இருந்து கொண்டுதான் இருக்கிறான்.

-குமுதம்

No comments: