வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகும். மேலும், இதற்கு காலநிலை எதுவும் இல்லாமல் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் அதற்காகத்தானோ என்னவோ வெற்றிலையுடன் வாழைப்பழத்தை வைத்துக் கொடுக்கும் முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தெரியாததா என்ன? -tamil.webdunia |
27 Feb 2010
வாழைப்பழம் சாப்பிடுங்கள் சுறுசுறுப்பாக வாழுங்கள்
Posted by
Abdul Malik
at
1:14 pm
1 comments
23 Feb 2010
சவூதியில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு..
சவூதி அரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்
உங்கள் குடும்பத்தினர்களின் விசா வரவு மற்றும் வெளியேற்றம் அறிய வேண்டுமா?
உங்களுக்கு இந்த வருடம் ஹஜ் செய்வதற்கு அனுமதியுள்ளதா / தகுதிபெற்றவரா?
உங்களின் சுகாதார அட்டை புதுப்பிக்கப் பட்டுள்ளதா?
உங்களுடைய ஆதரவில் வேலை செய்பவர்களின் குடியரசு அட்டை நிலை என்ன?
உங்களின் குடியரசு அட்டை (இக்காமா) நிலை என்ன?
உங்களின் விசா நிலை என்ன? (Exit / Re-Entry)
உங்களின் கைரேகை எடுக்கப்பட்டு அது அங்கீகரிக்கப் பட்டுவிட்டதா?
உங்களுக்கு போக்குவரத்து துறையின் அபராதம் உள்ளதா?
உங்கள் வாகனத்திற்கு எதுவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?
இதுபோன்ற தகவல்களையும், மேலும் தகவல்களையும் பெற...
http://www.moi. gov.sa/wps/ portal
என்ற மேலேயுள்ள சுட்டியை அழுத்தி, E-Services Tab என்ற பகுதியை அழுத்தி ”Passports" என்ற தலைப்பை அழுத்துங்கள்.
நாம் எதிர்பாராமல் திடீரென்று பயணம் செல்ல நேரலாம், மேலேயுள்ள எதாவது ஒன்றின் தடங்கலால் உங்கள் பயணம் செல்லமுடியால் ஆகலாம். எனவே இன்றே இவைகளை சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களின் கடவுச்சீட்டு (Passport) கலாவதியாகியிருந்து நீங்கள் அவசரமாக பெறவேண்டியிருந்தால் “தட்கல்” என்ற அவசரமுறையில் இந்தியத் தூதரகத்தை அனுகினால் தருவார்கள் அவர்களின் இணையதள முகவரி
http://www.indianembassy.org. sa
(Tatkal service for issue of passport is also available)
”பிரச்னைகள் வருமுன் காப்போம்”.
உங்களுக்கு தெரிந்த சவூதிவாழ் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Posted by
Abdul Malik
at
12:56 pm
0
comments
22 Feb 2010
தினமும் 5 கி.மீ. நடந்தால் சர்க்கரை, இருதய நோயை விரட்டலாம் கருத்தரங்கில் அறிவுரை
கோவை: கோவை தினகரன் நாளிதழ் சார்பில் ஸ்ரீராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்த மெடிஎக்ஸ்போ 2009 மருத்துவ கண்காட்சியில், காக்க காக்க இதயம் காக்க என்ற தலைப்பில் கே.ஜி. மருத்துவமனை இருதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரூக் பேசியதாவது:
இந்தியாவில் மாரடைப்பு நோய் விகிதாச்சாரம் அதிகரித்துக்கொண்டே போகிறது. முன்பு வயதானவர்களை தாக்கிய மாரடைப்பு நோய், இன்று வளம் வயதினரையும் தாக்குகிறது. நமது உணவு பழக்கவழக்க முறைகள்தான் இதற்கு காரணம்.
தாயின் வயிற்றில் குழந்தை உருவான ஆறாவது வாரத்தில் துடிக்க துவங்கும் தசைப்பகுதிதான் இருதயம். நமது உடலில் தொடர்ச்சியாக கடைசிவரை இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரே உறுப்பு இருதயம். இது, ஒருமுறை பழுதுபட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம்.
சர்க்கரை நோய், அதிக உடல் பருமன், கொழுப்பு சத்து, மது, புகை பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருத்தல், மனஅழுத்தம் ஆகியவை மாரடைப்பு உருவாக பிரதான காரணம். இப்பழக்கத்தை விட்டொழித்து இருதய நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். இவ்வாறு டாக்டர் பரூக் பேசினார்.
சர்க்கரை நோய் விழிப்புணர்வு பற்றி கோயம்புத்தூர் டயாபட்டீஸ் பவுண்டேசன் மருத்துவமனை தலைவர் டாக்டர் சேகர் பேசியதாவது:எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியம் அல்ல. நம் கடமையை நாமே திருப்திகரமாக செய்ய முடிந்தால் மட்டுமே அது ஆரோக்கியம்.
உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். நம் உடலில் சர்க்கரை நோய் உருவாக நாம் சாப்பிடும் மாவு சத்துள்ள உணவு வகைகள்தான் காரணம். கார்போஹைட்ரேட் உணவுவகைகளை தவிர்த்து பழம், காய்கறி வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவு வகைகளை பிரிஜில் நாள் கணக்கில் வைத்து சாப்பிடக்கூடாது. அதிக கொழுப்பு சத்து உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது.
அரிசி சாதம் அளவை மூன்றில் ஒரு பங்காக குறைத்துக்கொள்ள வேண்டும். பருப்பு, கீரை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினம் 5 கி.மீ. தூரம் நடக்க வேண்டும். இது, இருதயத்தை வலிமைப்படுத்தும். தினமும் ஐந்து கி.மீ. தூரம் நடந்தால் நம் வாழ்நாள் 15 வருடம் கூடும். சர்க்கரை, இருதய நோயை விரட்டிவிடலாம்.
எந்த மருத்துவரும், மருத்துவமனையும் செய்யாத சாதனையை வாக்கிங் செய்யும். வாக்கிங் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முடிந்தவரை உடற்பயிற்சி செய்யலாம். உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி இவை இரண்டும் இருந்தால் 70 சதவீத நோயை விரட்டிவிடலாம். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இவ்வாறு டாக்டர் சேகர் பேசினார்.
கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை டாக்டர் சதீஷ்குமார் உடல்பருமனுக்கான அறுவை சிகிச்சை முறைகள் குறித்து பேசியதாவது:
துரித உணவு பழக்கம், பரம்பரை கோளாறு, உடல்உழைப்பு குறைவு, உடற்பயிற்சி இன்மை காரணமாக இளவயதினருக்கும் உடல்பருமன் பிரச்னை காணப்படுகிறது. வயது, உயரம்த்திற்கு தகுந்த சராசரி எடை இருப்பது அவசியம். பித்தநீர் உணவுடன் சேர்ந்தால் கொழுப்பாக மாறி உடலில் சேர்கிறது. கை, கால் மற்றும் வெளிப்புற உடலில் உள்ள கொழுப்பைவிட வயிற்றில் உள்ள கொழுப்புதான் ஆபத்தானது.
அதிக கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்க சிறுகுடலில் 3 அடிக்கு மட்டும் பித்தநீர் சேருமாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவையான போது சிறுகுடலை பழைய நிலைக்கு கொண்டுவரமுடியும். ஆனால் வயிற்று பகுதியை வெட்டி எடுக்கும் சிகிச்சையில் பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது.
அதிக உணவு உட்கொள்ளாது தடுக்க இரைப்பையில் கிளிப் மாட்டும் முறை முன்பு இருந்தது. புண்ணாகிவிடும் ஆபத்து நிறைய உள்ளதால் அந்த சிகிச்சை நடைமுறையில் அரிதாகவே நடக்கிறது. கொழுப்பு பகுதி களை நீக்கும் சிகிச்சை எண்டாஸ்கோபி முறையிலேயே செய்வதால் தழும்புகள் ஏற்படாது. காய்கறி, கீரை, பழங்கள் உண்பது, வாய்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தினமும் நடைபயிற்சி உடல்பருமன் நோயை தீர்க்கும்.
கே.எம்.சி.எச் மருத்துவமனை டாக்டர் குப்புராஜன் சிறுநீரக நலன் குறித்து பேசியதாவது: சிறுநீரகம் சீராக இயங்க போதிய தண்ணீர் அருந்துவதே சிறந்தவழி. சிறுநீரகம் தனது பணியை சிறப்பாக நிறைவேற்ற தண்ணீர்தான் முக்கிய காரணி. பழங்கள், கீரைகள், காய்கறிகள் என நார்ச்சத்து மிகுந்த உணவுகள் சிறுநீரகத்தின் பணிகளை சீராக்கும்.
உடலின் கழிவுகளை சுத்திகரிக்கும் முக்கிய பணியை செய்து உடல் இயக்கத்தை முழுமையாக்குவது சீறுநீரகம்தான். சிறிய அளவிலான சிறுநீரக கற்கள் வாழைத்தண்டை சாப்பிட்டால் குணமாகும். அதற்கும் வாழைத்தண்டு சாறுடன் போதுமான தண்ணீரும் சேர்ந்து அருந்துவதான் முழுமையான தீர்வாக அமையும். சிறுநீரக கோளாறுகளை எளிதில் கண்டறிந்து குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள், சரியான மருந்து மாத்திரைகள் உதவும்.
கோவை கிருஷ்ணா ஹெல்த் கேர் சென்டர் மருத்துவர் பாலகுமாரன் எலும்பு அறுவை சிசிச்சை குறித்து பேசியதாவது: நவீன வசதிகள், வாழ்க்கை முறை காரணமாக உடல் எலும்புகளுக்கு முழுமையான வேலை கொடுப்பதற்கு தவறிவிடுகிறோம். சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் குறைந்து வருகிறது. மேற்கத்திய கழிவறை உபயோகம் பெருகியதன் காரணமாக கால்மூட்டுகளுக்கு முழு வேலைகிடைப்பது இல்லை.
நிற்பது, அமர்வது, நடப்பது என எலும்புகளுக்கு முழுவேலை கொடுத்தாலே மூட்டுவலி வராது. மூட்டுக்கு முழுவேலை கொடுத்தால் வேதனை வராது. கை, கால், இடுப்பு எலும்புகளில் வலிஏற்படும் போது மூட்டு இணைப்புகளை இயல்பான நிலையில் இருக்கச்செய்தாலே பெரும்பாலான எலும்பு பிரச்னைகள் தீரும். வலியின் பிறப்பிடம் அறிந்து சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய் தீரும்.
கைகளில் வலி என்றால் முதுகெலும்பு இணைப்புகளை சோதிக்கவேண்டும். கால்களில் வலி என்றால் இடுப்பு எலும்பு இணைப்புகளை சோதிக்க வேண்டும். எல்லா எலும்பு பிரச்னைகளுக்கும் அறுவை சிசிச்சை தேவைப்படாது. முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுகினால் நிரந்தர தீர்வு பெறமுடியும்.
கோவை தெலுங்குபாளையத்திலுள்ள பென்ஸ் வெக்கேசன் கிளப் நிர்வாக இயக்குனர் சரவணன், ‘உடலும் உள்ளமும்’ என்ற தலைப்பில் பேசுகையில்: ‘‘உடலும் உள்ளமும் பிரிக்க முடியா தவை, ஒன்றோடு ஒன்று இணைந்தவை. உடலும் உள்ளமும் நன்றாக இருக்க உடற்பயிற்சி மிக அவசியம். உடலை சுத்தமாக வைத்துக்கொண்டு உள்ளத்தை கவனிக்காவிட்டால் எந்த பயனும் இல்லை.
எனவே தினந்தோறும் உடலை பேணுவதோடு, உள்ளத்தில் நல்ல சிந் தனையை வளர்க்க வேண் டும். ஒவ்வொருவருக்கும் மனதில் தைரியம் இருக்க வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். குடும்பம் நன்றாக இருந்தால் தான் உள்ளம் நன்றாக இருக்கும். உள்ளம் நன்றாக இருந்தால் தான் குடும்பத்தை சிறப்பாக நடத்த முடியும்.
உடல் ஆரோக்யமாக இருக்க காலையில் உடற்பயிற்சி செய்யலாம், நீச்சல் அடிக்கலாம், புத்தகம் படிக்கலாம். வாழ்க்கையில் வெற்றி பெற பொறுமை மிக அவசியம். மன பலம் இருந்தால் உடல் பலம் தானாக வரும்’’ என்றார்.
Posted by
Abdul Malik
at
12:00 pm
0
comments
18 Feb 2010
உட்டுடுங்கோ..உங்க குடும்பத்துக்காக...
புகைப்பது உடல் நலத்துக்கும் சுற்றுப்புறத்துக்கும் கேடு.
உங்களையே ஆதாரமாகக் கொண்டுள்ள உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்யும் துரோகம்.
புகைக்கும் ஒவ்வொரு தடவையும் பல விஷங்களை நீங்கள் தெரிந்தே உட்கொள்கிறீர்கள். நுரையீரல் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரு அற்புத படைப்பு. புகைப்பதால் அநியாயமாக அதை கேன்சர் பாதிப்புக்குள்ளாக்குகிறீர்கள்.
அதிகம் புகைப்பவரா நீங்கள்... உங்களுக்கே தெரியும் சுவாசம் எவ்வளவு தற்போது சிரமமாயிருக்கிறது என்று. அந்த கெட்ட பழக்கத்திலிருந்து மீளுங்கள். பிறகு படிப்படியாக நல்ல சுவாசம் கிடைப்பதை உணர்வீர்கள்.
இந்தக் கீழே தரப்பட்ட படத்தைப் பாருங்கள்.
தலை முதல் பாதம் வரை எத்தனை நோய்களுக்கு இந்த புகைக் காரணம் என்று. உங்களையும் கெடுத்து, சுற்றுப்புறத்தையும் கெடுத்து, உங்கள் அருகிலிருப்போரையும் பாதிக்கச் செய்யும் இந்த மோசமானப் பழக்கத்தை விட்டொழித்தால் தான் என்ன.
உட்டுடுங்கோ..உங்க குடும்பத்துக்காக

Posted by
Abdul Malik
at
6:04 pm
0
comments
4 Feb 2010
நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்.
நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்.
வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கிட்டத்தட்ட அடிமைகளைப் போல் தான் வாழ்ந்து வருகின்றனர்.
பெரிய மாளிகைகளின் மூலையில் இருக்கும் ஒரு சின்ன ரூம் தான் இவர்களது உலகம். ரூபாய் 6000/7000 சம்பளத்தில் ஆரம்பிக்கும் அரபுலக வாழ்க்கை, 10 ஆண்டுகள் ஒரே வீட்டில் இருந்தால் 15000- வரை ஆகும்.
10- 20% நபர்களுக்குத் தான் இந்த வாய்ப்பும் கிட்டும். 20% சகோதரர்கள் வேறு கம்பெனிக்கோ, ஊருக்கோ சென்று விடுவார்கள். மீதம் இருப்பவர்கள் அதே நிலையில், குடும்பத்தை பிரிந்து, எதோ கொடுக்கும் உணவை உண்டு, குடும்பங்களை விட்டு வருடக் கணக்கில் பிரிந்து, மொபைல் ஃபோனில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த வாழ்க்கையில் பலர் சூழ்நிலைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப குற்றவாளிகளாகவும், வெகு சிலர் தவ்ஹீத்வாதிகளாகவும் இருக்கின்றார்கள். நவீன உலக கலாச்சாரத்தின் சீரழிவுகளின் தாக்கம் இன்று எழை, எளிய மக்களைத் தான் முதலில் தாக்கும் என்பது எதார்த்தம். அதற்கேற்ப இவர்களில் பலர் பல துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
இதில் வெளியே சொல்ல முடியாத இன்னல்களை ஏற்றுக் கொண்டு இருப்பவர்கள் வீட்டு வேலை செய்யும் ஹவுஸ் மெயிட் என்ற இளம் பெண்களே. இதில் தமிழ் பேசுபவர்கள் குறைவு.
அண்மையில் உலகில் பணக்கார நாடு ஒன்றில் நடந்த சில உண்மை நிகழ்வுகளை தங்கள் முன் வைப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். இதற்கு இன்றைய சூழலில் என்ன தீர்வு என்பதையும் சற்று நோக்குவோம்.
1) திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை ஒரு விளையாட்டு விபத்தில் சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் (நிஜமான துப்பாக்கி) காலின் மேல் பகுதியில் சுட்டு விட்டான். இவரது விதி குண்டு காலில் பாய்ந்தது.
இவரை 4 மாதங்கள் வீட்டு சிறையில் வைத்து, உடல்நிலை சரியான பின் வெளியே விடப் பட்டார். அதையும் தாங்கிக் கொண்டு தான் நம் சகோதரர் ஜெயக்குமார் இருந்துள்ளார். ஆனால் தான் செய்யாத குற்றத்திற்காக வீட்டு சிறையில் இருந்த அந்த 4 மாதங்களுக்கு, " நீ தான் வேலையே செய்ய வில்லையே அதனால் உனக்கு சம்பளம் கிடையாது " என்று முதலாளி சொன்னவுடன் தான் ஜெயக்குமாருக்கு கோபம் வந்து,
இந்திய தூதரகத்தை தமுமுக மூலம் அணுகினார். வெகு விரைவில் இவர் ஊர் வருவார். இன்ஷா அல்லாஹ்.
2) மற்றொருவர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சத்தம் போட்டு பேசுவதற்குக் கூட பயப் படுபவர். இவர் கடந்த 10 மாதங்களாக வெறும் 20தினார்கள் (ரூபாய்3200) சம்பளத்திற்கு வேலை செய்துள்ளார். சில தினங்களுக்கு முன் இவரை கழுத்தைப் பிடித்து நெரித்ததால், இவரால் தற்போது பேச இயலவில்லை.
இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்று டாக்டரை சந்தித்து விட்டார். ஒரு கோளாறும் இல்லை என்று மருத்துவர் கூறும் நிலை. ஆனால் பேச முடியவில்லை. லேசாக தொண்டையில் வலி இருக்கின்றது. இவர் வேலை செய்யும் வீட்டில் 8 பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளார்கள்.
எஜமானி அம்மாவும் வேலைக்கு செல்வார். காலை 7.30 மணிக்கு வண்டியை எடுப்பவர் இரவு 8 மணி வரை நிப்பாட்ட இயலாது. பேசுவதற்குக் கூடப் பயப்படுபவர் தன்னுடைய சூழலை வெளியே சொல்லாமல் மறுபடியும் பம்பரமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். அருகில் இருக்கும் நம் சகோதரர்கள் தான் நமக்கு ஃபோன் செய்தார்கள்.
3) மற்றும் ஒரு ஆந்திரா சகோதரரது (அப்துல் ரஹீம்) சோக நிகழ்வு. இவர் 10 மாதங்களுக்கு முன் வீட்டு வேலை விசா ரூபாய் 80000/- கொடுத்து வாங்கியுள்ளார். இடைத் தரகர் (ஆந்திரா பெண்மணி) ஒருவரை நம்பி அப்துல் ரஹீம் பணத்தைக் கொடுத்துள்ளார்.
விசா கொடுக்கும் ஸ்பான்சரை (இந்த நாட்டுக் காரரை) அப்துல் ரஹீம் பார்த்தது கூட இல்லை. இது அடிப்படையிலேயே இந்த நாட்டு சட்டத்திற்கு எதிரான செயல். வீட்டு வேலை விசாவில் இருந்து கொண்டு வேறு வெளிவேலைகளைப் பார்ப்பது சட்டப் படி குற்றமாகும்.
அதுவும் தன்னுடைய விசா ஸ்பான்சர் யாரென்று தெரியாமலேயே வேலை பார்ப்பது இன்னும் பிரச்னைக் குரிய செயலாகும். கடந்த காலங்களில் இது ஒரு பெரிய குற்றமாக கருதப் படவில்லை. ஆனால் தற்போது எல்லா வளைகுடா அரசாங்கங்களும் வெளிநாட்டினர் வேலை செய்வதில் உள்ள சட்டங்களை கடினமாக்கிக் கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற மற்ற நாடுகளில் வெளிநாடுகளில் இருந்து படித்தவர்கள், வல்லுனர்கள் மட்டுமே சுலபமாக வேலை செய்ய உள்ளே வர இயலும். அங்கெல்லாம் வாகன ஓட்டுனர் என்ற வேலையே இல்லை என்றுதான் கூற வேண்டும்.
அப்துல் ரஹீமின் இடைத் தரகர், ஆந்திரா பெண்மணி நம் சகோதரரையும் ஏமாற்றி, விசா கொடுத்த இந்த நாட்டுக் காரரையும் ஏமாற்றியுள்ளார். விசா கொடுத்தவர் தனக்கு சேர வேண்டிய பணம் 6 மாதங்களாகியும் வந்து சேராததால், போலிஸில் தன்னுடைய வேலை ஆள் வீட்டை விட்டு ஓடி விட்டதாகப் புகார் கொடுத்து விட்டார்.
போலிஸ் இவரை பிடித்து சிறையில் அடைத்து விட்டது. இந்த சூழலில் விசா ஸ்பான்சர் தான் தன் வேலை ஆளுக்கு முழுப் பொறுப்பு. ஆனால் நம் சகோதரருக்கு அவர் யாரென்றே தெரியாது. விசா ஸ்பான்சரின் வீட்டு முகவரிக்கு சென்று பார்த்தால், அங்கே வீடே இல்லை.
வீடு இருந்ததற்கான அடையாளம் மட்டுமே இருந்தது. பின்னர் போலிஸ் அதிகாரியைச் சந்தித்து நடந்ததைச் சொல்லி, அவர் உதவி செய்யும் எண்ணம் இருப்பவராக இருந்ததால், சில நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் ஊர் திரும்புவார்.
இப்படி தொடர் கதைகளாக பல சோக நிகழ்வுகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் நம் சகோதரர்களின் அறியாமையும், எப்படியாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற ஆவலும், இடைத் தரகர்களின் பேராசையும் தான் ஆகும்.
எனவே இதைப் பற்றிய விழிப்புணர்வை நம் சகோதரர்கள் மத்தியில் நாம் கொண்டு வர வேண்டும். எந்த நோயும் வரும் முன் காப்பதே சாலச் சிறந்ததாக அமையும். எனவே இத்தகைய வேலைக்கு வரும் சூழலை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியா ஒளிர்ந்து விட்டதோ இல்லையே, உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் ஊரிலேயே இன்றைய சூழலில் ரூபாய் 10000/- சம்பாதிக்க நிறைய நல்ல வழிகள் உள்ளன. மனைவி மக்களோடு கூழானாலும் குடும்பத்துடன் குடித்து வாழலாம்.
இதற்கு வாய்ப்பே இல்லை, வெளிநாட்டில் டிரைவர் வேலை தான் வேண்டும் என்றால் அதை இந்திய சட்ட விதிமுறைகளுக்கு முழுதும் உட்பட்டு வந்தால் தான், பின் ஏற்படும் பிரச்னைகளை சட்டப்படி சந்திக்க இயலும்.
தற்போதுள்ள சட்டங்களைச் சரியாக புரிந்து அதன்படி வந்தால்தான், இந்திய தூதரகம் பின்னர் ஏற்படும் சிக்கல்களில் சுலபமாக தன் அதிகாரத்தை பயன் படுத்த இயலும்.
உதாரணமாக தற்போதுள்ள ஒரு சட்டம், படிக்காதவர்கள் எந்த வேலைக்கு வந்தாலும், முதலில் சரியான கான்ட்ராக்ட் (வேலை ஒப்பந்தம்) இல்லாமல் வர இயலாது. சட்டப் படி இந்தியர்களுக்கு குறைந்தது ரூபாய்10000/- சம்பளம் கொடுத்தால் தான் ஒப்பந்தமே எழுத இயலும்.
இந்த ஒப்பந்தத்தை வெளி நாட்டில் உள்ள இந்திய தூதரகம் சரி பார்த்து, ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் வழங்க அது ஒரு தொகையை வசூல் செய்து வைத்துக் கொள்கிறது. இந்த தொகை பின்னர் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு ஊர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த நபருக்கு எளிதாக விமான டிக்கட் எடுத்து ஊருக்கு இந்திய தூதரகம் அனுப்பி விடும்.
தற்போது டிக்கட்டிற்காக பல மாதங்கள் பலர் சிறையில் வாடும் நிலையே உள்ளது. அடுத்ததாக வேலை செய்யும் ஸ்பானசரும், விசா கொடுத்தவரும் ஒரே ஆளாக அல்லது குறைந்த பட்சம் ஒரே குடும்பத்தினராக இருக்க வேண்டும். இடைத் தரகர்களை நம்பி எங்கோ விசா எடுத்து விட்டு, வேறு எங்கோ வேலை செய்வது சட்டப் படி குற்றமாகும்.
இதில் பல சூழலில் படித்தவர்களும் ஏமாறுகின்றனர். எந்த வேலை செய்யப் போகிறோமோ அதற்கு சம்பந்தம் உள்ள விசாவிலேதான் வர வேண்டும். உதாரணமாக ஒரு முடி திருத்தும் கடையில் வேலை செய்பவரின் விசாவில் உள்ள தொழிலைப் பார்த்தால், தோட்டக்காரர் என்று இருந்தால் அதுவும் குற்றமே ஆகும்.
அண்மையில் ஒரு சின்ன வளைகுடா நாட்டில் 600 போலி நிறுவனங்களை கண்டு பிடித்துள்ளார்கள். அதாவது அப்படி ஒரு கம்பெனியே உண்மையில் இயங்கவில்லை. ஆனால் அந்த கம்பெனியில் வேலை செய்வது போல் 100 பேர்கள் எங்கோ, எதோ வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். இதற்கும் நம் சகோதரர்கள் பலர் பலியாகி உள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு முன் வளைகுடா நாடுகளில் யாரும் எந்த வேலையும் செய்ய இயலும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் திறமை இருந்தவர்கள் எல்லோரும் சம்பாதித்தார்கள்.
நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த இட ஒதுக்கீடு என்று கூட இந்த வாய்ப்பை கூறலாம். ஆனால் இதை பயன் படுத்தி, நம்மவர்கள் அடுத்த தலைமுறையை கல்வியில் உயர்த்த வேண்டும். காலச் சக்கரம் சுழல்வதில் எதிர் திசையிலும் செல்ல வேண்டி இருக்கும். அதற்கும் நம்மையும், நம் சந்ததியினரையும் தயார் செய்ய வேண்டும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் எங்கும், எப்போதும், எந்நிலையிலும் நேர்வழி காட்டுவானாக.
- TMMK
Posted by
Abdul Malik
at
10:24 am
0
comments
3 Feb 2010
நீங்க வளைகுடாவில் வேலை செய்யறீங்களா?
நீங்க வளைகுடாவில் வேலை செய்யறீங்களா?
''ஆண் : "டாக்டர் நான் ஒரு மாச லீவில் வந்திருக்கேன். எனக்கு ஒரு முழு செக்கப் செய்யணும்.
''டாக்டர் : "நீங்க எதிர்ல இருக்கற டாக்டர் கிட்டே போயிருக்கணும். அந்த போர்ட பாருங்க"
'ஆண் : "இல்லை டாக்டர், நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்"
''டாக்டர் : "பாருங்க சார், நான் வெட்ரினரி டாக்டர். விலங்குகளுக்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்கிறேன். மனுசங்களுக்கல்ல."
''ஆண் : "எனக்கு அது நல்லா தெரியும் டாக்டர். அதனால் தான் நான் உங்களிடம் வந்திருக்கேன்"
''டாக்டர் : "என்னங்க சார் புரியாத ஆளா இருக்கீங்க. நீங்கள் என்னை போல மனிதர். பேசுகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், நீங்கள் மிருகமல்ல. என்னால் முடியாது."
''ஆண் : "எனக்கு தெரியும் டாக்டர், நான் மனிதன் தான். ஆனா மொதல்ல நீங்க என்னுடைய பிரச்சினைகளை கொஞ்சம் தயவு செய்து கேளுங்களேன்"
''டாக்டர் : "சரி சரி சொல்லுங்க"
''ஆண் : "நான் தூங்கும் போது நாய்ய போல எச்சரிக்கையா தூங்கி கிட்டே என்னுடைய ஆபீஸ் வேலை பத்தியே யோசிச்சிகிட்டிருப்பேன். ""காலையில் குதிரைய போல எழுந்திருப்பேன்.""காக்கா குளியல் குளிப்பேன்""மான் போல ஆபீசுக்கு ஓடுவேன்""முழுநாளும் கழுதைய போல வேலை செய்வேன்""இடைவிடாம பதினோரு மாசம் எருது போல வேலை வேலைன்னு சுத்திகிட்டே இருப்பேன்""எனக்கு மேல இருக்கற வங்களுக்கு முன்னால வால ஆட்டி கிட்டே இருப்பேன்""என்னிக்காவது நேரம் கிடச்சா என் குழந்தைங்க கூட குரங்கு போல சேட்டை செஞ்சி விளையாடுவேன் ""என் பொண்டாட்டிக்கு முன்னால முயல் மாதிரி ஒடுங்குவேன்
"டாக்டர் : "நீங்க கல்ஃப்ல வேலை செய்யறீங்களா?
"ஆண் : "ஆமாம் டாக்டர்!. "எப்படி கண்டு பிடிச்சீங்க?
"டாக்டர் : "இவ்வளவு பெருசா சொல்றதுக்கு பதிலா மொதல்லயே கல்ஃப்ல வேலை செய்யறேன்னு சொல்லியிருக்கலாமில்ல." "வாங்க, நீங்க சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க!" "வேறெ யாரும் என்னை விட நல்லா உங்களுக்கு சிகிச்சை தர முடியாது"
Posted by
Abdul Malik
at
10:21 am
0
comments
28 Jan 2010
பெப்பர் ஸ்ப்ரே... பெண்களின் கையில் புதுவித ஆயுதம்!
பெப்பர் ஸ்ப்ரே...
பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்!
''அப்படியா..! அதென்ன 'பெப்பர் ஸ்ப்ரே..?' '' என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் அளிக்கிறார் சென்னை, துரைப்பாக்கம் சரகம் உதவி ஆணையர் கே.என்.முரளி!
"கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'.
ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது.
அதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொல்ல வேண்டும். நாங்கள் வந்து அவர்களை அள்ளிக்கொள்வோம்! தேவைப்பட்டால் குற்றவாளிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று உற்சாகமாகச் சொன்ன முரளி,
இது இப்போது காவல்துறையால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வரும் அவசியத்தையும் கூறினார்.
"அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.
சமீபத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, 'மக்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கினால் என்ன?' என்று எனக்கு யோசனை எழ, அதற்கான தகவல்கள் சேகரித்ததில் 'பெப்பர் ஸ்ப்ரே' தயாரிக்கும் நிறுவனம் பெங்களூருவில் இருப்பது தெரிந்தது.
என்னுடைய யோசனை மற்றும் சேகரித்த தகவல்களை சென்னை, காவல்துறை ஆணையரின் முன் வைத்தேன். அவரும் பரிசீலித்து ஒப்புதல் தர, இப்போது பொதுமக்களுக்கு 'பெப்பர் ஸ்ப்ரே' பற்றிய விழிப்பு உணர்வும் விநியோகமும் எங்கள் துறை சார்பாக நடக்கிறது" என்றவர்,
"இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபதுமுறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்
முதலில் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை போன்ற பகுதிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறோம். இதுவரை நாற்பத்தி ஐந்து குடும்பங்கள் 'பெப்பர் ஸ்ப்ரே' வாங்கியுள்ளன. 'எங்களுக்கும் தேவை' என்று 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.
இதைப் பற்றிய மேல் விவரங்கள் வேண்டுவோர், துரைப்பாக்கம் சரகம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும்.
இந்த ஸ்ப்ரே, வெளி மார்க்கெட்டில் கிடைக்காது!" என்று குறிப்பிட்ட முரளி,"பெண்கள் இந்த ஸ்ப்ரேயை தங்கள் ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொள்மளவுக்கு 'காம்பேக்ட்' சைஸில் உள்ளது.
இதன் மூலம் வேலைக்குப் போகும் பெண்கள், இல்லத்தரசிகள், வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்கள் என அனைவரும் பயன்பெறுவார்கள் என்று நம்புகிறோம்.
அதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது!" என்றார்.
பெருங்குடி, திருமலைநகரில் உள்ள 'நிசி' விமன்'ஸ் ஹாஸ்டலில் இருந்து இந்த 'ஸ்ப்ரே' வேண்டி ஏற்கெனவே போலீஸூக்கு விண்ணப்பங்கள் வந்தாகிவிட்டன.
இதுபற்றி அங்குள்ள பெண்கள் கூறுகையில், "எங்களப்போல கால் சென்டர், ஐ.டி-னு ராத்திரி நேரத்துல வேலைக்குப் போக வேண்டிய பொண்ணுங்களுக்கு திருட்டுப் பயத் துல இருந்து தப்பிக்க இது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். துரைப்பாக்கத்துல பார்த்தீங்கனா சாலை யோரத்துல எப்பவுமே நிறைய லாரிகள் நிக்கும்.
இடம் தாராளமா இருந்தாலும் நாங்க போற வழியில இடைஞ்சலா நிக்கறது, உரசுறதுனு லாரி டிரைவர்கள் சிலர் தினமும் 'டார்ச்சர்' பண்றாங்க. இனி அந்த 'ஈவ் டீஸிங்' குரூப்புக்கும் காத்திருக்கு 'ஸ்ப்ரே ட்ரீட்மென்ட்'!" என்றார்கள் பலநாள் கொடுமைக்கு சவுக்கடி கொடுக்கப் போகும் தெம்புடன்!
தொடர்புக்கு: துரைப்பாக்கம் சரகம், காவல்துறை உதவி ஆணையர் அலுவலகம், 044--23452776
Posted by
Abdul Malik
at
12:00 pm
2
comments
13 Jan 2010
பெற்றோரே உஷார் !!! - விரல் நுனியில் விரசம்… மொபைல் விபரீதம்
விரல் நுனியில் விரசம்…
http://sirippu. wordpress. com/2009/ 12/02/sexting/
ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு டீன் ஏஜ் பையன்களின் “ரகசியப்” பொழுது போக்கு என்னவாக இருக்கும் ?
புத்தகங்களுக்கிடையே மஞ்சள் பத்திரிகை வைத்துப் படிப்பது, முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு காலைக்காட்சிக்குச் செல்வது இவ்வளவு தான் ! ஆனால் இன்றைய டீன் ஏஜ் நிலமை எப்படி இருக்கிறது ? விரல்களில் ஐ-போன், வீடுகளில் லேப்டாப். ஒரு சில வினாடிகள் போதும் பிடித்தமான பலான படத்தைப் பார்க்க !
இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.
வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள். இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.
இன்றைய நவீனம் டீன் ஏஜினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் எதை வேண்டுமானாலும் அவர்கள் பார்க்கமுடியும் என்பது ஒரு பெற்றோருக்கான ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் சைபர் செண்டினல் அமைப்பின் இயக்குனர் எல்லி புடில்.
இண்டெர்நெட் எல்லோருக்கும் ஒரு நண்பனாகவே ஆகிவிட்டிருக்கிறது.
பிசிராந்தையார் கால நட்பெல்லாம் இல்லை, பெரும்பாலும் கூடா நட்பு தான். ஏதேனும் ரகசிய சந்தேகங்களை அம்மாவிடமோ, தோழிகளிடமோ பெண்கள் கேட்டது பழைய காலம். இப்போ என்ன கேட்கவேண்டுமென்றாலும் “கூகிளிடம் கேட்கிறார்கள்.
அதுவும் சில வினாடிகளில் இணைய உலகைச் சுற்றி வந்து ஞானப்பழத்தைக் கையில் தந்து விட்டுப் போய்விடுகிறது. சிலர் ஞானப்பழத்தை விடுத்து ஏவாள் கடித்த ஏதேன் பழத்தைத் தேடுகிறார்கள் என்பது தான் இதில் சிக்கலே.
லேப்டாப், டெஸ்க் டாப் என்றால் கூட பரவாயில்லை. பெற்றோர் ஓரளவு கண்காணிக்க முடியும். மொபைலில் பாலியல் சமாச்சாரங்கள் பரிமாறப்பட்டால் எப்படி தடுப்பது.
இருபத்து நான்கு மணி நேரமும் வைத்த கண் வாங்காமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் இயலாத காரியம். இதிலிருக்கும் சிக்கலைப் பெற்றோர் பிள்ளைகளிடம் சொல்லவும் வேண்டும்.
இது தான் இன்றைய பெற்றோரின் மிகப்பெரிய சவால்
சராசரியாக ஒரு டீன் ஏஜ் பையனோ பொண்ணோ வாரம் இரண்டரை மணி நேரங்கள் யூ டியூபில் படம் பார்க்கிறார்களாம் ! யூ-டியூப் இப்போது வருகின்ற எல்லா ஹைடெக் மொபைலிலும் ஒரு தொடுதலிலேயே இயக்கக் கூடிய வகையில் வந்து விடுகிறது.
அதிக நேரம் பாலியல் படங்களைப் பார்ப்பது பல்வேறு விபரீதங்களுக்குள் பதின் வயதினரைக் கொண்டு போய் விடும் என்பதற்கு நிறைய உதாரணங்களும் உண்டு. 2003ல் ஜப்பானில் 17 வயதான ஒரு பையன் 30 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டான். “பாலியல் வெப் சைட்களைப் பார்த்தா என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால தான் இப்படி ஆயிடுச்சு” என்றான் அவன் !
இண்டர்நெட் கஃபேக்களில் அமர்ந்து கொண்டு பெயரை ஸ்டைலிஷாக மாற்றிக் கொண்டு சேட்டிங் செய்வதே பழசாகிவிட்டது. எல்லாம் மொபைல் தான். அதிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மொபைல் ஆறாவது விரலாகவே ஆகிவிட்டது.
ரயிலிலும், பஸ் ஸ்டாண்டிலும், நடக்கும் போதும் செல்போனைப் பார்த்துக் கொண்டே செல்லும் டீன் ஏஜ் தான் அதிகம். பள்ளி மாணவர்களிடையே செல்போனில் ஆபாச சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் வெகுவாக அதிகரித்திருக்கிறதாம்.
சுமார் 35 விழுக்காடு பேர் ஆபாச எஸ்.எம்.எஸ் கள், பாலியல் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை தினமும் பார்க்கிறார்கள், மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் நல அமைப்பு நடத்திய ஆராய்ச்சி சொல்கிறது.
இளம் கன்று பயமறியாது என்பது இவர்கள் விஷயத்தில் செம பொருத்தம்.
விளையப்போகும் விபரீதங்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் தங்களையோ நண்பர்களையோ ஆபாசமாய்ப் படமெடுத்து கேலியாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஒரு முறை ஒருவருக்கு அனுப்பி விட்டால் அது எத்தனை இடங்களுக்குத் தாவும் என்பதைச் சொல்லவே முடியாது. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய எம்மா ஜேன்.
இது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய தலைவலி. தவறுகளைத் திருத்தியாக வேண்டும், ஆனால் எப்படி என்பது தான் மிகப்பெரிய கேள்வி. கம்ப்யூட்டரை ஒளித்து வைத்தால் மொபைல் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டுவிட்டது.
இதன் விளைவாக கர்ப்பமாகும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் படு வேகமாக அதிகரிக்கிறது. ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாகிறார்கள் ! கடந்த பத்து ஆண்டுகளில் டீன் ஏஜினருக்கு எயிட்ஸ் நோய் வருவது பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
இதுக்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் செக்ஸ் கல்வி சரியாக இல்லை, இந்த இண்டர்நெட், மொபைல் நெட் எல்லாம் கட்டுப்பாடாக இல்லை என கோஷங்கள் எழுகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து என்றில்லை. எல்லா நாடுகளிலும் இதே கதி தான். சீனாவில் ஆண்டு தோறும் நடக்கும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 13 மில்லியன். அதிலும் 29 வயதுக்குக் குறைவான பெண்கள் 66 சதவீதம் !
பிரச்சினை இப்படி பூகாகரமாக எரிந்து கொண்டிருக்கையில் எரியும் தீயில் பீடி பற்றவைக்கிறது இங்கிலாந்து.
செக்ஸ் பதின் வயதினருடைய உரிமை. அதை அவர்கள் கொண்டாட வேண்டும். தடுக்கக் கூடாது. என அங்கே ஒருசாரார் தீவிரமாக குஜால்ஸ் திட்டங்களுடன் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பிட் நோட்டீஸ் விட்டு டீன் ஏஜ் மக்களை செக்ஸ் வைத்துக் கொள்ள உற்சாகப் படுத்துகின்றனராம்.
“நெதர்லாந்தைப் பாருங்கள்” செக்ஸ் ரொம்பவே ஓப்பன். அதனால தான் அங்கே நோயும் இல்லை, எயிட்ஸும் இல்லை. மூடி மறைக்காதீங்க, அது தான் பிரச்சினையே. தினமும் “அது” நடந்தால் நோய் கூட வராது என சொல்லி நமது மிட் நைட் டிவி லேகிய வினியோகஸ்தர்களுக்கு கிலியையும் கொடுக்கின்றனர்.
ஏற்கனவே பிள்ளைகளைக் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இதுவும் நடந்துச்சுன்னா அவ்வளவு தான். “பெரியவங்களே சொல்லிட்டாங்க இது தேவையாம் வாங்கடான்னு” பசங்க கடமை நிறைவேற்றக் கிளம்பிடுவாங்க என பெற்றோர் கொந்தளித்துப் போய் இருக்கிறார்களாம்.
இருபத்து நாலு மணி நேரமும் குடிச்சுகிட்டே இருந்தா குடிக்கிறதை விட்டுடுவாங்கன்னு சொல்றமாதிரியில்லே இருக்கு இது அங்காய்க்கின்றனர் சிலர். இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடறமாதிரி இன்னொரு சமாச்சாரத்தையும் இங்கிலாந்து கொண்டு வந்திருக்கிறது.
கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் கேள்விப்பட்டிருப்பீங்க. சி-கார்ட் கேள்விப்பட்டிருக்கீங்களா ? சிம்பிளாகச் சொன்னால் சி-கார்ட் என்பது “காண்டம் கார்ட்” ன் சுருக்கம். இதைக் கொண்டு என்ன வாங்கலாம் என கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
டீன் ஏஜ் கர்ப்பத்தைப் பெருமளவு தடுக்க இது ஒரு பக்கா பிளான் என்கிறது அரசு. இந்த கார்டைக் கொண்டு கடை, தியேட்டர், ஆஸ்பிட்டல், ஹெல்த் செண்டர் என எங்கே போனாலும் தானியங்கி மெஷின்களில் காண்டம் எடுத்துக் கொள்ளலாம். அவசர உதவிக்கு சி-கார்ட் இருந்தா கர்ப்பம் எப்படிப்பா வரும் என்கிறது லாஜிக் படி.
சி-கார்ட் வேணும்ன்னா என்ன செய்ய வேண்டும் ? வெரி சிம்பிள். அரசு நடத்தும் செக்ஸ் கல்வி செமினார் ஒன்றில் கலந்து கொள்ளவேண்டும். அவ்வளவு தான்.
பன்னிரண்டு வயசான பையனாய் இருந்தாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கார்ட் கிடைக்கும். அதில் அவனுடைய பெயரோ, தகவல்களோ எதுவும் அந்த கார்டில் இருக்காது !.
இது டீன் ஏஜ் பிள்ளைகளைக் கெடுக்கும் செயல். அவர்களை செக்ஸில் ஈடுபட அரசே வழியனுப்பி வைக்கலாமா என்பது மத அமைப்புகள், மற்றும் பெற்றோரின் கவலை.
டீன் ஏஜ் சிக்கலைத் தடுக்க ஏன் அன்பைப் போதிக்க மாட்டேங்கறீங்க ? சி-கார்ட் தான் தேவையா ? ஆரோக்கியமான நட்பையோ, நேசத்தையோ போதித்து அதன் மூலம் டீன் ஏஜ் பசங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியாதா என்பது சட்டென நமது மனசில் ஓடும் கேள்வி.
ஏனென்றால், என்னதான் சட்டம், ஒழுங்கு, திட்டம் எல்லாம் இருந்தாலும் மன மாற்றம் இல்லேன்னா என்ன பயன் ?
கடைசியாக ஒன்று !! டீன் ஏஜ் பருவத்தின் முதல் பாகத்திலேயே செக்ஸ் பழக்கம் ஆரம்பிப்பவர்கள் பிற்காலத்தில் நோய், மன அழுத்தல், போதைப் பழக்கம், ஆழமான குடும்ப உறவு இன்மை என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள் என்கிறது அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக கட்டுரை ஒன்று.
மொபைலிலிருந்து செக்ஸ் சமாச்சாரங்களை அனுப்புவதை “செக்ஸ்டிங்” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது, சில்மிஷப் படங்கள் அனுப்புவது என சர்வமும் இதில் அடக்கம். அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கலாச்சாரம் படு வேகமாக வளர்கிறது.
நிலமையை உணர்ந்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன மாநில அரசுகள். டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் கடந்த மாதம் முதல் செக்ஸ்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் ஹூஸ்டனில் படிக்கிறார்கள்!
நியூசிலாந்திலும் இப்போது செக்ஸ்டிங் தான் பேச்சு. நாடு முழுவதும் இது பெரும் தலைவலியாய் உருவாகியிருக்கிறது என்கிறார் நியூசிலாந்தின் உள்துறை அமைச்சர் ஸ்டீவ் ஓ பிரையன். அரசு இதை சிம்பிளாக எடுத்துக் கொள்ளாது. செக்ஸ்டிங் குற்றம் செய்தால் ஜெயில் தான் என எச்சரிக்கிறார்.
அமெரிக்காவின் டாலாஸ் மாநிலத்திலுள்ள வாலாஸ் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான் 12 வயதான பொடியன். திடீரென அவனது செல்போன் வெட்கத்தில் சிணுங்கியது.
ஆசிரியர் எதேர்ச்சையாய் எடுத்துப் பார்க்க வந்திருந்தது ஒரு சின்னப் பெண்ணின் நிர்வாணப் படம் !. அனுப்பியது அந்தப் பெண்ணே தான் ! திகைத்துப் போன ஆசிரியர், கையோடு பையனைக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்தார் ! சின்னப் பிள்ளைகளின் நிர்வாணப் படம் “சைல்ட் போர்னோகிராபி” குற்றத்தின் கீழ் வருகிறது !. விளையாட்டா நினைக்காதீங்க 10 வருஷம் உள்ளே இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கின்றனர் காவல் துறையினர்.
ஸ்காட்லாந்தில் செக்ஸ்டிங் வளர்ந்ததன் விளைவு, டீன் ஏஜ் கர்ப்பமும் அதிகரித்திருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த ஒரு எளிய வழி பள்ளிக்கூடங்களில் கருத்தடை மாத்திரைகள் வழங்குவது தான் என திருவாய் மொழிந்திருக்கிறது அரசு.
இங்கிலாந்தின் பல பள்ளிக்கூடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாத்திரைகள் கிடைக்கின்றனவாம். அதைப் பின்பற்றி ஸ்காட்லாந்தும் இப்போது மாத்திரை வினியோகத்தில் இறங்கியிருக்கிறது. இலக்கியத்தில் மாத்திரைகள் படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. !
சீனாவில் செக்ஸ்டிங் சிக்கல் மக்கள் தொகையைப் போலவே சட சடவென வளர்ந்து வருகிறதாம். மாணவர்களிடையே உள்ள இந்த பழக்கத்தை அழிக்க என்ன செய்யலாம் என கடுமையான யோசனைகளில் சீனா இறங்கியிருக்கிறது. செக்ஸ்டிங் குற்றத்துக்கு மாணவர்களுக்கு ஐந்து முதல் 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கவும் வழி செய்திருக்கிறது !
Posted by
Abdul Malik
at
5:48 pm
1 comments
9 Jan 2010
வாடகை மனைவி! தமிழகத்தில் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரம்.
Posted by
Abdul Malik
at
5:13 pm
0
comments
6 Jan 2010
போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !
தமிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புகையிலை சுவாசத்திலும் மதுவிலும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதோடு நாளை வரலாற்றை உருவாக்கு முன் இன்றே எங்களை அழித்துக் கொள்கிறோம் என சொல்லாமல் சொல்லும் அவர்களது செயல்பாடுகள் மூத்த குடிமக்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன.
இன்றைய இளைஞர்கள் வெகு விரைவிலேயே போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போவதற்கு யார் காரணம்? என அலசி ஆராய்வது பேதமைத் தனமாகும்.
சிறு பிள்ளையிடம் கேட்டால் கூட ஆட்சியாளர்கள் தாம் காரணமென்று உடனே சொல்லி விடுவார்கள். தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை பார்த்தாலே தெரியும்.
1970 க்கு முன்பு ஒரு இளைஞன் ஏதாவதொரு போதை பொருளை பெற வேண்டுமென நினைத்தால் அவ்வளவு எளிதில் அது அவனுக்கு கிடைத்து விடுவதில்லை. இடையில் எத்தனையோ குறுக்கீடுகள் பல நிலையில் அவனை சூழ்ந்து கொள்ளும்.
இத்தகைய சிரமத் திற்குள்ளும் அதை தேட வேண்டுமா? என்ற கேள்விக் குறியோடு அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு நல் வழிக்கு வந்து விடுவது அன்றைய எதார்த்தமான நிலைபாடு.ஆனால் இன்றைக்கு எவ்வளவு மாற்றம்? ஒவ்வொரு இளைஞனையும் வழிய தேடிவரும் நிலையில் போதைப் பொருள்கள் காணுமிடமெல்லாம் பாகுபாடில்லாமல் நிரம்பி வழிகிறது.
பள்ளிக்கூடம், கல்லூரிகள், மருத்துவமனை வளாகம், பொழுதுபோக்கு கூடங்கள், வீதிகள், தோறும் என இலகுவாக கிடைக்கும் ஒரே விஷயம் கஞ்சா, மது, பீடி, சிகரெட், புகையிலை போன்ற போதைப் பொருள்களே !
இத்தகைய போதைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் அந்நிய சதிகாரர்கள் அல்லர். சாட்சாத் நமது தமிழகத்தை கடந்த 40 ஆண்டு காலமாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே ! என சொல்வதற்கு நமக்கு எவ்வளவு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களான பேரறிஞர் அண்ணாவும் தந்தை பெரியாரும் கண்ட கனவெல்லாம் தமிழகத்தின் இளைஞர்களை ஒழுக்க முள்ள அறிவு ஜீவிகளாக உருவாக்க வேண்டுமென்பது தான்!
அதற்காகவே இயக்கம் கண்டு பல சோதனைகளை சந்தித்த அந்த உத்தம தலைவர்களின் அருமைத் தம்பிகள் என தங்களை மார்தட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் நமது இளைஞர்களை போதைக்கு தூண்டுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்?
அரசின் கஜானாவை நிரப்ப விலை மதிப்பில்லா நமது இளைஞர்களின் குறுதியும், உயிரும் தான் வேண்டுமா? ஊர் தோறும் ஆலயம் அமைப்போம் ! என்ற சொல் மாறி வீதி தோறும் டாஸ்மாக் அமைப்போம் என்றல்லவா முனைப்புக் காட்டுகிறார்கள்.
40 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்குரிய சாதனை களுக்கு மணிமகுடமாய் இருப்பது டாஸ்மாக் தானோ? ஒரு காலத்தில் துண்டு பீடி குடிப்பதற்கே சமூகத்திற்கு பயந்த இளைஞன் இன்று பள்ளிக்கூடம் செல்லும் போதே மது குடித்துவிட்டுப் போகும் அவலங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
பள்ளிக்கூடம் செல்லும் மாணாக்கரின் நெஞ்சத்தில் கல்விக்கண் திறந்த சரஸ்வதியின் நினைவு வரும் என்பது அந்தக் காலம். இன்றோ டாஸ்மாக்கின் நினைவல்லவோ? வருகிறது.
போதை மனிதனுக்கு கேடு என்று தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால் கடவுள் மதம் இவைகளை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் மட்டும் தான் போதைக்கு வெண் சாமரம் வீசுகின்றனர். இப்போது புரிகிறதா? இவர்களின் நாத்திக போக்குக்கு.
என்ன காரணமென்று போதையின் தீங்கை விவரிக்கும் போது முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இவ்வாறு கூறப்படுகிறது. ‘வீணாக பொருளை விரயம் செய்யாதீர்கள்’ நிச்சயமாக பொருளை விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 17:26,27)
வீண் விரயம் என இங்கு குறிப்பிடுவது மேற்குறிப்பிட்ட போதைப் பொருளுக்காக யார் காசை செலவழிக்கிறார்களோ? அதனையே குறிப்பிடுகிறது காசை கரியாக்காதே! என்ற மூத்தோர்களின் வழக்கு சொல்லும் பீடி, சிகரெட், மது போன்றவைகளையே குறிப்பிடுகிறது.
ஒரு மனிதன் தன்னைத் தானே கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது பிடிபட்டால் தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுகிறான். இதை இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.
தற்கொலை முயற்சி என்பதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது சட்டம்? (Spot Death Suicide) ஒரே நேரத்தில் சாவதா? அல்லது (Slow Motion Suicide) கொஞ்சம் கொஞ்சமாக சாவதா? இரண்டுமே ஒன்று தான் என்றால் புகை மற்றும் மது பழக்கமுடையவர்களை ஏன் இந்த தண்டனை சட்டம் முன் நிறுத்தப்படுவதில்லை?
தற்கொலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷப் பொருட்களான அமோனியா, நிகோடின், ஹைட்ரஜன் சயனைடு, மெத்தனால், ஹெக்சாமைன், ஆல்கஹாலில் கலந்துள்ள எத்தனால், பூச்சிக்கொல்லி மருந்தில் கலந்துள்ள ஃபீனால், டி.டி.டி.(D.D.T) விஷம், கார் பேட்டரியில் கலந்துள்ள கேட்மியம், போன்ற பொருட்களைத் தானே பீடி, சிகரெட், மது போன்றவற்றில் கலக்கிறார்கள்.
இப்பொருட்களை நேரடியாக உட்கொண்டால் (Spot Death Suicide) உடனடி காரணம்! பீடி,சிகரெட்,மதுவாக உட்கொண்டால் (Slow Motion Suicide) மெதுவான மரணம்! இப்படித்தான் மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.
ஆக தற்கொலை செய்வதும் குற்றமென்றால் செய்ய தூண்டுவதும் குற்றம் தானே? இன்றைக்கு ஆட்சியாளர்கள் இளைஞர்களை (Slow Motion Suicide) மெதுவான மரணத்தின் பக்கம் தூண்டி வரும் போது ஆட்சியாளர்களை யார் தண்டிப்பது?
இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது பாராட்டிற்குரியது ! (ஆனால் சட்டம் நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம்) அரசின் இந்த முயற்சிக்கு நல்லோர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் !
பீடி, சிகரெட், மூலம் வரும் ஆபத்துகள் அதை பயன்படுத்துவோருக்கு மட்டும் தான் என்பதல்ல, அவன் இழுத்து விடும் புகையை சுவாசிக்கும் பக்கத்து மனிதனுக்கும் சேர்ந்தே கேடு வருகிறது.
தவறு செய்பவன் ஒருவன் தண்டனையை அனுபவிப்பது மற்றொருவன் என்பது என்ன நியாயம்? புகை பிடிப்போரே கொஞ்சம் சிந்தியுங்கள் ! பொது இடங்களில் நீங்கள் இழுத்து விடும் புகையை சகிக்க் முடியாமல் எத்தனை பேர்கள் முகம் சுளித்து மூக்கை மூடுகின்றனர். அவர்களின் மன உளைச்சலை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.
இதைப்பற்றி இஸ்லாத்தின் மாபெரும் தலைவராம் அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்; “ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருந்தால் அவன் தன் அருகிலிருப் போருக்கு இடைஞ்சல் செய்ய மாட்டான்’ (நபிமொழி – நூல்:புகாரி)
பீடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான முஸ்லிம்களே, உங்களின் செயல் இந்த நபிமொழிக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் உங்களது மறுமை நாளின் நிலையை பற்றி யோசியுங்கள்.
எனது காசு நான் குடிக்கிறேன் இதை தடுக்க நீ யார் என வீராப்பு பேசுபவர்களைப் பற்றி முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான் ‘உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவின் பால் போட்டுக் கொள்ளாதீர்கள்’ (அல்குர்ஆன் 2:195)
எவ்வளவு அற்புதமான வார்த்தை! பீடி, சிகரெட், மது போன்றவைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அழித்து வருவதைத் தான் குர்ஆனும் தடுக்கிறது.
மதுவை ஒழிப்பதற்காக போராட்டக் களம் கண்டு கள்ளுக்கடை மறியலில் கைதாகி சிறை சென்ற முதல் பெண்கள் என்ற பெருமை கொண்ட தந்தைப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாவும் அமைத்து தந்த மது ஒழிப்பு போராட்டக்களம் நாடு முழுவதும் இன்னும் வேகமாக விரிவாக்கம் பெற வேண்டும்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல எடுக்கப்பட்ட “பெரியார்” என்ற திரைப்படத்திற்கு ரூபாய் 95 லட்சத்தை மானியமாக வழங்கி பெருமைப்பட்டுக் கொண்டவர்கள் பெரியாரின் உயிரணைய கொள்கையான மது எதிர்ப்புக் கொள்கையை மட்டும் புறந்தள்ளியது ஏன்?
திரைப்படத்திற்கு கொடுத்த 95 லட்சத்தை பசுமைத்தாயகம் போன்ற மது ஒழிப்பு பிரச்சார இயக்கங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் பெரியாரின் ஆன்மாவாவது இன்றைய திராவிட தம்பிமார்களை மன்னித்திருக்கும்.
ஒரு காலத்தில் இவன் பீடி, சிகரெட், மது குடிப்பவனா? என்று கோபத்துடன் கேட்ட நம் தமிழகத்தில் இன்று இவன் பீடி, சிகரெட், மது குடிக்காதவனா? என வியப்புடன் கேட்கத் தோன்றுகிறது.
அந்தளவுக்கு நாட்டில் எங்கும் எப்போதும் போதைப் பொருள்கள் நிரம்பி காணப்படுகின்றன. ஒவ்வொரு சமூகத்தின் இளைஞர்களுக்கும் ஒழுக்கநெறி வழிகாட்டியாக விளங்கக்கூடிய இறைப்பணியாளர்களில் சிலரும் கூட பீடி, சிகரெட், மது போன்ற போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு போய் விட்ட கன்றாவியை என்னவென்று சொல்வது?
மசூதி களின் இமாம்களில் சிலரும், தேவாலயங்களின் பாதிரிமார்களில் சிலரும், கோயில்களின் பூசாரிகளில் சிலரும் கூட பீடி, சிகரெட், பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போய் தாங்கள் செய்யும் இந்த தவற்றை பிறரின் பார்வையில் படும்படியாக செய்யும் இவர்களை முன்னிலைப்படுத்தி இறைவணக்கம் செய்வோர்கள் யோசிக்க வேண்டாமா?
இதுபோன்ற தவற்றை செய்யும் ஆன்மீகப் பணியாளர்களை அந்தந்த இறைப்பணித்துவத்திலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இறைப்பணியும் தூய்மையடையும். ஒவ்வொரு சமூகத்தின் பொறுப்பாளர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
அற்புதமான ஒரு இளைய சமுதாயத்தை வழி கெடுத்து விட்டதோடு நிற்காமல் அடுத்த தலை முறையையும் வழி கெடுக்கும் முயற்சியிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவது ஆரோக்கிய மானதல்ல ! நல்லெண்ணம் கொண்டோரும் சிந்தனை வாதிகளும் அவசர,அவசியமாக மது, சிகரெட், பீடி போன்ற தீய செயல்களை எதிர்த்து தீவிர களப் போராட்டம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இத்தகைய போராட்டத்திற்கு தாய்மார்களின் ஏகோபித்த நல்லாதரவும் கிடைக்கும் ! நாம் காணப்போகும் தீவிர மது ஒழிப்பு போராட்டம் போதையில்லா சமுதாயம் உருவாக்கும் புதிய விடியலாக இருக்கட்டும் !
- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி, துபை
Posted by
Abdul Malik
at
6:40 pm
0
comments