13 Jul 2008

பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் அதிகமா?

பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் அதிகமா?

புகார் செய்ய தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை, ஜூலை 12: ‘‘பொறியியல் கல்லூரிகளில் சேர அதிக கட்டணம் வசூலித்தால், அரசு அங்கீகரித்துள்ள அலுவலர்களிடம் புகார் செய்யலாம்’’ என்று அரசு அறிவித்துள்ளது.

இதற்கான தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.7,550 கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் ரூ.8,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் குழு தரச்சான்று பெறாத பாடப் பிரிவுகளுக்கு கல்விக் கட்டணம் ரூ.32 ஆயிரத்து 500, தரச்சான்று பெற்ற பாடப் பிரிவுகளுக்கு ரூ.40 ஆயிரம் கல்விக் கட்டணம் நிர்ணயித்துள்ளது. அரசு ஒதுக்கீடு அல்லாத இடங்களில் சேரும் மாணவர்களுக்கு ரூ.62 ஆயிரத்து 500 கட்டணம் நிர்ணயித்துள்ளது. நிர்ணயித்த கட்டணத்தைவிட சுயநிதி கல்லூரிகள் அதிக கட்டணம் வசூல் செய்தால், அரசு அங்கீகரித்துள்ள அலுவலர்களிடம் பெற்றோர், மாணவர்கள் உரிய ஆதாரத்துடன் புகார் செய்யலாம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட எல்லா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உள்ள பாலிடெக்னிக், தேர்வுகள் பிரிவுகளின் கூடுதல் இயக்குனர்களிடமும் புகார் செய்யலாம்.

044 2235 1018 என்ற தொலைபேசி எண், 044 2220 1514 என்ற பேக்ஸ் மூலமாகவும் புகார் செய்யலாம்.

No comments: