30 Jul 2008

வீட்டுக்குள்ள 'தம்' அடிக்க கணவனை அனுமதிக்காதீங்க

வீட்டுக்குள்ள 'தம்' அடிக்க கணவனை அனுமதிக்காதீங்க

மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை

வீட்டில் கணவர் புகை பிடித்தால், அந்த புகையை சுவாசிக்கும் மனைவிக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்றைய நாகரிக மோகத்தில் சிகரெட் புகைப்பதை அந்தஸ்தின் சின்னமாக பெரும்பாலான ஆண்கள் கருதுகிறார்கள். புகை பிடிக்கும் பழக்கத்தால் பாதிப்பு அதிகம் என்று தெரிந்தும் அதை விடமுடியாமல் பலர் தவிக்கின்றனர். ஆனால், புகை பிடிக்கும் பழக்கத்தால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புகைப்பவர்கள் உள்ளே இழுத்துவிடும் புகையை வீட்டில் உள்ள மற்றவர்கள் சுவாசிக்கின்றனர். இப்படி புகையை தொடர்ந்து சுவாசிப்பதால் உடல்நலம் கெடுகிறது. இந்த பாதிப்பு எப்போதும் கணவனுடன் வீட்டில் இருக்கும் மனைவிக்குதான் அதிகமாம்.

50 வயதுக்கு மேற்பட்ட 8,000 ஜோடிகளின் உடல் நிலையை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் மனைவிக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட 72 சதவீதம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளதாக ஆய்வுக் குழுவின் தலைவர் டாக்டர் மரியா கூறினார்.

மாரடைப்பு வராமல் தடுக்க, வீட்டுக்குள் புகை பிடிக்க கணவனை அனுமதிக்காதீர்கள் என்று பெண்களுக்கு ஆய்வாளர்கள் ஆலோசனை கூறி உள்ளனர்.

திருமணமாத பெண்கள் என்றால், புகை பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்களை மணக்கக் கூடாதாம். பெண்கள் நினைத்தால் முடியாததும் உண்டா?

No comments: