21 Sept 2008

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?

பொதுவாக எல்லோருக்கும் ஒருவித எண்ணம் உண்டு. "எப்போதும் கடுமையாக உழைக்கிறோம். புதிதாக யோசிக்கிறோம். மற்றவர்கள் இதை புரிந்து கொள்ள மறுக்கிறார்களே! ஒரு பாராட்டுகூட கிடையாதா...? என்று அங்கலாய்ப்பார்கள்.

பலரிடம் உள்ள இந்த எண்ணம் இது உண்மைதானா என்பது பற்றி எஸ்.பி.எம். பவுண்டேசன் என்ற அமைப்பு ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அர்த்த சாஸ்திரத்தில் சில தகவல்களை எடுத்து கூறி இதன்படி செயல்பட்டால் வாழ்வில் வெற்றிபெற தகுந்த ஆள் யார்? என்பதை முடிவு செய்யலாம் என்கிறது அந்த நிறுவனம்.

இதற்காக மூன்று முக்கிய விஷயங்களை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1) எடுத்த காரியத்தை முடிக்கிறீர்களா?

2) அதற்கு தேவையான விடை கிடைத்ததா?

3) அந்த பணியை செய்ததில் திருப்தி அடைகிறீர்களா?

இந்த மூன்றையும் கணித்து உங்கள் தினசரி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறது அர்த்த சாஸ்திரம்.

இது தவிர 4 முக்கிய குறிக்கோள்களையும் அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.

1) உங்களது இலக்கு, லட்சியம், கொள்கையை சரியாக குறி வைத்து முடிவு செய்யுங்கள்.

2) ஒரு செயலை ஏன் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

3) ஒரு காரியத்தை எப்படி செய்வது என்ற திட்டமிடுதல் மிகவும் அவசியம். இதில் பலருடைய ஆலோசனைகள் அறிவுரைகள் தேவைப்படலாம்.

இவற்றை வரைபடம்போல மனதில் வைத்து செயல்படவேண்டும். இதற்கு தகுதியான ஆலோசனைகளை கேட்டு அறிவது அவசியம்.

4) பயணத்தை தொடங்கியதும் வெற்றி, தோல்வி வரலாம். எனவே விடாமுயற்சி முக்கியம். லட்சியத்தை பார்த்து வேகமாக செயல்படவேண்டும்.
இதில் பலர் தவறான பாதைக்கு செல்ல நேரிடலாம். எனவே பாதையை சரியானதாக தேர்ந்தெடுப்பது மிக அவசியம்.

அர்த்த சாஸ்திரத்தின் இந்த கருத்துகளை பின்பற்றினால் வாழ்வில் வெற்றி பெறுவது சுலபம்.

No comments: